18

18

முல்லைத்தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்துவரப்பட்ட மக்கள் தொகை 1212 . கொழும்பு, கண்டி ஆஸ்பத்திரிகளுக்கு 28 பேர் அனுப்பிவைப்பு

trico-hospital.gifமுல்லைத் தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்து வரப்பட்ட வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த 1212 பொதுமக்களில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைத்து 306 பேருக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 28 பேர் விசேட சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கும் கண்டி போதனா ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 11 இலிருந்து பெப்ரவரி 16 வரை திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களில் இதுவரை இருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். ஒருவர் வேலாயுதம் சிவகுமார். மற்றவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரிமுகாங்களுக்கு திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட வன்னிப்பிரதேசமக்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.02.2009), நண்பகல் 12 மணி வரை அனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

17.02.2009, நண்பகல் 12 மணி வரையான நிலைவரப்படி வெளிமாவட்டங்களிலுள்ள அரச ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பிரதேச மக்களின் எண்ணிக்கை வருமாறு;

கந்தளாய் ஆஸ்பத்திரி 84, தம்பலகமம் 33, பொலன்னறுவ 86, திருகோணமலை ஆஸ்பத்திரி 678, திருமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரி83,

முல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 16  திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ள வன்னிப் பொதுமக்களின் பெயர், விபரங்கள் வருமாறு;

1.சுனிதா, குமுழமுனை, முல்லைத்தீவு (வயது 17)
2. ஆர். கமலாவதி, தாமரைக்கேணி, முள்ளியவளை(வயது47)
3. வி. ரஜனிகாந்த்,ஓடந்தன்குளம், முல்லைத்தீவு(வயது 27)
4. வி.பாலச்சந்திரன்,ஜமுனை, சுழிபுரம் கிழக்கு(வயது 47)
5.சொக்கலிங்கம்,இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 58)
6. சொக்கலிங்கம் பராசக்தி, தட்சணமருதனாமடு,(வயது 56)
7. மாரி, துணுக்காய், மல்லாவி,(வயது 37)
8. அடையாளம் தெரியாதவர், கண்டிக்கு மாற்றம்
9. ஏ.மோகனசுதாகர், உதயநகர், கிளிநொச்சி, (வயது 23)
10. அடையாளம் தெரியாதவர்
11. கே. சிவபாக்கியம், முழங்காவில்,(வயது 74)
12. ஷீபா,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 33)
13. ஜே. அபிலாஷி, மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 01)
14. ஆர். புனிதமலர், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது23)
15. சுபிதா, அக்கராயன்குளம்,(வயது 21)
16. யதுசன், அக்கராயன்குளம், (வயது25)
17. கே. பிரதீபன், (வயது 09)
18. ஆர். ஜெயலட்சுமி, பளை, கிளிநொச்சி,(வயது 51)
19.கே. தனுஷியா, விவேகானந்தா நகர், கிளிநொச்சி,(வயது22)
20. சுபாஜினி அன்ரனிராஜா, திருகோணமலை,(வயது 23)
21. டினுஷன்,திருகோணமலை,(வயது 05)
22. டிலுஷா, திருகோணமலை,(வயது 02)
23. கே.சுகதாஸ், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 23)
24. பி.கதிரவேலு,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 75)
25. பி. ஆனந்தன் ,விசுவமடு,(வயது63)
26.சி. சசிதரன், தம்பிரா, பூநகரி,(வயது 20)
27.ராமஜயலட்சுமி,ஆண்டான்குளம், அடம்பன்,(வயது 55)
28. பி.லாவண்யா, முள்ளியவளை,முல்லைத்தீவு,(வயது 15)
29.சிவகுமார், யாழ்ப்பாணம்,
30.எம். பத்மாதேவி, இராமநாதபுரம்,(வயது39)
31.சிவானந்த சர்மா, பூநகரி,(வயது 35)
32. பி. சுகந்தினி, மாமல்லபுரம்,(வயது 39)
33. என். சண்முகசுந்தரம், புத்தூர், புளியங்குளம், (வயது 51)
34. ஏ. சாந்திலா, நடன்குடியிருப்பு, விசுவமடு, (வயது51)
35. பி. சிவஞானம், தம்பளை, கோணாவில்,(வயது 55)
36.எஸ். இராஜகுமார், பளை, கிளிநொச்சி,(வயது 44)
37 கே. நடராஜா, உருத்திரபுரம், கிளிநொச்சி
38. கலைவாணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது32)
39. கிருஷ்ணகுமார். வல்லியபுரம், புதுக்குடியிருப்பு,(வயது 30)
40. சந்தியாமேரி, ஜோசப், (வயது 65)
41. ஜே. இராமச்சந்திரன், மாசார் பளை, (வயது64)
42. ஜனூசன், மாசார் பளை,(வயது05)
43. ரி. ஜனரூபன், நட்டாங்கண்டல், (வயது34)
44. ஜி. தர்ஷியா, நட்டாங்கண்டல், (வயது04)
45. இராஜேஸ்வரி, இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 39)
46. ஏ. பார்வதி, பரந்தன், கிளிநொச்சி, (வயது 61)
47. டிலானி, பரந்தன், கிளிநொச்சி,(வயது 01)
48.அருளானந்தன், வட்டாரம் 9, புதுக்குடியிருப்பு, (வயது67)
49. ஏ.பிலோமினா, புதுக்குடியிருப்பு (வயது64)
50. கே. தவராசா, திருநகர், கிளிநொச்சி, (வயது47)
51. சுலக்ஷன், ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 12)
52. எஸ். சுபாகரன், கிளிநொச்சி, (வயது39)
53. ரி.தண்டாயுதபாணி, வட்டுவடக்கு, சித்தன்கேணி,(வயது74)
54. செபமாலை,(வயது 73)
55. எம். மைக்கல்ராஜ், வலையன்மடு,முல்லைத்தீவு,(வயது 21)
56.என்.சுபைதா, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 30)
57. காவ்யா, செம்மலை, முல்லைத்தீவு
58. வசந்தராணி, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 32)
59. எம்.கே. கேதீஸ்வரன், பெரியதம்பனை,வவுனியா,(வயது 52)
60. ஆர். சசிகலா, ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 35)
61. ராபேக்கா,மலையமடு,(வயது20)
62. ரவிக்குமார், ஆனந்தபுரம் கிளிநொச்சி,(வயது 36)
63. ஆர். பாலகிருஷ்ணா, விசுவமடு, முல்லைத்தீவு,(வயது 63)
64.லெனின் குமார், முழங்காடு, கிளிநொச்சி,(வயது 33)
65. எல். விதுஷானி, (வயது11)
66. கே.ஜோர்ஜர். மாதலை, முல்லைத்தீவு.(வயது 43)
67. நடிமலர், வவுனிக்குளம், முல்லைத்தீவு,(வயது44)
68. அடையாளம்தெரியாது
69.எம். மதுமிதன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)
70. எம். புஷ்பமலர், மாதலை, முல்லைத்தீவு,(வயது 39)
71. எல். மைதிலி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 33)
72. விந்துஜன், மாதலை, முல்லைத்தீவு,(வயது 05)
73. விழியரசு, மாதலை,முல்லைத்தீவு,(வயது 1 1/2)
74. பி.பூசன், ஆல்காடி, மன்னார், (வயது 63)
75, ஜே. டேனோயன், யூனிட் 05, தர்மபுரம்,(வயது 15)
76. எஸ்.நாகவர்த்தினி,பரந்தன், கிளிநொச்சி,30
77. நாகவதனி, பரந்தன், கிளிநொச்சி,25
78. என்.சிவகுமார்,பரந்தன், கிளிநொச்சி,36
79. எஸ்.குகஜனி, பரந்தன், கிளிநொச்சி,05
80. ஏ.மரியநாயகம், தர்மபுரம்,யுனிட் 5 கிளிநொச்சி,60
81. கே.கணேஸ் வவுனிக்குளம், முல்லைத்தீவு,63
82. ஆர்.நவசீலன், தெல்லிப்பழை,31
83. வி.லச்சுமி, இயக்கச்சி கிளிநொச்சி,55
84. யோகேஸ் கந்தகன்,கப்பமடு மன்னார்,20
85. கே.தரணி,பாலி நகர் வவுனிக்குளம்,09
86. ஏ.ஜகராஜன் மல்லாவி, பாலிநகர்,40
87. பி.ஸ்ரீவன்னி பாலைநகர், மல்லாவி,43
88. பி.ரவிசியா பாலைநகர் மல்லாவி,08
89 ஜே.கிவிதன் பாலை நகர், மல்லாவி,06
90. எம்.இராசம்மா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,69
91. சி.பாஸ்கரன், வட்டக்கந்தன், மன்னார், 33
92. ரி.மலர்விழி, கிளிநொச்சி,27
93. ஆர்.தவசீலன், மாதலை, முல்லைத்தீவு, 30
94. ரொபர்ட் ராஜா, பொக்கணை,30
95. பி.இராசம்மா, தேவிபுரம்,66
96. கிருபாகரன்,ரத்னபுரம்,கிளிநொச்சி,26
97. அடையாளம் தெரியவில்லை
98. எஸ்.நடராஜன்,28 விவேகாநந்தர் நகர் மேற்கு, கிளிநொச்சி, 52
99. அடையாளம் தெரியவில்லை மரணம்
100. ரி.தியாகலிங்கம்,நட்டாங்கண்டல்,மாங்குளம்,50
101. கே.ராமாஜி,தர்மபுரம்,71
102. புன்னியவதி, தேவிபுரம்,58
103. ஜே.அனிலவன்,தேவிபுரம்,1.5
104. ஜே.வாணி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,32
105. ஆர்.ஜனனி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,06
106. ஆர்.ராஜிதா,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,26
107. எம்.மாரியப்பன்,156 ஆவது மைல்,கிளிநொச்சி,63
108. கவில்தாஸ்,கல்வலி,புதுக்குடியிருப்பு,10
109. குமாரதாஸ், கல்வலி,புதுக்குடியிருப்பு,41
110. ரி.வடிவேலு,404 7ஆவது ஒழுங்கை தர்மபுரம்,77
111. யோகராஜ்,மாதலை,முல்லைத்தீவு,55
112. கார்த்திகா,வல்லாங்குளம், முல்லைத்தீவு,21
113. ஜயராணி,முல்லைத்தீவு,50
114. கே.பிரதீபா,தேவிபுரம்,முல்லைத்தீவு,18
115. கே.ராஜேஸ்வரி
116. எம்.லட்சுமி,கிளிநொச்சி,58
117. எஸ்.கசிகரன், வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,07
118. எஸ்.சிவகௌரி,வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,32
119. சாம்பவி,07
120. வீ.சரஸ்வதி,தேவிபுரம்,முல்லைத்தீவு,23
121. நித்ரன்,மாதலை,முல்லைத்தீவு,11
122. கே.பரமேஸ்வரி,59
123. ஏ.புவியரசன்,பூக்கானல்,கிளிநொச்சி
124. எம்.புஸ்பவதி,கிளிநொச்சி,58
125. ஐ.தம்பிராஜ்,தர்மபுரம்,53
126.வி.இராசையா,கிளிநொச்சி,60
127. அபிஹுதன்,மாதலை,முல்லைத்தீவு,34
128. கே.அபிராஜ்,மாதலை,முல்லைத்தீவு,05
129.அபிஷங்கர்,மாதலை,முல்லைத்தீவு,03
130. வி.பவளம்,மாதலை,முல்லைத்தீவு,68
131. கே.வசந்தகுமார்,மாதலை,முல்லைத்தீவு,34
132. ஏ.வேலாயுதம்,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,73
133. செபஸ்தியன் குரூஸ்,மன்னார்,45
134. வை.சுரேந்திரன்,சாவகச்சேரி,29
135. ஹேமா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,25
136. பிரிதா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,2.5
137. ஆர்.சுதீஸ்வரன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,28
138. கே.கிரிசாந்தன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,13
139. சுரேந்தினி,கொக்கன,அடக்காடு, முல்லைத்தீவு,03
140. கே.பரசாவதி,141. கே.சுரேந்திரன்,உடையார் கட்டு தெற்கு,முல்லைத்தீவு ,07
142. எஸ்.நிர்மலா தேவி,மாதலை,முல்லைத்தீவு,37
143. கம்சிகா,மாதலை,முல்லைத்தீவு,04
144. கே.ரவீந்திரன்,மட்டுவில் மேற்கு,பூநகரி,52
145. ஏ.நவரசி,கிளிநொச்சி,33
146. கே.தமிழ்ச்செல்வி,கிளிநொச்சி,07
147. கே.தமிழ்பிரியன்,கிளிநொச்சி,03
148. எஸ்.சிவசந்தியா,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,09
149. எஸ்.தர்சினி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,02
150. எஸ்.கௌசலா தேவி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,28

மக்கள் தொலைக்காட்சி – யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை

makkaltv-1802.jpgதமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இலங்கைப் படையினரால் நேரடியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்குடா நாட்டின் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகின்ற தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகள் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் மக்கள் டிவி நிகழ்ச்சிகளை மட்டும் மறு ஒளிபரப்புச் செய்வதற்கு ராணுவம் தடை விதித்துள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை உடனுக்குடனும் மக்கள் டிவி காட்டுவதே ராணுவத்தின் கோபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.  இந்தப் பிரதேசத்தில் சன் டிவி மறு ஒளிபரப்பு தொடர்ந்து நடக்கிறது.

இது தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் அ. சிவகுமார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை, பலவிதமான ஆய்வுகளும், அமைப்புகளும் பாராட்டியுள்ளன. ஊடகநெறியை மீறாமல் உலகத் தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மைநிலையை மட்டும் விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால், இலங்கை இராணுவம் மக்கள் தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது.

மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை நெரித்துவரும் இலங்கை அரசின் சர்வாதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி.பி.சி. உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் மக்கள் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஒரு சான்றாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளத இலங்கையில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குநர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும், சக ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்யவேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும், ஊடகநெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சு.கவில் இணைய கருணா தீர்மானம். கிழக்கில் தனது பணிமனைகளை சு.க.

karuna-mp.jpgகிழக்கு மாகாணத்தில் கருணா அம்மான் தலைமையில் இயங்கும் அனைத்து பணிமனைகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகமாக பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளன.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கருணா அம்மான் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படுமென முரளிதரன் எம்.பி யின் பேச்சாளர் கமலநாதன் தெரிவித்தார்.

‘நானும் கட்சியின் மூத்ததலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியில் சேரப்போகிறோம்’ என கருணா அம்மான் இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நானும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் சுதந்திரக் கட்சியில் சேரப் போகிறோம். இதற்காக ஒருவாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச இருக்கின்றேன். அதன் பிறகு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அலுவலகம் அனைத்தையும் சுதந்திரக் கட்சி அலு வலகமாக மாற்றுவோம் என முரளிதரன் எம். பி. கூறியதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.சி.ஆர். சி வதிவிட பிரதிநிதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

red-cross-srilanka.jpgசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பவுல் கெஸ்டெல்லா இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் நேற்றுக்காலை இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வரும் சிவிலியன்கள் தொடர்பாகவும் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளதுடன் நிவாரணக் கிராமங்களில் இடம்பெயர்ந்தவர்களை தங்க வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியாவுக்கான இரண்டு உதவி பிரதிநிதிகளுக்கும், வன்னி பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றுக்காலை இடம் பெற்றுள்ளது.

வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புலிகளின் பிடியிலிருந்து தப்பி பாதுகாப்புத் தேடிமோதல் தவிர்ப்பு பிரதேசத்தை நோக்கி வரும் சிவிலியன்கள் தொடர்பாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

புலிகள் கடல்வழியாக தரையிறங்குவதைத் தடுப்பதற்கு சாலை கடற்கரையில் படையினரின் ஷெல் தளம்

sri-lanka-navy.jpgமுல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகள் கடல் வழியாகத் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாமென இராணுவ புலனாய்வுத்துறை எச்சரித்ததைத்தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய தளங்களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக “லக்பிம’ ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு; சாலை கடற்கரை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியினர் மீது விடுதலைப்புலிகள் கடல் வழியாகத் தரையிறங்கி தாக்குதல் மேற்கொள்ளலாமென கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறை எச்சரிக்கையினை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஷெல் தளங்களை நிறுவியுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் பரப்பளவு குறைந்து வருவதனால் 57 ஆவது படையணியையும் பின்னிருக்கை படையணியாக பேணுவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த படையணி விசுவமடு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளது. புதுக்குடியிருப்புக்கு தென்பகுதியில் 59 மற்றும் 53 ஆவது டிவிசன்களும், விசேட படையணி04 மற்றும் விசேட படையணி 08 என்பன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏ36 வீதிக்கு வடக்கே 55 மற்றும் 58 ஆவது படையணிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

புதுக்குடியிருப்பு தென்புறம் உள்ள படையினரின் நிலைகளை ஊடறுத்து காடுகளுக்குள் உட்புகுவதே விடுதலைப்புலிகளின் நோக்கம்.அது நிறைவேறினால் இராணுவம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளலாமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வன்னியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் லெப்.கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றாலியன் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  முல்லைத்தீவின் கிழக்கு பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 59 ஆவது படையணி நகர்வை மேற்கொண்டிருந்தது. இப்படையணியினர் மீது விடுதலைப்புலிகள் கடந்த 1 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் போது படையினர் தமது முன்னணிநிலைகளை 3 கிலோ மீற்றர் தொலைவுக்கு பின்நோக்கி நகர்ந்திருந்தனர். படையினரை ஒட்டுசுட்டான் பகுதிவரை பின்தள்ளுவதே விடுதலைப்புலிகளின் நோக்கம்.

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றாலியன் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இச்சமரின் போது மேஜர் கமல் நாணயக்கார உட்பட 33 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. உக்கிரமான சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கோப்ரல் புஷ்பகுமார என்ற சிப்பாய் கிளைமோர் குண்டு ஒன்றுடன் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு மாலைதீவு அரசு உதவி

srilanka_displaced_.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதற்கு மாலைதீவு அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஒரு தொகையான படுக்கை விரிப்புகள், கூடாரங்கள், அப்பியாசப் புத்தகங்கள், நுளம்பு வலைகள், சப்பாத்துக்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள் இதில் அடங்கும். மாலைதீவு அரசாங்கம் இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களிலும் பல்வேறு உதவிகளை வழங்கி வந்துள்ளது.

இந்தப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் அலி ஹுசைன் டீடி இந்தப் பொருட்கள் அடங்கிய ஆவணத்தை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரணை சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் நேற்று வழங்கினார்.

மக்களை பலவந்தமாக படைக்கு சேர்ப்பதில் புலிகள் தீவிரம்; 14 வயதுக்கு

st.jpgபொது மக்களை பலவந்தமாகப் படைக்குச் சேர்ப்பதை புலிகள் இயக்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதிலும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்போது இலக்கு வைக்கப்படுவதாகவும் ‘யுனிசெப்’ நிறுவனம் குற்றஞ் சாட்டியுள்ளது.

இதனால் மோதல்களில் சிறுவர்கள் கொல்லப்படுவதும், காயமுறுவதும் அதிகரித்துள்ளதாகவும் ‘யுனிசெப்’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுஹமலே கவலை தெரிவித்துள்ளார்.  சிறுவர்கள் நேடியான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் பாரிய உயிராபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் ‘யுனிசெப்’ விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுவர்களைப் பலவந்தமாகப் படைக்குச் சேர்ப்பது சகித்துக்கொள்ள முடியாதது என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

“2003 ஆம் ஆண்டிலிருந்து 2008 இறுதிவரை ஆறாயிரம் சிறுவர்களை புலிகள் படைக்குச் சேர்த்திருந்தனர். சிறுவர் போராளிகள் உடல் ரீதியான இம்சைகளுக்கு உள்ளாவதுடன், அதிர்ச்சியடையும் வேளைகளில் மரணத்தைத் தழுவுகின்றனர். அவர்களின் பிள்ளைப் பராயத்தில் நம்பிக்கைக்குப் பதிலாக அச்சமே குடிகொண்டிருக்கிறது” என்று யுனிசெப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் காயமடைந்து வருவதாக எச்சரித்துள்ள யுனிசெப் நிறுவனம், இவ்வாறு காயமுற்ற சிறுவர்கள் கடந்தவாரம் அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

“இந்தப் பிரச்சினையில் சிறுவர்களே கொல்லப்பட்டும், காயமுற்றும், படைக்குச் சேர்க்கப்பட்டும், இடம்பெயர்ந்தும், தனிமைப்படுத்தப்பட்டும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். மோதல்கள் காரணமாக அவர்களின் நாளாந்த தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ள யுனிசெப் பிரதிநிதி மோதல்களிலிருந்து பொதுமக்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும் என்று புலிகள் இயக்கத்தையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தியுள்ளது.

“மோதல் பிரதேசத்திலிருந்து வெளியேறிவந்துள்ள 30 ஆயிரம் மக்களுக்கு யுனிசெப் நிறுவனமும் ஏனைய ஐ.நா. அமைப்புகளும் இணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

எனவே இவ்வாறு துரிதமாக உதவி பெறக்கூடிய பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அனைத்துப் பொதுமக்களும் வர வேண்டியது மிக முக்கியமானது” என்றும் யுனிசெப் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கைகள் அதிகம் – அநுர பிரியதர்சன யாப்பா

yappa.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதற்கான கோரிக்கைகள் அதிகம் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் யாப்பா இவ்வாறு கூறினார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தடைசெய்யப்படவேண்டுமென தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி தெரிவித்திருக்கும் நிலையில் அதுபற்றி அரசாங்கத்தினால் ஏதேனும் கலந்தாலோசனை செய்யப்பட்டிருக்கிறதா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா;

“அவ்வாறானதொரு விடயம் பற்றி அரசாங்கத்தினால் எந்தக் கலந்தாலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இதற்கு அதிக கோரிக்கைகள் இருக்கின்றன’ என்று கூறினார்.

முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களுக்கு 40 மெற்றிக்தொன் உணவு பொருட்கள்

ship-10022009.jpgபுலிகளின் பிடியில் சிக்கியுள்ள முல்லைத்தீவு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடல்வழி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, முதற்கட்டமாக 40 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நேற்று  கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாகக் கப்பல் மூலம் அனுப்பி வைக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில், முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று (நேற்று) ஜனாதிபதி செயலகத்தில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.

எனது பங்குபற்றலுடன், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரத்ன, பாதுகாப்புப் படைப் பிரிவின் உயர் அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவில் புலிகளால் நிலக் கண்ணிவெடிகள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு தரைமார்க்கமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு கடந்த ஓரிரு வாரங்களாக தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பை கருத்திற் கொண்டு தரைவழியாக அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்க முடியாமல் போனது. இதனைத் தவிர உணவுத் தட்டுப்பாடுகளோ வேறு சிக்கல்களோ எமக்கு இருக்கவில்லை.

இந் நிலையில் சில ஊடகங்கள் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாக தவறான பிரசாரங்களையும் மேற்கொண்டிருந்தன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களாகும். முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களும் எமது நாட்டு பிரஜைகளே. அவர்கள் எமது தமிழ் சகோதரர்கள். புலிகளின் செயற்பாடுகளால் எந்த தடைகள் வருகின்றபோதிலும் அந்த மக்களுக்கு கடல் வழியாகச் சரி அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் தகவல்களுக்கும், வேண்டுகோளுக்கும் அமைய ஆயிரத்து எண்ணூற்றியொரு (1,801) மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை முல்லைத்தீவு மக்களுக்கென அரசாங்கம் தரைவழியாக அனுப்பி வைத்துள்ளது.

இந் நிலையில் கப்பல் மூலம் கடல் வழியாக முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப தீர்மானித்தமை இதுவே முதற் தடவையாகும். இன்று இரவு 8 மணியளவில் இந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கி புறப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க இங்கு உடன்பட்டனர்.

இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் பொறுப்பேற்பார். அவர் இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க, கூட்டுறவு அமைப்புக்கள், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுப்பார். முதற் கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள 40 மெற்றிக் தொன் அத்தியாவசிய பொருட்களில் அரிசி, சீனி, பருப்பு, பால் மற்றும் குழந்தைகளுக்கான பால் மா போன்ற பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தவிர இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் சுகாதார நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுப்பதற்கும் விரிவாக ஆராயப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்தக் கப்பல் திரும்பும் போது காயமடைந்த அப்பாவி தமிழ் மக்களையும் ஏற்றி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் ஆலோசகர் ஏ. சி. எம். ராசிக் உட்பட முக்கியஸ்தர்களுக்கு கலந்து கொண்டனர்.

அரசியலமைப்பை மாற்றவேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த கருத்து – அமைச்சர் நிமல்

nimal-siripala.jpgநடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்களைப் போன்று பொதுத் தேர்தலிலும் மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினால் அது நாட்டின் எதிர்காலத்தை சுபீட்சமாக மாற்ற பெரிதும் உதவும். தற்பொழுதுள்ள அரசியலமைப்பை மாற்றவேண்டும் என்றே மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

ஐ.ம.சு. முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (17) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியல் யாப்பினால் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும்.

 பொதுத் தேர்தலில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்தால் யாப்பை மாற்றி சிறந்த தேர்தல் முறையை கொண்டு வருவோம். நாடு எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். பெரும்பான்மை பலம் கிடைத்தாலும் நாம் ஒருபோதும் சர்வாதிகார ஆட்சி நடத்தமாட்டோம் என்றார்.

சுதந்திர தேர்தல் ஆணைக்குழு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும் என ஐ.தே. கவும் ஜே.வி. பியும் கோரி வருகின்றன.  கடந்த 5 தசாப்தங்களாக தேர்தல் திணைக்களத்தினூடாகவே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல்களே நடத்தப்பட்டுள்ளன.

நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்த முடிந்தது குறித்து பெருமைப்படுகிறோம். எனவே எமது வெற்றிக்கு யாரும் சேறு பூச முடியாது.

ஐ.தே.க. வாக்களிப்பு நிலையங்களுக்கு தமது பிரதிநிதிகளைக் கூட நியமிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணி சார்பாக போட்டியிட்ட அங்கவீனமுற்ற படைவீரர் 48 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றியீட்டியுள்ளர். எம்முடன் இணைந்த ஆதரவாளர்கள் நிரந்தரமாக எம்முடன் சேர்ந்திருப்பார் என்றார்.