டெங்கு பரவுவதைத் தடுக்க 20 வைத்தியர்களுக்கு விசேட பயிற்சி

mosquito_preventionss.jpgஇலங்கையில் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக 20 வைத்தியர்களுக்கு விசேட பயிற்சியொன்றை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பயிற்சிகள் முடிந்த பின்னர் இந்த வைத்தியர்களைப் பயன்படுத்தி மேலும் ஒரு செயற்குழுவுக்கு பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றம் செய்தல், இரவில் இராசயனப் பரிசோதனை மேற்கொள்ளல், அவசரத் தேவைகளின்போது இரசாயன பரிசோதனை நிபுனர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளுதல், நோயின் தன்மைகளை அறிந்துகொள்ளுதல் போன்ற விடயங்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 5201 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 70 பேர் மரணித்துள்ளனர் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *