14

14

பரீட்சையில் குறைவான புள்ளி – குடும்பத்தினரை சுட்டுக்கொலை செய்த 15 வயது பள்ளி மாணவன் !

ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான அலிகாண்டேவில் இருந்து   20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
15 வயது பள்ளி மாணவன் தேர்வில்  குறைவான மதிப்பெண் பெற்றது தொடர்பாக அவனது தாய் சத்தம் போட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் இருந்த வேட்டையாடும் துப்பாக்கியால் முதலில் தாயையும், பின்னர் தனது 10 வயது சகோதரரையும், தொடர்ந்து தனது தந்தையையும் அந்த சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான். தொடர்ந்து 3 நாட்கள் சடலங்களுடன் வீட்டில் அந்த சிறுவன் தனியாக இருந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து வெளியே யாருக்கும் தெரியவில்லை.
3 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டிற்கு சென்ற உறவுக்கார பெண்ணிடம் அந்த சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றியதுடன் சிறுவனை கைது செய்தனர்.

புனித நூல் பக்கங்களை கிழித்த மனநலம் குன்றியவரை மரத்தில் கட்டி கல்லால் அடித்துக் கொலை செய்த கும்பல் !

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த சனிக்கிழமையன்று ஒரு நபர் புனித நூல் பக்கங்களை கிழித்து விட்டதாக தகவல் பரவியதை அடுத்து, கும்பல் ஒன்று அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் உடலை மரத்தில் அவர்கள் தொங்க விட்டனர்.
அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் மரத்தில் இருந்து உடலை கீழே இறக்க முயன்ற இரண்டு போலீசார் மீது அந்த கும்பல் கற்களை வீசியதில் அவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார். சட்டத்தை பொது மக்கள் கையில் எடுத்துக் கொள்வதை தமது அரசு சகித்துக் கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இது குறித்து பஞ்சாப் காவல்துறைத் தலைவரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் இம்ரான்கான் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

“இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படவில்லை.” – கொரியாவில் மைத்திரிபால

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகின்ற போதிலும் எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச தராதரத்திலான முழுமையான நல்லிணக்கம் ஏற்படவில்லை உறுதியான அதிகாரப்பொறிமுறை ஏற்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

கொரிய தலைநகரில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கிமூனின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பான்கி மூன் தன்னாலான அனைத்தையும் செய்தார். நான் சமாதானத்திலும் யுத்தத்தை தவிர்ப்பதிலும் நம்பிக்கை கொண்டவன். எந்த பிறழ்வுகளிற்கும் மோதல் பதிலாக அமையக்கூடாது.

சம்பந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதும் பொருளாதாரத்தை மீளகட்டியெழுப்புவதுமே அவ்வாறான தருணங்களில் அவசியமான நடவடிக்கை.  இதன்காரணமாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லிணக்கத்தின் நான்கு தூண்களை அடிப்படையாக வைத்து இலங்கை நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டது.

சர்வதேச சமூகம் மிகவும் தீவிரமான உடனடி தீர்வாக அமையக்கூடிய நடவடிக்கைகளை எதிர்பார்த்தது – வேண்டுகோள் விடுத்தது. அவைஉயர்ந்த எதிர்பார்ப்புகள் ஆனால் துரதிஸ்டவசமாக எதிர்பார்க்கப்பட்ட வேகம் நல்லிணக்கப்பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் பிரதிபலிக்கவில்லை.

கொரிய தீபகற்பத்தின் மோதல் 70 வருடங்களாக நீடிப்பது. மோதலில் ஈடுபட்ட தரப்பினரின் நலன்கள் குறித்தும் கடந்த காலங்கள் குறித்தும் சமரசம் செய்வது விரைவாக முன்னெடுக்ககூடிய நடவடிக்கையில்லை. காயங்கள் ஆழமானவையாக காணப்படுவதே இதற்கு காரணம்.

எங்கள் மோதல் 2009 இல் முடிவிற்கு வந்தது. 12வருடங்களின் பின்னர் நாங்கள் இன்னமும் உறுதியான அதிகாரப்பொறிமுறையை உருவாக்கவில்லை – எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச தராதரத்திலான நல்லிணக்கம் நிறைவேறவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.