இலங்கைக்கு இன்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விடயங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கைக்கு இன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவுள்ள நிலையில் அவருடன் இவரும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜோன் ஹோம்ஸுடன் ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரிகள் 10 பேர் வரவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முகாம்களுக்கும் மோதல் நடைபெற்ற பகுதிக்கும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவரது தலைமை அதிகாரியான நம்பியார் நேற்று வியாழக்கிழமை வவுனியாவிலுள்ள முகாமுக்குச் சென்று பார்வையிட்டதுடன் மோதல் நடைபெற்ற பகுதியை விமானத்தில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜோன் ஹோம்ஸுடன் 10 ஐ.நா. அதிகாரிகள் வருகை தரவுள்ளதாகவும் இதில் ஐ.நா. அரசியல் தலைவர் லின் ஹஸ்டேயும் வரவுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.