2009

2009

சமோவோ தீவுகளில் சுனாமி – 100 பேர் பலி

300909samova_tsunamy.pngபசிபிக் பெருங்கடலில் உள்ள  சமோவோ மற்றும் அமெரிக்கன் சமோவோ ஆகிய தீவுகளில் ஏற்பட்ட சுனாமியால் 100 பேர் பலியானார்கள். பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவுக் கூட்டமே இந்தத் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதில் சமோவா என்ற நாடும் அமெரிக்காவுக்குச் சொந்தமான அமெரிக்கன் சமோவா என்ற தீவும் அடங்குகின்றன்

இவற்றின் சில பகுதிகளில் நேற்று 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல் கொந்தளித்து சுனாமி வந்ததால்,  நிலப்பரப்புக்குள் கடல் நீர் புகுந்தது. கடற்கரையோர விடுதிகளில் நீர் புகுந்ததில் 100 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்திருக்கின்றன.

வருட இறுதிக்குள்; தாண்டிக்குளம் முதல் முகமாலை வரையான ரயில் சேவைகள் – போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை

train0000.jpgஇவ்வருட இறுதிக்குள்; தாண்டிக்குளத்தில் இருந்து முகமாலை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.  யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தாண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 27 ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கும் பொறுப்புகளை 27 உள்நாட்டு வெளிநாட்டு அனுசரணையாளர்கள் ஏற்றுள்ளனர். அதன்படி காங்கேசன்துறை வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணிகள் 27 உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படுகின்றது.

போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமா இன்று உத்தியோகபூர்வமாக இதனைக் கையளிக்கின்றார்

முகாம் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் : வோல்டர் கெலின்

210909walter-kalin.jpg“மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயல்தான். என்றாலும் அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும் “என்று இடம்பெயர் மக்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார். இந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவது குறித்து தான் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்டர் கெலின் தனது விஜயம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கியநாடுகள் உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ இங்கு வந்த போது இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளின் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது பற்றியும் மீள குடியமர்த்துவதில் இடம்பெறும் தாமதங்களை நீக்குவது பற்றியும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து நான் அவதானம் செலுத்தினேன். இடம்பெயர்ந்தவர்களில் 70, 80 சதவீதத்தினரை இந்த வருட முடிவில் மீள குடியமர்த்துவது என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. மன்னாரில் அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றவதிலும் புனர்நிர்மாணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயலாக இருந்த போதிலும், அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும்.

விரைவில் இதனைச் செய்ய முடியாவிட்டால் இந்த மக்களை வரவேற்று அரவணைக்க விரும்பும் உறவினர், நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கும் திறந்த இடைத் தங்கல் முகாம்களில் வசிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். பருவப்பெயர்ச்சி மழைக் காலம் நெருங்குவதால் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

உடனடி அவசரத்தின் பேரில் அமைக்கப்பட்ட தற்போதைய முகாம்கள் பலத்த மழையைத் தாங்கும் சக்தியற்றவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பெருக்கினால் தாழ்ந்த பகுதிகளிலுள்ள முகாம்களில் வசிப்பவர்களின் சுகாதாரத்திற்கும் உயிருக்கும் பேராபத்து ஏற்படலாம்.

அரசாங்கத்தின் சார்பில் என்னுடன் பேசியவர்கள் மேற்கண்ட தேவைகளின் அவசியத்தை தம்முடன் பகிர்ந்து கொண்ட போதிலும் அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை செயல்படுத்த மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்

தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் நடமாடும் சுதந்திரத்தை வழங்குவது அவசியமாகும். இந்த விடயம் தொடர்பாக, அண்மையில் இடம் பெற்ற ஒரு சம்பவம் பற்றி கடந்த 26ஆம் திகதி இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.  ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மாறிச் செல்ல முயன்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இருவர் காயமடைந்தமை பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.

கட்டாயத் தடுப்புக் காவலில் பெருந்தொகையான மக்களை நீண்ட நாட்களுக்கு தடுத்து வைக்கும் போது, முகாம்களின் இடவசதிகள் பற்றி கவனம் செலுத்தாதிருப்பது அவர்களது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் கட்டாயத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவது பற்றிய தீர்மானம் கூட்டாக அன்றி தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் வசதியையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டும். அத்துடன், எடுக்கப்பட்ட தீர்மானங்களை பாதுகாப்பு, தராதரம் ஆகியவற்றை மனதிற் கொண்டு சுயாதீன குழு ஒன்று அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டும்.

20 வருடங்களுக்கு முன்னரே இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அகதிகளாக இருப்போரையும் புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மிருகக் காட்சிசாலையைப் பார்வையிட சிறுவர்களுக்கு இலவச அனுமதி!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை தேசிய மிருகக் காட்சிசாலையை சிறுவர்கள் இலவசமாகப் பார்வையிடலாம் என மிருகக் காட்சிசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என்றும் இது தவிர சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய வைபவம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடல் பகுதி பாதுகாப்புக்கு இந்தியா, பாகிஸ்தான் கூட்டுப் படை – பாகிஸ்தான் யோசனை

210909flag.jpgகடல் வழியாக வந்து தீவிரவாதிகள் தாக்குவதைத் தடுக்கும் வகையில், கடல் பகுதி பாதுகாப்புக்கு கூட்டுப் படை அமைக்கலாம் என பாகிஸ்தான் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில்,  பாகிஸ்தானின் கராச்சி பகுதியிலிருந்து கடல் வழியாக மும்பை சென்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 183 பேர் பலியாகினர். இந்நிலையில்,  கடல் கொள்ளைகளைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கு, கராச்சி நகரில் திங்கள்கிழமை நடந்தது. இக்கருத்தரங்கை துவக்கிவைத்த பாகிஸ்தான் கடற்படைத் தலைவர் நோமன் பஷீர்,  பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மும்பை தாக்குதலை அடுத்து,  கடல் பகுதி பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், இந்தியா,  பாகிஸ்தான் இரு நாட்டு வீரர்களையும் கொண்ட கூட்டுப் படை அமைக்கலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்திருக்கிறோம் என்றார்.

மும்பை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய படகுகளை,  விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்தப் படகுகளை ஓட்டிச் சென்றவர்களை தற்போது தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை கடல் கொள்ளை அதிகமாக நடந்துள்ளது. 33 கப்பல்களை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். 140 தாக்குதல்களை நடத்தி உள்ளனர் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

வட கொரிய அரசியலமைப்பில் மாற்றம்!

வட கொரியா அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கம்யூனிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த வடகொரியா,  தற்போது அந்த கொள்கையிலிருந்து விலகி புதிய பொருளாதார திட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்து வருவதாக,  தென் கொரிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கம்யூனிச நாடான வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் இல் (67). தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் பகைமை போக்கை மேற்கொண்டுள்ள இந்நாடு ஏராளமான ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் குவித்து வருகிறது.  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா, சீனா,  மியான்மர்,  உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் தோழமை நாடாக விளங்கி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் கிம் ஜாங் இல் நோய் வாய்ப்பட்டார். மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தால் இவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவரது மூன்றாவது மகனிடம் ஆட்சியை ஒப்படைக்கும் வேலைகள் நடக்கின்றன. இளம் தலைமுறையிடம் ஆட்சி மாற இருப்பதால், நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் கடந்த ஏப்ரலில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மாற்றத்துக்கு ஏற்ப கம்யூனிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த வடகொரியா, தற்போது அந்த கொள்கையிலிருந்து விலகி புதிய பொருளாதார திட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்து வருவதாக,  தென் கொரிய் தெரிவித்துள்ளது.

தமிழ் மொழி புறக்கணிப்புக்கு ஆட்சேபனை

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபையின் நடவடிக்கைளில் தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இந்தச்சபையின் தமிழ் உறுப்பினர்கள் நேற்று 29 ஆம் திகதி வெளிநடப்பு செய்துள்ளனர்.

கொத்மலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற போதே, கொத்மலை பிரதே சபையின் தமிழ் உறுப்பினர்களான அந்தனிராஜ், சிவகுமார், ஜோன்பிள்ளை ஆகியோர் இவ்வாறு வெளிநடப்பு செய்தனர்.

அத்துடன் 2004 ஆம் ஆண்டு முதல் கொத்மலை பிரதேசபையின் தமிழ் உறுப்பினர்களுக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்வதிலும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றமைக்கு குறித்தும் நேற்றைய அமர்வின் போது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகக் கொத்மலை பிரதேசபை உறுப்பினர் அந்தனிராஜ் தெரிவித்தார்.
 

நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்க எவருக்கும் உரிமையில்லை : கெஹெலிய ரம்புக்வெல

நாட்டின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாதென தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடந்த வைபமொன்றில் உiரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்கின்றது. அதன் தலைவர் முப்படைகளுக்கும் தளபதியாவார். எனவே இறைமையுள்ள நாடொன்றுக்கு வெளியிலிருந்து அழுத்தம் பிரயோகித்து பக்கச் சார்புடன் நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் இத்தகைய அழுத்தங்களைப பிரயோகிக்க முயலுகின்றன. இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க இத்தகைய சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

வழக்குப்பதிவா? விடுதலையா? – அமைச்சு ஆராய்வு: அரசியல் இலாபம் வேண்டாம் – புத்திரசிகாமணி

210909jail.jpgசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 600 இற்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். கைதிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

எனவே, கைதிகளை உண்ணாவிரதமிருக்குமாறு தூண்டிவிடுவதோ, அரசியல் இலாபத்திற்காக அறிக்கைகளை விடுவதோ, கைதிகளின் நன்மையைப் பாதிக்குமென்றும் பிரதியமைச்சர் கூறினார்.

தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறும் தமிழ்க் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் அவசரகாலச் சட்டத்தின் கீழும், பல்வேறு காலகட்டங்களில் கைதுசெய்யப்பட்டவர்களே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி, கைதிகளின் விபரங்களைத் தனித்தனியே ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில் தமது நடவடிக்கைகளுக்குக் கைதிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார். அதேநேரம் இந்தப் பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். கைதிகள் சிறைகளில் இருப்பது தமக்குக் கவலையளிப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி, கைதிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

எயார் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் ரிக்கெட் பதிவுகள் ரத்து; சேவைகள் பாதிப்பு

26-air-india.jpgவிமானிகளின் வேலைநிறுத்தம் எதிரொலியாக கடைசி நிமிடத்தில் விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங் களை கருத்தில் கொண்டு காலை நேர விமானங்களை ரத்துச் செய்யவும்,  ரிக்கெட் முன்பதிவுகளை நிறுத்திவைக்கவும் எயார் இந்தியா முடிவு செய்துள்ளது.