17 ஆவது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரமாகும். அது குறித்து ரொபேட் ஓ பிளக் பேசத் தேவையில்லை. 17 வது திருத்தம் பற்றி எமது பாராளுமன்றம் கவனிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கு விஜயம் செய்த பிளக் ஜனநாயகம் குறித்தும் 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்தும் கருத்து வெளியிட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதலளித்த அவர், இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 17 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டுமென்றார்.