2009

2009

இலங்கைப் பிரச்சினையின் மூல காரணத்துக்கு தீர்வு காண வேண்டும்: இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர்

krishna.jpgஇந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில் போர் முடிவுற்றிருக்கும் நிலையில், பிரச்சினைக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டிய தருணம் வந்துவிட்டதாக இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எஸ்.எம். கிருஷ்ணா, அண்டை நாடுகளுடனான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளைப் பலப்படுத்த முன்னுரிமை அளிக்கப் போவதாகவும், விரைவில் அந்த நாடுகளுக்குச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.  இலங்கைப் பிரச்சினை தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை மக்கள் மற்றும் அந்நாட்டு அரசுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என்றும், இடம் பெயர்ந்த மக்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்கவும், அவர்களது வாழ்க்கையில் விரைவில் சகஜ நிலையை ஏற்படுத்தவும் இந்தியா முயற்சிக்கும் என்றும் தெரிவி்ததார்.

“விஷ்வ கீர்த்தி ஸ்ரீ திரீசிங்கள தீஸ்வர” – ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாட்டின் அதி உயர் விருது

pr-kandy-dala.jpg“விஷ்வ கீர்த்தி ஸ்ரீதிரீசிங்கள தீஷ்வர” என்ற அதி உயர்விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வழங்கப்பட்டது.

தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து எமது இலங்கை ஒரே நாடு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் துணையுடன் வெற்றியை ஈட்டித் தந்தமைக்காக கண்டி அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் இந்த விருதை வழங்கின.

இதே போன்று நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதிக்கு பக்கபலமாக நின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், சிவில் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பானவர் போன் றோருக்கு நன்றி தெரிவிக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன.

தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலஸ்கதேவ பண்டார அங்கு வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதிக்குரிய கெளரவ பட்டத்தை ஆனமடுவாவே தம்மசித்தி தேரர் சபா மண்டபத்தில் வாசித்தார். பின்னர் ஜனாதிபதிக்குரிய பாராட்டுப் பத்திரமாகிய “விஷ்வ கீர்த்தி ஸ்ரீ திரீ சிங்களராதீஸ்வர” என்ற பட்டம் வெள்ளிப் பேழையினுள் இடப்பட்டு இரு மகாநாயக்கர்களினாலும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் முப்படைகளின் தளபதிகள் உட்பட பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இதே போன்ற பட்டங்களை மகா நாயக்கர்கள் வழங்கினர். தியவதன நிலமே இவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி கெளரவித்தார்

இடம்பெயர்ந்த மக்களை 6 மாதத்தினுள் மீள்குடியேற்றும் நடவடிக்கை துரிதம்

basil.jpgவன்னியில் இடம்பெயர்ந்த இரண்டாரை இலட்சம் மக்களையும் 180 நாட்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

சுனாமியின் பின்னர் பெற்ற அனுவத்தையும் ஆற்றலையும் கொண்டு இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்ட போது இதே அளவிலான மக்களை நாம் மீள்குடியேற்றி§ னாம். அதே போல மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 40 ஆயிரம் முஸ்லிம்களை 44 நாட்களில் மீள்குடியேற்றினோம். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரையில் 60 ஆயிரம் மக்களை மூன்று மாதத்தில் மீள்குடியேற்றினோம். இந்த அனுபவங்களைக் கொண்டு வடக்கு மக்களை மீளக்குடியேற்ற துரித நடவடிக்கை எடுப்போம் எனவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். ஐ. ஏ. என். எஸ். செய்திச் சேவைக்கு பேட்டியளித்த அவர், ‘கிழக்கிலே மக்கள் இடம்பெயர்ந்த போது அந்தப் பகுதியில் சரியான பஸ் சேவை இருக்கவில்லை; சிறந்த வீதிகள் இருக்கவில்லை; மின்சாரம் இருக்கவில்லை. பாடசாலைகள் இயங்கவில்லை. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்பும் போது சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு செயற்பாடுகளில் எங்களுக்கு உலகில் நன்மதிப்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

வடக்கில் மீள்குடியேற்றத்தில் பெரும் சவாலாக இருப்பது கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் மிகவும் பரந்த பிரதேசமாக இருக்கும். வடக்கில் கண்ணிகளை அகற்றுவதில் இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். மக்கள் மீள்குடியேறியதும், அடுத்த நாளே வயல்களுக்கும் விவசாயக் காணிகளுக்கும் சென்று தங்களது தினப்பணிகளில் ஈடுபட முடியுமெனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சகல மக்களும் சம உரிமையுடன் வாழ ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பான் கீ மூன் பாராட்டு

bankeemoon.jpgநாட்டின் சகல மக்களும் மத, இன வேறுபாடின்றி சம உரிமையுடன் வாழுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுக்கின்ற நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் பாராட்டினார்.

கண்டியில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசிய ஐ. நா செயலாளர் நாயகம் பான்கீ மூன், நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் இது இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த பான்கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வரவேற்கக் கூடியதாக இருந்தது. சகல மக்களுக்கும் சம உரிமைகளுடன் ஐக்கிய இலங்கைக்குள் வாழும்நிலை உருவாகியிருக்கிறது. பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துக்களைப் பரிமாறியதாகக் கூறினார்.

புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர் புலிகள் அப்பாவி மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி யுத்தம் புரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். நிவாரணக் கிராமங்களின் நலன்புரி நடவடிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், அங்குள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இடம்பெயர்ந்திருப்பவர்களில் 80 வீதமானோர் இந்த ஆண்டு முடிவுக்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவரென அரசாங்கம் உறுதியளித்துள்ளதெனவும் ஐ. நா. செயலர் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் கண்ணிவெடிகளும் ஒரு தடையாக இருக்கிறது. கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும் முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும் எனவும் அவர்கேட்டுக் கொண்டார்.

இந்த நாட்டில் வாழும் சகல மக்களும்அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழவதற்கேற்ற அடிப்படைத் திட்டமொன்றை அரசாங்கம் வழங்குமென தான் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகள் மேலும் துரிதமாக்கப்பட வேண்டும் என்றார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஹித போகொல்லாகம,

பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபட்ட படை வீரர்கள் எத்தகைய மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்தார். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சகல முனைப்புகளிலும் அரசு உறுதியுடன் செயற்படுகிறது. இதற்காக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஒத்துழைக்க முன்வந்திருக்கின்றன எனவும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

தமிழ் பேசும் மருத்துவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

da-de.gif
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க தமிழ் பேசும் மருத்துவர்களை முன்வந்து உதவுமாறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து நலன்புரி நிலையங்களுக்குமான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சுழற்சி முறையில் மருத்துவர்கள் குழு பணியாற்றச் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பணியில் இணைந்து கொள்ளும் மருத்துவர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தையும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஊடாக ஏற்பாடு செய்து தருவதற்கும் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி பேசக் கூடிய மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்படும் இம்முயற்சிக்கு மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதுடன் எமது மக்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் உணவு, உடை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை அவர்களின் மருத்துவத் தேவைகளைப் பொறுத்த வரையில் அதற்கு விசேட ஏற்பாடுகள் அவசியம் என்பதை தான் புரிந்து கொண்டுள்ளதாகவும் எனவே இம்மாபெரும் மனித நேயப் பணியில் அனைவரும் உணர்வோடும் அர்ப்பணிப்போடும் பணியாற்ற இணைந்து கொள்ளுமாறு தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளிடம் மீட்ட ஆயுதங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்

விடுதலைப் புலிகள் வசமிருந்து கைப்பற்றப்பட்ட பாரிய ஆயுதங்கள் எங்கிருந்து. எவ்வாறு அங்கு சென்றன என்பது குறித்து விசாரித்தறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பாராளுமன்ற மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இராணுவ வெற்றி பெற்ற படையினரை கௌரவிக்கும் முகமான தேசிய நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

“பயங்கரவாதிகளிடமிருந்து படையினர் பெருந்தொகை ஆயுதங்களை மீட்டுள்ளனர். படையினர் வசம் இல்லாத பாரிய ஆயுதங்கள் கூட அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் எப்படி, எங்கிருந்து வந்தன, யாரால் வழங்கப்பட்டவை என்பதே இங்கு மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. எனவே, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து இது தொடர்பாக விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென நான் யோசனை செய்கிறேன்’ என்று பிரதமர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

நல்லதோர் சமூகத்தைக் கட்டியெழுப்ப சகலரும் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் – தலதா மாளிகை நிகழ்வில் ஜனாதிபதி

pr-kandy-dala.jpgநாட்டில் நல்லதோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.

இரண்டாகப் பிரியும் நிலையில் இருந்த இந்த தாய்நாட்டை ஒரே நாடாக பாதுகாப்புப் படை வீரர்களின் அரும்பெரும் தியாகங்களுடன் மாற்றி அமைத்தோம். இந்நிலையில் இந்த நாட்டை இரண்டாகப் பிரிக்க இடமளிக்க மாட்டேன் என்பதை இந்தப் புனித பூமியாகிய தலதா மாளிகை மண்ணில் இருந்து சத்தியம் செய்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார். கண்டி வரலாற்று சிறப்பு மிக்க ‘மகுல் மடுவ’ எனப்படும் கல்யாண மண்டபத்தில் நேற்று அவர் இதனை தெரிவித்தார்.

புலிகளின் தீவிரவாத பிடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரைப் பாராட்டி கெளரவிக்கும் பொருட்டு மல்வத்தை, அஸ்கிரிய ஆகிய பெளத்தபீடங்கள் சார்பில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசிய பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர்கள், ஆளுநர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மல்வத்தை பெளத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல சித்தார்த்தர், அஸ்கிரிய பீடாதிபதி உடுகம ஸ்ரீபுத்தரகித்த தேரர் ஆகியோர் அடங்கிய இணைத் தலைமையின் கீழ் இந்த வைபவம் இடம்பெற்றது.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது, இந்த வரலாற்று மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வுகள் எமக்குப் புதிதல்ல. பிளவுபட இருந்த இந்த தாய் நாட்டை மீட்டெடுக்கப் பாடுபட்டோரை பெளத்த பீடங்கள் பாராட்ட எடுத்த முயற்சிகள் குறித்து நாம் பெருமைப்படுகின்றோம். இந்த நாட்டை ஐக்கியப்படுத்த எம்மோடு படைத் தளபதிகள், படை வீரர்கள் எல்லோருமே அருமை பெருமையாக செயல்பட்டிருக்கின்றனர்.

நான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மல்வத்தை பெளத்த பீடம் என்னைப் பாராட்டியிருப்பதை இங்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன். இந்த நாட்டுக்கு எதிர்காலம் உண்டு என்பதை பெளத்த குருமார்கள் என்னிடம் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தனர். அவர்களின் நல்லாசீர்வாதமும் ஆலோசனைகளும் எனக்கு துணையாக இருந்தன. அவற்றின் பலனும் எமக்குக் கிடைத்து விட்டது.

இவ்வேளையில், இந்நாட்டு மக்களின் மரியாதையையும் பாராட்டையும் உங்கள் முன்னிலையில் வைக்க விரும்புகிறேன். இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்தும் மீட்டெடுக்க எம்மிடம் மிகுந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாகப் பிளவுபட இருந்த நாட்டை ஒரே நாடாக மீண்டும் கட்டியெழுப்பி விட்டோம். மீண்டும் இந்த நாட்டை பிளவுபட இடமளியேன் என்பதையும் இந்த புனித பூமியில் சத்தியம்செய்து உறுதியளிக்கின்றேன்.

இப்பொழுது எமது கவனம் எல்லாம் நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்வதாகும். நல்லதோர் சமூகத்தை கட்டியெழுப்பவும், பெளத்த பண்புகளுடன் முழு நாட்டையும் முன்னெடுத்துச் செல்லவும் நீங்கள் எல்லோரும் என்னோடு இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

நீங்கள் எம்மை கெளரவித்தமையானது எமது பணிகளை செம்மையாகத் தொடரவும், நாட்டின் கெளரவத்தைப் பேணவும் எனக்குத் துணையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்தியமைக்காக ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் – தென்மாகாண முதலமைச்சர்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் சமாதானத்தை முழுமையாக நிலை நிறுத்தியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நோபல் பரிசு பெற அருகதையுள்ளவர். எனவே அவரது செயற்பாட்டில் சமாதானத்தை நிரந்தரமாக நிலை நிறுத்தியமைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும். இதற்காக முழு உலக நாடுகளும் அழுத்தங்களை வழங்க வேண்டும் என தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா காலியில் வைத்துக் கூறினார்.

கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தென் மாகாண சபையினால் காலியில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் ஜனாதிபதிக்கும் முப்படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

நாடு சுதந்திரமடைந்து 61 வருடங்களாகின்றன. எனினும் இதுகாலவரை இனங்களிடையே உண்மையான சமாதானம் ஏற்படவில்லை. சமாதானமாக மக்கள் வாழ்கின்றார்கள் எனக் கூறிய போதும் ஒரு இனம் இன்னொரு இனத்தை சந்தேகங்களுடனேயே நோக்கினர். ஏதாவது ஒரு தீய சக்தி நாட்டையும் இனங்களையும் குழப்பி தவறான வழிநடத்தல்களிலேயே ஈடுபட்டனர். இதற்குக் காரணம் அரசியல் பேராசையேயாகும்.

அதேநேரம் பிரிவினைவாதிகளும் தோன்றி நாட்டை கூறுபோட முனைந்தனர். அதற்காக எந்தப் பயங்கரவாதங்களையும் மேற்கொள்ள அவர்கள் பின் நிற்கவில்லை. உலகமே எதிர்பாராத விதத்தில் இந்த யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த கடந்த மூன்றரை வருட காலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரவு பகலாகப் பாடுபட்டார். படையினரும் அவருக்குத் துணையாக நின்றனர்.

இவ்வாறான வெற்றிகளுக்கு நாட்டின் தலைவருக்கு அரசியல் சாணக்கியம் இருக்க வேண்டும். எமது ஜனாதிபதிக்கு அது இருந்ததாலேயே அவர் வெற்றி பெற்று சமாதானத்தை நிலை நாட்டியுள்ளார். அவரது கரிசனை மிக்க உரை நாட்டு மக்களை மேலும் கவர்ந்து விட்டது. இந்த நாட்டில் தேசப்பற்றுள்ள மக்களும் அவ்வாறில்லாத மக்களுமாக இரு வகையான மக்களே இருக்கின்றனர். சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற வார்த்தைகள் என்றோ அகராதியிலிருந்து எடுத்தெறியப்பட்டு விட்டது. இந்த வார்த்தைகளிலிருந்து அவரது பெருந்தன்மை எடுத்துக் காட்டப்படுகின்றது. அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது அவசியமாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

president-with-ban.jpgஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்த போது பிடிக்கப்பட்ட படம்.

தமிழ் பாடசாலைகளுக்கு வேற்று மொழியில் சுற்று நிருபங்கள் அனுப்பப்படுவதால் சிரமம்

கல்வி அமைச்சு மற்றும் சில மாகாணக் கல்வித் திணைக்களங்கள், வலயக் கல்விக் காரியங்களிலிருந்து தமிழ்ப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சுற்று நிருபங்கள் மற்றும் கடிதங்கள் தனிச் சிங்களமொழிமூலம் மட்டுமே அனுப்பிவைக்கப்படுகின்றன. இதனால், மொழி புரியாத அதிபர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, பாடசாலையின் விபரம் மற்றும் கடமையிலுள்ள ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள் ஏனைய தரவுகள் தொடர்பாக கேட்டு அனுப்பப்படும் படிவங்களும் சிங்கள மொழியில் காணப்படுவதுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் படிவங்களைப் பூர்த்திசெய்து அனுப்பி வைக்கப்படுகின்ற போதிலும் எவ்வித பயனும் கிடைப்பதில்லையென சில அதிபர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.  இதேவேளை, கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைப் பிரிவினால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களும் மற்றும் விபரங்களைக் கேட்டு அனுப்பப்படும் படிவங்களும் ஆங்கிலமொழியிலேயே அனுப்பப்படுகின்றன.

கடந்த 16 ஆம் திகதி பெருந்தோட்டப் பாடசாலைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு இரத்தினபுரி, பரக்கடுவ மெனேரிப்பிட்டிய கல்வி வள நிலையத்தில் நடைபெற்ற பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களுக்கான முகாமைத்துவ செயலமர்வு பற்றி அனுப்பப்பட்டிருந்த கடிதம் கூட ஆங்கில மொழியிலேயே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில வலயக் காரியாலயங்களில் பாடசாலை மாணவர்கள் பாடசாலையைவிட்டு விலகும் போது வழங்கப்படும் விடுகைப் பத்திரம் கூட தனிச்சிங்கள மொழியிலேயே வழங்கப்படுகின்றது.

எனவே, தமிழ்ப் பாடசாலைகளில் கடமைபுரியும் அதிபர்கள் தம் கடமைகளை இலகுவாக மேற்கொள்ள தமிழ்மொழி மூலமே கடிதங்களும் சுற்றுநிருபமும் அனுப்பி வைக்கப்படல் வேண்டுமென அதிபர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.