September

September

அரச ஊழியர்களின் தொகையை ஐ. தே. க 6 இலட்சத்திற்கு குறைத்தது; நாங்கள் 12 இலட்சம் வரை உயர்த்தியுள்ளோம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgஐக்கிய தேசியக் கட்சி உலக வங்கியுடன் பேச்சு நடத்தி இந்த நாட்டின் அரசாங்க உத்தியோகத்தர்களை ஆறு இலட்சம் வரை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்திருந்தது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் அரசாங்க உத்தியோகத்தர்களை 12 இலட்சமாக அதிகரிக்க முடிந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார்.

முல்கிரிகல தேர்தல் பிரிவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உ¨யாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழு கூட்டம் தம்மானந்த வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (13) நடைபெற்றது.

இதில் அவர் மேலும் கூறியதாவது:- இந்நாட்டின் சனத்தொகையில் 17 பேரில் ஒருவர் அரசாங்க உத்தியோகத்த ராவார். இந்த நாட்டின் சிறிய மனிதர்களின் கனவுகளை நனவாக்கவும், அச்சம் பீதி சந்தேகமற்ற சமூகத்தை கட்டியெழுப்பவும் முடிந்துள்ளமையை நினைக்கையில் எனக்கு பெருமையாகவிருக்கின்றது. முழு நாட்டிலும் இன்று அபிவிருத்தி முன்னெடுக்கப்படு கிறது. கிராமங்கள் அபிவிருத்தியடைந்து வருகின்றன.

வடக்கின் வசந்தம், கிழக்கு உதயம், உள்ளிட்ட நாடு முழுவதிலும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

பாரிய நீர்த்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கிராமங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கம் இது. அந்தக் காலத்தில் மேல்மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

நான் தான் உலக பயங்கரவாதத்துக்கு தீர்வு உண்டு என்பதை உலக நாடுகளுக்கே கூறியவன். எமது நாட்டிலே கடந்த 30 வருடகாலமாக நிலவி வந்த பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். உலக பயங்கரவாதத்துக்கு தீர்வு தேடிய என்னை இப்போது சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

இவற்றை யார் செய்கிறார்கள்? இந்த தாய் நாட்டில் பிறந்தவர்கள் தான். இந்த நாட்டின் மீது உண்மையான அன்பு வைத்துள்ளவர்களென்றால் இவ்வாறு செய்யமாட்டார்கள்.

அது தொடர்பாக வீடியோ நாடாக்கள் தயாரிக்கிறார்கள். தகவல்களை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார்கள். ஐரோப்பாவுக்கு போகிறார்கள். செனற் சபைக்கு செல்கிறார்கள்.

இந்த நாட்டில் பிறந்தவர்கள் இந்த நாட்டை உண்மையாக ஆதரிப்பவர்கள் இவ்வாறு செய்வார்களா? மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். யார் எதைக் கூறினாலும் இந்த நாட்டு மக்களின் பெரும்பான்மை விருப்பம் எமக்குச் சார்பாக உள்ளது. தென்மாகாணத் தேர்தலின் மூலம் இது மேலும் உறுதியாகுமெனவும் ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.

இடம்பெயர் மக்களுக்கு அரசு மேற்கொள்ளும் பணி; ஐ. நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் சமரசிங்க இன்று உரை

mahinda-samarasinha.jpgநாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று (14) ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளதாக மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்தது.

இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர் மட்டக் குழு நேற்று (13) ஜெனிவா பயனாமானது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் சரணடைந்த புலிகளை புனரமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றியும், சனல்- 4 அலைவரிசை வீடியோ குறித்தும் அமைச்சர் இங்கு உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் முதன்முறையாக இலங்கை ஐ. நா. வில் உரையாற்ற உள்ளதாகவும் அமைச்சு கூறியது.

பருவ பெயர்ச்சி மழைக்கு முன் இடம்பெயர்ந்த மக்களை மாற்றிடங்களில் குடியமர்த்த முடிவு

idp tamilsவவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான மாற்று இடங்களில் குடியமர்த்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இவ்வாரம் 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவர் எனவும் அவ்வதிகாரி கூறினார். வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களின் ஆரோக்கிய சேவை தொடர்பாக ஆராய்வதற்கான அதிகாரிகள் மட்டக் கூட்டம் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்திற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்கவென மேலும் நூறு டாக்டர்களையும் இருநூறு தாதியரையும் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் தற்போது 74 டாக்டர்களும், 67 தாதியரும் கடமையாற்றுகின்றனர். அவர்களுக்கான தங்குமிட வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

அதேவேளை மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்கள் ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான இடங்களில் வவுனியாவில் குடியமர்த்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

தரப்படுத்தலில் இந்தியா மூன்றாமிடத்திற்கு…

110909-india.jpgகொழும்பு ஐ. சி. சி. ஒரு நாள் போட்டிக்கான தரப்படுத்தல் பட்டியலில் தோனி தலைமையிலான இந்திய அணி, முதலாமிடத்தை மிக விரைவாக பறிகொடுத்துள்ளது. முத்தரிப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்திய போது தரப்படுத்தல்.

பட்டியலில் முதலிடத்தை முதல் முறையாக பெற்றது. நேற்று முன்தினம் இலங்கையிடம் தோல்வி அடைந்ததன் மூலம் முதலிடத்தை 24 மணி நேரத்தில் இழந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் முதலிடம் பெற்றதை கொண்டாடக் கூட நேரம் கிடைக்கவில்லை.

கடந்த 2007 முதல் ஒவ்வொரு அணியும் பங்கேற்ற போட்டிகளின் அடிப்படையில் தரப்படுத்தல் கணக்கிடப்படுகிறது. இதன்படி தற்போது தென் ஆபிரிக்கா (18 போட்டி, 127 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் வென்ற அவுஸ்ரேலியா (26 போட்டி, 125 புள்ளி) இரண்டாம் இடம்பெறுகிறது. அவுஸ்திரேலியாவோடு ஒப்பிடுகையில் கூடுதலாக இரண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி (28 போட்டி, 125 புள்ளி) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் வீதி மறியல் போராட்டம் : அட்டனில் பதற்றம் நிலவியது

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் முனனணியின் ஏற்பாட்டில் அட்டனில் 13 ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப்போராட்டம் பொலிஸாரின் தலையிட்டினால் இறுதி நேரத்தில் இடம் பெறவில்லை.

இதனைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் இந்த முன்னணியின் ஆதரவாளர்கள் அட்டன் நகரின் பிரதான வீதியில் வீதி மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் வாகனப்போக்குவரத்துக்கள் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அட்டன் பொலிஸாரால் கண்ணீர் புகை ஏற்படுத்தப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

”தேசியம் பேசிப் பேசி தமிழில் ‘தேசியம்’ என்ற சொல் தேய்வடைந்துவிட்டது.” அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

140909karuna.jpg”கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகத்தை முழு நிறைவான அதிகாரங்களையுடைய பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் பணிகள் யாவும் பூர்த்தியடைந்து விட்டன. இப்பிரதேச செயலகப் பிரிவுக்கான எல்லைகளை வரையறை செய்யும் பணி பூர்த்தியடைந்ததும் கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகம் சகல அதிகாரங்களையும் கொண்ட பிரதேச செயலகமாக வெகு விரைவில் தொழிற்படவுள்ளது.” இவ்வாறு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரிய கல்லாறு கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நேற்று முன்தினம் பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் பொ. சதாகரன் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. முரளிதரன் தொடர்ந்து பேசுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லையில் உள்ள பெரியகல்லாறு, துறைநீலாவணை, கோட்டைக் கல்லாறு, ஒந்தாச்சிமடம், மகிளுர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் புதிய பிரதேச செயலகம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இக் கோரிக்கையினை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் எடுத்துக் கூறி நிறைவேற்றித்தர முயற்சி செய்யவுள்ளேன்.

கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த போர்ச் சூழல் காரணமாக தமிழ் மக்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்து இன்னல் படுகின்றமை வரலாறாகும். இந்நிலையில் யுத்தத்தினால் அழிவுற்ற எமது பிரதேசத்தை சடுதியாக கட்டி எழுப்புவதென்பது கடினமான காரியம்.  படிப்படியாக எம்மால் முடிந்தவரை எமது மண்ணை அரச நிதியில் இயங்கும். நெக்டெப், நிக்கோட் திட்டத்தின் மூலமாக அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

இன்று உலக நாடுகள் கடன் வழங்கும் வீதத்தை குறைத்துள்ளன. மறுபுறம் பாரிய அழிவுகளைச் சந்தித்த எமது சகோதரர்கள், வாழும் வட மாகாணத்தை கட்டி எழுப்பும் பணியிலும் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

நாம் கடந்த காலத்தை அசைபோடுவதாலும், இரை மீட்பதாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, எதிர்காலம் பற்றி சிந்தித்து எமது மக்கள் நிம்மதியாகவும், சுபீட்சம் நிறைந்தவர்களாகவும் வாழும் வழிவகைகளைக் காண வேண்டும். கால மாற்றத்திற்கேற்ப அரசியல் நகர்வுகளை திட்டமிட்டு மேற்கொண்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைப்பதே எனது நோக்கமாகும்.

தேசியம் பேசிப் பேசி தமிழில் ‘தேசியம்’ என்ற சொல் தேய்வடைந்துவிட்டது. நாம் போராடிய வேளையில் அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சமூகம் சகல துறைகளிலும் முன்னேறிவிட்டதை மறந்துவிட முடியாது.

இந்நாட்டில் சிறு சிறு கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களால் தான் சார்ந்த சமூகத்திற்கு எதையும் பெரிதாக பண்ணிப்படைக்க முடியாமல் உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். இதனை கருத்திற்கொண்டு ஆளும் கட்சியில் இணைந்து எமக்குரிய பங்கை நேரடியாக கேட்டுப் பெற இணைந்துள்ளேன். இதற்கு ஜனாதிபதி எனக்கு பக்கபலமாக இருக்கின்றார்.

இலங்கையின் வரலாற்றில் தேசிய கட்சி ஒன்றின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழன் நானாகவே இருக்க முடியும்.

அஃதே ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் பேசிய ஒரேயொரு தலைவர் எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரலாறு காணாத வெற்றியை காணவுள்ளார்.

இதனை தொடர்ந்து பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விவேகத்துடன் நடந்து நான்கு தமிழ் பிரதிநிதிகளை ஆளும் கட்சியின் சார்பில் பெற்றால் நாம் முக்கியமான அமைச்சுக்களைப் பெற்று எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும். அஃதே அம்பாறை மாவட்டத்தில் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவத்தையும் பெற முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்களை பாராளுமன்றம் அனுப்ப பெரும் பங்காற்றியவன் நான். இதனை கூட்டமைப்பு எம்.பியான கனகசபை அண்ணண் என்றும் நினைவு கூர்ந்து கதைப்பார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒவ்வாத விடயங்களைப் பேசி மக்களை ஏமாற்றாமல் உண்மையை உணர்ந்த பணியாற்ற வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் கல்முனை மாநகர சபையினர் கட்டடம் ஒன்றை அத்துமீறி நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இக் கூட்டடம் முடிவுற்று செல்லும்போது அதனை அகற்றிவிட்டு செல்வேன்.

இன்று 1100 பேர் எமது மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ளனர். இவர்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்த உல்லாச பயண பயிற்சி பாடசாலையையும், இன்னும் பல வசதிகளையும் ஏற்படுத்தவுள்ளேன். ஜனாதிபதியின் கரத்தினை பலப்படுத்தி, எமது மண்ணை அபிவிருத்தி செய்ய யாவரும் உறுதிபூண வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது என்றார்.

இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு பிரச்சனையில் முரண்பாடு

080909teawomen.jpgஇலங்கையில் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தோட்ட முதலாளிகள் சம்மேளனத்துடன் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக முக்கிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்ததை ஏனைய இரு முக்கிய சங்கங்களும் நிராகரித்துள்ளன.

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 500 ரூபாய்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி முக்கிய மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தி வந்தன.

இந்த சம்பள உயர்வு குறித்து பல சுற்றுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை இந்த தொழிற்சங்கங்கள் நடத்தி வந்தபோதிலும், அவை தோல்வியிலேயே முடிந்திருந்தன.

இருந்த போதிலும், சனிக்கிழமை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சு ஒன்றில் தாம் 405 ரூபாய் நாளாந்த சம்பளத்துக்கு இணக்கம் கண்டதாக அந்த மூன்று தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரான ஆர். யோகராஜன் BBC தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த இணக்கத்தை ஏற்க முடியாது என்று ஏனைய இரு சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியன கூறியிருக்கின்றன.

அபிவிருத்தி பணிக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்த ஜனாதிபதி பணிப்பு

laxman_yapa_abeywardena.jpgஅபிவி ருத்திப் பணிகளுக்கென ஒதுக்கப்படும் நிதிகளை இந்த வருடம் முதல் நூறு வீதம் முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சரும் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலைய ஊடகப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதியுடன் உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையம் மாத்தறையில் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள குறைபாடுகளை ஊடக மத்திய நிலையத்துக்கு அறிவிக்க முடியும் எனவும் அது குறித்து உரிய அமைச்சு அல்லது அரச நிறுவனத்துக்கு அறிவித்து அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகங்களினூடாக சுட்டிக் காட்டப்படும் குறைபாடுகள் முறைகேடுகள் குறித்தும் ஊடக மத்திய நிலையம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கும். அபிவிருத்திக்காக வழங்கப்படும் வெளிநாட்டு நிதிகள், உரிய முறையில் பயன்படுத்தப்படாததால் அவை திருப்பி அனுப்பப்படுகிறது. சில பகுதிகளில் 50 வீதமான பணமே பயன்படுத்தப்படுகிறது.

எனவே அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை இந்த வருடம் முதல் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மாத்தறை மாவட்டத்தில் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கொடகமையில் ரூ. 6100 மில்லியன் செலவில் 1500 கட்டில்களுடன் கூடியதாக வைத்தியசாலையொன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இது தவிர மாத்தறை நகரிலுள்ள சகல அரச நிறுவனங்களையும் கொடகமைக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை – கதிர்காமம் இடையிலான ரயில் பாதை 2 கட்டங்களாக அமைக்கப்படவுள்ளது.

இதற்கு 6600 மில்லியன் ரூபா உள்நாட்டு முதலீடும் 24000 மில்லியன் ரூபா வெளிநாட்டு முதலீடும் பெறப்படவுள்ளது. ஹக்மனை நகரம் 3500 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. மாத்தறை மாவட்டத்திலுள்ள சகல வீடுகளுக்கும் 2010 முடிவுக்குள் மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 வருட காலத்தில் மாத்தறை மாவட்டத்தில் 1000 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன என்றார்.

மீள்குடியேற அனுப்பப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு

101009displacedidps.gifஇலங்கை வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட 123 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் குற்றம் சுமத்துகின்றார்

வெள்ளிகிழமை விடுவிக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலை மட்டக்களப்பை வந்தடைந்த இக்குடும்பங்கள் சிங்கள மகா வித்தியாலயத்திலும் குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னர் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் சில மணித்தியாலங்களுக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டும் அவர், இது தொடர்பாக அரசாங்க அதிபரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வந்த போது இது பாதுகாப்பு தரப்பினர் சம்பந்தப்பட்ட விடயம் என்று பதிலளித்ததாக கூறுகிறார் துரைரட்ணம்.

இம்முறை அழைத்து வரப்பட்டவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்பு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் இரா .துரைரத்தினம் குறிப்பிடுகின்றார்

வெற்றி நமதே …- யாழ். குடாநாட்டின் உயர்ச்சியை வெளிப்படுத்தும் திரைப்படம்

cinema.jpgசிங்கள மற்றும் தென்னிந்திய தமிழ் கலைஞர்கள் நடிக்கும் வீடியோ கலாமினியின் வெற்றி நமதே திரைப்படம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் சகோதரத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படவிருக்கும் வெற்றி நமதே திரைப்பட ஆரம்ப விழா அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் 4 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்படவுள்ள வீடியோ கலாமினி அச்சுவேலியூர் மாணிக்கம் சிவமூர்த்தியின் இயக்கத்திலும், கதை, வசனம், பாடல்களுடன் வெற்றி நமதே திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

விஜய அபயசேகரவின் தயாரிப்பில் கோண்டாவில் புலவர் வீடியோ ரமேஸின் படப்பிடிப்புடன் வெற்றி நமதே திரைப்படம் தயாரிக்கப்படுவதுடன் உலக சாதனையை நிலைநாட்டும் வகையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் இத் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

வெற்றி நமதே திரைப்படம் ஊடாக சுமார் 6 கோடி ரூபா வசூலை எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். சமூக, சமய, இனங்களிடையிலான பேதங்களை எடுத்துக் காட்டும் வகையில் யாழ்.

குடாநாட்டு நாயகன் ஒருவரையும் தென்னிலங்கை நாயகி ஒருவரையும் மையமாகக் கொண்டு காதல் உவப்புடன் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டினை வெளிப்படுத்தும் வகையிலும் யாழ். குடாநாட்டின் கல்வி மேம்பாடு, விவசாய உயர்ச்சி என்பவற்றினை பிரதிபலிக்கும் வகையில் இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

உள்நாட்டிலும், கனடா, லண்டன் உட்பட வெளிநாடுகளில் படமாக்கப்படும் இத் திரைப்படம் யாழ். குடாநாட்டின் திரைப்பட சாதனையை சர்வதேசம் ஈறாக பறைசாற்ற சிறந்த திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.

வரவேற்பு பாடல் மற்றும் நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் நீதிபதி ஏ. பிரேம்சங்கர், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வேதநாயகம், ஈ. பி. டி. பி. யாழ். மாவட்ட பிரதி அமைப்பாளர் அலெக்சாண்டர் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.