2009

2009

சவால்களை எதிர்நோக்கினாலும் கொள்கையில் உறுதி : கி.மா. முதலமைச்சர்

210909pillayan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கொள்கைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும் தமது கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிராமிய மட்ட அங்கத்தவர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் வைபவம் பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

“தமிழ் மக்களின் அரசியல் உரிமை, அபிலாஷை மற்றும் தனித்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கையாகும். சமூக ரீதியான பிராந்திய அரசியல், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதற்குரிய ஒரு கட்சியாகவே இன்று எமது கட்சி விளங்குகின்றது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எமது கட்சியாகும். கிழக்கில் இதுவரைக்கும் அரசியல் தலைமைத்துவத்தில் ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது.இதனை மாற்றி அமைக்க வேண்டும். என்றார். 

மது உற்பத்தியும் பாவனையும் 9.5 வீதத்தினால் வீழ்ச்சி – ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

அரசாங்கத்தின் மது ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மது உற்பத்தியும், மது பாவனையும் வெகுவாகக் குறைந்து ள்ளது என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய தெரிவித்தார். 2007 முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் மது உற்பத்தி 9.5 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. மதுபாவனையும் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் 9.42 வீதமாக வீழ்ச்சியடை ந்துள்ளது.

அரசாங்கம் படிப்படியாக மதுவை ஒழிப்பதற்காக எடுத்துவரும் நடவடிக்கையையே இவை காட்டுகின்றன. எனினும், மதுவுக்கான வரி விதிப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மது ஒழிப்புக்கான ஒரு அங்கமாகவே மது வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுடன் 2009 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது மதுவுக்காக 44 வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுவுக்கென 34 வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

பியர் வகைகளுக்கென 28 வீத வரி அதிகரிப்பும், வைன் வகைகளுக்கென 69 வீத வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரியினூடாக அரசுக்கு கிடைக்கும் பணத்தை விட மது பாவனையை குறைக்கும் நோக்கத்துடனே வரி விதிப்புகளும் செய்யப்படுகின்றன.

அரசாங்கம் மது வகைகளின் உற்பத்தி, வெளிநாட்டு மது வகைகளின் இறக்குமதி சகல மது வகைகளின் பாவனையை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. ரஞ்ஜித் அலுவிகாரே கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது ரவி கருணாநாயக்க மேலதிக கேள்வியொன்றை எழுப்பிய போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அணி தோல்வி அடைந்து வெளியேறியது

1509fiba-news203a.jpgஇந்தி யாவில் நடைபெற்றுவரும் 23 ஆவது ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விளையாடிய கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வி அடைந்து வெளியேறியது.

சென்னையில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் இலங்கை மகளிர் கூடைப்பந்து அணி நேற்றைய தினம் பிலிப்பைன்ஸ் அணியை சந்தித்தது. இதில் தொடர்ந்தும் சோபிக்கத் தவறிய இலங்கை அணி 5570 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இலங்கை அணி சார்பாக பிரெமிலா பேருவலகே மற்றும் இனோகா ஜுவான் ஆகியோர் அதிகபட்சமாக தலா 12 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் இலங்கை அணி இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டியில் விளையாடிய 5 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. “பி’ பிரி வில் விளையாடிய இலங்கை அணி இதற்கு முன்னர் மலேசியா (4581), கஸகஸ்தான் (4094), லிபியா (5496) மற்றும் உஸ்பெகிஸ்தான் (4889) அணிகளுடனான போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.

இதன்படி 12 நாடுகள் பங்கேற்றுள்ள இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி கடைசி இடத்தை பிடித்தது.

மலையக தொழிற்சங்கங்கள் ஓரணியில் திரண்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் – இராஜரட்ணம்

080909teawomen.jpgமலையகத் தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதைத் தவிர்த்து ஓரணியில் திரண்டு அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.  அவ்வாறு செய்வதன் மூலமே மலையக பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமென மத்திய மகாணசபை உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம் தெரிவித்தார்.

கண்டி நில்லம்ப ஹார்ல் ஓயாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டத்தின் பின் மலையக தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதையே காணக்கூடியதாகவுள்ளது.  இச்சங்கங்கள் தமக்கிடையிலுள்ள வேற்றுமையைத் தவிர்த்து ஓரணியன் கீழ் திரள்வதன் மூலமே அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்கவேண்டும். அவ்வாறு ஒன்று திரள்வதன் மூலம் மட்டுமே மலையக பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

மலையகத்திலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தோட்டத்தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பினை உருவாக்கவேண்டும்.  இக்கூட்டமைப்பு பொதுத்தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்காக பேரம் பேசும் சக்தியினை மீண்டும் பெறவேண்டும். வெற்றிபெற்ற பின் எந்தக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால், தேர்தலை கூட்டாக சந்தித்து தமிழரின் வாக்குகள் சிதறாமல் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாக்கவேண்டும்

போலி புகைப்படம் வெளியிட்ட மூவருக்கு அக்டோபர் 6 வரை விளக்கமறியல்

காலி ஹிக்கடுவை கடற்கரைப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என போலியானவற்றை வெளியிட்டார்கள் என்ற  குற்றச்சாட்டின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரையும்  எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரிகள் என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் அரசின் அனுசரணையின் பேரில் இடம்பெற்ற இந்த ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டன. போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை சுற்றுலா சபை அதிகாரிகள் சிலர் இரகசிய பொலிஸாரிடமும் பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரிடமும் முறையிட்டனர். அவர்கள் நடத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு தாய்லாந்து கடற்கரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டே ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் புகைப்படங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் : Sri Lanka won by 55 runs (D/L method)

kumar-sangakkara.jpgகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி,  இலங்கையை எதிர்கொள்கிறது. சாம்பியன் கிண்ண ஆறாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் இன்று துவங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒரு நாள் தரப்பட்டியலில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளியது தென் ஆப்ரிக்கா. தற்போது ஒரு நாள் போட்டிகளில் சுப்பர் போர்மில் இருக்கும் தென் ஆப்ரிக்கா அணி,  இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதில் உறுதியாக உள்ளது.

தென் ஆப்ரிக்காவின் துடுப்பாடட வரிசை எதிரணியை மிரட்டுகிறது. கேப்டன் ஸ்மித், காலிஸ்,  டுமினி,  ஆம்லா, பவுச்சர் ஓட்டங்களைக்  குவிக்க காத்திருக்கின்றனர். பயிற்சி போட்டியின் போது விலா எலும்பில் காயமடைந்த கிப்ஸ் இன்றைய போட்டியில் பங்கேற்காதது சற்று பின்னடைவு தான். பந்து வீச்சில்; ஸ்டைன்,  நிடினி, பார்னெல் அசத்த உள்ளனர். கடந்த 1998 ம் ஆண்டு நடந்த முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்ரிக்கா கோப்பை வென்று அசத்தியது. அதற்குப் பின் இத்தொடரில் சாதிக்க வில்லை. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு சற்றும் குறைவில்லாத அணியாக களமிறங்குகிறது இலங்கை. தில்ஷன்,  ஜயசுரியாவின் அதிரடியும்,  முரளி, மெண்டிஸ் சுழலும் கைகொடுக்கும் பட்சத்தில்,  இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்காவை இலங்கை அணி எளிதாக வீழ்த்தலாம். அனுபவ வீரர்களான சங்ககரா,  ஜெயவர்தனா நம்பிக்கை அளிக்கின்றனர்.

வலுவான துடுப்பாட்ட வரிசை கொண்ட இலங்கை அணிக்கு, சமரவீரா, கண்டம்பி, கபுகெதரா ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஓடர் கூடுதல் பலம் அளிக்கிறது. மாலிங்க,  குலசேகராவின் வேகப்பந்து வீச்சு, தென் ஆப்ரிக்காவை மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இதுவரை 45 ஒரு நாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில்,  தென் ஆப்ரிக்கா 22,  இலங்கை 21 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை. சாம்பியன்ஸ் டிரொபி போட்டிகளில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை மட்டும் மோதி உள்ளன. இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்காவே வென்று உள்ளது.

இவ்விரு அணிகள் மோதிய ஒரு நாள் போட்டிகளில், தென் ஆப்ரிக்காவின் அதிக பட்ச ஸ்கோர் 317 (2002, செஞ்சரியன்). குறைந்த பட்ச ஸ்கோர் 154 (1993,  கொழும்பு). இலங்கை அணியின் அதிக பட்ச ஸ்கோர் 308 (2004, கொழும்பு). குறைந்த பட்ச ஸ்கோர் 98 (1993,  கொழும்பு).

ICC Champions Trophy – Group B
Sri Lanka 319/8 (50.0 ov)
South Africa won the toss and elected to field
22 September 2009 – day/night (50-over match)
       
 Sri Lanka innings
 TM Dilshan  c Morkel b Steyn  106
 ST Jayasuriya  lbw b Steyn  10 
 KC Sangakkara*†  c & b Duminy  54
 DPMD Jayawardene  c Duminy b Parnell  77
 TT Samaraweera  c van der Merwe b Parnell  37 
 AD Mathews  b Steyn  15
 SHT Kandamby  c Duminy b Parnell  6
 KMDN Kulasekara  run out (van der Merwe/Steyn)  1
 M Muralitharan  not out  0  
 Extras (lb 5, w 5, nb 3) 13     
      
 Total (8 wickets; 50 overs) 319 (6.38 runs per over)
To bat SL Malinga, BAW Mendis 
Fall of wickets1-16 (Jayasuriya, 2.2 ov), 2-174 (Sangakkara, 27.6 ov), 3-181 (Dilshan, 29.1 ov), 4-297 (Jayawardene, 46.3 ov), 5-297 (Samaraweera, 46.4 ov), 6-314 (Kandamby, 48.6 ov), 7-317 (Kulasekara, 49.4 ov), 8-319 (Mathews, 49.6 ov) 
        
 Bowling
 DW Steyn 9 2 47 3
 WD Parnell 10 0 79 3
 JH Kallis 7 0 43 0
 JA Morkel 4 0 39 0
 J Botha 9 0 53 0
 RE van der Merwe 10 0 42 0
 JP Duminy 1 0 11 1

  South Africa innings (target: 262 runs from 37.4 overs)
 
GC Smith*  b Mendis  58 
 HM Amla  b Mathews  2 
 JH Kallis  c Mathews b Mendis  41 
 AB de Villiers  c Jayawardene b Malinga  24 
 JP Duminy  b Mendis  0
 MV Boucher†  lbw b Mathews  26 
 JA Morkel  not out  29  
 J Botha  c Mathews b Malinga  21
 RE van der Merwe  not out  3
 Extras (w 2) 2     
      
 Total (7 wickets; 37.4 overs) 206 (5.46 runs per over)
Did not bat DW Steyn, WD Parnell 
Fall of wickets1-9 (Amla, 2.6 ov), 2-90 (Smith, 14.1 ov), 3-113 (Kallis, 20.3 ov), 4-113 (Duminy, 20.4 ov), 5-142 (de Villiers, 26.2 ov), 6-163 (Boucher, 31.2 ov), 7-198 (Botha, 35.6 ov) 
        
 Bowling
 SL Malinga 7.4 0 43 2
 KMDN Kulasekara 7 0 44 0
  AD Mathews 8 1 43 2
 M Muralitharan 8 0 46 0  
 BAW Mendis 7 0 30 3

  • Rain: South Africa – 206/7 in 37.4 overs (JA Morkel 29, RE van der Merwe 3)
  • Points Sri Lanka 2, South Africa 0
     
    Player of the match TM Dilshan (Sri Lanka)

    புலிகளாகவே இருந்தாலும் இப்படியா..?-ஜெயலலிதா

    22-jayalalitha.jpgவிடுதலைப் புலிகளாகவே இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்ற இலங்கை ராணுவத்தின் செயல் காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
    இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.

    இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு கால்களை இழுத்துக்கட்டி, ஈவு இரக்கமின்றி சீருடை அணிந்த இலங்கை ராணுவத்தினர் அவர்களை காலால் உதைத்து, பின்னிருந்து தலை வழியாக துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. கைபேசியின் மூலம் ராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோரமான வீடியோ படக்காட்சி, இலங்கையில் மக்களுக்கான விடுதலையுரிமை இல்லை என்பதும் அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமாக கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.

    இந்த ரத்தம் உறைந்த காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும், சில புகைப்படங்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளியிடப்படடும் இலங்கை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழக அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கிறது. மனிதத்தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை.

    தீவிரவாதத்திற்கோ அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கோ ஆதரவாக அதிமுக ஒரு போதும் இருந்ததில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களை கொலை செய்து வருகின்ற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்றைக்கு மாறியதோ, அன்றிலிருந்து இந்த இயக்கத்தை நான் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன்.

    இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப்படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது. இது, போரின்போது சிறைபிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது.

    வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதில் உள்ள அரசியல் தொடர்பு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பவர்களை கொலை செய்வது, தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 25 மைல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து திமுக அரசு சிறிய அளவிலாவது குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்கு இல்லை.

    இருப்பினும் அதிமுகவும், தமிழக மக்களும் இலங்கையில் நடைபெறும் தமிழர்கள் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    அருவருக்கத்தக்க சூழ்நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாடிக் கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மற்றும் மதிப்பை புதுடெல்லியில் உள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இலங்கை அரசின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புகளில் எழுப்பி, இலங்கை அரசாங்கம் அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அனைத்து நாடுகளும் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக அதிமுக ஒத்த கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

    முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளை பாதுகாக்கும் யோசனைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

    முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி அவர்களை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைப்பதற்கான யோசனைகளை உள்ளடக்கிய தேசிய கொள்கைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    சம்பந்தப்பட்ட பல்வேறுபட்ட தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சு நேற்று திங்கட்கிழமை இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்தத் தேசிய கட்டமைப்பு யோசனைகளில் முக்கியமாக வடிவமைக்கப்பட்டிருப்பது முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயமாகும். இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அரசின் சர்வதேச கடப்பாடுகளின் பிரகாரம், முன்னாள் போராளிகளுக்கு உதவுதல், பாதுகாப்பு அளித்தல் என்பனவற்றுக்கான பொறுப்பும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிலையான சமாதானம், நல்லிணக்கம், சமூகத் தொடர்பாடல், முன்னாள் போராளிகளுக்கான தொழில் வாய்ப்பை அதிகரித்தல், சமூக, பொருளாதார ரீதியில் அவர்கள் ஓரம்கட்டப்படும் ஆபத்தைக் குறைத்தல், அத்துடன் போருக்குப் பின்னர் இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் என்பனவும் இந்தக் கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தேசிய கட்டமைப்பு மற்றும் முன்னாள் போராளிகளை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைத்தலின் முக்கியத்துவம் என்பன இலங்கை அரசும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கடந்த மே மாதம் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    நாடு முழுவதும் 27 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை சுற்றுலாவாரம் அனுஷ்டிக்க ஏற்பாடு

    sri-lanka-hotels.jpgஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு நாடு தழுவிய ரீதியில் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை சுற்றுலா வாரத்தை கொண்டாட தீர்மானித்துள்ளது.  இவ்வாரத்தினுள் சுற்றுலா மற்றும் உல்லாசப் பயணத்துறை தொடர்பாக சூழலுடனும் அதனை சார்ந்த சமூகத்துடனும் நல்லுறவை பேணிப்பாதுகாப்பதுடன் உல்லாசப் பயணத்துறையை பிரபல்யப்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.

    வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தற்போது ஓரின சுமுக நிலை ஏற்பட்டுவருவதால் வெளிநாட்டு மற்றும் உள்ளூரைச் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மேலும், மகிந்த சிந்தனையின் அடிப்படையில் தேசிய அபிவிருத்தி கொள்கைக்கு அமைவாகவே சுற்றுலாத்துறை அமைச்சு பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் உல்லாசப் பிரயாணிகளை கவரக்கூடிய இடங்களை மேலும் அபிவிருத்தி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பாடசாலை மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடத்திய சித்திரம், கட்டுரை மற்றும் சுவரொட்டி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சுற்றுலா வாரத்தின் இறுதிநாள் நிகழ்வின் போது வழங்கப்படும்.

    ஐ.நா.விசேட நிபுணர் அல்ஸ்டனை வரவழைக்க அரசாங்கம் தயாரில்லை: அமைச்சர் சமரசிங்க

    minister-mahinda-samarasinghe.jpgஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்துவிட்டது என்று ஐ.நா.வின் விசேட நிபுணர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    மேலும் சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கென இலங்கைக்கு செல்ல தாம் நீண்ட நாட்களாக அரசாங்கத்திடம் அனுமதி கோரி வருவதாகவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.