July

July

17 ஆவது திருத்த விவகாரம்; ஐ.தே.க. தூதுக்குழு பீரிஸுடன் சந்திப்பு

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பான விடயங்கள் குறித்து ஐ.தே.க. தூதுக்குழு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. 17 ஆவது திருத்தம் தொடர்பாக ஐ.தே.க. முன்வைத்த யோசனைகள் குறித்து கலந்தாராய வருகை தருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பிற்கிணங்க நேற்று சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.தே.க. எம்.பி.ஜோசப்மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் சில தயக்கங்களைக் கொண்டிருந்ததாகவும் அந்தக்கவலைகள் தொடர்பாக ஆராய்வதற்காக சந்திப்பை நாடியிருந்ததாகவும் ஜோசப் மைக்கேல் பெரேரா கூறியுள்ளார்.

அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவானது 17 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகளை பரிசீலனை செய்து வருகிறது. நாடு எதிர்நோக்கும் சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே தவிர்க்கமுடியாத தீர்வாக அமையும் என்று ஐ.தே.க. அண்மையில் தெரிவித்திருந்தது.

நீல் பூனே மீண்டும் திரும்பிச் சென்றார்

neel.jpgஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்குத் திரும்பி வந்திருந்த நீல் பூனே மீண்டும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சொந்த விடுமுறையில் நீல் பூனே சென்றிருப்பதாகவும் அவர் கொழும்புக்குத் திரும்பி வருவார் என்றும் ஐ.நா. வாட்டாரமொன்று தெரிவித்தது. கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்துக்கு வெளியே அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து கலந்தாலோசனை நடத்துவதற்காக நியூயோர்க்கிற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நீல் பூனேஅழைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பில் பதியும் நடைமுறை தமிழர்களுக்கு மட்டுமானதல்ல. சகலரதும் பாதுகாப்புக்கும் முக்கியம் – பொலிஸ் மா அதிபர்

கொழும்பில் தங்கியிருப்பவர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்வது அவர்களது சொந்தப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, இவ்விடயம் தொடர்பாக சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

கொழும்பில் குடியிருப்பாளர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை தமிழ் மக்களுக்கு மட்டுமேயான பாரபட்ச செயற்பாடு என காட்டுவதற்கு சில சுயநல அக்கறை கொண்ட தரப்பினர் முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது.

இது உண்மைக்கு மாறுபட்ட எந்த அடிப்படையும் அற்ற கூற்றாகும். அத்துடன் பாதுகாப்பு படையினர் இன விரோத நோக்குடன் அநீதியாகவும், கொழும்பில் வாழும் தமிழ் சமூகத்துக்கு பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக உலகத்துக்கு காட்ட முயற்சிக்கும் வகையிலானதாகும்.

இதற்கு மாறுபட்ட வகையில் பொலிஸ் கட்டளைக்கோவையின் கீழ் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அவ்வாறான ஆட் பதிவினை அதிக பட்ச சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பொறுப்புடைமை மற்றும் அனைத்து மக்களினதும் இன பாகுபாடு பாராமலும் இவ்வாறான பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக குறிப்பிடப்படும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் மட்டுமன்றி அப்பிரதேசத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

எனவே தமது சொந்த பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் பெறும் இந்த பதிவு நடைமுறையை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு பொது மக்கள் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்துகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீள் குடியமர்வோரின் வாழ்வாதாரத்திற்கு ரூ. 25,000 – அமைச்சரவை அங்கீகாரம்

Check_Pointவட மாகாணத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டவுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு குடும்பதிற்கும் 25 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கியின் அபிவிருத்தி நிறுவனத்தினூடாக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அவசர வடக்கு புனரமைப்பு திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். இந்தத் திட்டம் 2012 டிசம்பர் வரை மேற்கொள்ளப்படும். நிரந்தர வழிவகைகள் மூலம் வருமானம் கிடைக்கும் வகையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொழி லொன்றில் ஈடுபடுவதற்காக இந்த உதவி வழங்கப்படும். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் – இலங்கை அணி பத்து விக்கெட்டால் வெற்றி

முரளிதரனின் ஓய்வுடன் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது மட்டுமல்லாமல் முரளியின் ஓய்வின் பரிசாகவும் சமர்ப்பணம் செய்துள்ளது.

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கை 95 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 2வது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 96 ஓட்டங்களைப் பெற்றது.

அதேநேரம் இலங்கை அணி தொடரை 1-0 என முன்னிலையில் உள்ளது. இப் போட்டியின் ஆட்டநாயகனாக மலிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்
இலங்கை முதல் இன்னிங்ஸ் 520-8
பரணவிதாரன 111, சங்கக்கார 103, ஹேரத் 80 (ஆ- இ) மலிங்க 64 மிதுன் 105-4, சர்மா 3-145

இந்தியா முதல் இன்னிங்ஸ் 276
செவாக்-109, யுவராஜ் சிங் 52, முரளிதரன் 5-63, மலிங்க 2-55
இந்தியா 2வது இன்னிங்ஸ் 228
டெண்டுல்கர் 84, லஷ்மன் 69
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ் 96
பரணவிதாரன 23 (ஆ/இ), டில்சான் 68 (ஆ/இ)

சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது

Balendra_Kலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று இன்று (யூலை 22 2010) சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. கூத்துப்பட்டறை மூன்றாம் அரங்கு என்ற இரு அரங்கியல் அமைப்புகளின் அனுசரணையோடு இம்மேடையேற்றம் இடம்பெற்றதாக அவைக்காற்றுக்கழகக் கலைஞர் வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

250 பேர் வரை இவ்வரங்க நிகழ்வை காண வந்திருந்தனர். தமிழக நாடகக்கலை மற்றும் கலைஇலக்கிய தளங்களில் அறியப்பட்டவர்களான ந முத்துசாமி இந்திரா பார்த்தசாரதி ஞானி ரங்கராஜன் பாரதிமணி சதானந்த மேனன் ரி அண்ணாமலை பிரசன்னா ராமசாமி புரசை கண்ணப்பகாசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் கூத்துப்பட்டறை மாணவர்களாக இருந்து சினிமாவுக்குள் அறியப்பட்டுள்ள பசுபதி கலைவாணி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அரங்கியல் தொடர்பான தம் தேடலுக்காக சென்னை சென்றிருந்த தமிழ் அவைக்காற்றுக்கழகம் அங்குள்ளவர்களின் ஏற்பாட்டில் இம்மேடையெற்றங்களை மேற்கொண்டனர். மூன்றாம் அரங்கு குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நாடகங்களை மேடையேற்றுவதற்கான சகல ஒத்துழைப்பையும் வழங்கியதாகவும் அவர்களது நட்பு தாங்கள் தங்கள் ஊரிலேயே நாடகத்தை மேடையேற்றுவது போன்ற உணர்வையூட்டியதாகவும் வாசுதேவன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கலைப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இப்பயணம் உதவியுள்ளதாகவும் வாசுதேவன் தெரிவித்தார். க பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா மனோ வாசுதேவன் ஆகியோர் அடங்கிய தமிழ் அவைக்காற்றுக்கழகக் குழுவினரே சென்னை சென்றிருந்தனர்.

“போரினால் கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், சொத்துக்களை இழந்தோர் ஆகியோருக்கு இழப்பீடுகள் வழங்கப்படும்” அமைச்சர் டியூ குணசேகர

due.jpgபோர் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பொதுமக்கள், ஊனமுற்றோர். சொத்துக்களை இழந்தோர் ஆகியோருக்கான இழப்பீடுகள் வழங்கப்படும் என புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். போரிலே கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றோர், சொத்துக்களை இழந்தோர் அகியோருக்கு இழப்பீடுகள் வழங்க 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என நேற்று  அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ஆட்கள், ஆதனங்கள் மற்றும், கைத்தொழில்களை புனரமைப்பு செய்யும் அதிகாரசபையிடமும் நிதி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி. வவுனியா அகிய இடங்களில் நடைபெற்ற நடமாடும் சேவைகளில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவை கிராமசேவகர். பிரதேசச் செயலாளர்கள் உறுதியளித்ததன் பின்னர் இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பட்டார்.

அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்- “எமது நடமாடும் சேவையில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உதவி கோரி வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இளம் விதவைகள். இளம் பெண்கள் விடுதலைப்புலிகளால் பலவந்தமாக போராட்டத்தில் இணைத்து விடுவார்கள் என்கிற அச்சத்தில் பெற்றோரினால் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள்.  இவர்களில் 21-22 வயது இளம் விதவைகள், இரண்டு மூன்று குழந்தைகளுடன்  அநாதரவாக உள்ளனர்.  இது மாபெரும் சமூகப்பிரச்சினை ஆகும். புலிகளின் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோரது மனைவிமாரும், எம்மிடம் உதவி கோரி வந்தனர். இந்த விதவைகள் அனைவரும் சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கி வருமானம் ஈட்டிக்கொள்ள வழி செய்து கொடுக்கப்படும்” எனக் கூறினார்.

அமைச்சர் டியூ குணசேகர  அவரது நடமாடும் சேவையூடாக போரின் பின்னான பொதுமக்களின் நிலைமைகளை யதார்த்தமாக விளங்கிக் கொண்டுள்ளார் என்பது அவரது இக்கருத்துக்களிலிருந்து தெரிய வருகின்றது. ஆனாலும், ஏனைய அமைச்சர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும், இழப்பீடுகள் வழங்கப்படுவது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவை தற்போது வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தர்சிகாவின் இல்லத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்! தர்சிகா அடக்கம் செய்யப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு!

Douglas Devanandaவேலணை மருத்தவமாது செல்வி ச.தர்சிகாவின் சடலத்தை எதிர்வரும் 28ம் திகதி தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தர்சிகாவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள கைதடி ஊற்றல் மயானத்திற்கு பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி இரவு தொடக்கம் இப்பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதே வேளை, நேற்றும் (21-07-2010) ஊர்காவற்றுறை நீதிமன்றில் தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பலரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகலில் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தர்சிகாவின் இல்லத்திற்கு விஜயம் செய்து அவரது உறவினர்களிடம் துக்கம் விசாரித்துள்ளதோடு, தர்சிகாவின் மரணம் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடைபெற தான் ஜனாதிபதியிடம் பேச்சுவார்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும்  உறுதியளித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சி பாடசாலைகளுக்கு தொலைபேசிகளை வழங்கியுள்ளார்.

Sritharan_SivagnamTNA_MPதமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளுக்கு சி.டி.எம்.ஏ தொலைபேசிகளை வழங்கியுள்ளதுடன் போரிலே பாதிக்கப்பட்ட சிலருக்கு சைக்கிள்களையும், ஊனமுற்றவர்களுக்கு மூன்று சில்லு சைக்கிள்களையும் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் 50 பாடசாலைகளுக்கும், பளை. கண்டாவளை கோட்டக்கல்வி அலுவலகங்களுக்குமாக 52 சி.டி.எம்.ஏ தொலைபேசிகளை அவர் வழங்கியுள்ளார்.

 ரிஎன் பா உ சிவஞானம் சிறிதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் வழங்கிய கன்னி உரை:

”நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்!” : சிவஞானம் சிறிதரன் பா உ (ரிஎன்ஏ)

திருடர்களிடமிருந்து தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு படையினர் ஒலிபெருக்கியில் அறிவிப்பு!

Kilinochi Signகிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாப்பாக வைக்குமாறு படையினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருகின்றனர். வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் இவ்வாறான அறிவித்தலை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 அதிகமான வீடுகள் அழிவடைந்த நிலையிலும், சில வீடுகள் கூரைகள், கதவுகள், யன்னல்களற்ற நிலையில் வெறும் கட்டங்களாக மட்டும் காணப்படும் நிலையிலும், மக்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலையிலேயே திருடர்கள் தங்களது கைவரிசைகளை காட்டி வருகின்றனர் இந்நிலையில் மிள்குடியேற்றப்பட்ட மக்கள் இரவு நேரங்களில் திருடர்கள் பயம் காரணமாக கண்விழத்திருந்து தங்கள் நித்திரையை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.