2009

2009

டெங்கு பரவுவதைத் தடுக்க 20 வைத்தியர்களுக்கு விசேட பயிற்சி

mosquito_preventionss.jpgஇலங்கையில் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக 20 வைத்தியர்களுக்கு விசேட பயிற்சியொன்றை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பயிற்சிகள் முடிந்த பின்னர் இந்த வைத்தியர்களைப் பயன்படுத்தி மேலும் ஒரு செயற்குழுவுக்கு பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றம் செய்தல், இரவில் இராசயனப் பரிசோதனை மேற்கொள்ளல், அவசரத் தேவைகளின்போது இரசாயன பரிசோதனை நிபுனர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளுதல், நோயின் தன்மைகளை அறிந்துகொள்ளுதல் போன்ற விடயங்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 5201 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 70 பேர் மரணித்துள்ளனர் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளர்

பாதாள உலகக் குழுவை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

Gun 01பாதாள உலகக் குழுவை சேர்ந்த ஜே.எஸ். குமார என்பவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை கொழும்பு கல்கிசையில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இவர் தன்னிடம் உள்ள ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டுவதாகக் கூறி பொலிஸாரை அங்கு கூட்டிச் சென்றார்.

அச்சமயம் அவர் பொலிஸாரை நோக்கி கைக் குண்டை வீச முயன்றதாகவும் பொலிஸார் பதிலுக்கு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார்.

முகாமிலிருந்த கனகரட்ணம் எம்.பி. விசாரணைக்காக கொழும்பில்

kanagaratnam.jpgவவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.கனகரட்ணம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை விசாரணைக்காக பொலிஸாரால் கொழும்புக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு தங்கியிருந்த இவர் வன்னியிலிருந்து கடந்த வாரம் வவுனியா வந்தார்.

செட்டிகுளம் முகாமில் தங்கியிருந்த இவரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு விசாரணைக்கெனக் கூறி கொழும்புக்கு கூட்டிச் சென்றுள்ளது.இவரது குடும்பத்தவர்கள் தற்போது செட்டிகுளம் முகாமில் தங்கியுள்ளனர்.

கம்பஹா எம்.பி.க்கு பிணை அனுமதி

12 வயது சிறுவனைக் கடத்திச் சென்றது, ஒருவரை துப்பாக்கியால் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரணகுணவர்த்தனவையும் மற்றும் நால்வரையும் பிணையில் செல்ல கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் அனுமதி வழங்கினார்.  இவர்களை தலா 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

சந்தேக நபர்களின் பிணை அனுமதி விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிபதி இதற்கு அனுமதி வழங்கினார். அரச தரப்புச் சட்டத்தரணி இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை

பத்மநாதனின் பூதவுடல் தகனக் கிரியைகள் திங்கட்கிழமை நடைபெறும்

kpatmanathan.jpgகடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான கனகசபை பத்மநாதனின் பூதவுடல் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது.  நாளை ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர் அங்கிருந்து தம்பிலுவில் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும்.  அன்றைய தினம் மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

லொறி-பஸ் மோதி விபத்து : அறுவர் பலி; 15 பேர் காயம்

தங்காலைப் பகுதியில் நேற்றிரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பயணிகள் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன்,15 பேர் வரை காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இன்று பொரளை மலர்ச்சாலையில் பத்மநாதனின் பூதவுடல்

kpatmanathan.jpgகாலஞ் சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் தற்போது பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான அன்னாரின் பூதவுடல் நேற்றிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது.

இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பூதவுடல் பின்னர் அங்கிருந்து நேரடியாக அவரது சொந்தக் கிராமமான காரைதீவுக்கு எடுத்துச் செல்லப்படும்.

பிரபாகரன் உள்ளிட்ட 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் முல்லைத்தீவில் படையினரால் அடக்கம் : பிரிகேடியர் தகவல்

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட மேலும் 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது : வன்னியில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வந்த மோதல்கள் நிறைவுக்கு வந்ததையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வியக்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புலி உறுப்பினர்களின் சடலங்கள் படையினரால் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களுள் பல பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் அவற்றை உடனடியாக அப்பகுதியிலேயே அடக்கம் செய்ய வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டது. இவ்வாறாக பிரபாகரன் உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களது சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில் பிரபாகரனின் சடலம் கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டதுடன் அவரது மகன் சாள்ஸ் அன்டனி, கடற்புலிகளின் தளபதி சூசை, புலனாய்வுப் பிரிவின் தளபதி பொட்டு அம்மான், அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரினதும் சடலங்கள் இவ்வாறாக அடக்கம் செய்யப்பட்டன.

பிரபாகரன் குடும்பம் – இதுவரையில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை – உதய நாணயக்கார

LTTE_Leader_Family விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் ஏனைய குடும்ப உறுப்பினர்களான மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் சிறிய மகனான பாலச்சந்திரன் ஆகியோர் தொடர்பில் படைத்தரப்புக்கு இதுவரையில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தும் இதுவரையில் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 

அதேவேளை அவர்கள் மூவரது சடலங்களும் படையினரால் மீட்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கையில்

bankeemoon.jpgஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான சிறப்பு விமானம் மூலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார்.