அரசாங்கத்தின் மது ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மது உற்பத்தியும், மது பாவனையும் வெகுவாகக் குறைந்து ள்ளது என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய தெரிவித்தார். 2007 முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் மது உற்பத்தி 9.5 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. மதுபாவனையும் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் 9.42 வீதமாக வீழ்ச்சியடை ந்துள்ளது.
அரசாங்கம் படிப்படியாக மதுவை ஒழிப்பதற்காக எடுத்துவரும் நடவடிக்கையையே இவை காட்டுகின்றன. எனினும், மதுவுக்கான வரி விதிப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மது ஒழிப்புக்கான ஒரு அங்கமாகவே மது வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுடன் 2009 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது மதுவுக்காக 44 வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுவுக்கென 34 வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பியர் வகைகளுக்கென 28 வீத வரி அதிகரிப்பும், வைன் வகைகளுக்கென 69 வீத வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரியினூடாக அரசுக்கு கிடைக்கும் பணத்தை விட மது பாவனையை குறைக்கும் நோக்கத்துடனே வரி விதிப்புகளும் செய்யப்படுகின்றன.
அரசாங்கம் மது வகைகளின் உற்பத்தி, வெளிநாட்டு மது வகைகளின் இறக்குமதி சகல மது வகைகளின் பாவனையை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ஐ.தே.க. எம்.பி. ரஞ்ஜித் அலுவிகாரே கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது ரவி கருணாநாயக்க மேலதிக கேள்வியொன்றை எழுப்பிய போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.