26

26

உக்ரைனில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதும் இராணுவ தாங்கி – வைரலாகும் வீடியோ !

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது இராணுவ தாங்கி ஒன்று ஏறிய வீடியோ தற்போது சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த இராணுவ தாங்கி உக்ரைனை சேர்ந்ததா? அல்லது ரஷ்யாவை சேர்ந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் உக்ரைன் நாடாளுமன்றிலிருந்து வடக்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது எதிரே வந்த இராணுவ தாங்கி வேகமாக மோதியது. இதில், இராணுவ தாங்கிக்கு அடியில் கார் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி வந்த முதியவரும் அதில் சிக்கிக்கொண்டார்.

அதன்பின்னர், சில வினாடிகள் கழித்து இராணுவ தாங்கி காரில் இருந்து கிழே இறங்கி முன்னேறி சென்றது. இதையடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களில் சிலர் சிதைந்த காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இராணுவ தாங்கி ஏறியதில் கார் உருக்குலைந்தபோதும் காரில் இருந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இராணுவ தாங்கி கார் மீது ஏறுவதும், காரில் சிக்கிய முதியவரை மீட்கும் வீடியோவும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு – அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி வந்த கட்டளை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை தற்போது இல்லை.
இந்நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷிய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டிய  நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இனி உக்ரைன் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும். தலைநகரை கைப்பற்றுவதற்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டன தீர்மானம் – வீட்டோ மூலம் தோற்கடித்தது ரஷ்யா !

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும், ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ரஷ்யா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்துஇ ராணுவப் படைகளையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா, போலந்து, இத்தாலி, ஜேர்மனி, நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

எனினும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

ரஷ்ய தூதரகத்துக்கு போப் ஆண்டவர் திடீர் விஜயம் – போரை உடனே நிறுத்துமாறு வேண்டுகோள் !

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை கைவிடுமாறு உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. ஆனால் அதை ரஷ்யா ஏற்கவில்லை.
இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரோமில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு திடீரென்று நேரில் சென்றார்.
அப்போது அங்கிருந்த தூதரக அதிகாரிகளை சந்தித்து உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் குறித்த தனது கவலையை தெரிவித்தார். போரை உடனே நிறுத்துமாறு அவர் தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ரஷிய தூதரகத்துக்கு போப் ஆண்டவர் நேரில் சென்றதை வாத்திகான் அதிகாரிகள் உறுதி செய்தனர். போப் ஆண்டவர் சிறிய வெள்ளை காரில் ரஷ்ய தூதரகத்துக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் ஆண்டவரின் இந்த போர் நிறுத்த முயற்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஷ்யா செல்லும் சரக்குக் கப்பலை இடைமறித்த பிரான்ஸ் கடற்படை !

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்லும் சரக்குக் கப்பலை, ஆங்கில கால்வாய் வழித்தடத்தில் பிரான்ஸ் கடற்படை இடைமறித்துள்ளது.

பிரான்ஸ் அதிகாரிகள், புதிய ஐரோப்பிய ஒன்றியத் தடைகளுக்கு இணங்க கப்பல் இடைமறிக்கப்பட்டது என்றும், அது வடக்கு துறைமுகமான பவுலோன்-சுர்-மெர்க்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.