02

02

வலப்பனைத் தோட்டத்தில் 4 லயன்கள் எரிந்து நாசம்

வலப்பனை ‘பெப் ஸ்பேல்’ தோட்டத்தின் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள லயன் ஒன்றில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் நான்கு லயன் அறைகள் எரிந்து சாம் பராகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார்.

இச்சம்பவத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் நிர்க்கதியான நிலையில் அங்குள்ள விகாரையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும், இச் சம்பவம் காரணமாக உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.இத் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சமைத்த உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; தியனில்ல கீழ் பிரிவிலுள்ள 17ம் இலக்க லயனிலேயே இத் தீவிபத்து நேற்றுக் காலை 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இத் தீவிபத்தினால் அங்கிருந்த நான்கு லயன் அறைகள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவத்திற்கு லயன் அறையொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கியிருந்து தீ பரவியதே காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமையல் பாத்தரங்களையும் உடுதுணிகளையும் வழங்க நுவரெலிய மாவட்ட செயலகமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன. அத்தோடு செஞ்சிலுவைச் சங்கம் இவர்களுக்குப் பாய்களையும் உடுதுணிகளையும் மட்டுமல்லாமல் இவர்களது குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

டெங்கு: 13,692 பேர் பாதிப்பு 156 பேர் உயிரிழப்பு – உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் கட்டுப்படுத்தும் நடவடிக்கை துரிதம்

aedes_aegypti.jpgஉலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கை களை அரசாங்கம் மேலும் துரிதப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென 25 இரசாயனப் புகை விசிறும் இயந்திரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை இவ்வருடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் அதிகளவு இனம்காணப்பட்ட மாத மாக ஜூன் விளங்குவதா கவும் இம்மாதத்தில் மாத்திரம் 5,357 பேர் இக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச் சின் நோய் பரவுகை தடுப்பு பிரிவு மருத்துவ அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் காரணமாக இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் 156 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் இக்காலப்பகுதியில் இக்காய்ச்சலுக்கு 13692 பேர் உள் ளாகியுள்ளனர் எனவும் அந்த மருத்துவ அதிகாரி கூறினார்.

இந்த நாட்களில் எவருக்காவது இரண்டொரு நாட்களுக்குக் கடும் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுவது அவசியம் என்று வலியுறுத்திய அம்மருத்துவ அதிகாரி, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை முற்றாக ஒழித்து சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்திருப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அந்த மருத்துவ அதிகாரி மேலும் குறிப்பிடுகையில்; டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இருந்தும் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஆகவே, டெங்கு காய்ச் சலைப் பரப்பக் கூடிய நுளம்புகளை ஒழித்துக்கட்டுவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக கம்பஹா, கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, கேகாலை, மட்டக்களப்பு களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. என்றாலும் ஏனைய மாவட்டங்களிலும் இக்காய்ச்சல் காரணமாகப் பலர் உயிரிழந்திருப்பதையும் மறந்துவிட முடியாது என்றார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை ஹொரணையில் கொடூரம்

ஹொரணை போருவதள்ட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப் பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

களுத்துறை மாவ ட்டத்தைச் சேர்ந்த ஹொரணை பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை (30) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் தகப்பன், தாய், மகள் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். மரணமானவர்கள் ஆர். பீ. விமலசிறி – 55 (தகப்பன்), சிறியா மல்காந்தி – 55 (தாய்), இனோகா – 25 (மகள்).

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பேரில் சம்பவம் நடந்த ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கொலை செய்யப் பட்டிருப்பதை தெரிவித்தனர்.மேற்படி கொலைச் சம்பவம் தனிப்பட்ட பகைமையின் காரணமாக இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுகிது. ஹொரணைப் பொலிஸார் புலன்விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

நிவாரண கிராமங்களுக்கு தடுப்பூசி வழங்க பிரிட்டன் 5 இலட்சம் பவுண்

vaccine.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள சிறுவர்களுக்கு அம்மை மற்றும் போலியோ அவசர தடுப்பூசிகளை வழங்குவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு மேலதிகமாக 5 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் யுனிசெப் அமைப்புக்கு இந்நிதி கடந்த 29ஆம் திகதி கையளிக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டாக்டர் பீட்டர் ஹேயிஸ் தெரிவித்துள்ளார். நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்கியிருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் இத்தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கடந்த மாதம் நிவாரணக் கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ முகாமில் அன்றி இத்தடுப்பூசிகள் வழங்கும் செயற்திட்டம் வேறாக முன்னெடுக்கப்படுமெனவும் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை யில் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் 12.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனங்களுக்காக இலங்கையில் பிரத்தியேக வலயம்

ஆசியாவின் மிகப்பெரும் பொருளாதாரமான, சீனாவிடமிருந்து மேலும் முதலீட்டை கவரும் ஒரு முயற்சியில், இலங்கைத் சீன நிறுவனங்களுக்கு பிரத்தியேக வலயம் ஒன்றை அளித்திருக்கிறது.

தலைநகர் கொழும்புக்கு சுமார் 55 கிமீ தூரத்தில் இருக்கும் மீரிகமவில் , ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஹுய்ச்சென் இன்வெஸ்ட்மன்ட் ஹொல்டிங்க்ஸ் என்ற நிறுவனம் இந்த பொருளாதார வலயத்தை உருவாக்கும் என்று இலங்கையின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் கூறியது.

தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள் இந்த வலயத்தில் தமது உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் ஒரு வெளிநாடு இத்தகைய வசதியைப் பெறுவது என்பது இதுவே முதல் முறை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.