பொலனறுவை கந்துருவெலவில் சனிக்கிழமை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண்கள் உட்பட 81 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலனறுவை கந்துருவெல பகுதியிலுள்ள அரிசி மில் ஆலைகளில் பணியாற்றியவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி மற்றும் நாவலப்பிட்டி, அட்டன் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாமையினாலேயே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் தொடர்பாக அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக விபரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் நிரபராதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.