இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மேலும் 10,000 பேர் வெள்ளிக்கிழமை விடுவிப்பு

badi000000.jpgஇலங் கையின் வடக்கே இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும மக்களில் மேலும் 10,000 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் BBC தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது குறித்த அறிவித்தல்கள் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். விடுவிக்கப்படும் இந்த மக்கள் முதலில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்லும் வரை மாவட்ட அரசாங்க பொறுப்பில் அவர்கள் இருப்பார்கள் என்றும், ஆறு மாத காலம் வரை அவர்களுக்கு தேவையான உலர் உணவுகள் அரசால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *