2009

2009

இலங்கையில் வெளிநாடுகள் தலையிடுவதற்கு அரசே அழைப்பையும் விடுத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது -ஜே.வி.பி.

vijitha_herath.jpgஇலங்கை விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரான விஜித ஹேரத் எம்.பி., அரசாங்கமே இதற்கான அழைப்பையும் விடுத்து தலையீடுகளுக்கான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைற்ற தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் அந்நிலையத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் கருத்து வெளியிடும் போதே விஜித ஹேரத் இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

ஏற்கெனவே, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா போன்ற வெளிநாடுகளின் தலையீடுகள் இலங்கைக்கு வந்து விட்டன. அதை உறுதிப்படுத்துவது போல பிரிட்டன் எம்.பி.யான லியாம் பொக்ஸ் இலங்கை வந்து அவரது 2 ஆவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே, லியாம் பொக்ஸ் முதல் அத்தியாயமாக சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தேசிய பிரச்சினையில் தலையிட்டிருந்தார். அந்த வகையில் லியாம் பொக்ஸுக்கு இது இலங்கையில் 2 ஆவது அத்தியாயமாகும்.

இதேநேரம், தனது தேவைக்காக இலங்கை வரவில்லையெனவும் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு வந்ததாகவும் லியாம் பொக்ஸ் கூறியிருக்கிறார். எனவே, அரசாங்கமே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை நாட்டுக்கு அழைத்து தலையீடுகளுக்கும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவது தெளிவாகிறது.

இதற்கு முன்னர் பிரிட்டன் அரசாங்கத்தினால் இலங்கைக்கென பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்ட போது இலங்கை அரசாங்கம் அதை எதிர்த்திருந்தது. இது தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் பேசியது மட்டுமன்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் 2 முறைகள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசி ஏற்படுத்தப்பட்ட இணக்கத்துக்கு அமையே அந்தப் பிரதிநிதி நியமிக்கப்பட்டதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

இதேபோல் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பில் எப்படி செயற்படுகிறது என்பது குறித்து சில உபாயங்களை தம்வசம் கொண்டிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் அந்நாட்டின் யுத்த, அரசியல் தேவைகளுக்கு அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பது குறித்த உபாய மார்க்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அத்துடன், இந்து சமுத்திரத்தில் சீனாவின் பாதுகாப்பு வலைப் பின்னலுக்கு முகம் கொடுக்க அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றியும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

இதேநேரம், கடந்த 6 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் குமார் ரூபசிங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் இலங்கைப் பிரச்சினைக்கு முதலில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென்றும் அதன் பின்னர் திஸ்ஸ விதாரண குழுவின் தீர்வு யோசனையை செயற்படுத்த வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது ராஜித சேனாரட்ன, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் அடங்கலாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை குமார் ரூபசிங்கவே செய்கிறார். எனவே, இவர்கள் மூலம் அமெரிக்க உபாயங்களே செயற்படுத்தப்படப் போகின்றன என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் தெரிந்திருக்கவே இந்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. படையினரின் வெற்றிகளை பிரிவினைவாதத்துக்கு காட்டிக் கொடுக்க இடமளிக்க முடியாது. பிரினைவாதத்துக்கு கப்பம் வழங்கும் இந்த முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். இதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் குடும்பங்கள் இம்மாத இறுதிக்குள் 4 கிராமங்களிலும் தங்கவைக்கப்படுவர்

rizad_baduradeen-01.jpgவன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகைதரும் மக்களை வவுனியா மெனிக் பாம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நான்கு கிராமங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மெனிக்பாம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த அமைச்சர் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் ஆனந்த குமாரசாமி, பொன். அருணாச்சலம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் கிராமங்களை பார்வையிட்டார். ஏற்கனவே, மெனிக்பாம் கதிர்காமம் கிராமத்தில் மக்கள் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை, தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று கிராமங்களிலும் கதிர்காமர் கிராமத்தையும் உள்ளடக்கியதாக 10 ஆயிரம் குடும்பங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கவைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறினார்.

இக்கிராமங்களில் உள்ளக பாதை, மின்சாரம், குடிதண்ணீர், பாடசாலைகள், ஏனைய திணைக்களங்களின் முக்கிய அலுவலகங்கள் என்பன அமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாகவும் கூறினார்.

இவ்விஜயத்தின் போது வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் தீர்வு குறித்து தீர்மானிப்பதில் தாமதம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

“ஏசியன் ட்ரிபியூன்’ இணையத்தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கியிருக்கும் போட்டியொன்றிலேயே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப்பட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்ட நிலையில் எப்படி நாம் அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து திட்டமிடுவது என ஜனாதிபதி ராஜபக்ஷ கேள்வி யெழுப்பியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 3 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் தலைவரின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளித்திருக்கவில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். மனித கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் சில சமயம் விடுபட்டு வந்து விட்டால் பிரபாகரனுக்கு அவரது முகத்தை மறைத்துக் கொள்ள இடமில்லையென்று அவர் அச்சம் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கிறேன். எனினும், அவர்களோ தமிழ் நாட்டுத் தலைவர்களிடமும் இந்தியாவின் வேறு இடங்களுக்கும் சென்று அங்குள்ள தலைவர்களிடம் எமக்கு பலவற்றை கூறுமாறு வலியுறுத்துகிறார்கள். இது அர்த்தமற்றதொன்றல்லவா? நாம் அவர்களுக்கு சந்தர்ப்பமளித்து எப்போதும் செவிமடுக்க ஆர்வமாக இருந்து பொறுப்பான கோரிக்கைகளுக்கு உறுதியளிக்கவும் அவர்களது நிலைப்பாடுகளை எம்மிடம் நேரடியாகவே தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கத் தயாராகவும் இருக்கின்ற போதும் அவர்கள் அதை செய்வதாக இல்லை. எனினும், தமிழ் நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.  இதேநேரம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஓய்வு என்பதை முற்றாக நிராகரித்துள்ளார். இராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை புலிகள் மதிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாதென அவர் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது சுதந்திர நடமாட்டத்திற்கு இடமளிக்குமாறு அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கு 48 மணி நேர கால அவகாசம் வழங்கி நடவடிக்கைகளை ஓய்வுக்குக் கொண்டு வந்திருந்தது எனினும் அவர்கள் அந்த நல்லெண்ண சமிக்ஞையை மதிக்கத் தவறிவிட்டதுடன் அப்பாவிப் பொதுமக்களையும் பாதுகாப்பான இடம்நோக்கி நகர அனுமதிக்கவில்லை என்று ஜனாதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அத்துடன், நல்லெண்ண சமிக்ஞையாகத் தாக்குதல்களை இடை நிறுத்தி வைக்குமாறு அரச படையினர் கோரப்பட்டிருந்த போதிலும் புலிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  தாக்குதல்களை நிறுத்துமாறு படையினர் கோரப்பட்டிருந்தனர். எனினும், 24 மணி நேரம் கூட செல்வதற்கு முன்னர் புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததால் இறுதியில் அது நூற்றி ஐம்பது படையினர் காயமடையும் நிலைமையை ஏற்படுத்தியிருந்தது என்று மகிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இதேநேரம், யுத்த சூனிய காலப்பகுதியென்பது சாத்தியப்படாத யோசனையாகவே இருக்குமென ஜனாதிபதி ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முன்னரான எமது சமிக்ஞைகளை மதிக்காத பிரபாகரனும் அவரது ஆட்களும் எனது கட்டளையின் பேரில் 48 மணி நேரத் தாக்குதல் தவிர்ப்பில் இருந்த எமது படையினர் காயமடைய காரணமாயிருந்திருக்கும் நிலையில் எப்படி மீண்டுமொரு முறை 48 அல்லது 72 மணிநேர யுத்த சூனிய காலப்பகுதியை வழங்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமக்கு எந்தவொரு போர் நிறுத்தம் பற்றியோ அல்லது யுத்த சூனிய காலப்பகுதி பற்றியோ சிந்திக்க முடியாது. கடைசியாக நாம் அறிவித்த போது புலிகள் அதை மதிக்கத் தவறிவிட்டனர். அவர்கள் எமது படையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். தாக்குதல் நிறுத்தத்தில் இருக்கும் போது இலங்கை இராணுவத்தினர் தாக்கப்பட்டால் முப்படைத் தளபதி என்ற வகையில் அதற்கான பொறுப்பை நானே ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

மேல் மாகாணத்தில் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி

sri-lanka-elections.jpgமேல் மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க விடுதிகள் என்பவற்றில் கட்சிக் காரியாலயங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலயங்களை அகற்ற பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொழும்பு மாவட்டத்தில் 834 கட்சிக் காரியாலயங்களும் கம்பஹா மாவட்டத்தில் 942 காரியாலயங்களும் களுத்துறை மாவட்டத்தில் 523 காரியாலயங்களும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு மூடிவிட வேண்டும் எனவும் பிரதான கட்சிக் காரியாலயங்களை 25ஆம் திகதி மூடிவிட வேண்டும் எனவும் சுமணசிறி தெரிவித்தார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்ட பிரதேசங்களுக்கு 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சகல கட்சி அலுவலகங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மீட்சி 2010ல் தான்

us-flag.jpg‘இன்னும் ஒரிரு ஆண்டுகளுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் இதே தடுமாற்றத்துடன்தான் இருக்கும். வருகிற 2010 முதல் மீட்சி நிலை ஆரம்பமாகும்’ என அமெரிக்க நிதித் துறைத் தலைவர் பென் பெர்னான்க் கூறியுள்ளார். அமெரிக்க டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கிட்டத்தட்ட உடைந்து போயுள்ளது அமெரிக்கப் பொருளாதாரம். மூன்றாண்டுகள் வரை இந்த நிலை நீடிக்கும். இதைத் தூக்கி நிறுத்த பெரிய மனோவலிமை கொண்ட, எப்படிப்பட்ட இடர்பாட்டையும் சமாளிக்கக் கூடிய அரசியல் தலைமை அவசியம். ஒருவிதத்தில் நம்மை நாமே சுயமாக சரிசெய்து கொள்ள இப்போதைய வீழ்ச்சி உதவியிருப்பதாகவே நம்புகிறேன்.

ஆனால் எல்லோரும் சொல்வதுபோல இந்த ஆண்டே பொருளாதார வீழ்ச்சி சரியாகிவிடாது. இந்த ஆண்டுதான் உச்சத்திலிருக்கும். அடுத்த ஆண்டு முதல் மீட்சி நிலை தொடங்கலாம்.

முன்பு போல மீண்டும் முழு வேலை நிலை என்ற சூழலுக்கு நாடு திரும்புவதும் கஷ்டம்தான். ஆனால் வலுவான ஒரு பொருளாதாரத்தைக் கட்டியமைக்க இந்த வீழ்ச்சி உதவும். கிடைக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் கீழை நாட்டு மனோபாவம் அமெரிக்கர்களுக்கும் வரும். அதற்கு இந்த வீழ்ச்சியும் மீட்சியும் காரணமாக அமையும்.

இந்த சூழலில் என் கவலையெல்லாம், வங்கி அமைப்பு மீது அமெரிக்க மக்களும் அரசியல் தலைவர்களும் நம்பிக்கை இழந்து போயிருப்பதுதான். வங்கித் துறை விரைவில் சீரடைவதுதான், நாட்டின் பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்தும், என்றார் பெர்னான்க்.

மாத்தறையில் தேடுதல் 99 தமிழர்கள் கைது

ranjeth-gunasekara.jpgமாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 99 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி குறித்த மாவட்டத்தில் அடிக்கடி நடமாடியதாகவும் அப்பகுதியிலேயே நீண்ட நாட்களாக தங்கியிருந்துள்ளார் என்றும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

முன்தினம் நேற்று இரவு நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 2ஆயிரத்து 399 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மொரவக்க பிட்டபெத்தர மற்றும் தெனியாய போன்ற பகுதிகளிலுள்ள தொட்டப்புரங்களிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது.

இதன் போது 759 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் 2ஆயிரத்து 399 பேர் தீவிர விசாரணைகளுக்கு எட்படுத்தப்பட்டனர். இவர்களில் தமது பதிவை உறுதிப்படுத்தத் தவறிய 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதலின் போது கைதான அனைவரும் அந்தந்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். உரிய விசாரணைகளை அடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போர் குற்றம் சுமத்த ஜ.நா. சபை நடவடிக்கை – வீரவன்ச

wimal-weerawansa.jpgஇலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்தியா, பிரித்தானியா உட்பட எந்தவொரு சர்வதேச நாடோ, அமைப்புக்களோ இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இலங்கையின் இராணுவ வீரர்கள் மீதும் அரசாங்கத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்தும் சுமத்திவரும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பீடத்திற்கு எதிராக, கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இலங்கையின் தேசப்பற்றுள்ள மக்கள் முற்றுகையிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை இல்லை எனவும் அவர் கூறினார்.

தேசிய சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள 

ஐ.நா. ஊழியரை விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக மீண்டும் குற்றச்சாட்டு

19a8fd8bfa777b52.jpg இலங்கையின் வடக்கே சேவையாற்றிவந்த தமது உள்ளூர் பணியாளர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வார இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் பலவந்தமாக ஆட்சேர்த்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது.

வன்னியில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவரையும், 16 வயதுடைய அவரது மகள் உட்பட அவரது குடும்பத்தினரையும் அரசினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து புலிகள் ஆட்சேர்த்திருக்கின்றார்கள் என்று கொழும்பிற்கான ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, தாமதிக்காமல் இவர்களை புலிகள் விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஐ.நாவின் இன்னொரு உள்ளூர் பணியாளர் புலிகளினால் ஆட்சேர்க்கப்பட்டதாகவும், பலமுறை தாம் கோரிக்கை விடுத்தும் அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் ஐ.நா மன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்.

worldbank.jpgசர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ள கடனை வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 25ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சர்வதேச நாணயநிதியத்திடம் கோரியுள்ள கடனை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுந்திரம் நாட்டில் பாதுகாக்கப்படல் ரூபாவின் பெறுமதியைப் பேணுதல் சகல நிவாரணங்களையும் விலக்கிக்கொள்ளல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

மூன்றாவது அணிக்கு பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை என்கிறார் ஜெயலலிதா

jayalalitha.jpgஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக உருவாகியுள்ள மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் முடிவுகள் எல்லாம் வெளியானபிறகு யோசித்துக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி இருக்கிறார்.

இப்போதே முடிவு செய்ய அவசரம் எதுவுமில்லை, அவ்வாறு செய்யாமலிருப்பதால் அணியின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படப்போவதுமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்திரப் பிரதேச முதல்வருமான மாயாவதி ஞாயிறன்று அளித்த விருந்து பற்றி சரியான தகவல் கிடைக்காததால்தான் தன் கட்சிப் பிரதிநிதி அதில் கலந்துகொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.