20

20

அல் ஜெஸிராவை பலஸ்தீன அரசாங்கம் தடை செய்யவில்லை; சட்ட நடவடிக்கைக்கு முயற்சி – பிரதமர் சலாம்பயாத்

அல் ஜெஸிரா தொலைக்காட்சி சேவை ஒளிபரப்புக்கு அனுமதியளிக்கப்படுமெனத் தெரிவித்துள்ள பலஸ்தீன அரசாங்கம் இச் சேவையை முன்னர் தடைசெய்ய வில்லையென்றும் தெரிவித்துள்ளது.

அல் ஜெஸிராவின் தொலைக்காட்சி ஆதாரமில்லாத செய்தியை ஒளிபரப்பியமை தொடர்பாக அந்நிறுவனத்துக் கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மெனவும் பலஸ்தீன அரசாங்கம் அறிவித்துள்ளது. பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் மற்றும் அவரது நிர்வாகம் தொடர்பாக அல் ஜெஸிரா மோசமான செய்தியை கடந்த வாரம் ஒளிபரப்பியது.

இஸ்ரேலுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் விசுவாசமாக மஃமூத் அப்பாஸ் நடந்து கொள்வார் என்பதே அந்தச் செய்தியாகும். இச் செய்தி வெளியான பின்னர் அல் ஜெஸிரா தொலைக்காட்சிச் சேவை பலஸ்தீனத்தில் தடை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இது சம்பந்தமாக பலஸ்தீனப் பிரதமர் சலாம் பயாத் கூறிய தாவது:-

அல் ஜெஸிராவுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். அதைத் தடை செய்வதற்கான முயற்சிகளும் தொடரலாம். ஆனால் இதுவரை அல் ஜெஸிரா ஒளிபரப்பு பலஸ்தீனில் தடை செய்யப்படவில்லையெனக் கூறினார். தொடர்பாடல் அமைச்சர் இது பற்றிக் கூறுகையில், மேற்குக் கரை மக்களை அல் ஜெஸிரா தவறுதலாக வழிநடத்த முற்படுவதாகவும் இந்தச் செய்தியை வாசித்த ஊடகவியலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தொடராக ஆயுர்வேத சிகிச்சை – ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் நிறுவவும் திட்டம்

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு தொடராக ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்துடன் கூடியதாக வட பகுதியில் பல சித்த ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்கப்படும், என சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் வசிக்கும் 780 குடும்பங்களுக்கு இலவசமாக மண் பாத்திரங்களை பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாடு முழுவதும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. மக்களனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார் என சிலர் கூறி வருகின்றனர். எமது நாட்டில் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று கூறுவோரே இவ்வாறு கூறிவருகின்றனர். பயங்கரவாதத்தினால் நன்மை பெற்றவர்களே இவ்வாறு பொய்யான பிரசாரங்களைப் பரப்பி வருகின்றவர்களாவர். சிறுநீரக நோயினால் வருடாந்தம் பெருமளவு உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய அனுராதபுர மாவட்ட வாழ் மக்களுக்கு இலவசமாக மண்பாத்திரங்கள் சுதேச வைத்தியத்துறை அமைச்சினூடாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. அநுராதபுர மாவட்டத்தில் வாழும் எண்பதாயிரம் (80000) குடும்பங்களுக்கு இதுவரையில் மண் பாத்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.