2009

2009

ஜனநாயகத்தை வென்றது பணநாயகம்: ஜெயலலிதா

jeyalalitha.gifதமிழகத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தனது பணபலம், படைபலம் மற்றும் அதிகார பலத்தால் ஜனநாயகத்தை வென்றுவிட்டது என்று கூறியுள்ளார்.

தவறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், திமுக முறைகேடாக வென்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தோல்வியால் பாமக துவண்டுவிடாது என்றும், அரசியலில் அது மீண்டும் உத்வேகம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்: இராணுவம்

mili.jpg72  மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 50,000 பொதுமக்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகோடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த பொமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றன வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது விடுதலை புலிகளின் நடமாட்டம் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் 400×600 சதுர மீற்றர் பரப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்கப் படையினர் 140 பேரைக் கொன்றதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது

ஆப்கானிஸ்தானில் இந்த மாத முற்பகுதியில் அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை ஆய்வு செய்த ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சு, அந்த தாக்குதல்களில் அமெரிக்கர்கள், 140 பொதுமக்களை கொன்றுள்ளதாக உறுதி செய்துள்ளது.

அமெரிக்க மரைன் படையினரும், ஆப்கான் படையினரும் தலிபான்களுடன் மோதலில் ஈடுபட்ட வேளையில், அமெரிக்க விமானங்கள் ஃபாரா மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள், அமெரிக்கா தனது வான் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரும் நிலை உருவானது.

இந்த சம்பவத்தின் பின்னர், ஆப்கானிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதைப் பார்க்கிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனாலும், புலன் விசாரணைகளுக்கு முன்னதாக பலரது சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டதால், கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை.

மட்டக்களப்பில் முதல்வர்கள் மாநாடு; 48 பிரேரணைகளில் பலவற்றுக்கு தீர்வு

25th-cm-con.jpg மட்டக்களப்பில் நேற்று நடந்த 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டில் 48 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதாக ஆறு முதலமைச்சர்களும் நேற்று தெரிவித்தனர். முதலமைச்சர்கள் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. 6 முதலமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் முடிவில் நேற்று பிற்பகல் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்கள், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 48 பிரேரணைகளில் பெரும் பாலானவற்றிற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. கூடுதலானவை நிர்வாகம் சார்ந்தவைகளாகவே இருந்தன. தீர்வு காணப்படாத விடயங்களுக்கு முதலமைச்சர்களின் செயலாளர்கள் பேசித் தீர்வு காண்பார்கள் என்றனர்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்குமிடையிலான பிரச்சினைகள் தொடர்பாக இருதரப்பும் பேசி முடிவெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, 26 வது (அடுத்த) முதலமைச்சர்கள் மாநாடு வடமத்திய மாகாண சபையில் இடம் பெறும். முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க மாநாட்டின் தலைவராக இருப்பார். மாநாடு செப்டம்பர் 18 ஆம் திகதி வட மத்திய மாகாண சபையில் நடைபெறும். மாகாண சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு நேற்றைய மகாநாட்டில் கலந்து கொண்ட திறைசேரி உட்பட சகல திணைக்கள அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நிருபரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இதற்குத் தலைமை தாங்கினார்.

இம் மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தென் மாகாண முதலமைச்சர்கள் சான்விஜய டி சில்வா, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம்லால் திஸாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகிய ஆறு முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா ஆகிய இரண்டு முதலமைச்சர்களும் இம் மாநாட்டுக்கு வருகை தரவில்லை.மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு முதலமைச்சர்கள் ஊர்வலமாக மட்டக்களப்பு மாநகரசபையின் நகர மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

முதலமைச்சர்கள் மாநகர வளாகத்தைச் சென்ற டைந்ததும் அவர்களால் தேசியக் கொடிகளும் மாகாணக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன. தேசியக் கொடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் கிழக்கு மாகாணக் கொடியை பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கமும் ஏனைய மாகாணக் கொடிகளை ஏனைய முதலமைச்சர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு வின்சன் மகளிர் கல்லூரி மாணவிகளால் தேசிய கீதமும் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவிகளால் தமிழ் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. சமாதானப் புறாக்களும் பறக்கவிடப்பட்டன.

புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வருணை எதிர்த்த அனைவரின் டெபாசிட் காலி

varun.jpgஉ.பி.  மாநிலம் பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி போட்டியிட்ட பிலிபித் தொகுதியில் வருண் காந்தியைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர். இவர்களில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் காந்தி இத்தேர்தலில் 4,19,539 வாக்குகள் பெற்று, 2,81,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடமும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 3வது இடமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4வது இடமும் கிடைத்தது. வருண் காந்தியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு வேண்டுகோள்

wdj-senavi.jpgநீர் மின்உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதல் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலை 6.30 முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப் பகுதியில் நாட்டின் நாளாந்த மின் பாவனை 28 மில்லியன் அலகுகளாகும். இந்த அளவை 22 மில்லியனாக குறைத்துக்கொள்ள முடியுமாயின் தற்போதைய மின்உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட பிரதேசங்களில் சீரான மழை வீழ்ச்சி கிட்டும் வரை மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பாவிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக இலங்கை மின்சார சபை மிகவும் அவதானத்துடன் செயல்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

இன்று மே 17 சந்திப்பு : வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். : த ஜெயபாலன்

IDP_Campsமனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ( வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன் )

குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.

Wanni IDPs : Their needs & Future

Meeting & Discussion

 17th of May 2009, Sunday, 4:30pm
 
Quakers Meeting House,
Bush Road,
Wanstead,
London, E11 3AU.

Futrher Information :

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்
 
மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

தமிழகத்தின் 40 தொகுதிகளின் வெற்றி நிலவரம்: முழு விபரம்

indian-election.jpgதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது.  இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் அதிமுக 23 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,  இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை தலா 3 இடங்களிலும் போட்டியிட்டன.விஜயகாந்தின் தே.மு.தி.க. மற்ற தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலிலும் தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

பாரதீய ஜனதா கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து களத்தில் நின்றது.

இதில் பாரதீய ஜனதா கட்சி 13  இடங்களிலும், சமத்துவ மக்கள் கட்சி 5 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம், நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை தலா 2 இடங்களிலும் போட்டியிட்டன.

இவர்கள் தவிர மனிதநேய மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிட்டன.

திமுக கூட்டணி வெற்றி நிலவரம்

திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக

1. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் காந்தி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்

2.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கே.சிவக்குமார் என்ற ரித்திஷ் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

3. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தி.மு.க.) துரை. பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க.) டாக்டர் ப. ராமநாதன் (தே.மு.தி.க.), எஸ். சரவணன் (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம் 10 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில்37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

5.நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ஆ.ராசா (தி.மு.க.) டாக்டர் சி.கிருஷ்ணன் (ம.தி.மு.க.) குருமூர்த்தி (பா.ஜனதா) செல்வராஜ் தே.மு.தி.க.) எம்.கிருஷ்ணன் (பகுஜன் ஜமாஜ் கட்சி) பத்ரன் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஆ.ராசா 85 ஆயிரத்து 547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜே.ஹெலன்

டேவிட்சன் 65,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.), அருண்சுப்பிரமணியம் (தே.மு.தி.க.), ராஜப்பா (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 28 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 25, 544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுயில் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ஜெயதுரை 76, 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9.அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் மற்றூம், சிறு கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

10.தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. ஆர். தாமரை செல்வன் (தி.மு.க.)2. டாக்டர் இரா. செந்தில் (பா.ம.க.)3. வி.இளங்கோவன் (தே.மு.தி.க.)4. வே.புருசோத்தமன் (பகுஜன் சமாஜ் கட்சி)5. கோ.அசோகன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்).மற்றும் 16 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள் என்று போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் ஆர்.தாமரைச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

11.கிருஷ்ணகிரி தொகுதியில் மொத்தம் 16வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 1. இ.ஜி.சுகவனம் (தி.மு.க.)2. நஞ்சேகவுடு (அ.தி.மு.க.)3. ஜி.பாலகிருஷ்ணன் (பா.ஜனதா)4. அன்பரசன் (தே.மு.தி.க.)5. வி.வி.மூர்த்தி (பகுஜன்சமாஜ் கட்சி)6. பி.எஸ்.சந்திரன் (கொங்கு இளைஞர் பேரவை)7. செல்வராஜன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்)8. சக்திவேல் (லோக்ஜனசக்தி)9. கோவிந்தராஜன் (லட்சிய தி.மு.க.)மற்றும் 7 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 16 வேட்பாளர்களில், திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனம் வெற்றி பெற்றுள்ளார்.

12.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் து.நெப்போலியன் (தி.மு.க,)கே.கே.பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.) ,துரை.காமராஜ் (தே.மு.தி.க.),க.செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) வக்கீல் ஆர்.ஸ்டாலின் (லோக்ஜன சக்தி) இரா. சுந்தரவிஜயன் (சமாஜ்வாடி கட்சி) மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்றுள்ளார்.

13.நாகப்பட்டினம் பாராளுமனற தொகுதியில், ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.).எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு).மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 3 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் வெற்றி பெற்றுள்ளார்.

14, வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.) தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு) தமிழிசை சவுந்தரராஜன் (பாரதீய ஜனதா) யுவராஜ் (தே.மு.தி.க.) சாந்தா ஸ்ரீநி (பகுஜன்சமாஜ்)மற்றும் 24 சுயேச்சைகள் போட்டியிட்டனர்இதில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

15. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில த.வேணுகோபால் (தி.மு.க.) ஜெ.குரு (பா.ம.க.) எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.)எஸ்.ஏ.ராஜாராம் (புதிய நீதி கட்சி)பி.கோவிந்தசாமி (பகுஜன் சமாஜ் கட்சி) பி.செல்வராஜ் (சமாஜ்வாடி கட்சி)அப்ரோஸ் உஸ்னா (லோக்ஜனசக்தி)மற்றும் 23 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் த.வேணுகோபால் 1,38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

16. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் ஆதிசங்கர் (தி.மு.க.), தன்ராஜ் (பா.ம.க.), சுதீஷ் (தே.மு.தி.க.), விஜய டி.ராஜேந்தர் (லட்சிய தி.மு.க.), மற்றும் 25 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆதி.சங்கர் வெற்றி பெற்றுள்ளார்.

17. மதுரை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.க.அழகிரி 1,40,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை பாராளுமன்ற தொகுதியில் மு.க.அழகிரி (தி.மு.க.), பி.மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கவியரசு (தே.மு.தி.க.) தர்பார் ராஜா (பகுஜன் சமாஜ்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

1.வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியிலமற்றும் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ்

1.சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மொத்த 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.ப.சிதம்பரம் (காங்கிரஸ்)ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) பர்வத ரெஜினா பாப்பா (தே.மு.தி.க.).தூதை செல்வம்

(சிவசேனா கட்சி) எம்.ஜி.தேவர் (பகுஜன் சமாஜ்) ராமசாமி (புதிய தமிழகம்)மற்றும் 14 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 20 வேட்பாளர்களில் ப.சிதம்பரம் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2.ஆரணி பாராளுமன்ற தொகுதியில் எம்.கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) முக்கூர் என்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) ஆர்.மோகன் (தே.மு.தி.க.) கே.சரவணகுமார் (புதிய நீதி கட்சி)ஏ.சங்கர் (பகுஜன் சமாஜ் கட்சி வி.அரிராஜ் (சமாஜ்வாடி)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

3.தேனி பாராளுமன்ற தொகுதியில்ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்)தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)கவிதா (பகுஜன் சமாஜ்)பார்வதி (பா.ஜனதா)சந்தானம் (தே.மு.தி.க.)செல்வராஜன் (புதிய தமிழகம்)மற்றும் 16 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஆருண் ரஷீத் வெற்றி பெற்றுள்ளார்.

4.கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கே.எஸ்.அழகிரி (காங்.)எம்.சி.சம்பத் (அ.தி.மு.க)எம்.சி.தாமோதரன் (தே.மு.தி.க.)ஆரோக்கியதாஸ் (பகுஜன் சமாஜ்)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

5.விருதுநகர் பாராளுமன்ற தொகுதயில் மாணிக் தாகூர் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), பாண்டியராஜன் (தே.மு.தி.க.), நடிகர் கார்த்திக் (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ), கனகராஜ் (பகுஜன் சமாஜ்) மற்றும் 11 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6.புதுச்சேரி மாநில பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, ராமதாஸ் (பா.ம.க) விஸ்வேஸ்வரன் (பா.ஜனதா) அசனா (தே.மு.தி.க.)சோமசுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி) கோவிந்தசாமி (காமராஜர் தேசிய காங்கிரஸ்) மற்றும் 22 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 85, 612 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7.காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் வி.விஸ்வநாதன் (காங்), டாக்டர் இ.ராமகிருஷ்ணன் (அ.தி.மு.க.), டி.தமிழ்வேந்தன் (தே.மு.தி.க.), க.உத்திராபதி (பகுஜன் சமாஜ்) பக்கிரி அம்பேத்கர் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா)ஜவகர்லால் நேரு (லோக் ஜனசக்தி) மற்றும் 14 சுயேச்கைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் வி.விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.

8.திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்)பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)பி.முத்துவேல்ராஜ் (தே.மு.தி.க.)சீனிவாசபாபு (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்)கே.அண்ணாமலை (அ.தி.மு.க.) எஸ்.மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)கரு.நாகராஜன் (சமத்துவ மக்கள் கட்சி) ரமேஷ் பாண்டியன் (பகுஜன் சமாஜ்)எஸ்.செய்யது இமாம் (சமாஜ்வாடி)மற்றும் 15 சுயேச்சைகள்.21 வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராமசுப்பு வெற்றி பெற்றுள்ளார்.

விடுதலைசிறுத்தைகள்

1.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் பொன்னுசாமியும், தேமுதிக சார்பில் சபா. சசிக்குமாரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் என்.ஆர். ராஜேந்திரன் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் 99,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணி= 12 தொகுதிகளில் வெற்றி

அதிமுக

1.பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதயில் கு.சண்முக சுந்தரம் (தி.மு.க.), கே.சுகுமார் (அ.தி.மு.க.) பாபா ரமேஷ் (பாரதீய ஜனதா)கே.பி.தங்கவேல் (தே.மு.தி.க., தி.மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி)செ.கிருஷ்ணகுமார் (தமிழ் தேசிய கட்ச, சுரேஷ் (சமாஜ்வாடி கட்சி,இ.உம்மர் (மனிதநேய மக்கள் கட்சிஎஸ்.டி.ரமீஜா பேகம் (சமதா கட்சிபெஸ்ட் எஸ்.ராமசாமி (கொ.நா.மு.க.)

மற்றும் 12 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் கே.சுகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

2.தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.) இல.கணேசன் (பா.ஜ.க. வீ.கோபிநாத் (தே.மு.தி.க.)மற்றும் 40 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

3.விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியிலக.சாமிதுரை (விடுதலை சிறுத்தைகள்) எம்.ஆனந்தன் (அ.தி.மு.க.)பி.எம்.கணபதி (தே.மு.தி.க.) எஸ்.பொய்யாது (பகுஜன் சமாஜ் கட்சி)க.தேவராஜ் (லோக் ஜனசக்தி கட்சி)ஆர்.பஞ்சநாதன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) மற்றும் 13 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் எம்.ஆனந்தன் 2797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.காயத்ரி (தி.மு.க.) பி.வேணுகோபால் (அ.தி.மு.க.) சுரேஷ்

(தே.மு.தி.க.)எம்.எஸ்.சுதர்சன் (ஐக்கிய ஜனதாதளம்) ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார்.

5.மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க) கார்த்திகேயன் (பா.ஜ.க)) பாண்டியன் (தே.மு.தி.க) ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார்.

6.திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில்எஸ்.கே.கார்வேந்தன் (காங்கிரஸ்)சி.சிவசாமி (அ.தி.மு.க.)எம்.சிவக்குமார் (பா.ஜனதா)என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க.)கே.பாலசுப்பிரமணியன் (கொ.நா.மு.க.என்.சிவக்குமார் (உழைப்பாளி மக்கள் கட்சிஎம்.தங்கவேல் (லோக் ஜனசக்தி)மற்றும் 14 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சி.சிவசாமி வெற்றி பெற்றுள்ளார்.

7.திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சாருபாலா தொண்டைமான் (காங்கிரஸ்)குமார் (அ.தி.மு.க)லலிதா குமாரமங்கலம் (பாரதீய ஜனதா) ஏ.எம்.ஜி. விஜய்குமார் (தே.மு.தி.க)கல்யாண சுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி)நீலமேகம் (சமாஜ்வாடி கட்சி) மன்சூர் அலிகான் (லட்சிய தி.மு.க.மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் அதிமுக வேட்பாளர் குமார் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.கரூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 38வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. கே.சி.பழனிசாமி (தி.மு.க.2. தம்பிதுரை (அ.தி.மு.க.3. ஆர்.ராமநாதன் (தே.மு.தி.க.4. லோகநாதன் (சமதா கட்சி5. தர்மலிங்கம் (பகுஜன் சமாஜ் கட்சிமற்றும் 33 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.இவர்களில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வெற்றி பெற்றூள்ளார்.

9.சேலம் பாராளுமன்ற தொகுதியில கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)செம்மலை (அ.தி.மு.க.) பாலசுப்பிரமணி (பகுஜன் சமாஜ் கட்சி) அசோக் சாம்ராஜ் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக) மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் மாநில அமைச்சருமான செம்மலை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை விட 46252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மதிமுக

1.ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் அ.கணேச மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்

1தென்காசி பாராளுமன்ற தொகுதியில் ஜி.வெள்ளைப்பாண்டி (காங்கிரஸ்) பி.லிங்கம் (இந்திய கம்யூனிஸ்டு) கே.இன்பராஜ் (தே.மு.தி.க.)டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கே.கிருஷ்ணன் (பகுஜன் சமாஜ்)மற்றும் 4 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.  இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.லிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1.கோவை பாராளுமன்ற தொகுதியிலஆர்.பிரபு (காங்கிரஸ்) ஜி.கே.எஸ்.செல்வக்குமார் (பாரதீய ஜனதாபி).ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)ஆர்.பாண்டியன் (தே.மு.தி.க.)பி.கதிர்மணி (சமாஜ்வாடி கட்சி)கே.ராமசுப்பிரமணியம் (பகுஜன் சமாஜ் கட்சி)எம்.செல்வம் (சிவசேனா)ஈ.ஆர்.ஈசுவரன் (கொ.நா.மு.க.)மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 38664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

(நக்கீரன்)

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: பாஜக

arun_jetly.jpg
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை முழு மனதுடன் ஏற்பதாக பாஜக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
 
”சில இடங்களில் எங்களுக்கு எதிர்பார்த்ததைவிட குறைவான இடங்களையே பெற்றுள்ளோம். எனினும், இதனால் எங்கள் கட்சியின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.

எனவே, மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் உரிய கௌரவத்துடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் அருண் ஜேட்லி.