2009

2009

நிலையான அரசியல் தீர்வின் மூலம் தேசிய ஒற்றுமையும் சமத்துவமும் – அமைச்சர் டியூ குணசேகர

due-gunasekara.jpgவவுனியா கம்யூனிஸ்ட் பிரமுகர் கே. பத்மநாதனின் நினைவு தினக் கூட்டம் வவுனியாவில் நடைபெற்ற போது அரசியலமைப்பு விவகார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியூ குணசேகர ஆற்றிய உரை.

தோழர் பத்மநாதனுக்கு மரியாதை செலுத்தவும் அவரைக் கெளரவிக்கவும் அவருக்கு நன்றி தெரிவிக்கவுமாக நினைவுச் சொற்பொழிவை ஆற்றும் பணி எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் எனக்கு விடுத்த அன்பான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

தோழர் பத்மநாதன் 2005, ஜுலை 13ம் திகதி காலமானார். வன்னியில் அப்போது நிலவிய நிலைமை காரணமாக, எம்மைப் பிரிந்து சென்ற தலைவருக்கு உரிய மரியாதையுடனும் கெளரவத்துடனும் நன்றியறிதலுடனும் அப்போது எம்மால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவரது குடும்பத்தினர் இந்த நினைவுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற காரணத்தினால் நான்காவது சிரார்த்த தினமான ஜுலை 13ம் திகதி இதனை நடத்துவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அவரது நான்காவது சிரார்த்த தினமும் அவரது கட்சியின் 66 வது ஆண்டு விழாவும் ஒரே சமயத்தில் வருவதால் நான் அவர்களுடன் இதற்குச் சம்மதித்தேன். தோழர் பத்மநாதன் வன்னியில் புகழ்பூத்த பிரமுகர், தனது மக்களுக்கு அர்ப்பணிப்புடன், கடமைப் பொறுப்புடன், துணிவுடன் அயராது பணிபுரிந்தவர். எனவே அவருக்கு வேறு எந்த அறிமுகமும் தேவையில்லை. பாரம்பரிய சுதேச மருத்துவத் தலைமுறையைச் சேர்ந்த அவர் விவசாயிகள் இயக்கம், கூட்டுறவு இயக்கம், அரசியலில் இடதுசாரி இயக்கம் ஆகியவற்றின் தலைவராக விளங்கியவர்.

அவருடைய சமூக, அரசியல் சமயச் செயற்பாடுகள் வன்னி மக்கள் மத்தியில் பிரசித்தமானவை. எனவே அவை பற்றி நான் இங்கு அதிகமாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும் கூட, இளம் தலைமுறையினரின் நலன் கருதி அவரது செயற்பாடுகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

1927 ஆம் ஆண்டு அவர் பிறந்த வேளையில் பிரித்தானிய காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட நாடாக இலங்கை விளங்கிற்று. எமது நாட்டின் முழுமையான சுதந்திரத்துக்கான போராட்டம் குழவிப் பருவத்தில் இருந்தது. அப்போது எமது நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களுக்காகவே உரத்த குரல்கள் எழுப்பப்பட்டனவேயன்றி முழுமையான சுதந்திரத்துக்காக அல்ல.

ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் தேச விமோசனப் போராட்டத்துக்கான யுகத்துக்குக் கட்டியங்கூறிய 1917 ஆம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சி பற்றிய செய்தியை வெளியுலகுக்குக் கொண்டு வந்த முதலாவது இலங்கையர் பொன்னம்பலம் அருணாச்சலம்.

இந்தப் பின்புலத்திலேயே யாழ்ப்பாண மாண வர் காங்கிரசும் பின்னர் ஹண்டி பேரின்ப நாயகம் தலைமையில் இளைஞர் காங்கிரசும் 1924 ஆம் ஆண்டு தீவிரமான வேலைத்திட்டங்களுடன் செயல்பட்டன. 1931 ஆம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் காங்கிரசும் 1933 ஆம் ஆண்டில் சூரிய மலர் இயக்கமும் முழுமையான சுதந்திரத்துக்கான போராட்டத்தில் மேலும் முன்னேற்றமான நிகழ்வுகளாகின.

1935 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சியும் 1943 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவானமை அந்த இயக்கத்தின் உறுதியான சித்தாந்தவியல் திசைவழிகளைக் கொண்ட விரிவுபடுத்தல்களேயாகும்.

ரீ.துரைசிங்கம்,  ஏ.வைத்தியலிங்கம்,  பொன். கந்தையா, எஸ். ஜெயசிங்கம், வ. பொன்னம் பலம், எம். கார்த்திகேசன்,  எஸ். பி. நடராஜா,  ஐ. ஆர். அரியரத்னம் போன்ற பெரும் அறிவாற்றல்மிக்க இடதுசாரித் தலைவர்களை வட பகுதி உருவாக்கியிருந்தது.  அவர்கள் இடதுசாரி இயக்கத்தைக் கணிசமான அளவுக்குச் செழுமைப்படுத்தினர்.

முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர்களான கே. சி. நித்தியானந்தன், செல்லப்பா குமாரசாமி, பொன் குமாரசாமி, எஸ். செல்லையா, கே. நவ ரட்ணம், போன்றவர்கள் வடக்கில் உருவாகி இடதுசாரி இயக்கத்துடன் ஒன்றித்துச் செயல்பட்னர். வெவ்வேறு காலகட்டங்களில், வட பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த ஒரே இடதுசாரிக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான்.

இடதுசாரி இயக்கத்தின் இந்தப் பின்புலத்தில் தான் வ. பொன்னம்பலம், எம். கார்த்திகேசன் ஆகியோர் மூலமாக தோழர் பத்மநாதன் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

1949 ஆம் ஆண்டின் மகத்தான சீனப் புரட்சியும் 1945 முதல் 1975 வரையில் வியத்நாம் மக்கள் நடத்திய சுதந்திரப் போராட்டமும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கமும் 1952 ஆம் ஆண்டில் எமது கட்சியில் இணைந்து கொண்ட பத்மநாதன் போன்ற இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உந்து சக்திகளாக விளங்கின.

அவர் ஸ்ரீ.ல.சு.க -ல.ச.ச.க- கம்யூனிஸ்ட் கட்சிகளது ஐக்கிய முன்னணி தலைமையில் 1970 ஆம் ஆண்டு வவுனியாவில் போட்டியிட்டார். மாஸ்கோவில் அவர் தனது அரசியல் கல்வியை மேம்படுத்திக் கொண்டார். 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட மாகாணத்தில் ஹெக்டர் கொப்பேகடுவ ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெறுவதில் தோழர் பத்மநாதன் முக்கிய பங்கினை வகித்தார்.

அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, குமார் பொன்னம்பலம் ஆகியோரைத் தோல்வி காணச் செய்து யாழ், வன்னி மாவட்டங்களில் சமூக வேறுபாடின்றி அவருக்கு ஆகக் கூடுதலான வாக்குகளை அளித்திருந்தனர்.

அரசியல் கட்சிகள் மத்தியில் அரசியல், சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும் கூட அடிப்படையிலேயே தேசிய ஐக்கியம் நிலவிய காலம் இது. மக்கள் மட்டத்தில் தேசிய ஐக்கி யமும் சமூக ஒற்றுமையும் உச்ச கட்டத்தில் இருந்தன. இந்த ஒற்றுமையை 1983 ஆம் ஆண்டின் ஆடிக்கலவரம் சிதறடித்துவிட்டது. 26 ஆண்டுகாலம் நீடித்திருந்த தொடர்ச்சியான யுத்தத்துக்குப் பின்னர் இன்று நாம் சந்திக்கின்றோம்.

30 ஆண்டுகளுக்கு மேலாகப் பயங்கரவாதம் நிலவியது.  இந்தக் காலப்பகுதியில் நடந்தவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியடைய முடியாது. அதற்குப் பின்னர் நடந்தவை யாவும் விலைமதிக்க வொண்ணாத உயிர்களின் இழப்பு, சொத்துக்களின் அழிவு, பொருளாதாரச் சீரழிவு, மக்களின் தொடர்ச்சியான துயரம், கலாசாரச் சீர்குலைவு, வன்முறைக் கலாசார ஆளுமையின் தோற்றம், நல்லாட்சி வீழ்ச்சி கண்டமை, தேசிய ஒற்றுமையும் ஒருங்கிணைவும் முழுமையாக வீழ்ச்சி கண்டமை, பாதாள உலகத்தின் தோற்றம் ஆகிய எல்லாமே இதன் உற்பவிப்புக்களும் துணை உற்பவிப்புக்களுமே ஆகும்.

எந்தவொரு சமூகத்தினதும் மறைந்துவிட்ட தலைவர்களுக்கோ அல்லது எமது தேசத்தின் கதிப்போக்கிற்கு வழிகாட்டியவர்களுக்கோ நான் கெளரவம் அளிக்காதவனாக இருக்க விரும்பவில்லை.  இப்போது புண்ணை ஆற்றவும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவுமான காலம். துரதிருஷ்டவசமான சம்பவங்களை மீண்டும் கிளற நான் விரும்பவில்லை.

ஆனால் வரலாற்று உண்மைகள் உள்ளன.  இவற்றை நாம் மறந்துவிட முடியாது. அழிவிலிருந்து மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமானால் அவற்றில் இருந்து நாம் தேவையான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது இன்றியமையாதது. வரலாற்றைக் கற்றுக்கொண்டிருப்பவன் என்ற வகையில் சுதந்திரத்துக்குப் பின்னரான காலத்துத் தலைவர்கள் நாட்டு நிர்மாணக் கடமையில் தவறிவிட்டனர் என்பேன்.

எமது கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில் தேசிய இனப் பிரச்சினையை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே நாம் இனங்கண்டோம். உண்மையில் எமது நாட்டின் சமகால அரசியலுக்கு பிராந்திய சுயாட்சிக் கருத்தமைப்பை எமது கட்சியே அறிமுகப்படுத்தியது. சமூக, பொருளாதார, கலாசார எதார்த்தங்கள், சர்வதேச அனுபவங்கள் ஆகியவற்றின் விஞ்ஞானபூர்வப் பகுப்பாய்வை அது அடிப்படையாகக் கொண்டது.

சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த முதலாளித்துவக் கட்சிகள் இந்த எதார்த்தங்களை உணரத் தவறின. அற்பமான, குறுகிய அரசியல் நலன்களால் ஈர்க்கப்பட்டன. இலங்கை என்ற தேசத்தை, நாட்டு நிர்மாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தமது வரலாற்றுக் கடமைப் பொறுப்பைக் கைகழுவின.

வட பகுதியில் (தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டினதும்) தமிழ்த் தலைவர்களைப் பொறுத்த வரையிலும் இதுவே உண்மை. அரசியலில் அவர்கள் பழமைவாத, பிற்போக்கான பங்கை வகித்தனர், தமது குறுகிய வர்க்க நலன்களை முதன்மைப்படுத்தினர். அவர்கள் பிற்போக்கான, பழமைவாத அரசி யல் நிலைப்பாடுகளுடன் தம்மை இனங்காட்டிக் கொண்டார்கள்.

இதனால்தான், பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது, நெற் காணிச் சட்டம், தேசியமயமாக்கக் கருத்திட்டங்கள் குடியுரிமை, முற்போக்கான அரசியல், சமூகச் சீர்திருத்தங்கள், ஆகியவற்றை எதிர்த்தனர்.  இயல்பாகவே அவர்கள் முற்போக்குச் சக்திகளிடமிருந்து தம்மைத்தாமே தனிமைப் படுத்திக் கொண்டனர்.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தவறியமை 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் முதலாளித்துவ த்திலிருந்து சிறு முதலாளித்துவத்துக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. துரதிர்ஷ்டவசமாக வலதுசாரி சிறு முதலாளித்துவம் தலைமைப் பொறுப்பை ஏற்றது. அது, அதிதீவிர தேசியவாதம், குறுகிய தேசிய இனவெறி ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறை, பயங்கரவாதம், பிரிவினை ஆகிய பாதையில் பிரவேசித்தது.

தேசிய ஒற்றுமை, ஜனநாயகப்பாதை, ஐக்கிய இலங்கையின் கட்டமைப்புக்குள் அரசியல் தீர்வு காண்பது ஆகியவற்றைத் தேர்ந்த இடது சாரி சிறு முதலாளித்துவக் கட்சிகள் ஓரங்கட்ட ப்பட்டன, ஒழிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. மக்கள் மட்டத்திலும் முற்போக்குச் சக்திகள் மட்டத்திலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பாலம் தகர்ந்தது.

ஆரம்பத்திலிருந்தே தேசிய சிறுபான்மை யினங்களின் குறிக்கோள்களுக்காகவும் தேசிய ஒற்றுமைக்காகவும் 13 வது திருத்தத்தின் நடை முறைப்படுத்தலுக்காகவும் போராடிய இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்த நாம் கூட விட்டு வைக்கப்படவில்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த, பல்வேறு மட்டங்களில் இருந்த எமது 49 தலைவர்கள் ம.வி.மு. வினாலும் எல்.ரீ.ரீ. இயக்கத்தினாலும் கொல்லப்பட்டனர்.

கடந்த 30 ஆண்டுகளில் தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி இயக்கம் மற்றும் முற்போக்குச் சக்திகளின் செலவில் தெற்கிலேயே குறுகிய தேசிய இனவெறியும் வடக்கிலே தமிழ் தேசிய இனவெறியும் செழிப்புற்றன. இதன் காரண மாக நடுநிலை, ஒற்றுமை, ஐக்கியம் ஆகிய உணர்வை நாடு இழந்து விட்டது.

எமது கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பயங்கர வாதத்தையோ அல்லது வன்முறையையோ ஒருபோதும் ஏற்றதில்லை. அதுபோலவே, எமது கட்சியின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல் வதற்காகக் காடைத்தனத்தையோ, துன்புறுத்தல் செய்வதையோ கடைப்பிடித்ததும் இல்லை. எமது கரங்கள் இரத்தக் கறை படிந்தவையல்ல.

எமது கட்சி எப்போதுமே நாட்டுப் பற்றுள் ளதாகவே இருந்துள்ளது. அதேசமயத்தில் அது சர்வதேசியத் தன்மையைக் கொண்டது. யாவ ற்றுக்கும் மேலாக நாம் மனித உயிர்களாக இருப்பதால் நாட்டுப்பற்றும் சர்வதேசியமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே.

நாம் எமது நாட்டில் சோலிசத்தை அறிமுகப் படுத்தினோம். அதுபோலவே, எமது நாட்டுக் காக சோசலிச நாடுகளையும் அறிமுகப்படு த்தினோம். நிலப்பிரபுத்துவத்தின் பிதுரார்ஜிதமான சாதி அமைப்புக்கு எதிராக வடக்கிலும் தெற் கிலும் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கம் யூனிஸ்ட்டுகளே. மக்களின் மனங்களில் இரு ந்து கட்டுக்கதைகளையும் பொய் நம்பிக்கை களையும் நீக்கி அவர்களுக்கு அறிவுக் கண் ணைத் திறந்து வைத்தோம்.

இந்தப் பின்னணியில்தான், தனது தத்துவார்த்த ஆதாரத்தளம் மற்றும் நடைமுறை அனுவ பம் ஆகியவற்றைக்கொண்டு தேசிய இனப் பிரச்சினைகளில் மெளனமாகவும் அதேசமயம் துணிவாகவும் கோட்பாட்டு ரீதியான நிலைமை ப்பாட்டை எடுத்த தோழர் பத்மநாதனின் பங்களிப்பை நான் மதிப்பீடு செய்ய விரும்புகின்றேன். அவரைப் பொறுத்தவரையில், தேசிய ஒற்றுமை, சமூக இணக்கப்பாடு, மக்களின் நல ன்களில் பேரார்வம், ஒரு சோசலிச இலங்கை க்கான தொலைநோக்கு ஆகியவனவே நிர்ணயமான காரணிகளாக விளங்கின.

இப்போது யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. தேசிய ஒற்றுமைக்கும் பாரபட்சத்துக்கும் அநீதிக்கும் முடிவு கட்டுவதற்கும் சமத்துவம், சமூக நீதி, சமூக அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கும் போராடுவதற்கான மற்றுமொரு சந்தர்ப்பத்தை வரலாறு எமக்கு வழங்கியுள்ளது.

இன்று வடமாகாணத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 2.9 சதவீதமே. அதேசமயம் மேல் மாகாணத்தின் வீதம் ஏறக்குறைய 50 சதவீதம். யுத்த வலயத்துக்கு அணித்தாயுள்ள வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம் ஆகிய ஒவ்வொன்றும் கூட மொத்தத் தேசிய உற்பத்தியில் 4 சதவீதமே.

யுத்தத்தின் விளைவுகள் வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் மட்டுப்பட்டிருக்கவில்லை. இதனால் தான் வடக்கு, கிழக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ஆகக்கூடுதலான முன்னுரிமையைக் கொடுக்கின்றோம்.

இடம்யெர்ந்துள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு முடிந்த அளவு துரிதமாகத் தீர்வுகாணப்பட வேண்டும். சிவில் நிர்வாகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டி யிருக்கின்றது. அடிமட்டத்திலுள்ள நிறுவகங்க ளுக்குத் தமது சொந்தத் தலைவர்களைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளன.

இந்தப் பூர்வாங்க நடவடிக்கைகள் நிலை யான அரசியல் தீர்வுக்கான எமது தேடலுக்கு வாய்ப்பளிக்கும் இசைவான சூழ்நிலையை உருவாக்கும் என நம்புகின்றேன். பரஸ்பர நம்பிக்கையைப் பொறுத்த வரையில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு இடையே பெரும் இடை வெளி இருப்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.  இந்த இடைவெளியை மக்கள் மட்டத்தில் நாம் போக்க வேண்டும். பரஸ்பர அச்சம், அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

நிலையான அரசியல் தீர்வின் மூலமே இந்த நம்பிக்கையை உறுதியாகக் கட்டியெழுப்ப முடி யும். தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி சக்திகளது நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாம் விரும்புகின்ற தேசிய ஒற்றுமையை உறுதி செய்ய முடியும் என்பது எனது திட நம்பி க்கை. பயங்கரவாதமும் யுத்தமும் இடது சாரி இயக்கத்தைப் பலவீனப்படுத்திவிட்டன. வடக்கிலே இடதுசாரி இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவரும் ஆழமான மாற்றங்கள் பற்றியும் உங்களுக்கு எடுத்துக்கூற இது ஒரு சந்தர்ப்பம்.

இருபதாண்டுகளுக்கு முன்னால் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு (அதாவது சோசலிச கிழக்கு ஜெர்மனி வீழ்ச்சியடைந்தபோது), சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தவுடன் உலகம் முழுவதிலுமுள்ள முதலாளித்துவத் தலைவர்கள் சோசலிசத்தின் முடிவு பற்றி ஹேஷ்யம் கூறினார்கள்.

சீனாவும் இந்தியாவும் உலகப் பொருளாதார வல்லரசுகளாக தோற்றம் பெற்றதுடன் நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக உலகம் மாற்றமடைந்து வருகின்றது. உலகப் பொருளாதார மையம் ஆசியக் கண்டத்துக்கு மாறி வருகின்றது.

உலக நிதி நெருக்கடி மோசமடைந்து வருவதுடன் முதலாளித்துவத்தின் கொத்தளங்களான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் ஆட்டங்கண்டுவிட்டன. லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட எழுச்சி சுமார் 13 இடதுசாரி மற்றும் இடதுசாரி ஆதரவுக் கட்சிகளை அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருப்பதால் அமெரிக்கக் கண்டத்தில் சக்திகளின் சமநிலை மாற்றமடைந்திருக்கின்றது.

புதிய பொருளாதாரக் கேந்திரங்களாக லத்தீன் அமெரிக்காவில் பிரேசிலும், ஆபிரிக்கக் கண்ட த்தில் தென்னாபிரிக்காவும், ஈரோ ஆசியாவில் சீனாவும் இந்தியாவும் இணைந்து ரஷ்யாவும் உலகப் பொருளாதார வல்லமையில் சம நிலையை முற்றாக மாற்றியமைத்துள்ளன.

டொலரின் பெறுமதி பலவீனமாடைந்துள்ளது. உலகின் வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கங்களில் 75 சதவீதம் வளர்முக நாடுகளுக்கு உரியவை. உலகின் வெளிநாட்டு நாணமாற்று ஒதுக்கங்களில் மூன்றில் ஒரு பங்கை சீனா தன் வசம் வைத்திருக்கின்றது.

இலங்கை தொடர்பான விடயங்கள் பற்றி ஐ. நா. மனித உரிமைக் குழுவிலும் சர்வதேச நாணய நிதியத்திலும் நடைபெற்ற கூட்டங்க ளில் மேலைநாட்டு வல்லரசுகள் தாம் விரும்பியபடி செயல்பட முடியாது என்பதில் இந்த மாற்றங்கள் பிரதிபலித்தன. உலக நிகழ்வுப் போக்குக்களின் புதிய எதார்த்தங்கள் இவை தான்.

இடதுசாரி இயக்கம் புத்துயிர் பெற்றுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் தேர்தல்கள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ளன. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் சமீபத்தில் பின்னடைவைக் கண்ட போதிலும் கூட சித்தாந்த ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் ஏற்றப்போக்கில் உள்ளது. இன்று கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் ஒருமைப்பாட்டின் உலகமயமாக்கம் விளங்குகின்றது.

மக்கள் விடுதலை முன்னணி சிங்களக் குறுகிய தேசிய இன வெறி மற்றும் இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அலைகளில் வேகமா கச் சவாரி செய்தது. இந்த இயல் நிகழ்வு இப்போது இறக்கப்போக்கில் உள்ளது. மார்க்சி யமும் குறுகிய தேசிய இன வெறியும் எண் ணெயும் நீரும் போன்றவை. அவை ஒருபோதும் கலக்க முடியாது. ம.வி.முவில் காணப்படும் உள் முரண்பாடுகள் பிளவுகளுக்கு வழிவிட்டன. அதுபோலவே தான் ஜாதிக ஹெல உறுமயவும்.

தோழர் கே. பத்மநாதன் 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கடமைப் பொறுப்புடனும் அர்ப்ப ணிப்போடும் உயர்த்திப் பிடித்த செம்பதாகையை மேலும் உயர்த்திப் பிடிப்பதே அவரை நினைவுகூர்வதற்கான ஒரே மார்க்கமாகும்.

அவர் ஒன்பது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். அவர்கள் இன்று வன்னி மக்களின் அன்பையும் ஆதரவையும் வென்றுள்ளனர். சமூகச் செயற்பாட்டின் பல்வேறு துறைகளில் புகழ்பூத்த பிரமுகர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தமது வழிகளில் நாட்டிற்குத் தமது பங்குப் பணியைச் செலுத்தி வருகின்றனர்.

தோழர் பத்மநாதனின் நான்காவது சிரார்த்த தின சமயத்தில் அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் 66 வது ஆண்டு விழா வேளையில் ஆழ்ந்த மரியாதை, கெளரவம், நன்றியறிதலுடன் அவரின் நினைவாகத் தலை வணங்கி அஞ்சலி செலுத்துகின்றேன்.
 
 

ஜப்பானின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

japan-new-pri.jpgஜப்பானின் புதிய பிரதமராக இன்னும் இரு வாரங்களின் பின்னர் பதவியேற்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர்  யுகியோ ஹடோயாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

அச்செயதியில் குறிப்படப்பட்டுள்ளதாவது, உங்கள் தலைமையில் ஜப்பானில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உங்கள் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளனர். நீங்கள் அடைந்துள்ள வரலாற்று வெற்றியானது ஜப்பானில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வழியமைக்குமென நம்புகிறேன்.

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையில் பல நூற்றாண்டு கால சரித்திர மற்றும் கலாசாரத் தொடர்புகள் உண்டு. எமது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் ஜப்பான் வழங்கிய தாராள உதவிகளுக்கான நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர நல்லுறவு எதிர்காலத்தில் மேலும் பலமடையும் என நம்புகிறேன் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடுத்த தேசத்துக்கு மகுடம் கண்டியில்

daladamaligawa.jpgஅடுத்த தேசத்துக்கு மகுடம் (தயட்ட கிருல) கண்காட்சி மலைநாட்டின் தலைநகரமான கண்டியில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிக் கண்கானிப்பில்  இந்நக் கண்காட்சிப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சர்வதேச பௌத்த மத்திய நிலையமான பல்லேகெல  என்ற இடத்தில் இடம்பெறும்.
பல்லேகெல மத்திய நிலையம் 25 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டமைந்துள்ளது. கண்னொருவையிலுள்ள புதிய வளஅபிவிருத்தி மத்திய நிலையத்தில் பிரதிநிதி அமைச்சர் ரஞ்சித் சிம்பலாப்பிட்டிய தலமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இந்த இடம் கண்காட்சி நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டது. 

இக்கண்காட்சியில் புலிகளை தோற்கடிக்கப்பயண்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களும் பார்வைக்கா  வைக்கப்படவுள்ளன.  தேசத்துக்கு மகுடம் கண்காட்சி தேசிய மட்டத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நோர்வேயில் ‘தீராத மயக்கத்திலே’ நூல் வெளியீடு

ஈழத்து கலைத்துறையில் மூன்று தசாப்தங்களாக அறியப்பெற்ற கார்மேகம் நந்தாவின் மெல்லிசைப் பாடல்களின் தொகுதியான தீராத மயக்கத்திலே என்ற நூலின் வெளியீடும் அவரது தேர்ந்த மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பான குறுந்தட்டு வெளியீடும் நோர்வேயில், ஒஸ்லோ நகரில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை செப்டெம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் லண்டனிலிருந்து நூலகவியலாளர் என்.செல்வராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
 
1973இல் இலங்கை வானொலியில் இணைந்த கார்மேகம் நந்தா, 1987இல்  புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வருகின்றார். இவர் 1977 முதல் 2008 வரை எழுதிய பாடல்களில் தேர்ந்த 170 பாடல்களை தீராத மயக்கத்திலே என்ற நூல் கொண்டுள்ளது.

இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப தடை விதிக்கும் விவகாரம்: மனு தாக்கல்

indian-cricket-team.jpgஇலங் கையில் உள்ள சிங்கள அரசு தமிழர்களை துன்புறுத்தி வரும் நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை லேக் ஏரியாவில் வசித்து வரும் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், இலங்கையில் வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும் கலந்து கொள்கிறது. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிரச்சினை இருந்த போது, அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பினால் சர்வதேச சமூகம் இந்தியாவை மதிக்காது. எனவே இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவுக்கான வக்காலத்தில் 513 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த மனு, இன்றைய தினம்,   சித்ரா வெங்கட்ராமன், துரைசாமி கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழுவினர்,  இது குறித்து மத்திய உள்துறை செயலர், வெளியுறவு செயலர், விளையாட்டு துறை செயலர், கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அபிவிருத்தியின்றி சமாதானம் இல்லை – ஜனாதிபதி

pr-mahi.jpgஅபிவிருத் தியின்றி சமாதானம் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகங்களுடன் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்திய ஒரு தலைவராக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ ‘போப்ஸ்’; சஞ்சிகைக்கு வழங்கிய விசேட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இப்பேட்டியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது,

யுத்தம் முடிந்து விட்டது. இனி நாம் இந்த நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்லும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். நான் முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாவேன். நான் மக்களை சிங்களவர்கள், தமிழர்கள். முஸ்லிம்கள்,  பரங்கியர் என வேறுபடுத்திப்பார்க்க விரும்பவில்லை. நான் அவர்களை நாட்டை நேசிப்பவர்கள் என்றும் நாட்டை நேசிக்காதவர்கள் என்றுமே வேறுபடுத்திப் பார்க்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேவையான சந்தர்ப்பங்களில் தான் தமிழிலும் பேசுவதாக குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் மக்களது சொந்த மொழியிலேயே பேசுவதன் மூலம் அவர்களோடு மிக நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ போர்க்கால சூழ்நிலையில் கூட நாட்டின் பொருளாதாரம் வருடாந்தம் ஆறு வீத வளர்ச்சியைக் கண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி கடந்த நான்கு ஆண்டுகளில் 11 வீதமாக இருந்த பணவீக்கம் 1.1 வீதத்திற்குக் குறைவடைந்துள்ளதாகவும் தலாவீத வருமானம் 1200 டொலர்களில் இருந்து 2000 டொலர்கள் வரை உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அரசாங்கத்தின் அர்ப்பணி;ப்புபற்றி குறிப்பிட்ட அவர் நாம் எமக்கேயான இலங்கை மாதிரி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதையே நான் விரும்புகின்றேன். உணவில் நாம் தன்னிறைவு அடைய முடியுமாக இருந்தால் கைத்தொழில் துறையில் தானாகவே முன்னேற முடியும். என்றும் குறிப்பிட்டுள்ளார்;.

கடைசிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வினவப்பட்டபோதுää நாம் ஆபிரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ நடந்தவற்றை பின்பற்றவில்லை. கடந்துபோனவற்றை தோண்டிக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல என்றே நான் நினைகிறேன். நாம் கடந்துபோனவற்றை மறந்து புதியதோர் வாழ்க்கையை புதிய சிந்தனைகளை ஆரம்பிக்க வேண்டும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஜனாதிபதிக்கு உதவத் தயார் : இரா.சம்பந்தன்

sampanthan-1111.jpgஇனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தாம் ஜனாதிபதிக்கு உதவ தயாராக உள்ளதாகவும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  அதற்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் பேர் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும் அவர் கோரியுள்ளார்.  இலங்கையின் இனப்பிரச்சினையானது அனைத்து சமூகமும் அமைதியாக வாழும் வகையில் தீர்க்கப்படவேண்டும் என இதன் போது சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

லியாம் பொக்ஸுடனான சந்திப்பு குறித்து கருத்துரைத்த அவர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதிக்கு உதவுமாறு லியாம் பொக்ஸ் தம்மிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸாநாயகத்தின் சிறைத்தண்டனை குறித்து அமெரிக்கா அதிருப்தி

tissanayagam333.jpgஊடக வியலாளர் திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  ஏற்கனவே திஸ்ஸாநாயகத்தின் கைது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்துரைத்திருந்த நிலையிலேயே இந்த புதிய கருத்தை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபட் வூட் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸாநாயகத்திற்கு எதிரான தீர்ப்பு குறித்து அமெரிக்கா அதிருப்தி கொள்வதாகவும் தொடர்ந்தும் இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஊடகவிலாளர் திஸ்ஸாநாயகம் சிறைத் தண்டனைக்கு உட்பட்டிருக்கும் காலத்தில் அவருடைய உடல் நலன் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரொபட் வூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மே முதலாம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட்ட வேளையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா திஸ்ஸாநாயகத்தின் கைது குறித்துச் சுட்டிக்காட்டியிருந்தார்.  தமது பணிகளைச் செய்யும் போது குற்றவாளியாக்கப்பட்டுள்ள ஒருவருக்கு, திஸ்ஸாநாயகத்தை உதாரணம் காட்டிப் பேசியுமிருந்தார்.

சனல் 4 காணொளி எதிரொலி: இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப தயக்கம்

ExtraJudicialKillingsஇலங் கையில் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைக்குள்ளாகும் காணொளி வெளியானதையடுத்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல தயக்கம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
1983 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் முதல் அண்மைக்காலம் வரை அடுத்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்கள் 112 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இந்தநிலையில், இலங்கையில் போர் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்தே அவர்களில் பலர் இலங்கைக்கு மீண்டும் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும், இலங்கைப் படையினர் தமிழர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாக சனல் 4  வீடியோ காட்சி வெளியானதையடுத்து, இந்த அகதிகள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்கள். தாம் தொடர்ந்தும் தமிழகத்தில் வாழ்வதையே விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அகதி முகாம்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலாளிமாருடனான பேச்சு தோல்வி; தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு

sri-lanka-tea.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கக் கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை யடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்ட முகாமைத்துவ முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தோட்டத் தொழிலாளர் சார்பான கூட்டு கமிட்டிகளுக்கு மிடையிலான சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்த பேச்சுவார் த்தை நேற்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.  இதன் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியன கலந்து கொண்டன.

இருபத்திரண்டு தனியார் கம்பனிகளை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனம், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீத அதிகரிப்பை மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்று தமது கொள்கையில் உறுதியாக இருந்துள்ளது. இரு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை காணப்படவே நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒருவார கால அவகாசத்தினை தருமாறு முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த வேண்டுகோளை கூட்டு கமிட்டி நிராகரித்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொழிற் சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க விருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான மு. சிவலிங்கம் கூறினார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 11 மணிக்கு விசேட ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத் தலைவர்கள், தலைவிகள், உத்தியோகத்தர்கள், பெண் இணைப்பாளர்கள், மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்வார்களெனவும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.