19

19

ஆட்களை கடத்தி கப்பம் கோரிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது

police-arrest.jpgவவுனியாவில் ஆட்கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் தொடர்பாக பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்கள் கடத்தப்பட்டு அவர்களை விடுதலை செய்ய பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரிவந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

“புளொட்’ அமைப்பினரே இவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆட்களைக் கடத்தி அவர்களது குடும்பத்தவர்களை தொலைபேசி மூலம் மிரட்டி அவர்களை விடுதலை செய்வதற்கு இந்தப் பெண்ணும் அவரது குழுவினரும் பெருந்தொகைப் பணத்தை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக புளொட் அமைப்புக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் இந்தப் பெண்ணைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சு.சுவாமி மீது தாக்குதலை பாராட்டி போஸ்டர்கள்

_swamy_.jpgசென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜனதாக் கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியை தாக்கியதைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரை சில வக்கீல்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் முகத்திலும், முதுகிலும் வீசி அசிங்கப்படுத்தினர். நீதிபதிகள் முன்பு நடந்த நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சுப்ரமணியம் சுவாமி மீது முட்டை வீசியதை வரவேற்றும், பாராட்டும் இன்று சென்னை நகரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சுப்ரமணியம் சுவாமி செல்லும் இடம் எல்லாம் இதுபோல சிறப்பு செய்யுங்கள் என்று அந்த போஸ்டர்களில் வாசகங்கள் உள்ளன

தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை நிராகரித்தார் நாராயணமூர்த்தி

mahi-narayanasuwami.jpgஇலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை ஏற்க மாட்டேன் என இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இலங்கை அதிபருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ராஜபக்சே அறிவித்தார்.

இந்த அறிவிப்பு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும், உலகத் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. நாராயணமூர்த்தி பதவியேற்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்தது. குறிப்பாக கர்நாடக வன்னியர் சங்கம் இந்தக் கோரிக்கையை சற்று பலமாக விடுத்தது. மேலும், சென்னையில் உள்ள இன்போசிஸ் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு தமிழக கட்சிகளும் அறிவிப்பு வெளியிட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆலோசகர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று நாராயணமூர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சொந்தக் காரணங்களுக்காக இப்பதவியை நான் ஏற்க முடியாது. இதை முறைப்படி இலங்கை அரசுக்குத் தெரிவிப்பேன் என்றார்.

எஸ்.பி. திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்வார் – ரவி கருணாநாயக்க

sbdesanayaka.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி. திஸாநாயக்க எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன மற்றும் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா ஆகியோர் பாராளுமன்றத்தில் எழுப்பிய வாய்மொழிமூலக் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இனநெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியாது’ – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

chandrika-bandaranaike-kumaratunga-01.jpgஇலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தற்போது இடம்பெற்று வரும் யுத்தம் இன நெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியாது என்றும் பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாடே இறுதியான சமாதானத்தை கொண்டு வரும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். இந்திய மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயரின் ராஜீவ்காந்தி; “மாற்றத்திற்கான காலம்’ என்ற நூல் தொடர்பான குழு ஆய்வு நிகழ்வு புதுடில்லியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் பங்கு பற்றிய திருமதி குமாரதுங்க, நெடிவ்கொம்மிற்கு இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதை நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அணுகு முறை பற்றியும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த வழியென்ன என்பது குறித்து அவர் நினைப்பது என்ன என்பது தொடர்பாகவும் கருத்துக் கேட்கப்பட்டபோது, நான் கூறுவதை கேட்க ஜனாதிபதி விரும்புவாரென நான் நினைக்கவில்லை என்று சந்திரிகா கூறியுள்ளார்.

ஆகக் குறைந்தளவு பாதிப்புடன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான அவரின் அபிப்பிராயம் பற்றி கேட்கப்பட்டபோது தமிழ் மக்களுடன் பேசுவதே ஒரே வழி முறையென்று கூறியுள்ளார். “இந்த மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாடு மட்டுமே இறுதித் தீர்வு’ என்றார் சந்திரிகா.

ராஜீவ் காந்தியின் கொள்கைக்கு அப்பால் 21 ஆவது நூற்றாண்டு சென்று விட்டதா என்பது தொடர்பான குழு நிலை ஆய்வில் கருத்து தெரிவித்த சந்திரிகா ராஜீவ் காந்தியினதும் அவரின் மதச் சார்பற்ற கொள்கைகளும் 21 ஆம் நூற்றாண்டால் தாண்டிச் சென்றுவிடவில்லை என்று கூறியுள்ளார்.  சூழ்நிலைகளால் அவர் நிலைவரத்தில் ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார். அது கறுப்பு ஜூலையென கூறப்படும் 1983 ஜூலை கலவர காலமாகும். அதனால், 6 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். தமிழத்திற்கு சென்றனர். ராஜீவ் காந்தி அதிகாரத்திற்கு வந்த கால கட்டம் அதுவாகும் என்று சந்திரிகா கூறியுள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் ராஜீவ் காந்தியுடன் தான் அதிகளவு உரையாடியதில்லை என்று குறிப்பிட்ட சந்திரிகா, ஆயினும் இந்திய விஜயத்தின் போது பண்டிட் ஜவஹர்லால் நேரு தனது தந்தையாரான மறைந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவை பிள்ளைகளையும் அழைத்து வருமாறு வலியுறுத்தியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் திங்கள் இரவு அனுமதிக்கப்பட்ட 440 பொதுமக்கள் விபரம்

trico-hospital.gifமுல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 16  திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ள 440 வன்னிப் பொதுமக்களின்  பெயர், விபரங்கள் வருமாறு;

1.சுனிதா, குமுழமுனை, முல்லைத்தீவு (வயது 17)
2. ஆர். கமலாவதி, தாமரைக்கேணி, முள்ளியவளை(வயது47)
3. வி. ரஜனிகாந்த்,ஓடந்தன்குளம், முல்லைத்தீவு(வயது 27)
4. வி.பாலச்சந்திரன்,ஜமுனை, சுழிபுரம் கிழக்கு(வயது 47)
5.சொக்கலிங்கம்,இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 58)
6. சொக்கலிங்கம் பராசக்தி, தட்சணமருதனாமடு,(வயது 56)
7. மாரி, துணுக்காய், மல்லாவி,(வயது 37)
8. அடையாளம் தெரியாதவர், கண்டிக்கு மாற்றம்
9. ஏ.மோகனசுதாகர், உதயநகர், கிளிநொச்சி, (வயது 23)
10. அடையாளம் தெரியாதவர்
11. கே. சிவபாக்கியம், முழங்காவில்,(வயது 74)
12. ஷீபா,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 33)
13. ஜே. அபிலாஷி, மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 01)
14. ஆர். புனிதமலர், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது23)
15. சுபிதா, அக்கராயன்குளம்,(வயது 21)
16. யதுசன், அக்கராயன்குளம், (வயது25)
17. கே. பிரதீபன், (வயது 09)
18. ஆர். ஜெயலட்சுமி, பளை, கிளிநொச்சி,(வயது 51)
19.கே. தனுஷியா, விவேகானந்தா நகர், கிளிநொச்சி,(வயது22)
20. சுபாஜினி அன்ரனிராஜா, திருகோணமலை,(வயது 23)
21. டினுஷன்,திருகோணமலை,(வயது 05)
22. டிலுஷா, திருகோணமலை,(வயது 02)
23. கே.சுகதாஸ், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 23)
24. பி.கதிரவேலு,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 75)
25. பி. ஆனந்தன் ,விசுவமடு,(வயது63)
26.சி. சசிதரன், தம்பிரா, பூநகரி,(வயது 20)
27.ராமஜயலட்சுமி,ஆண்டான்குளம், அடம்பன்,(வயது 55)
28. பி.லாவண்யா, முள்ளியவளை,முல்லைத்தீவு,(வயது 15)
29.சிவகுமார், யாழ்ப்பாணம்,
30.எம். பத்மாதேவி, இராமநாதபுரம்,(வயது39)
31.சிவானந்த சர்மா, பூநகரி,(வயது 35)
32. பி. சுகந்தினி, மாமல்லபுரம்,(வயது 39)
33. என். சண்முகசுந்தரம், புத்தூர், புளியங்குளம், (வயது 51)
34. ஏ. சாந்திலா, நடன்குடியிருப்பு, விசுவமடு, (வயது51)
35. பி. சிவஞானம், தம்பளை, கோணாவில்,(வயது 55)
36.எஸ். இராஜகுமார், பளை, கிளிநொச்சி,(வயது 44)
37 கே. நடராஜா, உருத்திரபுரம், கிளிநொச்சி
38. கலைவாணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது32)
39. கிருஷ்ணகுமார். வல்லியபுரம், புதுக்குடியிருப்பு,(வயது 30)
40. சந்தியாமேரி, ஜோசப், (வயது 65)
41. ஜே. இராமச்சந்திரன், மாசார் பளை, (வயது64)
42. ஜனூசன், மாசார் பளை,(வயது05)
43. ரி. ஜனரூபன், நட்டாங்கண்டல், (வயது34)
44. ஜி. தர்ஷியா, நட்டாங்கண்டல், (வயது04)
45. இராஜேஸ்வரி, இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 39)
46. ஏ. பார்வதி, பரந்தன், கிளிநொச்சி, (வயது 61)
47. டிலானி, பரந்தன், கிளிநொச்சி,(வயது 01)
48.அருளானந்தன், வட்டாரம் 9, புதுக்குடியிருப்பு, (வயது67)
49. ஏ.பிலோமினா, புதுக்குடியிருப்பு (வயது64)
50. கே. தவராசா, திருநகர், கிளிநொச்சி, (வயது47)
51. சுலக்ஷன், ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 12)
52. எஸ். சுபாகரன், கிளிநொச்சி, (வயது39)
53. ரி.தண்டாயுதபாணி, வட்டுவடக்கு, சித்தன்கேணி,(வயது74)
54. செபமாலை,(வயது 73)
55. எம். மைக்கல்ராஜ், வலையன்மடு,முல்லைத்தீவு,(வயது 21)
56.என்.சுபைதா, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 30)
57. காவ்யா, செம்மலை, முல்லைத்தீவு
58. வசந்தராணி, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 32)
59. எம்.கே. கேதீஸ்வரன், பெரியதம்பனை,வவுனியா,(வயது 52)
60. ஆர். சசிகலா, ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 35)
61. ராபேக்கா,மலையமடு,(வயது20)
62. ரவிக்குமார், ஆனந்தபுரம் கிளிநொச்சி,(வயது 36)
63. ஆர். பாலகிருஷ்ணா, விசுவமடு, முல்லைத்தீவு,(வயது 63)
64.லெனின் குமார், முழங்காடு, கிளிநொச்சி,(வயது 33)
65. எல். விதுஷானி, (வயது11)
66. கே.ஜோர்ஜர். மாதலை, முல்லைத்தீவு.(வயது 43)
67. நடிமலர், வவுனிக்குளம், முல்லைத்தீவு,(வயது44)
68. அடையாளம்தெரியாது
69.எம். மதுமிதன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)
70. எம். புஷ்பமலர், மாதலை, முல்லைத்தீவு,(வயது 39)
71. எல். மைதிலி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 33)
72. விந்துஜன், மாதலை, முல்லைத்தீவு,(வயது 05)
73. விழியரசு, மாதலை,முல்லைத்தீவு,(வயது 1 1/2)
74. பி.பூசன், ஆல்காடி, மன்னார், (வயது 63)
75, ஜே. டேனோயன், யூனிட் 05, தர்மபுரம்,(வயது 15)
76. எஸ்.நாகவர்த்தினி,பரந்தன், கிளிநொச்சி,30
77. நாகவதனி, பரந்தன், கிளிநொச்சி,25
78. என்.சிவகுமார்,பரந்தன், கிளிநொச்சி,36
79. எஸ்.குகஜனி, பரந்தன், கிளிநொச்சி,05
80. ஏ.மரியநாயகம், தர்மபுரம்,யுனிட் 5 கிளிநொச்சி,60
81. கே.கணேஸ் வவுனிக்குளம், முல்லைத்தீவு,63
82. ஆர்.நவசீலன், தெல்லிப்பழை,31
83. வி.லச்சுமி, இயக்கச்சி கிளிநொச்சி,55
84. யோகேஸ் கந்தகன்,கப்பமடு மன்னார்,20
85. கே.தரணி,பாலி நகர் வவுனிக்குளம்,09
86. ஏ.ஜகராஜன் மல்லாவி, பாலிநகர்,40
87. பி.ஸ்ரீவன்னி பாலைநகர், மல்லாவி,43
88. பி.ரவிசியா பாலைநகர் மல்லாவி,08
89 ஜே.கிவிதன் பாலை நகர், மல்லாவி,06
90. எம்.இராசம்மா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,69
91. சி.பாஸ்கரன், வட்டக்கந்தன், மன்னார், 33
92. ரி.மலர்விழி, கிளிநொச்சி,27
93. ஆர்.தவசீலன், மாதலை, முல்லைத்தீவு, 30
94. ரொபர்ட் ராஜா, பொக்கணை,30
95. பி.இராசம்மா, தேவிபுரம்,66
96. கிருபாகரன்,ரத்னபுரம்,கிளிநொச்சி,26
97. அடையாளம் தெரியவில்லை
98. எஸ்.நடராஜன்,28 விவேகாநந்தர் நகர் மேற்கு, கிளிநொச்சி, 52
99. அடையாளம் தெரியவில்லை மரணம்
100. ரி.தியாகலிங்கம்,நட்டாங்கண்டல்,மாங்குளம்,50
101. கே.ராமாஜி,தர்மபுரம்,71
102. புன்னியவதி, தேவிபுரம்,58
103. ஜே.அனிலவன்,தேவிபுரம்,1.5
104. ஜே.வாணி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,32
105. ஆர்.ஜனனி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,06
106. ஆர்.ராஜிதா,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,26
107. எம்.மாரியப்பன்,156 ஆவது மைல்,கிளிநொச்சி,63
108. கவில்தாஸ்,கல்வலி,புதுக்குடியிருப்பு,10
109. குமாரதாஸ், கல்வலி,புதுக்குடியிருப்பு,41
110. ரி.வடிவேலு,404 7ஆவது ஒழுங்கை தர்மபுரம்,77
111. யோகராஜ்,மாதலை,முல்லைத்தீவு,55
112. கார்த்திகா,வல்லாங்குளம், முல்லைத்தீவு,21
113. ஜயராணி,முல்லைத்தீவு,50
114. கே.பிரதீபா,தேவிபுரம்,முல்லைத்தீவு,18
115. கே.ராஜேஸ்வரி
116. எம்.லட்சுமி,கிளிநொச்சி,58
117. எஸ்.கசிகரன், வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,07
118. எஸ்.சிவகௌரி,வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,32
119. சாம்பவி,07
120. வீ.சரஸ்வதி,தேவிபுரம்,முல்லைத்தீவு,23
121. நித்ரன்,மாதலை,முல்லைத்தீவு,11
122. கே.பரமேஸ்வரி,59
123. ஏ.புவியரசன்,பூக்கானல்,கிளிநொச்சி
124. எம்.புஸ்பவதி,கிளிநொச்சி,58
125. ஐ.தம்பிராஜ்,தர்மபுரம்,53
126.வி.இராசையா,கிளிநொச்சி,60
127. அபிஹுதன்,மாதலை,முல்லைத்தீவு,34
128. கே.அபிராஜ்,மாதலை,முல்லைத்தீவு,05
129.அபிஷங்கர்,மாதலை,முல்லைத்தீவு,03
130. வி.பவளம்,மாதலை,முல்லைத்தீவு,68
131. கே.வசந்தகுமார்,மாதலை,முல்லைத்தீவு,34
132. ஏ.வேலாயுதம்,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,73
133. செபஸ்தியன் குரூஸ்,மன்னார்,45
134. வை.சுரேந்திரன்,சாவகச்சேரி,29
135. ஹேமா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,25
136. பிரிதா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,2.5
137. ஆர்.சுதீஸ்வரன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,28
138. கே.கிரிசாந்தன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,13
139. சுரேந்தினி,கொக்கன,அடக்காடு, முல்லைத்தீவு,03
140. கே.பரசாவதி,141. கே.சுரேந்திரன்,உடையார் கட்டு தெற்கு,முல்லைத்தீவு ,07
142. எஸ்.நிர்மலா தேவி,மாதலை,முல்லைத்தீவு,37
143. கம்சிகா,மாதலை,முல்லைத்தீவு,04
144. கே.ரவீந்திரன்,மட்டுவில் மேற்கு,பூநகரி,52
145. ஏ.நவரசி,கிளிநொச்சி,33
146. கே.தமிழ்ச்செல்வி,கிளிநொச்சி,07
147. கே.தமிழ்பிரியன்,கிளிநொச்சி,03
148. எஸ்.சிவசந்தியா,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,09
149. எஸ்.தர்சினி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,02
150. எஸ்.கௌசலா தேவி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,28
151. எஸ்.தரன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, (வயது 2)
152. பொன்னையா, மல்லாவி, முல்லைத்தீவு, (வயது 68)
153. எஸ். ராணி, கிளிநொச்சி, (வயது 29)
154. துஷாந்தி, கிளிநொச்சி, (வயது 20)
155. எஸ். சகுந்தலாதேவி, முல்லைத்தீவு,(வயது 55)
156. எஸ். சந்திரன், கோணாவில், (வயது 39)
157. எஸ். சிவனேசன், அலம்பில், முல்லைத்தீவு, (வயது 32)
158. கேதுஷன், இரணைபாலை, (வயது 07)
159. ஐ.சுதர்ஷனி, இரணைபாலை,(வயது 8)
160. திலகமலர், இரணைபாலை, (வயது 38)
161. ஐ. சங்கீதா, இரணைபாலை, (வயது 5)
162. நந்தினி
163. எஸ். ஜயவதனி, வல்லவராயக்கட்டு, கிளிநொச்சி, (வயது 29)
164. வி.பாலசிங்கம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, (வயது 23)
165. பி. தனுஷ், புதுக்குடியிருப்பு, (வயது 4)
166. பி. தனுஷியா, புதுக்குடியிருப்பு, (வயது 2.5)
167. என். தவமணி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 60)
168. கம்ஸன், மாதலை, முல்லைத்தீவு,
169. என்.பிரபாகரன், பொக்கண அடைக்காடு, முல்லைத்தீவு, (வயது 30)
170. என். சுகுந்திரன், 7 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, (வயது 34)
171. எஸ். நவரஸ்யன், 7 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, (வயது 01)
172. கே. சுரேந்திரன், பொக்கணை, (வயது 28)
173. வி. இலங்கநாதன், தெல்லிப்பழை (வயது 38)
174. எஸ். துவாகரன், 170…, (வயது 04)
175. எஸ். தர்சியன், 170…, (வயது 06)
176. எஸ். துஷாந்தி, 170…, (வயது 32)
177. ரஞ்சியாவதனி, இரணைபாலை, முல்லைத்தீவு, (வயது 29)
178. வி. நிஸாந்தன், இரணைபாலை, முல்லைத்தீவு, (வயது 03)
179. அபிநயா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 08)
180. புஹாரி உம்மா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 28)
181. அபிர்தா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 06)
182. இசைநிலா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 2.5)
183. அடையாளம் காணப்படாதவர்.
184. என். கமலா பூரணம், இராமநாதபுரம்
185. எம். சஹாநந்தி, இராமநாதபுரம், (வயது 34)
186. எஸ். புஷ்பமலர், முல்லைத்தீவு, (வயது 27)
187. ஹம்ஸிகா, முல்லைத்தீவு, (வயது 01)
188. தேனஹா, புதுக்குடியிருப்பு, (வயது 40)
189. ஆர். உதயராஜ், ஆனந்தபுரம், கிளிநொச்சி, (வயது 24)
190. எஸ். ராஜசெல்வி, கிளிநொச்சி, (வயது 40)
191. எஸ். சுஜாதா, கிளிநொச்சி, (வயது 08)
192. எஸ். விஜிதா, கிளிநொச்சி, (வயது 09)
193. எஸ். சைஜா, கிளிநொச்சி, (வயது 04)
194. கிருஷ்ணதேவி, கிளிநொச்சி, (வயது 61)
195. புலா, யாழ்ப்பாணம், (வயது 03)
196. அனுசியா, யாழ்ப்பாணம், (வயது 29)
197. எஸ். உனேஷிகா, யாழ்ப்பாணம், (வயது 06)
198. எம். பத்மதேவி, பொக்கணை, கிளிநொச்சி, (வயது 50)
199. ஷியாந்தன், பொக்கணை, கிளிநொச்சி, (வயது 02)
200. பி. விஜிதா, மாதலை, முல்லைத்தீவு, (வயது 28)
201. கபிஷனா, மாதலை, முல்லைத்தீவு, (வயது 02)
202. கவிராஜ், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)
203. கவிசாலினி, மாதலை, முல்லைத்தீவு, (வயது 06)
204. ஐ. சந்திரன், 4 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, (வயது 68)
205. கமலநாதன், கிளிநொச்சி, (வயது 54)
206. கே. பிரவீனா, இராமநாதபுரம், கிளிநொச்சி,(வயது25)
207. கே. அலிசான், கிளிநொச்சி, (வயது2.5)
208. கே.ஜே. கைலநாதன், இராமநாதபுரம், கிளிநொச்சி, (வயது 56)
209. எஸ். டினேஷானந்தன், கல்லவராயன் கட்டு, கிளிநொச்சி, (வயது 31)
210. எஸ். சரோஜினிதேவி, கிளிநொச்சி, (வயது 25)
211. செல்வராஜ், கிளிநொச்சி, உத்தகுளம், (வயது 25)
212. கம்ஸிகா, உத்தகுளம், கிளிநொச்சி, (வயது 01)
213. ஐங்கரன், கிளிநொச்சி, (வயது 33)
214. கே. சுகன்யா, கிளிநொச்சி, (வயது 27)
215. கௌரிசன், கிளிநொச்சி, (வயது 05)
216. கதிரினியா, கிளிநொச்சி, (வயது 07)
217. ஐ. ரம்யாதேவி, கிளிநொச்சி, (வயது 31)
218. ஐ. அபிநயன், கிளிநொச்சி, (வயது 08)
219. எஸ். மகிந்தன், கிளிநொச்சி, (வயது 08)
220. எஸ். மாதவி, கிளிநொச்சி, (வயது 10)
221. ஆர்.குகனேசன், தர்மபுரம், வயது 19
222. ஆர்.கலைச்செல்வி, ஞானிமடம், பூநகரி, வயது 26
223. ரி.சுந்தரராஜா, ஒட்டுசுட்டான், வயது 39
224. எஸ்.ராகுகுமார், ஞானிமடம், பூநகரி, (வயது 32)
225. ஆர்.பரம்சோதி, பூனரிக்குளம், கிளிநொச்சி, வயது 33
226. கோபி, பூனரிக்குளம், வயது 01
227. ஆர்.ராஜிபான், கிளிநொச்சி, வயது 03
228. ஆர்.பரண்யா, கிளிநொச்சி, வயது 05
229. ஆர்.சிவகுமார், இரணபால, முல்லைத்தீவு, (வயது 31)
230. எஸ்.விதுரன், இரணபால, முல்லைத்தீவு, (வயது 1.5 )
231. எம்.வேணி, வட்டக்கச்சி, முல்லைத்தீவு, (வயது 07 )
232. ரஞ்சன் குமார், வன்னேரிக்குளம், (வயது 36 )
233. வி.சுகந்தினி, மாதலை, முல்லைத்தீவு, (வயது 23 )
234. எஸ்.லோஜினி, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு (வயது 13 )
235. எஸ்.புவியரசி, முத்தையன் கட்டு, முல்லைத்தீவு (வயது 08 )
236. எஸ்.தனுஷா, முத்தையன் கட்டு, முல்லைத்தீவு (வயது 05 )
237. எஸ்.விஜயலட்சுமி, முத்தையன் கட்டு, முல்லைத்தீவு (வயது 38 )
238. ஏ.ஜனனி, கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 12 )
239. ஏ.சந்திரஜயந்தி, கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 44 )
240. ஏ.கஜிவன், கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 04 )
241. ஏ.திவ்யா, கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 07 )
242. மனோன்மணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது 64 )
243. ஜே.சுகந்தினி, முரசுமோட்டை, கிளிநொச்சி, (வயது 03 )
244. எஸ்.கோடீஸ்வரி, முரசு மோட்டை, கிளிநொச்சி, (வயது 40 )
245. எஸ்.வஸ்தியன், மன்னார், வயது 40
246. எம்.அல்பிரட், மகாறம்பைக்குளம், வவுனியா, (வயது 54 )
247. எஸ்.தில்லை நடராஜா, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, (வயது 37)
248. ஜனநாதன், முல்லைத்தீவு, (வயது 28 )
249. ரி.அகல்யா,புதுக்குடியிருப்பு, (வயது 08)
250. வி.ராசன்டா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,வயது 57
251. ரி.ஜான்ஸி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, வயது 13
252. ஏ.போறஜனி, ராமநாதபுரம், வட்டக்கச்சி, வயது 01
253 . ஏ.போனேஸ்வதி, ராமநாதபுரம், வட்டக்கச்சி, வயது 30
254. பவளன், கண்டாவளை, வயது 05
255. யு.கந்தரூஸி, கண்டாவளை, வயது 04
256. யு.அபிலாஷ், கண்டாவளை, வயது 06
257. யு.பனுஷன். கண்டாவளை, வயது 05
258. யு.ஐஸ்வரி, கண்டாவளை, வயது 07
259. கே.ராஜலட்சுமி, புதுக்குடியிருப்பு, வயது 65
260. ரி.மல்லிகாதேவி, பூநகரி, வயது 48
261. பார்வதி, விஸ்வமடு, வயது 59
262. வி.வேணியா, கந்தப்போக்கு, கிளிநொச்சி, வயது 35
263. வி.குகேந்திரன், கந்தப்போக்கு, கிளிநொச்சி, வயது 02
264. வை.ராஜேஸ்வரி, 10 ஆவது, அஞ்சன்குளம், முல்லைத்தீவு, வயது 45
265. வை.கீதா, முல்லைத்தீவு, வயது 26
266. எம்.தியாகராஜ், தோம்பிலுவில், வயது 67
267. கே.ஜெயசீலன், நொச்சிக்குளம், வயது 30
268. என்.முத்துசாமி, மாங்குளம், வயது 3
269. என்.வினோஜன், மாங்குளம் வயது 1.5
270. என்.குலஞானேஸ்வரி, மாங்குளம், வயது 33
271. எஸ்.ஜேயராசா, வற்றாப்பளை, வயது 53
272. சருஜன், கனகராயன் குளம், வயது 8
273. விமலாதேவி, பொக்கணை, வயது 45
274. தினஜா, கனகராயன் குளம், வயது 2
275. ரி.சுமதி, கனகராயன்குளம், வயது 26
276. எஸ்.புவனேந்திரன், பொக்கணை, வயது 62
277. கே.மகேஸ்வரி, சுதந்திரபுரம், வயது 50
278. ஜே.லக்ஸிகா, பொக்கணை, வயது 03
279. அமராவதி, பொக்கணை, வயது 45
280. ஏ.சுப்பிரமணியம், புதுக்குடியிருப்பு வயது 62
281. ஏ.காந்தரூபன், தர்மபுரம், வயது 22
282. ஏ.ஜெயவனிதா, பழயர் வெள்ளயன் குளம், வயது 25
283. ஜோதிகன், பழயர் வெள்ளயன்குளம், 6 மாதம்
284. டினேஸ், பழயர் வெள்ளயன்குளம், வயது 03
285. ஆரையம்மாள், தர்மபுரம், வயது 44
286. ரஜீவன், ராமநாதபுரம், வயது 2.5
287. அஜிதா, ராமநாதபுரம், வயது 10
288. அடையாளம் காணப்படவில்லை இறந்துள்ளார்.
289. சீதாலட்சிமி, ராமநாதபுரம், வயது 37
290. ரி.கிட்ணசாமி, தர்மபுரம், வயது 54
291. ரி.அற்புததேவி, மாதலம், 55
292. எஸ்.விஸ்வநாதன், புளியங்குளம் வயது 35
293. கே.கந்தையா, பரந்தன், கிளிநொச்சி வயது 74
294. பி.ஜானகி, குமாரபுரம், பரந்தன், வயது 65
295. சிவக்கொழுந்து, நாட்டங்காடு, வயது 77
296. நாகமுத்து, நாட்டங்காடு, வயது 83
297. பி.பஞ்சலிங்கம், பரந்தன், வயது 48
298. என்.நாகம்மா, சுழிபுரம், யாழ்ப்பாணம்,வயது 80
299. மரணம்பெயர் தரப்படவில்லை வயது 70
300. கனகதேவி, நாட்டங்காடு, வயது 34
301. சுபிஷன், நாட்டங்காடு, வயது 03
302. ராமஜீவஹன், ஆண்டாங்குளம், மன்னார், வயது 19
303. யசிதா, வன்னிபுரம், முல்லைத்தீவு, வயது 13
304. கே.அப்புத்துரை, அடப்பன், யாழ்ப்பாணம், வயது 80
305. கே.யசோதா, வல்லிபுரம், வயது 33
306. கே.தியாகராஜா, கிளிநொச்சி, வயது 53
307. திவாரட்ணமணி, பளை, வயது 54
308. ஏ.பிரமகுமார், மாங்குளம், வயது 41
309. அனுஜஹா, இறிவில்பளை, வயது 21
310. கே.ஆறுமுகம், நெடுந்தீவு, வயது 81
311. பி.திலகவதி, மல்லாவி, வயது 56
312. ரி.சுகுமார், பரந்தன், கிளிநொச்சி, வயது 30
313. ஏ.சாருமதி, புதுக்குடியிருப்பு, வயது 27
314. ஏ.ஜனகன், புதுக்குடியிருப்பு, 6 மாதம்
315. ஏ.டினுஷிலா, வட்டக்கச்சி, வயது 09
316. ஏ.டுனுஷா, வட்டக்கச்சி, வயது 08
317. பி.புஸ்பராணி, கந்தபுரம், கிளிநொச்சி, வயது 54
318. எம்.நிஷாந்தன், விசுவமடு, வயது 20
319. ஆர்.நிஷாந்தி, வட்டக்கச்சி, வயது 27
320. எம்.ராஜரட்ணம், மாதலன், வயது 58
321. எஸ்.கமலராஜா, வட்டக்கச்சி, வயது 18
322. வை.பிருந்தாதேவி, வயது 40
323. எஸ்.நிதர்சன், வட்டக்கச்சி, வயது 12
324. எஸ்.கிரிஜா, வட்டக்கச்சி, வயது10
325. எஸ்.நிரோஷன், வட்டக்கச்சி, வயது 8
326. மதிவதனா, வட்டக்கச்சி, வயது 31
327. தனசிகாவதி, உப்பளாங்குளம், வவுனியா, வயது 62
328. எஸ்.மனாகா, பொக்கண, வயது 28
329. டிலானி, பொக்கண, வயது 04
330. வி.தட்சணி, புதுக்குடியிருப்பு, வயது 30
331. அக்ஷணா, புதுக்குடியிருப்பு, வயது 1.5
332. எம்.கிரிஷ்ணபிள்ளை, சுகந்தபுரம், வயது 52
333. எஸ்.மார்க்கண்டு, ஒட்டுசுட்டான், வயது 70
334. ரவிக்குமார், ஒட்டுசுட்டான், வயது 30
335. எஸ்.பிரியதர்சனி, வட்டக்கச்சி, வயது 24
336. விஜயலட்சுமி, அக்கராயன்குளம், வயது 46
337. மிதுனா, விசுவமடு, வயது 13
338. வி.ஆரியமாலா, தாளையடி, வயது 59
339. எஸ்.சிவானந்தன், வட்டக்கச்சி, வயது 32
340. ஆர்.சந்திரதாஸ், வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 34
341. எஸ்.கந்தசாமி, வல்லிபுரம், புதுக்குடியிருப்பு, வயது 60
342. எஸ்.லோகராஜா, வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 43
343. சி.கமலநாதன், வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 57
344. கே.நிரோஜினி, வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 15
345. வை.துஷானி, அலம்பன், வயது 02
346. வை.மேரி கரித்தா, அலப்பன், வயது 33
347. வை.துஷ்யந்தன், அலம்பன், வயது 03
348. வை.லூர்தம்மா, யாழ்ப்பாணம் (பொக்கண) வயது 62
349. ஜி.பரிசினம், குமுழமுனை, வயது 33
350. ஏ.யோசப், பொக்கண அடக்காடு, முல்லைத்தீவு, வயது 66
351. கலையரசி, குமுழமுனை, வயது 01
352. ஜி.விதுஷா, குமுழமுனை, வயது 04
353. எஸ்.சஞ்சிகா, விசுவமடு, வயது 08
354. ரி.கஜந்திரன், விசுவமடு, வயது 16
355. ஆர்.சசிகுமார், விசுவமடு, வயது 35
356. எஸ்.டிம்வில்லா, விசுவமடு, வயது 04
357. எஸ்.பிரதீபா, பொக்கண அடக்காடு, முல்லைத்தீவு, வயது 26
358. வி.முருகேஷ், கனகராயன்குளம், வயது 47
359. எம்.சுனேந்திரன். கனகராயன்குளம், வயது 13
360. வி.யசோதரன், மன்னார், வயது 29
361. எஸ்.கோவிந்தன். மன்னார், வயது 15
362. எம்.கனகாம்பிகை, வட்டக்கச்சி, வயது 16
363. எம்.கேசுதா, வட்டக்கச்சி, வயது 49
364. எஸ்.ஷானி, வட்டக்கச்சி, வயது 12
365. ரி.கண்மணி, மாதலன், வயது 56
366. எம்.மதுரமுத்து, மன்னார், வயது 52
367. எஸ்.ஜொனி, பரப்பக்கந்தன், வயது 08
368. எஸ்.புனிதசீலி, பெரியகுளம், வயது 34
369. எம்.அம்பிகா, வட்டக்கச்சி, வயது 14
370. செல்வரஞ்சினி, முல்லைத்தீவு, வயது 55
371. ஏ.ஞானசேகரம், சாவகச்சேரி, வயது 43
372. ஏ.பாக்கியம், பெரியதம்பனை, வயது 70
373. கே.ஜெயந்தி, தொண்டமனாறு, வயது 44
374. ஏ.புவனேஸ்வரி, கிளிநொச்சி, வயது 45
375. கே.பரமேஸ்வரி, ராமநாதபுரம், வயது 70
376. வி.தமிழினி, சுதந்திரபுரம், வயது 26
377. எஸ்.வேலாயி, வல்லிபுனம், வயது 69
378. தியாகராஜா, இராமநாதபுரம், வயது 31
379. கே.சரோஜினிதேவி, புதுக்குடியிருப்பு, வயது 60
380. ஆர்.கிருஷ்ணபிள்ளை, புதுக்குடியிருப்பு, வயது 71
381. என்.கணேஷலிங்கம், ஒட்டுசுட்டான், வயது 50
382. ஜே.ஜீவனா, பூநகரி, வயது 13
383. யி.யதுர்ஷிகா, வட்டக்கச்சி, வயது 04
384. வி.நாகலட்சுமி, வட்டக்கச்சி, வயது 33
385. யு.சுஜர்ஜன், வட்டக்கச்சி, வயது 02
386. யு.இந்துஜா, வட்டக்கச்சி, வயது 06
387. ஜி.அமிர்தாஞ்சிதம், முல்லைத்தீவு, வயது 45
388. கே.ஜனோஜா, முல்லைத்தீவு, வயது 18
389. ஜி.நிரோஷன், பூநகரி, வயது 12
390. கே.நித்யானந்தன், காரைநகர், வயது 48
391. கே.ஜானகி, உருத்திரபுரம், வயது 65
392. ஏ.மௌலீசன், மட்டுவில், வயது 65
393. எஸ்.குமரன், பூநகரி, வயது 13
394. எம்.மயூரன், யாழ்ப்பாணம், வயது 23
395. பி.உமேசன், மன்னார், வயது 15
396. ராசேந்திரன், மல்லாவி, வயது 75
397. எம்.கீதாகௌரி, வட்டக்கச்சி, வயது 44
398. வி.வள்ளிப்பிள்ளை, பூநகரி, வயது 70
399. சி.தமிழின்பன், பூநகரி, வயது 2.5
400. திருமதி எஸ்.விருஷத்மா, வயது 55
401. ஏ.ராதிகா, சரசாலை, யாழ்ப்பாணம், வயது 20
402. எம்.உதயசிங்கம், ராமநாதபுரம், வயது 33
403. எம்.ஜெயலட்சுமி, கிளிநொச்சி, வயது 65
404. எஸ்.செல்வமணி,உருத்திரபுரம், வயது 50
405. எம்.யோகேஸ்வரி, முல்லைத்தீவு, வயது 58
406. இ.ஜெயதீஸ்வரி, உருத்திரபுரம், வயது 38
407. என்.கிறிஷாந்தன், ரம்பைக்குளம், நெடுங்கேணி, வயது 18
408. எஸ்.கமலாதேவி, ரம்பைக்குளம், நெடுங்கேணி, வயது 54
409. கே.பரிமளாதேவி, அக்கராயன்குளம், வயது 29
410. எஸ்.ஜனகன், உதயநகர், கிளிநொச்சி, வயது 25
411. பெயர் தெரியவில்லை.
412. எஸ்.மனோகரன், கிளிநொச்சி, வயது 24
413. பி.லலிதா, புதுக்குடியிருப்பு, வயது 43
414. எஸ்.சுந்தரலிங்கம், உடையார்கட்டு, முல்லைத்தீவு, வயது 55
415. ஆர்.முருகேசு, வடமராட்சி, யாழ்ப்பாணம், வயது 47
416. எஸ்.குகஇன்பன், பூநகரி, வயது 6
417. எஸ்.வைத்தியநாதன், முல்லைத்தீவு, வயது 80
418. எம்.கந்தசாமி, உடையார்கட்டு, முல்லைத்தீவு, வயது 62
419. கே.விஜிதா, புதுக்குடியிருப்பு, வயது 28
420. எல்.தேவரஜினி, வட்டக்கச்சி, வயது 43
421. எம்.தங்கராசா, மாதலன், வயது 62
422. எல்.புவிலதன், மாதகல், வயது 62
423. எம்.சுபாஹினி, பரந்தன், வயது 05
424. எஸ்.புகசீலன், பூநகரி, வயது 13
425. பி.டுலானி, திருவையாறு, கிளிநொச்சி, வயது 35
426. எம்.தியாகராஜா, கிளிநொச்சி, வயது 35
427. ஜே.செபஸ்தியன், பாரதிபுரம், கிளிநொச்சி, வயது 18
428. பிரான்ஸிஸ், பாரதிபுரம், கிளிநொச்சி, வயது 70
429. என்.கோகுலன், கிளிநொச்சி, வயது 27
430. பி.சிவகுமார், பூநகரி, வயது 35
431. ஜே.புவனேஸ்வரி, மாதலன், வயது 23
432. எஸ்.ராஜேஸ்வரி, யாழ்ப்பாணம், வயது 39
433. கே.சின்னராஜா, சில்லாலை, யாழ்ப்பாணம், வயது 54
434. எஸ்.ரஞ்சனி, பரந்தன்
435. எஸ்.சுஜந்தினி, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், வயது 29
436. கே.கனகமணி, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், வயது 64
437. சரிதா, கிளிநொச்சி, வயது 19
438. எஸ்.உதயகுமாரன், கண்டாவளை, வயது 39
439. எம்.செல்லையா, ஆவரங்கால், யாழ்ப்பாணம், வயது 67
440. கே.நடராசா, மட்டுவில், வயது 61

கிறிஸ்தவ மதகுருமார் வருகை தேவாலயத்திற்கு அனுப்பிவைப்பு

mullai.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி விசுவமடு பிரதேசத்தை நோக்கி வந்த கிறிஸ்தவ போதகர் ஒருவரும், எட்டு கன்னியாஸ்திரிகளும் அடங்கலான மதகுருமார் வவுனியா சிதம்பரப்புரத்திலுள்ள தேவாலயத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் இவர்கள் ஒன்பது பேரும் விசுவமடு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரை நோக்கி வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த இவர்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளையும், தேவையான வசதிகளையும் வழங்கும் வகையில் வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பணிப்பின் பேரில் சிதம்பரபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமயத் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சகல மரியாதைகளும் இவர்களுக்கு பாதுகாப்புப் படையினரால் வழங்கப்பட்டதாக சுட்டிக் காட்டிய பிரிகேடியர், இவர்கள் அனைவரும் கண்ணன் சர்வதேச திருச்சபை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இராணுவ தலைமையகம் மேலும் தகவல் தருகையில்:-

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த இவர்கள் ஆரம்பத்தில் பூந்தோட்டம் தேசிய கல்விக் கல்லூரியில் வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட பின்னர் சிதம்பரபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பாதுகாப்புப் படை அதிகாரிகளின் இணக்கத்தோடு 9 பேரையும் அவர்களது திருச்சபையை சேர்ந்த ஏனையவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

போதகர் பத்மநாதன் ஜயராஜா, கன்னியாஸ்திரிகளான கனகன் மோகனா, செபமாலை பிரான்ஸிஸ் கம்மா, செபஸ்தியம் பிள்ளை லதா வயலட், கனகசபாபதி சர்மிளாதேவி, அந்தோனி செபமாலை மேரி, அண்ணாமலை மோகனா, ரபெல் ரோஹினி மேரி மற்றும் அந்தோனி லோர்ட் அம்மா ஆகிய ஒன்பது பேரே இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வருகை தந்தவர்களாவர்.

இதேவேளை, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி கண்ணன் திருச்சபை பிரிவின் ஸ்தாபகர் பிதா கலாநிதி அல்பர்ட் வி. ஜெபநாயகம் வன்னி படைத்தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

புலிகளின் பிடியில் சிக்கி பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணக் கிராமங்களில் நடமாடும் பாடசாலைகள் – இடம்பெயர் மாணவர் நலன்கருதி அரசாங்கம் நடவடிக்கை

college1.jpgமுல்லைத் தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா நிவாரணக் கிராமங்களில் மாணவர்களின் நலன் கருதி நடமாடும் பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்கள் கல்வி கற்கத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் ஏற்கனவே செய்து கொடுத்துள்ள போதிலும் அடுத்த வாரம் நடமாடும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் சுமார் 1200 மாணவர்களும் 35 ஆசிரியர்களும் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த ஆசிரியர்களை பயன்படுத்தியே நடமாடும் பாடசாலைகளை நிவாரணக் கிராமங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உடனடியாகக் கப்பல் மூலம் அனுப்பி வைக்க அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-

இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 13 நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. இங்குள்ள மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தும் வகையில் சுகாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்குத் தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பொது மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முகாம்களுக்கும் அவ்வப்போது விஜயம் செய்து தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படுகிறது.

மாத்தையா மகிந்தவும் தம்பி பிரபாவும் ஆடும் சிங்கம் புலி ஆட்டத்தின் மரணப் பொறியில் வன்னி மக்கள் !!! : த ஜெயபாலன்

Pranab_MukherjeeJohn_Holmes_UNYogaradnam_Yogiவன்னியில் சிக்குண்ட மக்களை வெளியேற்றத் தாங்கள் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத்தறைச் செயலாளர் பிரணர்ப் முகர்ஜி இந்தியப் பாராளுமன்றத்தில் நேற்று (பெப் 18ல்) தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது இந்த அவல நிலைக்கு புலிகளே காரணம் என்று வேறு குற்றமும் சாட்டி உள்ளார். இலங்கை அரசுக்கு பின்னால் இந்த யுத்தத்தை இந்தியா நடாத்துகிறது என்பதை உறுதிப்படுத்துவது போல் பிரணர்ப் முகர்ஜியின் பாராளுமன்ற உரை அமைந்திருந்தது. யுத்த நிறுத்தத்தை இந்தியா கோராது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் து}தரகங்களுக்கு முன்னால் ‘இலங்கை அரசுக்கு இந்தியா உதவுவதைக் கண்டித்து’ ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் கொந்தளித்து உள்ளது. தமிழ் நாட்டில் மூன்றாம் நபரொருவரும் தீக்குழிப்பு முயற்சியில் ஈடுபட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டு உள்ளார். பிரணர்ப் முகர்ஜியின் உரை மக்களது போராட்டங்களை முற்று முழுவதுமாகப் புறக்கணித்து இலங்கை அரசுக்கு தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வல இந்திய வெளியுறவுத்துறைச் செயலரின் உதவியை வரவேற்று இருப்பதாக பிபிசி செய்தி வெளியட்டு உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்குள் அவ்வுதவியை வரவேற்பதாக கெகலிய ரம்புக்வல தெரிவித்து உள்ளார்.

பிரணர்ப் முகர்ஜியின் கருத்துப்படவே யுஎன் செயலாளர் நாயகமும் கருத்து வெளியிட்டு உள்ளார். யுத்தத்திற்குள் சிக்குண்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே முக்கிய  அம்சம் என அவர் தெரிவித்து உள்ளார். யுஎன் உள்ளுர் பணியாளர்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகவும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை விட்டு வெளியேறுபவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கிறார்கள் என்றும் யுஎன் பெப் 16ல் குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே யுஎன் பிதிரிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் இன்று (பெப் 19) இலங்கை செல்கிறார். பெப் 21 வரை இலங்கையில் தங்கவுள்ள யுஎன் மனிதாபிமான செயற்பிரிவின் அவசர உதவி இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை அரச பிரிதிநிதிகளையும் ஏனைய கட்சி பிரதிநிதிகளையும் இலங்கையில் உள்ள யுஎன் ஐசிஆர்சி பிரிதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். மேலும் வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களையும் சந்திகக உள்ளார்.

இந்தியா மற்றும் யுஎன் பிரிதிநிதிகள் இலங்கை அரசாங்கம் வன்னி மக்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்கள் பற்றி கண்டுகொள்ளாத போக்கையே கொண்டுள்ளனர். இலங்கை அரசு மீதான கண்டனங்கள் மேம்போக்கானதாகவே உள்ளது. இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற வகையிலேயே செயற்படுகின்றன. இதில் இந்தியா காட்டும் அக்கறை என்பதும் அவர்களுடைய நலன் சார்ந்ததாகவே அமையும்.

புலிகளால் அண்மைக்காலமாக வெளியிடப்படும் அறிக்கைகள் உலகமே தங்களைத் தீர்த்துக்கட்ட கங்கணம் கட்டி நிற்பதாகக் குறிப்பிடுகின்றன. ”இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன் குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன.” என்று புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ செ யோகி பெப்ரவரி 18ல் குறிப்பிட்டு உள்ளார். அவர் மேலும் குறிப்பிடகையில் ”நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம். ” என்றும் தெரிவித்து இருந்தார். யோ செ யோகியின் கூற்று ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல் உள்ளது. ‘ஆயுதத்தை மட்டும் நம்பாதீர்கள்’ என்று பலரும் சொன்ன போது அவர்களையெல்லாம் தீர்த்துக் கட்டிவிட்டு இப்போது ‘பாசக் கயிறு’ தெரிந்தவுடன் மக்களுடன் பேசுவோம் என்று கதையளக்கிறார் யோகி.

தமிழர்களில் மிகப் பெரும்பான்மையினர் இலங்கை அரசின் மீது என்றுமே நம்பிக்கை வைத்தது கிடையாது. இலங்கை அரசு ஒரு பேரினவாத அரசு என்று அவர்கள் சரியாகவே அதனை அடையாளம் கண்டிருந்தனர். அந்த அரசு தமிழ் மக்களைக் கொல்லும் படுகொலை செய்யும் என்பதுவும் அவர்களுக்குப் புதிதல்ல. அதனால் தான் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தங்கள் பங்களிப்பைத் தொடர்ச்சியாக வழங்கினர்.

ஆனால் இன்றைய வன்னிக் கொடுமையில் இனவாத அரசு புரிகின்ற கொடுமைகளுக்கு புலிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக உள்ளனர் என்பது மிகவும் கசப்பான உண்மையாகி உள்ளது. எந்த மக்களை வைத்து தங்களை வளர்த்து வளம்படுத்திக் கொண்டார்களோ அநத மக்களை அந்த மக்களின் பொது எதிரியின் முன் பணயம் வைத்து ஒரு யுத்தம் நடைபெறுகிறது. ஒரு கை விரலுக்குள் எண்ணக் கூடிய கிராமங்களைத் தவிர அனைத்து பகுதியையும் இழந்துவிட்டு 250000 மககளுள்ள பகுதிக்குள் யுத்தம் புரிந்து இழந்தவற்றை மீட்க முடியும் என்று கூறுவது பகற் கனவு.

தங்கள் ஆயுதங்களினால் சாதிக்க முடியாது போனதை 250 000 மக்களை வைத்து  அவர்களில் சில ஆயிரம் பேரைப் பலி கொடுத்து சாதிக்கலாம் என்று புலிகள் போடும் கணக்கு இலங்கை அரச படைகளின் இன அழிப்புக்கு உதவுவதைத் தவிர வேறு எதனையும் சாதிக்கப் போவதில்லை. ஏற்கனவே பேரினவாத அரசின் அடக்குமுறைகளாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை கொடுத்த புலிகளினதும் ஏனைய அமைப்புகளினதும் அரசியலின் பயனாகவும் தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களைவிட்டு பெரும்தொகையில் வெளியேறி உள்ளனர். இன்று இடம்பெறும் இந்த அவலங்கள் எஞ்சியுள்ளவர்களையும் பலியாக்குவதற்கே வழிகோலப் போகின்றது.

வார்த்தைகளுள் அடக்க முடியாத அவலம் வன்னியில். கையறு நிலையில் இரத்த உறவுகள் துடிக்கின்றன. யார் உயிரிழந்தார்கள் யார் உயிருடன் உள்ளனர் என்று அறியாத ஓலங்கள். நிமிடத்திற்கு நிமிடம் உயிர்ப் போராட்டத்தில் வன்னி மக்கள் தவிக்கின்றனர். ‘எமராஜன்’ நடத்தும் வதைகூடத்திலும் இவ்வளவு கொடுமை கற்பனை செய்யப்பட்டு இருக்குமா என்பது சந்தேகமே. கைக்குழந்தைகள் மழலைகள் பெண்கள் வயோதிபர் என்ற எவ்வித வேறுபாடும் இன்றி வகைதொகையின்றி மக்கள் கொல்லப்படுகின்றனர். தினமும் நாற்பது பேர் வரை கொல்லப்படுவதாக யுஎன் மதிப்பிட்டு உள்ளது. இழப்புகள் இதனிலும் அதிகம் என்று அஞ்சப்படுகிறது.

யுத்தத்தால் ஏற்படும் நேரடிப் பாதிப்புகளுடன் இடம்பெயர்வினால் ஏற்படும் அதற்கே உரிய பிரச்சினைகளும் சேர்ந்து உள்ளது. மேலும் மருந்து உதவிகள் இன்மை நீர் உணவுத் தட்டுப்பாடு என்பன நிலைமையை மிகவும்  மோசமாக்கி உள்ளது. இரத்தப் போக்கை நிறுத்தவதற்கு அப்பால் எவ்வித சிக்ச்சையை மேற்கொள்வதற்கும் அங்கு மருந்தப் பொருட்களோ வசதிகளோ கிடையாது என அங்கு தமது உயிரையும் உத்தியோகத்தையும் பணயம் வைத்து 24 மணி நேரமும் பணியாற்றும் விரல் விட்டு எண்ணக் கூடிய மருத்துவ பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெப் 18 அன்று அரச படைகளின் செல் வீச்சில் 38 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய சுகாதார அலுவலர் டொக்டர் துரைராஜா வரதராஜா அசோசியேடட் பிரஸ்ற்குத் தெரிவித்து உள்ளார். விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் வெவ்வேறு சம்பவங்களில் இன்று கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 150 ற்கு மேல் என மதிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாள் ஆட்டத்திலும் கிறிக்கட் ஸ்கோர் போன்று மரணங்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படுகிறது.

இரண்டு மூன்று கிராமங்களுக்குள் 250000 வரையான மக்கள் பல வாரங்களாக சிக்குண்டு உள்ளனர். கடைசியாக எப்போது அந்த மக்கள் நல்லுறக்கம் கொண்டார்கள் என்பது அவர்களுக்கு நினைவில் இருக்காது. இருக்க இடமில்லை மாற்றி உடுக்க  உடையில்லை உண்ண உணவில்லை குடிக்க நீரும் இல்லை. இவ்வளவு நெருக்கத்தில் வாழும் போதும் மழைகாலம் வேறு. நோய் பரவுவதற்கு மட்டும் குறைவு இல்லை. இந்த நோய்களினால் காயப்பட்ட பலர் அவயவங்களை இழக்கின்ற ஆபத்தும் உயிரிழக்கும் ஆபத்தும் அதிகரித்து உள்ளது.

சுனாமியால் ஏற்பட்ட இயற்கை அழிவில் இழந்ததில் இருந்து மீளு முன் இந்த மனிதர்களால் மகிந்த – பிரபாகரன் என்ற யுத்தப் பிரியர்களால் உருவாக்கப்பட்ட மரணப் பொறிக்குள் வன்னி மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இன்றைய இந்தக் கொடிய அவலம் வன்னி மக்களின் எதிர்காலத்தையும் இருள வைக்கப் போகின்றது. அன்புக்குரியவர்கள் கொல்லப்படுகின்றனர். குழந்தைகள் பெற்றோரை இழக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளை இழக்கின்றனர். உறவுகளை முற்றும் இழந்த அனாதைகளான சமூகம் ஒன்று எம்முன் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அந்த சமூகத்தில் பல நூற்றுக்கணக்கில் அவயவங்களை இழந்து ஊனமுற்றவர்களாக்கப்பட்டுக் கொண்டுள்ளனர். மழலைகள் முதல் மூத்தொர் வரை வயது பால் வேறுபாடின்றி உளவியல் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்கள் மீள முடியாத அவல வாழ்வுக்குள் தள்ளப்படுக் கொண்டுள்ளனர். அதுவும் அவர்களின் பெயரிலேயே.

இந்த அவலத்தின் பிரதான குற்றவாளி யார்? துணைக் குற்றவாளி யார்? என்று நீதி விசாரணை மேற்கொள்ளவும் பட்டிமன்றம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. ஏனெனில் இந்த மக்களின் அவலம் பற்றி அந்த அரசியல் தலைமைகளுக்கு கிஞ்சித்தும் கரிசனை கிடையாது. சிங்கள மக்களின் அதிகாரத்தை தனது கைகளில் தக்க வைத்துக் கொள்ள மகிந்த மாத்தையா இந்த யுத்தத்தை நடாத்துகிறார். தமிழ் மக்களின் அதிகாரத்தை தான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தம்பி பிரபா இந்தப் போராட்டத்தை தொடர்கிறார். இன்றைய சூழலில் ஒருவருடைய இருப்புக்கு மற்றையவரின் இருத்தல் இன்றியமையாதது. மகிந்தா பாதி பிரபா பாதி சேர்ந்து செய்த கலவை தான் இந்த வன்னி அவலம்.

இலங்கை அரசாங்கம் ஒரு பெளத்த பேரினவாத அரசாங்கம். அதன் இருத்தலுக்கு இனவாதம் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது. அதனை கடந்த அறுபது ஆண்டுகளாகப் பார்க்கலாம். பெளத்த பேரினவாதத்தின் ஒரு பக்க விளைவு தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதனைத் தொடர்ந்து புலியும். இலங்கை உட்பட சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்க இன்று இலங்கை இனவாதத்தின் உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறது. இலங்கை மக்களின் நாளாந்த வாழ்நிலைப் பிரச்சினைகள் இனவாதத்திற்குள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது. அதற்குள் மகிந்த மாத்தையாவும் தம்பி பிரபாவும் மட்டும் மூழ்கி அதிகார முத்தெடுக்க முயற்சிக்கிறார்கள்.

ஆகவே இலங்கையின் பேரினவாத அரசுக்கு எதிரான போரட்டத்தை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைமைத்துவத்தினால் இயலாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதன் அர்த்தம் ரிஎன்ஏ, ரியுஎல்எப், ஈபிடிபி ,ரிஎம்விபி என்பவற்றால் முடியும் என்பதல்ல. இவையெல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

ஒரு சிறிய தேக்கம் ஏற்பட்டாலும் காலப் போக்கில் மக்கள் புதிய சக்திகளை இனம்கண்டு அவர்களின் தலைமையில் அணி திரள வாய்ப்பு ஏற்படும். அது ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டமாகவும் அமையலாம். ஆகவே இன்று மிக அவசியமானது இந்த யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் அவலத்திற்குள் இருந்து மீள வேண்டும்.

100 சதுர கிலோ மீற்றருக்குள் புலிகள் முடக்கம்; படைகளால் புதுக்குடியிருப்பு சுற்றிவளைப்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவில் புலிகள் தற்போது 100 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதாக இராணு வப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவி த்தார்.

இராணுவத்தின் இரண்டு படையணிகளும், மூன்று படைப்பிரிவுகளும் புதுக்குடி யிருப்பை சுற்றிவளைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூன்றாம் படையணி புதுக்குடியிருப்பின் தெற்காகவும், நான்காம் படையணி தென்மேற்காகவும் முன்னேறிவரும் நிலையில், 53 ஆம் படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு நகருக்கு 800 மீற்றர் தொலைவை நெருங்கி விட்டதாகவும் பிரிகேடியிர் நாணயக்கார தெரிவித்தார்.

 புலிகளின் ஆயுத பலம் முற்றாக ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே வேளை, 20-22 சதுர கிலோ மீற்றர் பரப்பைக்கொண்ட பாதுகாப்பு வலயத்தை நோக்கி பெருந்தொகையான சிவிலியன்கள் வந்துள்ளதாகக் கூறிய பிரிகேடியர், இதுவரை 35,756 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் 3848 பேரும், பெப்ரவரி மாதத்தில் இதுவரை 31,908 பேரும் வருகை தந்துள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார்.

இவ்வாறு வருகை தந்தவர்களுள் 1117 நோயாளர்களும், 494 உதவியாளர்களுமாக 1611 பேர் 5 தடவைகளில் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்டதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.