ஐக்கிய தேசியக் கட்சி உலக வங்கியுடன் பேச்சு நடத்தி இந்த நாட்டின் அரசாங்க உத்தியோகத்தர்களை ஆறு இலட்சம் வரை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்திருந்தது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் அரசாங்க உத்தியோகத்தர்களை 12 இலட்சமாக அதிகரிக்க முடிந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார்.
முல்கிரிகல தேர்தல் பிரிவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உ¨யாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சியின் செயற்குழு கூட்டம் தம்மானந்த வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (13) நடைபெற்றது.
இதில் அவர் மேலும் கூறியதாவது:- இந்நாட்டின் சனத்தொகையில் 17 பேரில் ஒருவர் அரசாங்க உத்தியோகத்த ராவார். இந்த நாட்டின் சிறிய மனிதர்களின் கனவுகளை நனவாக்கவும், அச்சம் பீதி சந்தேகமற்ற சமூகத்தை கட்டியெழுப்பவும் முடிந்துள்ளமையை நினைக்கையில் எனக்கு பெருமையாகவிருக்கின்றது. முழு நாட்டிலும் இன்று அபிவிருத்தி முன்னெடுக்கப்படு கிறது. கிராமங்கள் அபிவிருத்தியடைந்து வருகின்றன.
வடக்கின் வசந்தம், கிழக்கு உதயம், உள்ளிட்ட நாடு முழுவதிலும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாரிய நீர்த்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கிராமங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கம் இது. அந்தக் காலத்தில் மேல்மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
நான் தான் உலக பயங்கரவாதத்துக்கு தீர்வு உண்டு என்பதை உலக நாடுகளுக்கே கூறியவன். எமது நாட்டிலே கடந்த 30 வருடகாலமாக நிலவி வந்த பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். உலக பயங்கரவாதத்துக்கு தீர்வு தேடிய என்னை இப்போது சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.
இவற்றை யார் செய்கிறார்கள்? இந்த தாய் நாட்டில் பிறந்தவர்கள் தான். இந்த நாட்டின் மீது உண்மையான அன்பு வைத்துள்ளவர்களென்றால் இவ்வாறு செய்யமாட்டார்கள்.
அது தொடர்பாக வீடியோ நாடாக்கள் தயாரிக்கிறார்கள். தகவல்களை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார்கள். ஐரோப்பாவுக்கு போகிறார்கள். செனற் சபைக்கு செல்கிறார்கள்.
இந்த நாட்டில் பிறந்தவர்கள் இந்த நாட்டை உண்மையாக ஆதரிப்பவர்கள் இவ்வாறு செய்வார்களா? மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். யார் எதைக் கூறினாலும் இந்த நாட்டு மக்களின் பெரும்பான்மை விருப்பம் எமக்குச் சார்பாக உள்ளது. தென்மாகாணத் தேர்தலின் மூலம் இது மேலும் உறுதியாகுமெனவும் ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.