2009

2009

அமைச்சர் டக்ளஸ் மன்னார் தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினை குறித்து ஆராய்வு

011109dag.jpgசமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தொண்டர் ஆசிரியர்களுடைய பிரச்சினை குறித்து ஆராய்ந்தார்.

இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து கல்வி அமைச்சருடனான சந்திப்பின் போது வலியுறுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. சமாதான சூழலில் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு நேற்று அமைச்சர் அதிகாரிகளுடன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 7 பாடசாலைகளுககு சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த கணனி இயந்திரங்கள், தளபாடங்கள், மற்றும் அலுமாரிகள் ஆகிய பொருட்களையும் அமைச்சர் வழங்கினார். மன்னார் மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இரு பரீட்சை நிலையங்கள்

sri-lankan-students.jpgமீளக் குடியமர்த்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள க. பொ. த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கென இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னதாக இடம் பெயர்ந்துள்ள மற்றும் மீளக் குடியமர்த்தப் பட்ட பகுதிகளிலுள்ள க. பொ. த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க பணிப்புரை விடுத்தார்.

நடைபெறவுள்ள க. பொ. த. சாதாரண தர பரீட்சை தொடர்பாகவும் இடம் பெயர்ந்த மற்றும் நிவாரணக் கிராமங்களி லுள்ள மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பரீட்சை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போதே ஆணையாளர் அநுர எதிரிசிங்க மேற்கண்ட பணிப்புரையை விடுத்தார்.

இனங்களுக்கிடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இன்றைய தேவை – பிரதமர்

061109pm.jpgஉலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் வருடந்தோறும் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். அவர்களில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் இல்லை.

அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். ஒத்துழைப்பும் ஒற்றுமையுமே அதன் அர்த்தம் என்று பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :-

இன்று எமக்கு தேவையாக இருப்பது இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பும் ஒன்றுமையுமேயாகும். எமக்கிடையில் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் இல்லாமற் போனதன் விளைவாக நாம் வருடக்கணக்கில் வருந்த வேண்டியிருந்தது. சமாதானம் மகிழ்ச்சிக்கு பதிலாக சந்தேகம் வேறூன்றியதால் தான் சமாதான தேசமாகிய இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்கியது- அதன்காரணமாக நாட்டிலுள்ள இளைஞர்கள் பலரின் பெறுமதியான உயிர்கள் எமக்கு இல்லாமற் போயின. அந்த நிலையை மாற்றி நாட்டில் சமாதானம் எற்படுத்த இப்போது எம்மால் முடிந்துள்ளது.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் ஏற்பட்டுள்ள இலங்கையில் இருந்து முதல்முறையாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கும், உலகளாவிய ரீதியில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கும் எமது பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று பிரதமரின் வாழ்த்துச் செய்தி கூறுகிறது.

சவூதி அரேபியாவில் கடும் மழை, வெள்ளம் 77 பேர் பலி; பலரைக் காணவில்லை

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.கடந்த வருடங்களில் ஏற்படாதளவு பாரிய மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஹஜ் யாத்திரைக்காக வருகை தந்திருந்த மில்லியன் கணக்கான யாத்திரிகர்களில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென சவூதி உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மக்கா நகரில் இடம்பெறும் முஸ்லிம்களின் வருடாந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்பாரிய மழை வீழ்ச்சி இடையூறு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரசாங்கத்தினால் நடத்தப்படும் பத்திரிகை முகவர் அமைப்பின் தகவலின்படி ஜித்தா ராபி மற்றும் மக்கா ஆகிய நகரங்களிலேயே வெள்ளத்தால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த உயிரிழப்புகள் வெள்ளத்தினாலும் வீடுகள் இடிந்து வீழ்ந்தமையாலும் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் வெள்ளப் பெருக்கினால் பெருந்தொகையான மக்கள் கார்கள் மற்றும் பஸ்களினுள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, சவூதி மற்றும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் குடியிருப்புப் பகுதி என்பவற்றில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக ஜித்தாவின் பொதுப் பாதுகாப்பு தலைமை அதிகாரி அப்துல்லா அல்அம்ரீ தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் நகரைச் சூழவுள்ள குடிசைப் பகுதிகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரையினை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்தும் 3 மில்லியன் மக்கள் மக்காவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் தமது பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற இறைவனை வழிபட மலையேறும் போது சனநெரிசல் ஏற்படுவதுண்டு. இந்நிலையில், மழை காலம் என்பதனால் யாத்திரிகர்களை கவனமாக செயற்படுமாறு சவூதி அரசு எச்சரித்துள்ளது. கடந்த காலங்களில் யாத்திரையின் போது ஏற்படும் நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.ஹஜ் யாத்திரைக் காலத்தில் மழை வீழ்ச்சி ஏற்படுவது வழமை என்ற போதிலும் இம்முறை வழமைக்கு மாறாக கடும் மழை ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவையின் நிருபர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத நிலையில் ஐ.தே.க.- லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

000lakshman_yapa_abeywardena.jpgஇலங்கை யின் வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடியாத நிலை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சரும் தேசிய அபிவிருத்தி தொடர்பான பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்ன நேற்றுத் தெரிவித்தார்.

தமது வேட்பாளரை களமிறக்க முடியாமல் போன ஐ. தே. கவும், ஜே. வி.யும் சேர்ந்து உறுப்பினர்களே இல்லாத 14 கட்சிகளுடன் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யுத்தத்தை வெற்றி கொண்டு, பாரிய அபிவிருத்தி பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டி போட முடியாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாத்தறை மாவட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது செயலமர்வின் அங்குராப்பணம் வைபவம் கம்புருகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல, தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் ஆரிய ரூபசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த செயலமர்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த நான்கு ஆண்டு காலத்திற்குள் அபிவிருத்தி பணிகளுக்காக அரசாங்கம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாவை செலவு செய்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், வீதி, நீர்ப்பாசனம், மின்சாரம், கல்வி, உட்பட சகல துறைகளிலும் பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிராம அபிவிருத்திக்காக சேவையாற்றும் உறுப்பினர்களை கெளரவிக்கும் வகையில் அவர்கள் ஆற்றிய சேவைகள் அடங்கிய புத்தகம் ஒன்று தேசிய ஊடக மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இந்த புத்தகம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தான் செய்த சேவைகளை தேர்தல் காலங்களில் மக்களுக்கு தெரியபடுத்த உதவியாக அமையும் என்றார்.

2012 ஆண்டு நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும். சகல உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஜனாதிபதியின் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் மூலம் யுத்தத்தை வெற்றிக் கொண்டது போன்று அபிவிரு த்திகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் காலங்களில் அரச காணிகளை கைமாறத் தடை: ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேர்தல் காலங்களின் போது அரச காணிகளை சுவீகரித்தல், மற்றவருக்கு பொறுப்பளித்தல் போன்ற நடவடிக்கைகள் முற்றாக தடைசெய்யப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அரச காணிகளை சுவீகரிக்கவும், மற்றவர்களுக்கு வழங்கவும், பொறுப்பளிக்கவும் கூடிய நடவடிக்கைகள் மறைமுகமாக நடை பெற்று வருவதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை விடுத்து ள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாதானம், சுபீட்சம் நிறைந்த வாழ்க்கை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி ஹஜ் வாழ்த்து

mahinda0.jpgவடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ் லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஹஜ் யாத்திரையையும் தியாகத்தையும் நினைவூட்டும் இப்பெருநாள் உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய வருடாந்த நிகழ்வாகக் காணப்படுகின்றது.

இன்றைய நாளில் இலங்கையி லிருந்து சுமார் 500 பேர்கள் உட்பட சுமார் நான்கு மில்லியன் முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஒன்றுகூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் யாத்திரையானது பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியத்தோடும் சகோதரத்துவ உணர்வுடனும் தமது கிரியைகளை மேற்கொள்வதை அடையாளப்படுத்தி நிற்கின்றது. இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களுடனும் மானிட சகோதரத்துவ உணர்வுடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்கள் வரலாற்று நெடுகிலும் எமது நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தும் வருகின்றனர். மூன்று தசாப்தகால பயங்கரவாதம் முற்றுப் பெற்றுள்ள இச் சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களோடு அச்சமின்றி வாழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நாளில் முஸ்லிம்கள் தமது விசேட சமயக் கிரியைகளின் போது கேட்கின்ற பிரார்த்தனைகளில் எம் எல்லோருக்கும் கெளரவமான சமாதானம் கிடைப்பதற்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் மிக்க நன்நாளாக இருக்க எனது நல்வாழ்த்துக்கள்.

அடுத்த பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த பிரிட்டன் எதிர்ப்பு

அடுத்த பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதைத் தடுக்கும் முயற்சிகளை பிரிட்டன் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரை இலங்கை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வெகுமதி வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் 60 வருட நிறைவையொட்டி பிரிட்டனில் காலனித்துவ ஆட்சியிலிருந்த 53 நாடுகளின் தலைவர்கள் ட்ரினிடாட் அன்ட் டுபாகோவின் தலைநகரான போர்ட் ஒவ் ஸ்பெயினில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களில் ஒன்றாக 2011 இல் நடைபெறவுள்ள அடுத்த பொதுநலவாய உச்சி மாநாட்டை எங்கு நடத்துவது என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த மாநாட்டை நடத்துவதற்கு போட்டியிடும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்நிலையில், இவ்வாய்ப்பு இலங்கையைச் சென்றடைவதைத் தடுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணின் முயற்சி கலந்துரையாடலில் கடும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாய்ப்பைப் பெறுவதற்கு இலங்கை போட்டியிடுவது தொடர்பில் பிறவுண் உண்மையில் கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கும் டவுணிங் தெரு தகவல்களில்முறையான மனிதாபிமான வசதிகளின்றி பல்லாயிரக்கணக்கானோரை இடம்பெயர வைத்து அவலத்திற்குள்ளாக்கியதன் மூலம் பொதுமக்கள் மீது பாரிய தாக்கமொன்றை ஏற்படுத்திய இலங்கையின் நடவடிக்கைக்கு வெகுமதி வழங்கும் நிலைப்பாட்டை இலகுவானதாக எம்மால் எடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 2017ம் ஆண்டு வெளியேறி விடும்

white-house.jpgஆப்கா னிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2017ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 2001ம் ஆண்டு நியூயோர்க் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வைத்தது. இது தவிர நேட்டோ நாட்டு படைகளும் ஆப் கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது படை வீரர்களை படிப்படியாக திரும்ப பெற்று வருகின்றன. 2011ம் ஆண்டுக்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள கனடா முடிவு செய்துள்ளது. இதனால் ஆப் கானிஸ்தான் காந்தகார் பகுதியில் பாது காப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒபாமா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக் கான அமெரிக்க படைத் தளபதி ஸ்டான்லி மெக் கிறிஸ்டல் நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே 35 முதல் 40 ஆயிரம் வரையிலான இராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது.

இது குறித்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது :-

நமது படைகள் ஏன் அங்கு இன்னும் இருக்கின்றன என்று கேட்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. அதற்காகவே தமது படைகள் அங்கு உள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் உள்ளன. இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகள் வரை இந்த படை இருக்கும். 2017ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும்.

அரசியல் கட்சியினர் 57 பேரை படுகொலை செய்த பிலிப்பைன்ஸ் மாகாண கவர்னர் மகன் உட்பட 21 பேர் கைது

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாகாண கவர்னர் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கிறது.  இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு குடாடாட்டு பழங்குடியின தலைவர் இஸ்மாயில்கான் ஆதரவாளர்கள் மனுதாக்கல் செய்ய சென்றனர்.

அப்போது இஸ்மாயில் மனைவி ஜெனாலின், அவரது ஆதரவாளர்கள், வக்கில்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 57 பேர் அம்பாட்டுவான் பழங்குடியின அரசியல் கட்சியினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களில் 22 பேர் பத்திரிகையாளர்கள் ஆவர்.

pili.bmpபிலிப்பைன்ஸ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலை தொடர்பாக பலிப்பைன்ஸ் இராணுவத்தினர் 20 பேரை நேற்று கைது செய்தனர். மகுயின்டநாவ் மாகாண கவர்னராக உள்ள அண்தால் அம்பாட்டுவான் மகனும் மேயருமான ஜூனியர் அண்தால் என்பவரது தலைமையில்தான் ஆயுதம் தாங்கிய குழு குடாடாட்டு ஆதரவாளர்களை கடத்திச் சென்று படுகொலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர் இராணுவத்திடம் சரண் அடைந்தார்.