2009

2009

யுத்த வெற்றிகள் பிரச்சினைகளுக்கு தீர்வை தராது: கொபி அனான்

kofianna00.jpgமோதல்களால் இடம்பெயர்ந்தவர்களை துரிதமாக குடியமர்த்துவதன் மூலம் 25 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கொபி அனான் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.

உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள் – பா.ம.க. ராமதாஸ்

ramados1.jpgஇலங்கையில் தமிழனும், சிங்களவனும் சேர்ந்து வாழ முடியாது என்றும், இலங்கை பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வு இல்லை எ‌ன்று‌ம் பா.ம.க. நிறுவன‌ர் ராமதாஸ் கூ‌றினா‌ர்.
 
ஈழத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பேற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்ச, சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நே‌ற்று மாலை எழுச்சி பேரணி நடைபெற்றது.

சென்னையில் நட‌ந்த எழு‌ச்‌சி பேர‌ணி‌ முடி‌வி‌ல் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் பேசுகை‌யி‌ல், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரை யாரும் கொல்ல முடியாது. தமீழம் மலரும் வரையல்ல, அதனுடைய வளர்ச்சியை பார்த்து விட்டே அவர் இயற்கையான மரணத்தை தழுவுவார்.

இப்போது நம்முடைய கோரிக்கையெல்லாம் இந்திய அரசு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்பதல்ல. இனி, என்றுமே நாம் அதை கேட்கப்போவதில்லை. அதனால் எந்த நன்மையும் இல்லை என்று நமக்கு தெரியும். இனி சர்வதேச சமுதாயம், சர்வதேச நாடுகள், ஐ.நா மன்றம் இவைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தாய்த் தமிழகத்திற்கான நம்முடைய வேண்டுகோள் இருக்க வேண்டும். உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள். ஆக, இந்த போரின் மூலமாக நமக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி, உலகத்தமிழர்கள் எல்லாம் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள். அதே நேரத்திலே இங்கே தமிழீழத்தை தவிர, வேறு தீர்வு இல்லை என்பதை உலக மக்களுக்கு, உலக நாடுகளுக்கு சொல்லியாக வேண்டும். சிங்களவனும், தமிழனும் எந்த காலத்திலும் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான காரணத்தை நாங்கள் சொல்கிறோம். தமிழீழத்தை நோக்கித்தான் நம்முடைய பரப்புரை இருக்க வேண்டும். தமிமீழத்தை அடைவதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்” எ‌ன்று ராமதாஸ் பேசினார்.

மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு

pm-manmogan.jpg மன்மோகன் சிங் தலைமையில்  புதிய அமைச்சரவை இன்று மாலை 06.30 மணி அளவில் பதவி ஏற்றது.

சிதம்பரம், மம்தா பானர்ஜி, சரத் பவார், கமல்நாத், எஸ்.எம். கிருஷ்ணா, பிரணாப் முகர்ஜி, அந்தோனி, கபில் சிபல்,முரளி தியோரா, மொய்லி, பரத்வாஜ், சி.பி.ஜோஷி, ஷிண்டே, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, ஜெய்ப்பால் ரெட்டி, வயலார் ரவி, ஹண்டிக் .பி.கே., ஆகிய 19 பேரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ராஜீவ்காந்தி கௌரவ விருது

rajiv_gandhi_award2009.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு  தலைமைத்துவத்தை வழங்கிதனை கௌரவிக்கும்  வகையில் அகில இந்திய பயங்கரவாத எதிர்பு அமைப்பு இந்த விருதை வழங்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர்; எம்.எஸ் பிட்தா தெரிவித்ததாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சி.ஆர். ஜெயசிங்க அறிவித்துள்ளார்.

தமது அமைப்பின் தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்து இவ்விருதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ஜோன் ஹோம்ஸும் இன்று வருகிறார்

john-holmes.jpgஇலங்கைக்கு இன்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விடயங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கைக்கு இன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவுள்ள நிலையில் அவருடன் இவரும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜோன் ஹோம்ஸுடன் ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரிகள் 10 பேர் வரவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முகாம்களுக்கும் மோதல் நடைபெற்ற பகுதிக்கும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவரது தலைமை அதிகாரியான நம்பியார் நேற்று வியாழக்கிழமை வவுனியாவிலுள்ள முகாமுக்குச் சென்று பார்வையிட்டதுடன் மோதல் நடைபெற்ற பகுதியை விமானத்தில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜோன் ஹோம்ஸுடன் 10 ஐ.நா. அதிகாரிகள் வருகை தரவுள்ளதாகவும் இதில் ஐ.நா. அரசியல் தலைவர் லின் ஹஸ்டேயும் வரவுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் இன்று பதவியேற்றார்.

pm-manmogan.jpg இந்தியாவின் 18வது பிரதமராக மன்மோகன் சிங் இன்று மாலை பதவியேற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புரிமையும் செய்து வைத்தார்.

பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு தற்காலிக விசா வழங்க கோரிக்கை -அவுஸ்திரேலிய அரசிடம் எதிரணி வேண்டுகோள்

smoke_.jpgயுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்க வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களில் உள்ளனர். அவர்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக கவலைகொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசும் கூறியுள்ளது. ஆனால், தற்போது நடைமுறையிலுள்ள அகதிகளுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவுஸ்திரேலியாவில் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் ஏதாவது திட்டம் இருக்கின்றதா என்பது தொடர்பாக தெரிவிக்க இதுவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.

பால்கன், கிழக்கு திமோர் நெருக்கடிகளின் போது மேற்கொண்டிருந்தமை போன்று தமிழர்களை தற்காலிகமாக பாதுகாக்க அவுஸ்திரேலியா முன்வருவது தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிரணி குடிவரவுத்துறை பேச்சாளர் சர்மன் ஸ்ரோன் “த வேல்ட் டுடே’ க்கு கூறியுள்ளார்.

நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோது 1999 மேயில் பால்கன் யுத்த நெருக்கடி தோன்றிய சமயம், 4 ஆயிரம் கொசோவோக்களை பாதுகாப்பு புகலிட விசாக்களை வழங்கி அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வந்தோம். இந்த அரசுக்கு பல தேர்வுகள் உள்ளன. அவை குறித்து அவர்கள் பேசுவதோ சிந்திப்பதோ இல்லை. இவை தொடர்பான ஏற்பாடுகள் அவுஸ்திரேலியாவின் சட்டத்தில் உள்ளன என்றும் அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

1958 ஆம் ஆண்டு குடிவரவு சட்டத்தில் “பாதுகாப்பு புகலிட விசா’ ஏற்பாடு இருப்பதாக அவர் தெரிவித்தார். சொந்த நாட்டில் பிரச்சினை தீரும்வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு இந்த விசா வழிசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏனைய நாடுகளிலிருந்து வந்த குடியேற்றவாசிகளை போன்றே தமிழர்களும் அவுஸ்திரேலிய சமூகத்துடன் ஒருங்கிணைந்துவிட்டனர். உலகிலுள்ள மிகவும் வெற்றிகரமான பல கலாசார மக்கள் வாழும் நாடுகளில் எமது நாடும் ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தி சமஷ்டி தீர்வுக்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும் -தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை

menon-narayan.jpg வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களை துரிதகதியில் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றி இயல்பு நிலையை உருவாக்கவேண்டும், இனநெருக்கடித் தீர்வுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும், இராணுவ முற்றுகையிலிருந்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களை மீட்க வேண்டும், இதற்கான நடவடிக்கைகளை சமாந்தரமாக முன்னெடுக்க இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருடன் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை வலியுறுத்திக் கூறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

விரைவில் பொதுத் தேர்தல்?

parliament.jpgபாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவித்தலை விரைவில் எதிர்பார்க்க முடியும் என்று ஜனாதிபதியுடன் நெருங்கிய வட்டாரங்களை மேற்கொள் காட்டி இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலில் வெற்றி கொண்டதையடுத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை விடுப்பதற்கு இது உகந்த தருணம் என ஆளும் தரப்பில் கருதப்படுகிறது. தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 2010 ஏப்ரலில் முடிவடைகிறது.

மூதூர் மக்கள் கட்டைபறிச்சானில் மீள்குடியேற்றம்

images-house.jpg திருகோணமலை மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயாந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள மக்கள் கட்டைபறிச்சான் தில்லங்கேணி பகுதியில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக கிழக்குமாகாண மீள் குடியேற்ற இணைப்பாளர் இ. செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசஅதிபர் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 200 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்கென கட்டைபறிச்சான் பகுதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் பணியினை திருகோணமலை மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்