பத்மநாதனின் பூதவுடலுக்கு கனகரட்னம் அஞ்சலி

kpatmanathan.jpgகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் இன்று முற்பகல் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவென பொரளை ஜயரட்ன மலர்ச்சாலைக்கு சிவில் உடையினர் வாகனமொன்றில் இவரை அழைத்து வந்திருந்தனர் எனவும் அஞ்சலி செலுத்திய பின்னர் சுமார் 15 நிமிடங்கள் வரை அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *