02

02

புலிகள் இயக்கத்தலைவரின்  புகைப்படத்தினை  பதிவிட்டு கைதானோருக்கு நீதிமன்றம் வழங்யுள்ள தீர்ப்பு !

மட்டக்ளப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நால்வர் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பான கடித்தின் படி குறித்த வழக்கிற்கான நகர்த்தல் மனு நீதி மன்றில் இன்று சமர்ப்பிக்கப்படடவேளை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி கருப்பையா ஜீவராணி அவர்களினால் பிணை வழங்கப்பட்டள்ளது.

கடந்த2020 நவம்பர் 27,ம்,28,ம்,திகதிகளில்,  ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி சித்தாண்டி  ஏறாவூர் மற்றும் ஜயங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்தபேர் க.சோபனன், யோ.யோகேஸ்வரன் , வ.விவேந்த், க.ஜெகநாதன் ஆகியவர்ளே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் முகப் புத்தகத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின்  உருவம் அடங்கிய புகைப்படத்தினை  பதிவிட்டதன் பிரகாரம் இவர்கள் ஏறாவூர்  பொலிசாரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சுமார் 13 மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நால்வர் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கினங்க இன்று அவர்களுக்கு தலா 02 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டடிவர்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் ஏறாவூர் பொலிஸ் நிலைத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் !

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் சுரங்க லக்மால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சுரங்க லக்மால் அறிவித்துள்ளார்.

எழுத்து மூலமாக தீர்வு கிடைக்கும் வரை தொழிலுக்கு செல்ல மாட்டோம். – யாழ். மீனவர்கள் தொடர் போராட்டத்தில் !

நாம் இனி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கதைகளை நம்ப போவதில்லை. முடிவு கிடைக்கும் வரை நாம் தொழிலுக்கு செல்ல மாட்டோம். உரியவர்கள் தீர்வோடு இங்கு வர வேண்டும். எழுத்து மூலமாக தீர்வு பெற்று தர வேண்டும் என யாழ். மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் பருத்தித்துறை சுப்பர் மேடம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடலில் இரண்டு உயிர்கள் பறிபோய்விட்டது.இனியும் நாம் பொறுத்திருக்க மாட்டோம். ஆகவே தான் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில், மக்கள் போராட்டமாக இதை முன்னெடுத்துள்ளோம்.

தற்போது 13 மீனவ சங்கங்கள் இணைந்துள்ளன. தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பல வாக்குறுதிகளை எமக்கு தந்து ஏமாற்றியுள்ளனர். ஆகவே, நாம் இனி அவர்களின் கதைகளை நம்ப போவதில்லை. முதலில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். முடிவு கிடைக்கும் வரை நாம் தொழிலுக்கு செல்ல மாட்டோம். உரியவர்கள் தீர்வோடு இங்கு வர வேண்டும். எழுத்து மூலமாக தீர்வு பெற்று தர வேண்டும்.

 

நாம் இனியாரையும் சென்று சந்திக்க மாட்டோம். கடற்படை தளபதியோ அல்லது, அமைச்சரோ இங்கு வந்து எழுத்து மூலமாக எமக்கு வாக்குறுதி தர வேண்டும். இனிமேலும் இந்திய இழுவை படகால் எமக்கு அநீதி இழைக்க கூடாது. இந்திய தமிழ் சொந்தங்களுடன் எமக்கு கோபம் இல்லை. முரண்பாடு இல்லை. எமது எல்லைக்குள் வந்து மீன் பிடித்து, எங்கள் கடல் வளங்களையும், எமது உடமைகளையும் அழிக்க வேண்டாம் என்று தான் நாம் கூறுகின்றோம்.

 

ஆகவே இந்திய ஊடகங்கள் செய்திகளை தெளிவாக உண்மையாக வழங்க வேண்டும். மீனவ சமுதாயம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். ஆளுநர் கூட அதிகாரி ஒருவரை அனுப்பி வைத்திருந்தார். நாம் ஆளுநர் அலுவலகத்தில் சென்று அவரை சந்திக்க மாட்டோம். யார் என்றாலும் இங்கு வந்து தீர்வை எழுத்து மூலம் தரவேண்டும். – என்றனர்.

“நாம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா உயிரிழப்பை தடுத்திருப்போம்.” – ஐக்கிய மக்கள் சக்தி

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் 15,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றினால் உயிரிழக்க இடமளித்திருக்காது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தம்மிக பாணி, சுதர்சன பாணி போன்றவற்றைக் காட்டி தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்திய அரசு, தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடுவது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வைபவம் நடத்துவது உலகிலேயே இலங்கை மட்டும்தான் என்றும் அவர் கூறினார்.

இன்று கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், சமூகத்தில் கண்டறியப்பட்டதை விட கண்டறியப்படாத நோய்த்தொற்றுகள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை சண்முக கல்லூரியில் மீண்டும் ஹபாயா ஆடைப்பிரச்சினை – அதிபரும் – ஆசிரியையும் வைத்தியசாலையில் அனுமதி !

2017ல் ஹபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை ஹபாயா அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலையை விட்டு திருகோணமலை சண்முக கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியைகள் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியைகளை மீள சண்முக இந்து கல்லூரிக்கு  உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது.

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை வெளியாகி வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான ஆசிரியை பஹ்மிதா ரமீஸ்  மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

சென்ற மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் சண்முகவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு இன்று (02.02.2022) ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் சண்முக இந்து கல்லூரிக்கு கடமையை ஏற்குமாறு அனுமதித்தது. அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது.

இந்நிலையில் குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமையை பொறுப்பேற்க சென்ற நிலையில் பாடசாலை சமூகத்திற்கும் குறித்த பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரை ஹபாயா அணிந்து வந்த ஆசிரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹபாயா அணிந்து வந்தமையால் கோபம் கொண்ட அதிபர் தன்னை தாக்கியதாகவும் கூறி இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து ஹபாயா அணிந்து சென்றதன் காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இன்று மீண்டும் பாடசாலைக்கு கடமை ஏற்க சென்ற போது பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டது மாத்திரமல்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவரால் ஆசிரியர் மீது தாக்குதல் முயற்சிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கில் பிறந்தநாள் கொண்டாட்டம் – நாடாளுமன்றில் வைத்து மன்னிப்பு கேட்டார் பிரதமர் போரிஸ் ஜோன்சன் !

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பிறந்தநாளையொட்டி பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடா்பாக லண்டன் போலீசார் அண்மையில் விசாரணையை தொடங்கினர். அதுதொடா்பான அறிக்கை முழுமையாக வெளியிடப்படாதபோதிலும், முக்கிய தகவல்கள் அடங்கிய 12 பக்க அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது.

அதில் ஊரடங்கு அமலில் இருந்தபோது பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த கட்சியினரே அவரை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கின்போது விதிமுறையை மீறி பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளுக்காக போரிஸ் ஜோன்சான் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மன்னிக்கவும். மக்களின் கோபம் எனக்குப் புரிகிறது. நாம் கண்ணாடியில் நம்மை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். அதே சமயம் இதை சரிசெய்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

“மீனவர் பிரச்சினையில் அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை தான் இருக்கிறது.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று சுப்பர்மடம் பகுதியில் மீனவரகள் போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மைக் காலமாக வட பகுதி கடலிலே எங்களுடைய கடற்றொழிலாளர்கள் தங்களுடைய இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடற்றொழில் உபகரணங்களை மாத்திரமல்ல தங்களுடைய இன்னுயிர்களையும் திறக்கின்ற நிலமை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து எல்லை தாண்டி வருகின்ற ரோளர் பாரிய இழுவை மடி படகுகள் மோதி பாரிய சேதம் ஏற்பட்டுருக்கிறது.

இதே போல இலங்கை கடற்படையினரது படகுகளாலும் வேண்டுமென்றும் விபத்தினாலும் கொல்லப்பட்டு கரை ஒதுங்குகின்ற கடற்றொழிலாளர்களது சடலங்களால் ஒரு பதட்டமான சூழல் அதிகரித்திருக்கிறது.

வடமராட்சி மருதங்கேணி வத்திராயன் பகுதியில் இரண்டு கடற்றொழிலாளர்களது உடல்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. இதே போன்று பருத்தித்துறை பொன்னாலை வீதியிலே சுப்பர்மடம் பகுதியிலே வீதியை மறித்து நேற்று முன்தினம் காலை 8:00 மணியிலிருந்து அவர்கள் மறியல் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

பொலிகண்டி வரை வீதி போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் இதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழ மீனவர்களும், தமிழக மீனவர்களும், நடுக்கடலிலே மோதுவதை இல்லாமல் செய்ய வேண்டும்.

தமிழக அரசும் வட மாகாணத்திலே இருக்கக் கூடிய சங்கங்கள், உட்பட மக்கள் பிரதிநிதிகளும் பேச வேண்டும். இப்பொழுது கூட இரண்டு தினங்களுக்கு முன்னர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இந்தமாதிரியான பதட்டங்களை குறைக்க முன்வருமாறு கேட்டிருப்பதாக எனக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.

இப்பொழுது கூட அவரது உதவியாளர் வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன் அவர்கள் இன்றிரவு தமிழக முதலமைச்சருடன் பேசிவிட்டு செய்தி தருவதாக சொல்லியிருக்கிறார்.  உடனடியாக ஒரு போர் நிறுத்தம் போல அந்த எல்லையில் இருப்பவர்கள் எல்லை தாண்டக் கூடாது. இல்லாவிட்டால் எங்களுடைய மக்கள் பட்டிணியாலும் பசியாலும் தான் பாதிக்கப்படுவார்கள். மீதி விடயங்களை பேசி ஒரு இணக்கத்தின் அடிப்படையில் தீர்வு காணப்ட வேண்டும். இலங்கை அரசு இதில் அக்கறை காட்டும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்திய மத்திய அரசுக்கும் ஏனோ தானோ நிலவரம்தான். இதிலே அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை இருக்கிறது.

அவர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறார்கள். தற்போது விலை வாசி அதிகரித்திருக்கும் நிலையில் பனையால் விழுந்தவனை யானை மிரிப்பதாக உள்ளதாகவும் உடனடியாக இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும். அதற்க்கான முழு முயற்சிகளை உடனடியாக எடுப்போம் என்றார்

“தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமை உண்டு.” – சி.வி. விக்கினேஸ்வரன்

“வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமையும் தார்மீகக் கடப்பாடும் உள்ளது.” வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட எம். பி யுமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

ஏழு தமிழ் கட்சிகளின் கடிதம் ஸ்ரீ மோடிக்கு அனுப்பப்பட்டதற்கும் உத்தேச புதிய அரசியலமைப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதாவென அவரிடம் எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்திருக்கும் அவர், இது தொடர்பில்  மேலும் கூறியிருப்பதாவது,

அநேகமாக ஆம். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள்தொடர்பாக புதிய அரசியலமைப்பில் பயனுள்ள மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 1972 மற்றும் 1978 இன்இரண்டு முன்னைய அரசியலமைப்புகள் மீதான விவாதத்தை தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக எதிர்க்கவும் புறக்கணிக்கவும் மட்டுமே முடிந்தது. வடக்கு ,கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதிலிருந்து தடுக்கக்கூடியதாக எதுவும் சாத்தியமற்றதாகவிருந்தது.

இம்முறையும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் அவர்களின் நலன்களுக்கு விரோதமான அரசியலமைப்பை கொண்டுவரும். 1978 ஒற்றையாட்சிஅரசியலமைப்பு இன்று தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கும் ஒரேயொரு வலுக் குறைந்த நன்மை பதின்மூன்றாவது திருத்தமாகும்.

1987 ஆம் ஆண்டு மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் நன்மைகளை வழங்குவதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், அதனை அமுல்படுத்தும் போது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா நாடளாவிய ரீதியில் மாகாணசபை முறைமையை பிரயோகிப்பதை தேர்ந்தெடுத்தார். இப்போது அவர்கள் மாகாண சபைகளை வெள்ளை யானை என்று குறிப்பிடுகிறார்கள். சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவ்வாறு இருக்ககூடும்.

ஆனால் இலங்கை பூராகவும் உள்ள வடக்கு, கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பார்வையில் அவர்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாகாணசபை மட்டுமே உறுதியான சட்டரீதியான நிறுவனமாக உள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் பார்வையில் மாகாணசபை முறைமை எடுத்துவிட்டால் இந்த நாட்டில் நாம் மற்றொரு சிறுபான்மை இனமாக மாறிவிடுவோம். உண்மையில் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஏழு மாகாணங்களிலுமுள்ள பெரும்பான்மையினர் இரண்டு மாகாணங்களிலுமுள்ள பெரும்பான்மையினரை முழு தீவு முழுவதும் சிறுபான்மையினராக மாற்ற முடிந்தது.

தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். ஒரு பழமையான மொழியைப் பேசுகிறார்கள், தீர்க்கமான தாயகங்களைக் கொண்டுள்ளனர், பெரும்பான்மையான சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட மதங்களையும் கலாசாரங்களையும் பின்பற்றுகிறார்கள். சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்காமல், ஒற்றையாட்சி அரசியலமைப்பிலிருந்து பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கினால், எங்களுடையது என்று அழைக்கக்கூடிய எந்த வொரு உறுதியான சட்டரீதியான நிறுவனமும் இல்லாமல் நாங்கள்நிராதரவாகிவிடுவோம் .

நாங்கள் அறிமுகப்படுத்த முயற்சித்திருந்த பிரயோசனமான பொருளாதாரத் திட்டங்களை அரசாங்கம் அதனது தரப்பில் தடுத்து ஊறுவிளைவித்தபோதும் வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் வடக்கில் மாசுபடுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு விரும்பத்தகாத சக்திகள் மேற்கொண்ட முயற்சிகளை என்னால் தடுக்க முடிந்தது.

வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்த வரையில் மாகாணசபை வலுக்குறைந்ததாகவும் வினைத்திறனற்றதாகவும் இருந்த போதிலும், ஏனைய இடங்களில் பெரும்பான்மை சிங்களம் பேசும் இடங்கள் என்பதற்கு மாறாக தமிழ் பேசுபவர்கள் என்ற சட்டரீதியான அங்கீகாரத்தை வடக்கு கிழக்கு மக்களுக்குஇப்போதும் வழங்குகின்றது. மாகாணசபையை அகற்றினால் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களை இலகுவில் சிறுபான்மையினராக முழு நாட்டிலும் கட்டுப்படுத்த முடியும். ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்தீடானது புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளை கைவிடுவதை கற்பனைசெய்து பார்க்கக்கூடியதொரு முன்னோடியாக இருக்கின்றது.

மாகாண சபை முறைமையை நீக்குவதை புதிய அரசியலமைப்பு வரைபின் உள்ளடக்கம்கொண்டிருக்கின்றது என்று சிங்கள பத்திரிகையில் வெளிவந்திருந்ததை அமைச்சர்கள் இப்போது மறுத்து வருகின்ற போதிலும், நாங்கள் ஸ்ரீ மோடிக்கு எமது கடிதத்தை அனுப்பிய போது இதனை முன்னரேயே எதிர்வுகூறியிருந்தோம்.  புதிய அரசியலமைப்பின் முழு நோக்கமும் பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கி, இலங்கை விவகாரங்களில் இந்தியா குரல் கொடுப்பதைத் தடுப்பதாகும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது இந்தியா இலங்கைக்கு உதவவில்லை என்றால், கொழும்பில் அரசுக்கு பாதகமான எதுவும் நடந்திருக்கும்.

அந்த நேரத்தில் இலங்கைக்கு இந்தியாவிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை (இப்போது சீனாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டது போல). இந்தியா தனது பங்கிற்கு தமிழர்கள் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தமிழர்களின் பிரதிநிதிகளோ அல்லது புலிகளின் தலைவர்களோ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே, இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கும் போது வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமையும் தார்மீகக் கடப்பாடும் உள்ளது.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரியமை , அது தமிழர்களாகிய எமக்கு போதுமான அதிகாரங்களை வழங்கியதற்காக அல்ல, மாறாக அது அகற்றப்பட்டால் நாம் முற்றிலும் சக்தியற்றவர்களாகிவிடுவோம் என்பதற்காகவே . வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு பாதகமாக இடம்பெறும் எந்தவொரு விடயத்தையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய பூர்வாங்க கலந்துரையாடல்களில்பங்கேற்றவராக இப்போதுஇந்தியாவை நாம் கொண்டிருக்கிறோம். வடக்கு , கிழக்கைப் பொறுத்த வரையில் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக மாகாண சபைகளை நீக்க முடியாது. பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோருவதன் மூலம் எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நாங்கள் தேடவில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மாகாண சபைகளை வைத்திருக்க முயல்கிறோம். நாங்கள் கருதும் நிரந்தரத் தீர்வு கூட்டு சம்மேளனமேதவிர , குறைவானத்து அல்ல.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கும் தார்மீகக் கடமை உள்ளது. இலங்கையின் பழங்குடி மக்கள் அடக்குமுறைக்குட்படுத்தப் படுத்தப்படும்போதும், பாரபட்சம் காட்டப்படும்போதும் அலட்சியமாக இருக்க முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்திருப்பது அரசாங்கத்தின் திட்டங்களை குறிக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்றதான சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இரகசிய நோக்கங்களை சுட்டிக்காட்டும் வகையில் ஸ்ரீ மோடிக்கு கடிதம் அனுப்பத் தீர்மானித்தோம்.” என அவர் பதிலளித்துள்ளார்.

இறுதியுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட கள்ளச்சந்தை டொலர் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என வெளியான தகவல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

நாங்கள் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றோம் – பசில் என்ற தலைப்பில் செய்தி இணையத்தளமொன்றில் வெளியான தகவல் குறித்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சருடன் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்- நிதியமைச்சர் தான் தெரிவித்ததாக வெளியான கருத்துக்களை முற்றாக நிராகரித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.