2009

2009

கனடாவில் தரித்துள்ள கப்பலில் இருந்து மேலும் வெடிப்பொருட்கள் மீட்பு

oceanlady.jpgஅண்மையில் கனடாவில் கைதான 78 இலங்கையர்கள் சென்ற ஓசியன் டேடி கப்பலில் இருந்து  மீண்டும் ஆர் டீ எக்ஸ் மற்றும் சைக்லோ ஓக்சிஜன் போன்ற பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த பொருட்கள் கப்பலின் முக்கிய பல மூன்று பகுதிகளில் மறைத்து வைக்கபட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

இந்தோனேசியாவின் ஜவாத் தீவின் மேர் துறைமுகக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு அகதிகளின் அவலம் 8வது வாரமாகத் தொடர்கிறது. இந்தப் படகு அகதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்ட சோசலிஸ்ட் கட்சியின் தேசிய ஒழுங்கமைப்பாளர் அன்ரொனி மைன் 40 முதல் 50 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய 30 மீற்றர் நிளமான மரப்படகில் 260 பேர் வரை அடைபட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கப்பலில் உள்ள ஒவ்வவொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த அன்ரொனி மைன் வயிற்றோட்டம், மலேரியா, போன்றவற்றால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் டயபிரிக்ஸ் போன்ற நீண்ட கால நோயுடைய நோயாளிகளும் அங்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். Eyewitness report from refugee boat in Merak -Anthony Main

இதற்கிடையே ஓசானிக் வைக்கிங் கப்பலில் இருந்து தஞ்சம் கோரிய தமிழர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவுஸ்திரேலிய அரச அதிகாரிகளின் உறுதி மொழிக்கு இணங்கித் தரையை அடைந்தனர். தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு முதல் 12 வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். நவம்பர் 12ல் 22 பேரைக் கொண்ட ஒரு பகுதியினரும் ஏனைய 56 பேரும் நவம்பர் 18லும் தரையிறங்கினர்.

மேர்க் கடற்பரப்பில் ஒரு சிறிய கப்பலில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ளவர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும் கப்பலில் தங்கள் போராட்டத்தைத் தொடர விரும்புகிறவர்களுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டு அது சிறு மோதலையும் ஏற்படுத்தியதாக இவ்வகதிகளுக்கு உதவியளிக்கும் மேற்கத்தைய உதவி நிறுவனத்தின் சிரேஸ்ட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் ஒரு இளைஞர் காயப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து 15 பேர் படகில் இருந்து தரையிறங்கியதாகவும் தெரியவருகின்றது. படகில் உள்ள அத்தனை அகதிகளும் தரையிறங்கிய பின்னரேயே அவர்களது தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிக்க் ஐநா அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. இம்முடிவு அங்கு இரு தரப்பினருக்கும் இடையேயான பதட்டத்தை மேலும் தூண்டியுள்ளது.

மேலும் கிறிஸ்மஸ் தீவில் நெருக்கமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்கான் – தமிழ் அகதிகளிடேயே நவம்பர் 23ல் மோதல் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் அப்பகுதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் 37 பேருக்கு அங்கேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாண்டு ஒக்ரொபர் வரை 12 544 அப்கானியர்களுக்கு வீசா வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இலைகையருக்கு 21 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு இருந்தது. இதுவே மோதலுக்கான காரணமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் தடுப்பு முகாமில் உள்ள குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்துவதில் உள்ள நெருக்கடியும் இம்மோதலுக்கு வழிவகுத்தள்ளது.

விலங்குகளை வளர்ப்பதற்கே அவற்றிற்கான வாழ்விடத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகள் அகதிகள் என்று வரும்போது எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அவர்களுடைய மனித உரிமைகள் கோசமும் தங்களுடைய தேவையைப் பொறுத்தே அமைகின்றது.

50 பேர் கொண்ட மற்றுமோர் படகு நவம்பர் 20ல் வழிமறிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. அதே தினம் அங்குள்ள தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலித்து 69 பேருக்கு நிரந்தர வீசா வழங்கி அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்குக் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 46 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு:

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

ஏ(எச்1என்1) கண்டி பிரதேசத்தில் 55 பேர் பாதிப்பு

influenza-a.jpgகண்டியில் ஏ(எச்1என்1) பாதிப்புக் குள்ளான 24 பேர் பேராதனை ஆஸ் பத்திரியிலும் 14 பேர் கண்டி ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் சாந்தி சமரநாயக்க தெரிவித்தார்.

மாத்தளை பிரதேசத்தில் ஏ(எச்1என்1) வைரசினால் பீடிக்கப்பட்ட 17 பேர் மாத்தளை ஆதார வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாத்தளை மாவ ட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏ(எச்1என்1) வைரசினால் (பன்றிக் காய்ச்சல்) பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மாத்தளை, தம்புள்ள, இறத்தோட்டை ஆஸ் பத்தி ரிகளில் விசேட சிகிச்சைப் பிரி வுகள் மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா? -விமல்

vimal-veeravansa.jpgஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, விடுதலைப் புலிகளின் பொங்கு தமிழ் நிகழ்வில் மேடையேறிய தேசத்துரோகிகளான மனோ கணேசன், ரவூப்ஹக்கீம் ஆகியோருடனும் தேசத்தைக் காட்டிக்கொடுத்த ரணில், மங்கள சமரவீரவுடனும் ஜெனரல் சரத் பொன்சேகா இணைந்து கொள்வது இன்னொரு துரோகச் செயலுக்காகவா எனவும் கேட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடு ஈட்டிய யுத்த வெற்றியை ஜெனரல் சரத் பொன்சேகா காட்டிக்கொடுக்க முற்படுவதாகவும் விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு சுமத்தினார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

ஜே.வி.பி.தலைவர் ரோஹன விஜேவீரவை கொலை செய்தவர்களில் ஒருவராக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் ஜே.வி.பி.யினர் ஒரே மேடையில் தோன்றி மக்கள்முன் செல்லப்போகின்றனர். இவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் என்பன கிடையாதா எனக் கேட்கவிரும்புகின்றேன்.

ஜே.வி.பி.யின் நோக்கமென்ன, ஒரு இராணுவ அதிகாரியால் ஜனநாயக ஆட்சியை நடத்த முடியுமா? நாட்டில் இன்னொரு பிரளயத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியிலேயே ஜே.வி.பி.யினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டுமெனவும் விமல் வீரவன்ஸ கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட நான்கு படகுகள் தென் பகுதி கடலில் மடக்கிப் பிடிப்பு

சட்டவிரோத ஆட்கடத்தலில் 100 க்கு மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற நான்கு மீன் பிடி படகுகளை இலங்கை கடற்படை யினர் தென் பகுதி ஆழ்கடலில் கைப்பற்றிய துடன் அதில் இருந்தவர்களை காலிக்கு கொண்டு வந்து தடுப்புக்காவலில் வைத்து ள்ளனர். இந்த நான்கு படகுகளில் இரண்டு நேற்றும் (23) இரண்டு படகுகள் இன்றும் (24) கடற் படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கைக்கு விமானப் படையினரும் பொலிஸாரும் கடற்படைக்கு உதவியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட சமயம் இந்த படகுகள் அவுஸ்திரேலியாவை நோக்கி சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா செல்வதற்காக படகில் இருந்தவர்கள் பெருந்தொகை பணத்தை இந்த சட்டவிரோத ஆட்கடத்தில் ஈடுபட்டவர்களிடம் கொடுத்திருப்பதாகவும் இவர்களில் தமிழர்களுடன் சிங்களவர்களும் இருப்பதாக கூறிய கடற்படை பேச்சாளர் இவர்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கடற்படையினர் உதவி வருவதாக குறிப்பிட்டார்.

ஹஜ்ஜுப் பெருநாள் 28 ஆம் திகதி

macca.jpgபுனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 28ம் திகதி சனிக் கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜய்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை ஏகமனதாக எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கமைய ஹஜ்ஜுப் பெருநாள் 28ம் திகதி கொண்டாடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் இன்று யாழ். விஜயம்

இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அருசாக் காந்தாவும் அவரது குழுவினரும் இன்று யாழ். மாநகர சபைக்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. கட்சியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா

sarathfonseka.jpgஎதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  ஜெ வி பி கூறியுள்ளது. ஜே.வி.பி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இத்தகவலை வெளியிட்டுள்ளார்

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.  அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.

பட்டதாரிகள் வேலைவாய்ப்பு வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆகக் கூடிய வய தெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டு ள்ளதென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதற்கான வயதெல்லை 35 ஆகும். இதனை அதிகரிப்பதற்கான வேண்டு கோளை அமைச்சர் முரளிதரன் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தார் இதற்கமைய இந்த வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்

commander.jpgமுன்னாள் இராணுவ தளபதியும், கூட்டுப்படை தலைமையதிகாரியுமான, சரத் பொன்சேகா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் படைத்தளபதியான தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும், உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.
 
சரத் பொன்சேகா, பதவியில் இருந்த போது அவருக்கு சுமார் 750 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் அந்த பாதுகாப்பு தற்போது 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், அவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.