17 ஆவது திருத்த விவகாரம்; ஐ.தே.க. தூதுக்குழு பீரிஸுடன் சந்திப்பு

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பான விடயங்கள் குறித்து ஐ.தே.க. தூதுக்குழு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. 17 ஆவது திருத்தம் தொடர்பாக ஐ.தே.க. முன்வைத்த யோசனைகள் குறித்து கலந்தாராய வருகை தருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பிற்கிணங்க நேற்று சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.தே.க. எம்.பி.ஜோசப்மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் சில தயக்கங்களைக் கொண்டிருந்ததாகவும் அந்தக்கவலைகள் தொடர்பாக ஆராய்வதற்காக சந்திப்பை நாடியிருந்ததாகவும் ஜோசப் மைக்கேல் பெரேரா கூறியுள்ளார்.

அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவானது 17 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகளை பரிசீலனை செய்து வருகிறது. நாடு எதிர்நோக்கும் சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே தவிர்க்கமுடியாத தீர்வாக அமையும் என்று ஐ.தே.க. அண்மையில் தெரிவித்திருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *