பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவித்தலை விரைவில் எதிர்பார்க்க முடியும் என்று ஜனாதிபதியுடன் நெருங்கிய வட்டாரங்களை மேற்கொள் காட்டி இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலில் வெற்றி கொண்டதையடுத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை விடுப்பதற்கு இது உகந்த தருணம் என ஆளும் தரப்பில் கருதப்படுகிறது. தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 2010 ஏப்ரலில் முடிவடைகிறது.