கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாப்பாக வைக்குமாறு படையினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருகின்றனர். வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் இவ்வாறான அறிவித்தலை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகமான வீடுகள் அழிவடைந்த நிலையிலும், சில வீடுகள் கூரைகள், கதவுகள், யன்னல்களற்ற நிலையில் வெறும் கட்டங்களாக மட்டும் காணப்படும் நிலையிலும், மக்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலையிலேயே திருடர்கள் தங்களது கைவரிசைகளை காட்டி வருகின்றனர் இந்நிலையில் மிள்குடியேற்றப்பட்ட மக்கள் இரவு நேரங்களில் திருடர்கள் பயம் காரணமாக கண்விழத்திருந்து தங்கள் நித்திரையை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.