ஹொரணை போருவதள்ட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப் பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
களுத்துறை மாவ ட்டத்தைச் சேர்ந்த ஹொரணை பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை (30) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் தகப்பன், தாய், மகள் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். மரணமானவர்கள் ஆர். பீ. விமலசிறி – 55 (தகப்பன்), சிறியா மல்காந்தி – 55 (தாய்), இனோகா – 25 (மகள்).
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பேரில் சம்பவம் நடந்த ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கொலை செய்யப் பட்டிருப்பதை தெரிவித்தனர்.மேற்படி கொலைச் சம்பவம் தனிப்பட்ட பகைமையின் காரணமாக இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுகிது. ஹொரணைப் பொலிஸார் புலன்விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.