September

September

ஐ. தே. கட்சி தலைவர் ரணில் தென் பகுதி மக்களின் நிரந்தர எதிரி

109009dalss.jpgஐ. தே. க. தலைவரின் கடந்த காலச் செயற்பாடுகள் காரணமாக அவர் தென் பகுதியின் எதிரியாகவே தென் பகுதி மக்களால் கருதப்படுகிறார். இதனால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அவர் மோசமான முறையில் நிராகரிக்கப்படுவாரென அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:- 1988-89 காலப் பகுதியில் தென் பகுதி இளைஞர்கள் கூட்டாக கொல்லப் பட்ட சம்பவங்களுக்கும் பட்டலத்த வதை முகாமிற்கும் ரணில் விக்ரமசிங்க மீதே குற்றஞ் சுமத்தப்படுகிறது. அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம், துறைமுகம் மற்றும் உமா ஓயா திட்டம் என்பவற்றை நிறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது 30 வருட அரசியல் வாழ்வில் அவர் எடுத்த முடிவுகள் காரணமாக, ரணில் விக்கிரமசிங்க தெற்கின் விரோதியாக கருதப்படுகிறார்.

1988-89 கால கூட்டுக் கொலைகள், பட்டலந்த வதை முகாம் என்பன காரணமாக பல்லாயிரம் தென் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த கால வடுக்களை தென் பகுதி மக்கள் இன்னும் மறக்கவில்லை.

ஊவா தேர்தலில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, ஹம்பாந்தோட்டை துறை முகம் மற்றும் விமான நிலையத்தையும் உமா ஓயா திட்டத்தையும் நிறுத்துவதாக கூறியதை தென் பகுதி மக்கள் மறக்க வில்லை. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.

தென் பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உலகில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். தென் பகுதி மக்களின் அபிமானத்துக்குரிய அவரை கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரிக்கின்றனர்.

அவருக்கு பாதிப்பு ஏற்படுவதை தென் பகுதி மக்கள் விரும்பவில்லை. எனவே இந்தத் தேர்தலில் தென் பகுதி வரலாற்றில் ஒருபோதுமில்லாத பெரு வெற்றியை ஐ.ம.சு.மு. பெறும். ஐ.தே.க. வின் தலைமைத்துவம் காரண மாக பெருமளவு ஐ.தே.க. பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அணி அணியாக அரசுடன் இணைந்து வருகின்றனர்.

ரூ.5 இலட்சம் கள்ள நோட்டுக்களுடன் பெண்ணும் சகாக்களும் கைது

1000mony.jpgஐந்து இலட்சம் ரூபாய் கள்ள நோட்டிக்களுடன் பெண் ஒருவரை கெக்கிராவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிலிருந்து கள்ள நோட்டு அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இந்தப் பெண் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கள்ள நோட்டுக்களை அச்சிடும் செயற்பா டுகளுக்கு உதவியாக இருந்த மேலும் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்து ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-

கெக்கிராவ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தேனீர் அருந்தச் சென்ற பெண் ஒருவர் 2000/= ரூபாயை கொடுத்துள்ளார். அந்த நோட்டு தொடர்பாக ஹோட்டல் உரிமை யாளருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து அதனை சோதனையிட்டுள்ள அதே சமயம் குறித்த பெண்ணையும் மடக்கிப் பிடித்து கெக்கிராவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை நடத்தியுள்ளனர். தனது வீட்டில் மேலும் கள்ள நோட்டுக்கள் மறைத்து வைத்திருப்பதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து கெக்கிராவ, மலகடவல என்ற கிராமத்திலுள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் போலியாக அச்சிடப்பட்ட (2000) இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் 227யும் (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 4 இலட்சத்து 54 ஆயிரம்) ஆயிரம் (1000/=) ரூபாய் கள்ள நோட்டுக்கள் 56 யும் (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 56 ஆயிரம்) மீட்டெடுத் துள்ளதுடன் கள்ளநோட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட மை போத்தல்கள்–10, சிலின்டர்-6, வெள்ள நிறத்தாள்கள் மற்றும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர் என்றார்.

இந்தப் பெண் வழங்கிய மற்றுமொரு தகவலின் அடிப்படையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வந்த மேலும் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, போலி நோட்டுக்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கணனி மற்றும் ஏனை உபகரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 6 இலங்கையர் இந்தியாவில் கைது

_arrested.jpgசட்ட விரோதமான முறையில் பிரான்ஸுக்குச் செல்ல முற்பட்ட ஆறு இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச் சீட்டு மற்றும் போலி வீசாக்களைப் பயன்படுத்தி குறித்த இலங்கைத் தமிழர்கள் பிரான்ஸ் செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹைதராபாத் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையிலிருந்து தமிழகம் சென்று, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இவர்கள் பிரான்ஸ் செல்ல வீசா பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா விசாரணை

100909rennie_shackleton_etc_aap.jpgகிழக்குத் திமோரில் இந்தோனேசிய சிறப்புப் படையினரால், 1975 ஆம் ஆண்டில், 5 செய்தியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போர்க்குற்றப் புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளதாக ஆஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிராந்தியத்தை இந்தோனேசியப் படைகள் ஆக்கிரமிக்கவிருந்தது குறித்த தகவல்களை வெளியிடுவதைத் தடுப்பதற்காக ஃபலிபோ நகரில் இந்த செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக 2007 ஆம் ஆண்டில் ஒரு ஆஸ்ரேலிய மரண விசாரணை அதிகாரி கண்டுபிடித்தார்.

இந்தச்சம்பவம் திமோரிய போராளிகளுடனான சண்டையின் போது செய்தியாளர்கள் இடையில் அகப்பட்டதனால் இடம்பெற்றது என்று இந்தோனேசியா எப்போதும் மறுத்து வந்தது. அத்துடன் இந்த விடயம் முடிந்துபோன ஒன்று என்றும் இந்தோனேசிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு முதலாளிமார் சம்மேளனம் அழைப்பு – கொழும்பில் இன்று பேச்சுவார்த்தை

080909teawomen.jpgதோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூபா 500 சம்பள உயர்வை வலியுறுத்தி முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங் கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று மாலை 4.30 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதி செயலாளர் நாயகம் கனிஷ்ட வீரசிங்கவினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஏனைய கூட்டு ஒப்பந் தத்தை சார்ந்த தொழிற்சங்கங்களுக்கும் விடுத்துள்ள அழை ப்பையடுத்தே மீண்டும் இச்சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.

இச் சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், பெருந் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் முறையே பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர்களான முத்து சிவலிங்கம், ஜெகதீஸ்வரன், மற்றும் உப தலைவர் ஹரிச் சந்திரசேகர், தேசிய அமைப்பாளர் யோகராஜன், வேலா யுதம், எஸ். ராமநாதன் ஆகியோர் முதலாளிமார் சம்மேள னத்துடன் தோட்ட தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிப் பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்கள்.

இதேவேளை, தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையே பல தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தை இழுபறியில் முடிவடையவே தோட்ட தொழி லாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடர்ந்து வருகிறது-

இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுக்கு அழைத்துள்ளது.

சிம்பாப்வே மீதான தடைகளை நீக்குமாறு ‘தென்னாபிரிக்க நாடுகள் ஒன்றியம்’ கோரிக்கை

சிம்பாப்வே மீது விதிக்கப்பட்டுள்ள அனைத் துத் தடைகளையும் நீக்குமாறு தென்னாபிரிக்க நாடுகளின் ஒன்றியம் ஐ. நா. வைக் கோரியுள்ளது.  கொங்கோவின் தலைநகர் கின்ஸாஷாவில் நடைபெற்ற தென்னாபிரிக்க நாடுகள் ஒன்றியத் தின் மாநாட்டில் இந்தக் கோரிக்கை விடுக்கப் பட்டது.

கொங்கோ இந்த அமைப்புக்குத் தலைமை தாங்குகின்றது. சிம்பாப்வேயில் எதிர்க்கட்சி க்கும் ஆளும் கட்சிக்குமிடையே அதிகார இழுபறிகள் ஏற்பட்டதால் பாரிய மோதல்கள் வெடித்தன.

இம் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும்படி வேண்டிய ஐ. நா. அமைதி வரும் வரை சிம்பாப்வே மீது பல பொரு ளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து ஆபிரிக்க நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வே உள்நாட்டு அரசியல் மோதல்களைத் தீர்த்து வைக்க பல முயற்சிகளைச் செய்தது.

ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வான்கிரே ஆகியோரை ஓர் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்தது. ஸ்வான் கிரே பிரதமராகவும், ரொபேர்ட் முகாபே ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர். இதன் பின்னர் சிம்பாப்வேயில் பூரண அமைதி நிலவுகின்றது.

எனவே சிம்பாப்வே மீதான தடைகள் உடன் நிறுத்தப்பட வேண்டுமென தென்னாபிரிக்க நாடுகள் ஒன்றியம் ஐ. நா. விடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப் பகிர்வை முழுமையாக நடைமுறைப் படுத்துமாறு பிரதமர் ஸ்வான்கிரே விடுத்த கோரிக்கையை மாநாடு நிராகரித்தது.

ஏற்கனவே பகிரப்பட்டதுபோல் ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே குறித்த சில விடயங்களில் விசேட அதிகாரங்களை வைத்திருக்க வேண்டுமென மாநாடு தீர்மானித்தது.எதிர்க்கட்சித் தலைவரும் பிரதமருமான ஸ்வான்கிரேயின் கோரிக்கை மீண்டும் சிம்பாப்வேயில் உள்ளூர் மோதல்களை உருவாக்கும் என மாநாட்டில் கருதப்பட்டதால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது திசநாயகத்திற்கு கடும் தண்டனை வழங்குமாறு அரச தரப்பு கோரவில்லை – அமைச்சர் ராஜித

rajitha_senarathna00jpg.jpgஊடக வியலாளர் திசநாயகத்துக்கு வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனையை குறைக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் அதற்கு எதுவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. வழக்கு விசாரணையின் போது திசநாயகத்துக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு அரச தரப்பினால் எதுவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதையோ காரணமின்றி தண்டிக்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. புலிகளுடன் தொடர்பு வைத்து அரசாங்கத்தின் மீது சேறு பூச முயன்றதாலே திசநாயகம் கைதாகி நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட்டார்.

மூன்று குற்றச்சட்டுகளுக்கும் அவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஒன்றாக கணிக்கும் வகையில் அமுல்படுத்துமாறு அவரின் சட்டத்தரணி கோரியிருந்தால் சில வேளை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டிருக்கும். மேன்முறையீடு செய்வதன் மூலமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்க வாய்ப்புள்ளது.

திசநாயகத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்த விடயத்தில் தலையிடவோ எதிர்ப்புத் தெரிவிக்கவோ அமெரிக்காவுக்கு எதுவித அருகதையும் கிடையாது.

ஈராக்கில் பணியாற்றிய பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். அல்கைதா போன்ற அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி இவர்கள் அமெரிக்க படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நமது நாட்டு ஊடகவியலாளர்கள் குறித்து பேச அமெரிக்காவுக்கு எதுவித அருகதையும் கிடையாது.

ஈராக்கிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்காத சர்வதேச அமைப்புகள் திசநாயகத்துக்கு மாத்திரம் விருது வழங்கியுள்ளன, இலங்கை ஊடகவியலாளர்களின் உரிமை க்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு நாம் சகல ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக உள்ளோம்.

‘லங்கா’ ஊடகவியலாளர்கள்

தனிநபருக்குச் சொந்தமான இடமொன்றுக்கு சட்டவிரோதமாக நுழைந்ததாலே மூன்று லங்கா ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.  ஒரு வாரத்திற்கு முன் ஜனாதிபதி இந்த இடத்துக்கு வந்து சென்றுள்ளார். அதனால் ஜனாதிபதி குறித்தே இந்த ஊடகவியலாளர்கள் துருவித் துருவி விசாரித்துள்ளனர். ‘லங்கா’ பத்திரிகை அச்சு ஊடகமாக இருந்தும் கூட இவர்கள் வீடியோ கமெராக்களையும் எடுத்துச் சென்று படப்பிடிப்புச் செய்துள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதியும் இந்த விடயத்தில் தலையிட்டு தேவையான பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

நாடு திரும்பும் இந்திய மருத்துவ குழுவுக்கு கொழும்பில் பாராட்டு – ரூ. 25 மில். பெறுமதியான மருந்து பொருட்களும் கையளிப்பு

indiadr.jpgமோதல் கள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென இந்தியாவிலிருந்து இலங்கை வருகை தந்திருந்த மருத்துவக் குழு தமது ஆறு மாதகால பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளது. புதுமாத்தளனிலும் வவுனியாவிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நேற்று தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் போஷாக்கு மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன. இந்த மருந்துப் பொருட்களின் ஒரு தொகுதியினை நிகழ்வின் போது இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அமைச்சர் நிமல் சிறிபாலவிடம் கையளித்தார்.

நாட்டில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தவேளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கிரீன் ஓசன் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை உதவிகளை முன்னெடுப்பதற்காக கடந்த மார்ச் 09 ஆம் திகதி இந்தியாவிலிருந்து மருத்துவக் குழுவொன்ற இலங்கை வந்து மருத்துவ முகாமை நடத்தி வந்தது.

புல்மோட்டையில் 02 மாத காலம் அமைக்க ப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாம் 21 தடவைகள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட 7 ஆயிரம் இடம்பெயர்ந்தவர்களுக்கும் புல்மோட்டையை வதிவிடமாகக் கொண்ட 100க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் சிகிச்சையளித்து வந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் கருத்து தெரிவிக்கையில் :-

இலங்கையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்பதற்காக நாம் இந்தியாவிலிருந்து வைத்தியர்களை வரவழைக்கவில்லை. இங்கே போதுமானளவு வைத்தியர்கள் இருக்கின்ற போதும் இலங்கையுடனான மிகவும் நெருங்கிய நட்பு காரணமாகவே இந்த மருத்துவக் குழு இங்கு வந்து சேவையாற்றியது. புல்மோட்டை மணற் பரப்பில் 72 மணித்தியாலங்களுக்குள் 50 கட்டில்களுடன் மருத்துவ முகாமை ஆரம்பித்து சிகிச்சைகளை முன்னெடுத்தோம்.

இது பின்னர் 115 கட்டில்களாக விரிவுபடுத்தப்பட்டது. இந்திய மருத்துவர்கள் தமது சேவையை சரிவர முன்னெடுக்க சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எமக்கு பூரண ஒத்துழைப்பைத் தந்தனர். இந்நிலையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் வவுனியாவில் தங்க வைக்கப்பட்டதையடுத்து அங்கு அம்மக்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் இந்திய மருத்துவ முகாம் வவுனியாவின் மெனிக்பாம் மற்றும் செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டது.

அங்கே நான்கு மாத காலம் சேவையாற்றிய மருத்துவக் குழு 40 ஆயிரம் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அதேவேளை 1000 சத்திர சிகிச்சைகளையும் முன்னெடுத்துள்ளது. இந்திய அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக 125 மில்லியன் (இலங்கை) ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்குவதாக ஏற்கனவே வாக்குறுதியளித்திருந்தது.  இதன்படி 100 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மிகுதி 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மேலும் 10,000 பேர் வெள்ளிக்கிழமை விடுவிப்பு

badi000000.jpgஇலங் கையின் வடக்கே இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும மக்களில் மேலும் 10,000 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் BBC தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது குறித்த அறிவித்தல்கள் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். விடுவிக்கப்படும் இந்த மக்கள் முதலில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்லும் வரை மாவட்ட அரசாங்க பொறுப்பில் அவர்கள் இருப்பார்கள் என்றும், ஆறு மாத காலம் வரை அவர்களுக்கு தேவையான உலர் உணவுகள் அரசால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இடம்பெயர் மக்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் : இடதுசாரி முன்னணி கோரிக்கை

999protest.jpgயுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவித்தல், தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வினை வழங்குதல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயத்தை விடுவித்தல் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர மற்றும் ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரட்ண ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,

“யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பல துன்பங்களை இன்றுவரை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இது ஒரு தேசிய ரீதியான பிரச்சினை. எனவே இப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்க உடனடியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்தே காணப்படுகின்றன. ஆனால் அதற்கீடாக சம்பள உயர்வுகள் வழங்கப்படுவதில்லை. இந்த வகையில் தோட்டத் தொழிலாளர்கள் கேட்கும் 500 நாளாந்த சம்பளம் நியாயமானது. குறைந்த பட்சம் 15,000 ரூபாவையாவது அடிப்படை சம்பளமாக அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.  இன்று பலர் பயங்வாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். அண்மையில் கூட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அவருக்குக் கடூழியச் சிறையும் வழங்கப்பட்டிருக்கின்றது.  அவர் ஓர் ஊடகவியலாளர். ஊடகவியலாளர் ஒருவருக்குத் தனது கருத்தையும், உண்மை நிலையை எடுத்துக் கூறும் உரிமையும் உள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பலர் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். எனவே அச்சட்டத்தை அரசு உடனடியாக நீக்க வேண்டும்” என்றார்.