அல் ஜெஸிராவை பலஸ்தீன அரசாங்கம் தடை செய்யவில்லை; சட்ட நடவடிக்கைக்கு முயற்சி – பிரதமர் சலாம்பயாத்

அல் ஜெஸிரா தொலைக்காட்சி சேவை ஒளிபரப்புக்கு அனுமதியளிக்கப்படுமெனத் தெரிவித்துள்ள பலஸ்தீன அரசாங்கம் இச் சேவையை முன்னர் தடைசெய்ய வில்லையென்றும் தெரிவித்துள்ளது.

அல் ஜெஸிராவின் தொலைக்காட்சி ஆதாரமில்லாத செய்தியை ஒளிபரப்பியமை தொடர்பாக அந்நிறுவனத்துக் கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மெனவும் பலஸ்தீன அரசாங்கம் அறிவித்துள்ளது. பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் மற்றும் அவரது நிர்வாகம் தொடர்பாக அல் ஜெஸிரா மோசமான செய்தியை கடந்த வாரம் ஒளிபரப்பியது.

இஸ்ரேலுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் விசுவாசமாக மஃமூத் அப்பாஸ் நடந்து கொள்வார் என்பதே அந்தச் செய்தியாகும். இச் செய்தி வெளியான பின்னர் அல் ஜெஸிரா தொலைக்காட்சிச் சேவை பலஸ்தீனத்தில் தடை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இது சம்பந்தமாக பலஸ்தீனப் பிரதமர் சலாம் பயாத் கூறிய தாவது:-

அல் ஜெஸிராவுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். அதைத் தடை செய்வதற்கான முயற்சிகளும் தொடரலாம். ஆனால் இதுவரை அல் ஜெஸிரா ஒளிபரப்பு பலஸ்தீனில் தடை செய்யப்படவில்லையெனக் கூறினார். தொடர்பாடல் அமைச்சர் இது பற்றிக் கூறுகையில், மேற்குக் கரை மக்களை அல் ஜெஸிரா தவறுதலாக வழிநடத்த முற்படுவதாகவும் இந்தச் செய்தியை வாசித்த ஊடகவியலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *