வவுனியா மனிக்பாம் பகுதியில் உள்ள நிவாரண கிராமங்களில் குறிப்பாக இடம்பெயர்ந்தவர்கள் புதிதாககத் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூட்டு சமையலை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்களும் அரசாங்கமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மனிக்பாம் 4 ஆம் பிரிவிற்கு (ஸோன் 4) இடம்பெயர்ந்த மக்கள் அனுப்பி வைக்கப்பட்டதும், அங்கு உடனடியாக கூட்டுச் சமையலை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இடம்பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.