29

29

கொங்கோ குடியரசில் 9 பெண்களை பலாத்காரம் செய்த 21 உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் !

ஆப்பிரிக்காவில் உள்ள கொங்கோ குடியரசு நாட்டில் 2018-ம் ஆண்டு எபோலா நோய் பரவியது. இதை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் சிகிச்சை குழுக்களை அனுப்பி வைத்தது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும், காங்கோ நாட்டைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சிகிச்சை அளித்தனர். இவ்வாறு 100-க்கும் மேலான பணியாளர்கள் ஆங்காங்கே சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 2020-ம் ஆண்டு வரை இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதுபற்றிய தகவல் வந்தததையடுத்து தாமஸ் ராய்டர்ஸ் அறக்கட்டளை மற்றும் இன்னொரு அமைப்பு இணைந்து சுதந்திர விசாரணை மேற்கொண்டன.

அதில் உலக சுகாதார ஊழியர்கள் 9 பெண்களை பலாத்காரம் செய்தது உறுதியானது. 50 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.

இந்த செயல்களில் ஈடுபட்டதாக 83 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் உலக சுகாதார நிறுவனத்தால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். அவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காங்கோ அரசும் தெரிவித்துள்ளது.

நானே கடைசி இறைத் தூதர் எனக்கூறிய பள்ளித் தலைமையாசிரியருக்கு தூக்கு தண்டனை – பாகிஸ்தானில் சம்பவம் !

பாகிஸ்தானில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்த பள்ளித் தலைமையாசிரியர் (பெண்) ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானில் லூகூர் நகரில் உள்ள பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் தன்வீர். இவர் முகமது நபிகள் கடைசி இறைத் தூதர் இல்லை என்றும், நானே கடைசி இறைத் தூதர் என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மதகுரு ஒருவர் 2003ஆம் ஆண்டு லாகூர் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் தன்வீர் மீது புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தன்வீரின் வழக்கறிஞர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தொடர்ந்து வாதாடி வந்தார். எனினும் அரசுத் தரப்பு வழக்கறிஞர், தன்வீரின் மனநிலை நலமாக இருப்பதாக சான்றிதழைச் சமர்ப்பித்தார்.

இதன் காரணமாக தற்போது மதநிந்தனை வழக்கில் தன்வீருக்குத் தூக்கு தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மன்சூர் அகமத் தீர்ப்பு வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை மதநிந்தனை  தொடர்பான மத விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக மத விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறவர்கள் மீது வழக்குகள் பாய்கின்றன. 1987ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1,800க்கும் அதிகமானவர்கள் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆனால், தனிப்பட்ட விரோதங்களுக்குப் பழிவாங்குவதற்காக மத நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

ஜப்பானின் புதிய பிரதமராகிறார் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஷிடா !

ஜப்பானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார்.

2020 செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை கிஷிடா இந்த வெற்றியின் மூலம் மாற்றுவார்.

முன்னதாக பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் பதவிகளை வகித்த பிரபல தடுப்பூசி அமைச்சரான டாரோ கோனோவை தோற்கடிக்க கிஷிடா புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 257 வாக்குகளை பெற்றார்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 4 ம் திகதி நடைபெற உள்ளது.