2009

2009

பாதுகாப்பற்ற நிலைமைகளினால் பொதுமக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது – போல் கஸ்டல்லா

paul_castella.jpgவன்னி யுத்த சூன்ய பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் யுத்த சூன்ய பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் போல் கஸ்டல்லா தெரிவித்துள்ளார்

பிரித்தானியாவில் 168 மணித்தியால அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு

uk-pas.jpg
பிரித்தானியாவில்168 மணித்தியால பட்டினி போராட்டத்தை ஒரு மாணவர் உட்பட 6 தமிழ் மக்கள் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஆரம்பித்துள்ளனர்

ஜ.நா மூலம் வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பவேண்டும், வன்னி மக்களின் நிலையை அறிய ஜ.நா ஒரு செயற்குழு அமைக்கவேண்டும், மற்றும் உடனடி நிரந்தர சமாதானத்தை அமுல்படுத்தவேண்டும் ஆகிய மூன்று உடனடி தேவைகளை கோரிக்கைகளாக முன்வைத்து 168 மணித்தியால பட்டினி போராட்டத்தை ஒரு மாணவர் உட்பட 6 தமிழ் மக்கள் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆரம்பித்துள்ளனர்

மோதல் வலயங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு ஹிலாறி – மிலிபண்டும் மீண்டும் அழைப்பு

david-miliband-and-hillar.jpgஇலங்கையின் வடக்கே இடம்பெற்று வரும் மோதல்களை உடனடியாக நிறுத்தி மோதல் வலயங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாறி கிளிண்டனும், பிரிட்டன வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையில் மனிதாபிமான நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் நிறைய செய்ய வேண்டியிருப்பதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ஹிலாறி கிளிண்டன் அங்கு நடக்கின்ற மோதல்களில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவ முயற்சிக்க வேண்டியுள்ளது”எனத் தெரிவித்தார். அத்துடன் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு சகல இலங்கையர்க்கும் கிடைக்க வேண்டும். தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்க்கு அர்த்தமுள்ள அரசியல் வாழ்க்கை கிடைபதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் ஓராண்டு நினைவு.

miss-mageswari.jpgசட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலரும் ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

தமிழ் பேசும் சமூகத்திற்குள் சமூக சிந்தனையும் சுய ஆளுமையும் கொண்ட ஒரு சில பெண்களில் மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும் ஒருவர். தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற உந்துதலால் பொது வாழ்வுக்குள் காலடி வைத்தவர். மூன்று தசாப்த காலமாக மக்களின் துயர் தீர்க்கும் வாழ்வில் தம்மை அர்பணித்து வாழ்ந்தவர்.

இறந்தும் இறவாது வாழ்பவர் என்பதற்கு உதாரணமாக இன்று ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியமானது பாராளுமன்றத்தின் சட்ட அங்கீகாரத்தின் மூலம் உதயமாகியுள்ளது. மகேஸ்வரி வேலாயுதம் உயிருடன் இருந்தபோது ஆற்றிய பணிகளை மகேஸ்வரி அறக்கட்டளை நிதியம் தொடர்ந்தும் முழுமையாக மேற்கொள்ளும் என அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கிறின் ஓசோன் கப்பல் மீண்டும் முல்லைத்தீவு சென்றுள்ளது

ship.jpgபாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்களுடன் கிறீன் ஓசோன் கப்பல் இன்று (13.05.2009) புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றுள்ளதாக சென்சிலுவை சங்க ஊடகப் இணைப்பாளர் சரசிவிஜயரத்தன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கடற்பிராந்தியத்திற்குள் கப்பல் பிரவேசித்த போதும் அங்கு பொருட்களை இறக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாகவும் இது குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் நேற்றும் அந்த பகுதிக்கு சென்று பொருட்களை இறக்க முடியாது புல்மோட்டைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனுக்கும், பொட்டு அம்மானுக்கும் பகிரங்க பிடியாணை

Pirabakaran_V_2008புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுக்கும் உயர் நீதிமன்றம் இன்று பகிரங்க பிடியாணையை பிறப்பித்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பான விசாரணை இன்று நீதி மன்றத்தில் எடுக்கப்பட்டபோதே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்  தமது இல்லத்தில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாகவும் இந்த இருவருக்கும் இந்திய உயர் நீதிமன்றனத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வவுனியா முகாம்களுக்கு விஜயம்

manik-farm.jpgஇலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இன்று, காலை வவுனியா நலன்புரி முகாம்களுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இக்குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால தலைமைத்துவ பதவியை ஏற்கவுள்ள சுவீடன் பிரதிநிதி, அதன் ஆணைக்குழுவின் பிரதிநிதி மற்றும் செயலாளர், காரியாலய பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிக்பாம் நிவாரண கிராமங்களில் கூட்டுச் சமையலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

group_cooking.jpgவவுனியா மனிக்பாம் பகுதியில் உள்ள நிவாரண கிராமங்களில் குறிப்பாக இடம்பெயர்ந்தவர்கள் புதிதாககத் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூட்டு சமையலை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்களும் அரசாங்கமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மனிக்பாம் 4 ஆம் பிரிவிற்கு (ஸோன் 4) இடம்பெயர்ந்த மக்கள் அனுப்பி வைக்கப்பட்டதும், அங்கு உடனடியாக கூட்டுச் சமையலை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இடம்பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வன்முறையுடன் நடந்த தேர்தல்- 65% வாக்குப் பதிவு

tamilnadupolitics.jpg தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி ஆகியவற்றில் இன்று ஆங்காங்கே வன்முறைகளுக்கு இடையே வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் விரைவில் அறிவிக்கும்.

இன்றைய மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழகத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். மொத்தம் 4.16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தமிழகம் முழுவதும் 52,175 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 20,983 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டு, அதிலும் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் இந்த வாக்குச் சாவடிகளில் 7,115 பார்வையாளர்களை பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு15,424 கேமராக்கள் வைத்து வாக்குப் பதிவை படம் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையில் 117 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு இந்த வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை கண்காணிக்க நாட்டிலே முதன்முறையாக வெப் கேமராக்கள் யன்படுத்தப்பட்டன. இந்த வெப் கேமராக்கள் மூலம் ஓட்டுப் பதிவை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி திருத்த சட்டமூலம் வாபஸ்

ibatticaloa-sri-lanka-01.jpgகிழக்கு மாகாணசபையின் கடந்த மாதக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட உத்தேச உள்ளூராட்சித் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து அச்சட்டமூலத்தின் மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் கிழக்கு மாகாணசபை நேற்று செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது இடம்பெறவில்லை.

உத்தேச சட்டமூலத்தினை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்ததையடுத்து கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அறிவித்தார்.