பஸ் கட்டணங்களை தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் அதிகரிக்காத அதேவேளை, மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை போக்குவரத்துச் சேவைக்கான அனுமதிக் கட்டணங்கள் உட்பட ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளதால் நாங்கள் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கவலைதெரிவிக்கப்படுகிறது.
அனுமதிக்கட்டண அதிகரிப்பை நீக்குவதாக எதிர்வரும் 26 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் எமக்கு மேல் மாகாண சபை அறிவிக்காதவிடத்து எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சேவை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாரஹென்பிட்டியிலுள்ள அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் சங்கத் தலைவர் கெமுனு விஜயரட்ண பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.