அம்பலாங் கொடையில் வியாழக்கிழமை இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்ட பியூமி தனஞ்சனி என்ற 11 வயது மாணவி மேதினத்தன்று களுத்துறையில் விடுவிக்கப்பட்டார். தனியார் பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் இம் மாணவியை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக அம்மாணவி தெரிவித்தார். இவர் களுத்துறை பாலம் அருகில் வெள்ளிக்கிழமை நண்பகல் விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பாக பெற்றோர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். களுத்துறையில் விடுவிக்கப்பட்ட இச் சிறுமி வடக்கு பொலிஸ் நிலையத்துக்கு சென்று தான் கடத்தப்பட்டதாக கூறினார். களுத்துறை பொலிஸார் சிறுமியை அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்