ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்குத் திரும்பி வந்திருந்த நீல் பூனே மீண்டும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சொந்த விடுமுறையில் நீல் பூனே சென்றிருப்பதாகவும் அவர் கொழும்புக்குத் திரும்பி வருவார் என்றும் ஐ.நா. வாட்டாரமொன்று தெரிவித்தது. கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்துக்கு வெளியே அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து கலந்தாலோசனை நடத்துவதற்காக நியூயோர்க்கிற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நீல் பூனேஅழைக்கப்பட்டிருந்தார்.