29

29

தடம்புரண்ட ரயில் மீது நக்ஷலைட்டுக்கள் தாக்குதல்; பயணிகள் ரயில் மீது – சரக்கு ரயில் மோதி 75 பேர் பலி

naxalattack.jpgமேற்கு வங்கத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலொன்று நேற்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத்தாக்குதலுக்கு நக்ஷலைட்டுகளுக்கு சார்பான அமைப்பொன்று உரிமை கோரியுள்ளது. நேற்று நள்ளிரவு 1.35 அளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலினால் பயணிகள் ரயில் தடம்புரண்டது. இந்த வேளையில், இந்த வழியால் வந்த சரக்கு ரயில் வண்டியொன்று மோதியதிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து மும்பை குர்லாவுக்கு நேற்றிரவு ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 1.35 மணிக்கு அந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சரக்பூர் அருகே சர்திகா ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இதனால் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டு விழுந்தன. அந்த பெட்டிகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டவாளத்தின் மீது சரிந்து கிடந்தன சரக்கு ரயில், கவிழ்ந்து கிடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் நொறுங்கின. சரக்கு ரயிலும் கவிழ்ந்தது.

கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த கோர சம்பவம் நடந்தது. ரயில் பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதிய போது அந்த பகுதியே குலுங்கியது. ஏற்கனவே காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை சரக்கு ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர். காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகள் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர்கள் மூலம் சரக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிக காயம் அடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட பயணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே துறை அமைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவராக அரவிந்த டி சில்வா நியமனம்

aravinda-de.jpgஇலங்கை கிரிக்கெட் அணித் தெரிவுக் குழுத் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அமல் சில்வா, ரஞ்சித் பெர்ணாண்டோ, அஸ்கர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குப்பைத்தொட்டியிலிருந்து சிசு மீட்பு; பிரசவித்து வீசிய தாயும் கைது

மஸ்கெலியா – லக்கம் கடை வீதியில் குப்பைத்தொட்டி ஒன்றிலிருந்து நேற்றுக் காலை சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. காலை 5.45 அளவில் கடைவீதியில் குப்பை கொட்டுவதற்காகச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலையடுத்து மஸ்கெலியா பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சிசுவை மீட்டெடுத்தனர். சிசு எறியப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு பிறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குப்பைத் தொட்டியில் சிசுவின் அழுகைச் சத்தத்தைக் கேட்டவர் ஏனையவர்களுக்கும் கூறியுள்ளார். எனினும், உயிருடன் கிடந்த சிசுவை காலை 6.45 அளவில் பொலிஸார் வந்து மீட்டு மஸ்கெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிசு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. சிசு தேகாரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, இந்தச் சிசுவைப் பிரசவித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்த தாயை நேற்றுக் காலை 9 மணியளவில் பொலிஸார் கண்டு பிடித்தனர். குப்பைத் தொட்டியிலிருந்து குறித்த ஒரு வீடுவரை உதிரச் சொட்டுகள் காணப்பட்டதை அடிப்படையாக வைத்து அந்த இளம் தாய் கண்டறிப்பட்டாள்.

யாழ். பெரிய பள்ளியில் மீண்டும் தொழுகை – அஸ்வர் எம்.பி. மகிழ்ச்சி

ahm-azwar.jpgஇருபது ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெறுவது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு பெரும் மறுமலர்ச்சியென ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்ப்பாண சீமை- தமிழ் முஸ்லிம் உறவை மேலும் பலப்படுத்தும் முஸ்லிம்களும் தமிழர்களும், அந்நியோன்னிய உறவு பூண்டு நெருங்கிய தோழமை பூண்டு வர்த்தக கல்வித் துறையில் மட்டுமன்றி இன்னும் பல துறைகளில் இந் நாட்டில் ஒரு மகோன்னத இடத்தை பிடித்திருந்தனர். துரதிஷ்டவசமாக யாழ். முஸ்லிம்களை உடுத்த துணியுடன் இரவோடு இரவாக சொந்த மண்ணிலிருந்து புலி பயங்கரவாதிகள் துரத்தியடித்தனர். நாட்டின் பல பாகங்களிலும் சிதறுண்டு, அல்லலுற்று அகதி முத்திரையை தம் நெற்றியில் குத்திக்கொண்டவாறு வாழும் நிர்க்கதிக்கு ஆளாக்கப்பட்டனர்.

‘ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிப் பயங்கரவாதத்தை அழித்தொழித்து முழு நாட்டிலும் சமாதானத்தை ஏற்படுத்திய பிறகு யாழ் முஸ்லிம்களின் வாழ்வில் தீனுல் இஸ்லாத்தின் சுடர் இப்போது மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அதான் ஒலியின் இனிய நாதத்தை செவியுறுவதற்கும் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபடுவதற்கும் யாழ் முஸ்லிம்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இரத்தினபுரியில் மண்சரிவு அச்சுறுத்தல்

மழை பெய்யாத போதிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ். எம். பி. பி. அபேரட்ன நேற்றுத் தெரிவித்தார்.