நாட்டில் அர்ப்பணிப்புடன் பாடுபட்ட படைவீரர்களுக்கான தேசிய வைபவம் இன்று கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது. மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரோக்களின் ஆலேசனைக்கு ஏற்ப கண்டி தலதா மாளிகை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் சபையின் தலைவர் எயார் சீப் மார்ஷல் டொனல்ட் பெரேரா,இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரண்ணாகொட, விமானப்படைத் தளபதி எயார் சீப் மாhர்ஷல் ரொஷான் குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன, மக்கள் பாதுகாப்பு படைப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத் வீரசேகர மற்றும்; தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல ஆகியோரும் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த வைபவத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ராஜாங்க பெரஹரா ஒன்றையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.