2009

2009

மட்டக்களப்பில் யுத்த சூழ்நிலை காரணமாக வீடுகளை இழந்த 118 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கிராமங்களில் கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது இருப்பிடங்களை இழந்த குடும்பங்களுக்கு சர்வோதயத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 118 வீடுகளும் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. கித்தூள், றூகம், கோப்பாவெளி ,பெரிய புல்லுமலை,கரடியனாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கே சகல வசதிகளையும் உள்ளடக்கிய இவ் வீடுகள் கையளிக்கப்பட்டதோடு மேலும் 32 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.

றூகம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வைபவத்தில் சர்வோதயத்தின் நிறைவேற்று இயக்குநர் வின்னி ஆரியரட்ன கலந்து கொண்டு இவ் வீடுகளை கையளித்தார். இந் நிகழ்வில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த 250 பாடசாலை மாணவர்களுக்கும் ,15 பால் உற்பத்தியாளர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன. மேலும் கித்தூள் கிராமத்தில் ஒன்று கூடல் மண்டபமொன்றும் சர்வோதய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதே வேளை சத்துருக்கொண்டான் சர்வோதயப் பண்ணையில் தொழில் பயிற்சி முடித்துக் கொண்ட 61 பேருக்கு தொழில் உபகரணங்களை வழங்கும் மற்றுமொரு வைபவமும் நேற்று நடைபெற்றது. ஒக்.ஸ. பார்ம் நிறுவனத்தின் இலங்கைக்கா வதிவிடப் பிரதிநிதி ஜோன் பார்ம் இதில் கலந்து கொண்டு அலுமினியம் பொருள் உற்பத்தி ,தச்சு மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் போன்ற துறைகளில் தொழில் பயிறிச்சி பெற்றவர்களுக்கு இந்த உபகரணங்களை வழங்கினார்.

15 பேருடன் இந்திய சரக்குக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தல்

சோமாலியா அருகே போஸாசா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டதாக ஆஸ்திரேலிய இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய சரக்குக் கப்பல் ஒன்று 15 பேருடன் சென்று கொண்டிருந்தபோது, போஸாசா துறைமுகத்திற்கு 14 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் அதனை மடக்கி கடத்திச் சென்று விட்டனர்.

தற்போது அந்தக் கப்பல் சட்டத்தின் ஆட்சி இல்லாத, சோமாலியாவின் வட கிழக்குப் பிராந்தியத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு ராஜ்யத்திலிருந்து இந்தக் கப்பல் சோமாலியாவிலுள்ள துறைமுகத்திற்கு வந்தது. சரக்குகளை இறக்கி விட்டுத் திரும்பும்போதே இது கடத்தப்பட்டது. சவூதி அரேபியாவுக்கும், ஆபிரிக்க நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சரக்குப் போக்குவரத்தை கையாண்டு வரும் கப்பல் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பாக ஆராய விசாரணைக் குழு!

jhon_senevirathna.jpgஇலங்கை மின்சார தனியார் நிறுவனம் (லெகோ) தொடர்பாக ஆராய விசேட விசாரணைக் குழுவொன்றை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே.செனவிரத்ன நியமித்துள்ளார். இக்குழு உரிய விசாரணைகளை  மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் இணை நிறுவனமாக கிழக்கிலும் தெற்கிலும் மின்சார விநியோகம்,  அபிவிருத்தி. நுகர்வேர் சேவை  மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட   இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பில் ஊடகங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இக்குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையைக் கண்டறியும் முகமாகவே ஐவர் கொண்ட விசாரணைக் குழுவை அமைச்சர் நியமித்துள்ளார். 

மீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலை தெற்கில்- அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தகவல்

felixperera.jpgமீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலையொன்றை தெற்கில் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். நியுசிலாந்து நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இத்தொழிற்சாலை காலி மாவட்டத்திலுள்ள அக்மீமன என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மீன்பிடித்தடைகள் நீக்கப்பட்டதால் இப்போது மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தெருக்கதை: வழிப்போக்கன்

kulan-article2.jpg
தெருக்கதைகள்: 1

நான்: யோசப்பு அண்ணை! எல்லாம் உப்புச்சப்பு இல்லாமல் முடிஞ்சு போச்சுது. நீங்கள்தான் புலிகளின்டை முதல் புள்ளியாக நிண்டனீங்கள்.
யோசப்பு: ஓம் தம்பி எங்கடை காலகஸ்டம் இப்படியாப்போச்சு. யாருக்குத் தெரியும் இவன் உப்பிடிப் படம்காட்டுவான் எண்டு.

நான்: நீங்கள்தான் தலைவரைத் தலையிலை கொண்டு திரிந்தனீங்கள். இப்ப உப்பிடிக் கதைக்கிறியள்.
யோசப்பு: கொண்டு தெரிஞ்சனாங்கள் தான். எங்களுக்கு விடுதலைவேணும் தானே தம்பி.

நான்: நீங்கள் மட்டும்தான் உண்மையைச் சொல்லுறியள். உங்களுக்கு மட்டும்தான் விடுதலை வேணும் எண்டு. புலியள் மக்களுக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலையெண்டு தங்களுக்குக்குத் தானே நாடு கேட்டவங்கள், நாடு நாடாய் காசு சேர்த்தவங்கள்.
யோசப்பு: நான் எங்களுக்குகெண்டது மக்களுக்குத் தான் தம்பி.

நான்: அப்ப நீங்கள் என்னும் மாறேல்லை?
யோசப்பு: நான் மாறிட்டன் அப்பு. கே.பின்டை பக்கம் மாறிட்டன். நான் இப்ப புலியில்லை.

நான்: அப்ப கே.பின்டை குழுவை என்னெண்டு சொல்லுறது?
யோசப்பு: அது பிரபாகரன் புலி இது கேபியின் புலி.

நான்: உங்கடை புலி என்ன செய்யப்போகுது?.
யோசப்பு: செய்தியள் பாக்கிறதில்லையோ? நாடுகடந்த தமிழ்ஈழத்துக்கான போராட்டம் தொடங்கிட்டம். எங்கடை அரசியல் போராட்டம்தான்.

நான்: நீங்கள் எல்லாரும் வைச்சால் குடும்பி வழிச்சால் மொட்டைதான்? ஒண்டில் ஆயுத போராட்டம் இல்லையெண்டால் அரசியல் போராட்டம்.
யோசப்பு: ஆயுதப்போராட்டம்தான் எல்லாம் முடிஞ்சுபோச்சே. உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து எங்களை நாசம் அறுத்துப்போட்டுதே. போதாதே தம்பி?.

நான்: வெளிநாடுகளைக் குறைசொல்லாதையுங்கோ? நீங்களும் அமெரிக்காவேடையும் சண்டைக்கு நிண்டனியள்தானே. எண்டைக்கு அரசியலைப்பற்றி யோசிச்சனியள்? சரி கிடைச்ச தீர்வுகளையாவது வைச்சுக் கொண்டு தொடர்ந்து போராடியிருக்கலாம் தானே? நீங்களும் எங்கடை மக்களையே கொன்றுபோட்டு இராணுவம் கொல்லுது என்று உலகுக்குப் படம் காட்டினியள் தானே. உங்கடை திருகு தாளங்களையெல்லாம் சற்றலைட்டிலை மற்றநாடுகள் பாத்திருக்கும். சொந்த மக்களையே பயணக்கைதியாக வைத்திருந்த ஒரேயொரு போராட்டம் உங்கடைதான்.
யோசப்பு: நடந்ததைக் கதைச்சுப் பிரயோசனம் இல்லை, நடக்க வேண்டியதைப் பாப்பம்.

நான்: இனி நடக்க என்ன கிடக்கு. ஊரை அடிச்சு அரசாங்கத்துக்குக் குடுத்தியள். போராட்டம் என்று போராடும் சக்திகளான மக்களையே கொன்று குவிச்சியள். மிச்சம் மீதியாய் கொஞ்சச்சனம் தப்பி ஒட்டி இருக்குதுகள். தொடருங்கோ உங்கடை போராட்டுங்களை. கிழக்கிலை நீங்கள் வளத்துவிட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் கிளம்பிட்டினம். இனி இந்தியாவும் தன்ரை பங்குக்கு தமிழ்குழுக்களுக்கு காசும் ஆயுதப்பயிற்சியும் குடுத்துவிடும் சீனனை இலங்கையிலை இருந்து எறிய.
யோசப்பு: என்னடா தம்பி நம்பிக்கையைக் கைவிடக்கூடாது. இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்.

நான்: எல்லாம் செய்து முடிச்சுப்போட்டு இப்ப எங்களிட்டை வாறியள். அப்ப சொன்னம் கேட்டனியளோ? இப்பவும் நீயோ நானோ என்று பிரிஞ்சு நின்று அடிபடாமல் எல்லாருமாய் சேர்ந்து சேர்த்த காசுகளை அந்தமக்களுக்குக் கிடைக்கச் செய்கிறதோடை ஆயுதம் அது இது என்று அவசரப்படாமல் நிதானமாய் எப்படி உலகநாடுகளின் அனுசரணையோடை எம்மக்களுக்கு குறைந்தபட்ச அரசியல் தீர்வு ஏதாவது கிடைக்குமோ என்று பாருங்கோ.
யோசப்பு: அதைத்தானே எங்கடை கேபியும் சொல்லுறார். பிரபாகரன் இருக்கிறார் எண்ட மற்றக்குழு பிரபாகரன் வரட்டும் எண்டு பாத்துக் கொண்டிருக்கினம்.

நான்: கேபி சொல்லுறது சரி தமிழீழம் என்றும் சொல்லுறியள். உலகநாடுகளே சொல்லிப்போட்டுது சின்னத்தீவைப் பிரிக்க ஏலாது எண்டு. இப்ப பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ எண்டதில்லை இண்டைய பிரச்சனை. இருந்தா வரட்டும், அவர் வரமாட்டார் சனத்தைப்படுத்தின பாட்டுக்கு சனமே அடிச்சுச் சாக்காட்டிப் போடும். உங்கடை கேபியும் தமிழீழம் எண்டு காலத்தை இழுத்தடிக்கிறதை விட்டுப் போட்டு ஏதாவது உடனடியாக சூட்டோடை சூடா உலகத்தின்ரை பார்வை மற்றப் பக்கங்களுக்கு திரும்பமுன்னம் நடக்க வேண்டியதைப் பாருங்கோ. ஆறினால் கஞ்சி பழங்கஞ்சிதான்.

நான்: (யோசப்புவின் நண்பர் ஒருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்) அண்ணை உங்கடை பிரெண்டு உங்களைக் கண்டும் காணாத மாதிரிப்போறார்.
யோசப்பு: அவர் என்ணோடை கொஞ்சம் மனக்கசப்புத் தம்பி. எல்லாம் புலிப்பிரச்சனைதான். வேறை என்ன காசுதான்.

நான்: புலிக்கெண்டு வாங்கி உங்கடை பொக்கட்டை நிரப்பிப்போட்டியள் போலை?
யோசப்பு: தம்பி உப்பிடிக் கதைக்கப்படாது. நான் புலிக்கு விசுவாசத்தோடைதான் காசு சேத்தனான். எங்களுக்கு, சேர்க்கிற காசிலை 15 விகிதகொமிசன் தந்தவங்கள்தான். நாங்கள் எங்கடை வேலை வில்லட்டியை விட்டுப்போட்டுத்தானே காசு சேர்க்கப் போனனாங்கள். போற இடத்திலை எத்தினை கேள்வி நியாயம். மழை வெய்யில்…காடு கரம்பையெண்டு திரிஞ்சனாங்கள்.

நான்: சரி மனச்சாட்சிப்படி சொல்லுங்கோ உது உதவியோ தொழிலோ?
யோசப்பு: உதவிதான் தம்பி. மற்றவை எல்லாம் வீட்டிலை குளிரிலை நித்திரை கொள்ளேக்கை நாங்கள் மட்டும் உந்தப் பனிக்கிள்ளையும் குளிருக்கிள்ளையும் திரிஞ்சு காசு சேத்தனாங்கள்.

நான்: அதுக்குத்தானே உங்களுக்கு கொமிசன் தந்தவங்கள். உங்களுக்குக் காசு தந்தவங்கள் எல்லாம் வானத்திலை இருந்து கொட்டுண்டதைப் பொறுக்கித்தரேல்லை.
யோசப்பு: நீ என்ன தம்பி உதிலைபோன என்ரை பழைய பிரெண்டு மாதிரிக்கதைக்கிறாய். அவரும் உப்பித்தான்; தந்தகாசைத் திருப்பித்தா எண்டு கேட்கிறார். போராட்டத்துக் கெண்டு கொடுத்துப்போட்டு என்னட்டைக் கேட்டால் நான் எங்கை போறது தம்பி.

நான்; கனக்கவே தந்தவர்? வாங்கின கொமிசனிலை குடுக்கவேண்டியது தானே.
யோசப்பு: ஒரு இலட்சம். அந்தக்காசை ஒவ்பிசிலை குடுத்திட்டன். போய் அவங்களைக் கேட்க வேண்டியது தானே.

நான்: உங்களிட்டைத் தந்த காசை எப்படி அவங்களிட்டைக் கேட்கிறது. உங்களுக்குத் தெரியுமோ அந்தாள் பொலிசுக்குப் போகலாமமெண்டு.
யோசப்பு: அதுதானே முடியாது தம்பி. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு எப்படி காசு குடுப்பாய் என்று கேட்டு அவரையுமெல்லோ உள்ளுக்குப் போடுவாங்கள்.

நான்: ஓகே..கொஞ்சப்பேர் வந்து தன்னை வெருட்டிக்காசு கேட்டது என்று சொல்லலாம் தானே. புலியள் வெருட்டிக்காசு வாங்கிறது ஐரோப்பா முழுக்கத் தெரியும் தானே.
யோசப்பு: அதுக்குத்தானே நான் கே.பின்டை பக்கம் போட்டேனே. பொலிஸ் வந்தால் நான் கூட்டிக் கொண்டுபோய் யாருட்டை காசு கொடுத்தனான் எண்டு காட்டுவன். பேந்து புலிகளும் அவரும் பட்டபாடு. இல்லையெண்டால் சொல்லுவன் நான் இப்ப கேபியின் பக்கம் புலியைப்பற்றி எனக்குத் தெரியாது எண்டு.

நான்: உப்பிடிச் சொல்லி நீங்கள் நழுவேலாது. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு காசு சேர்க்கிறதற்கு சட்டம் இடங்கொடுக்காது. காசுகுடுத்த எல்லாரும் சேர்ந்து பொலிசுக்கோ கோட்டுக்கோ போனால் வாங்கின காசுக்கு நீங்கள் தான் பொறுப்பு.
யோசப்பு: அதுதானே பிரபாகரனின்டை கையெழுத்தோடை றிசீட்டுக் கொடுத்திருக்கிறம். போய் பிரபாகனிட்டைக் கேட்க வேண்டியது தானே.

நான்: நீங்கள் சொல்லுறமாதிரி பிரபாகன் மேசையிலை இருந்து உந்த றிசீட்டுக்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருந்ததாலைதான் போராட்டம் தோத்துப் போனதாக்கும். என்ன கதைவிடுகிறியள் அண்ணை. உந்த றிசீட்டே கள்ளவேலை தான். ஒண்டைப் பிடிக்கப்போய் எல்லாம் பிடிபடப்போகுது.
யோசப்பு:அப்ப என்ன தம்பி செய்கிறது.

நான்: போய் பிரபாகரனிட்டைக் கேழுங்கோ.
யோசப்பு: தம்பி என்னை நடுத்தெருவிலை விட்டுவிட்டுப் போகிறீர்.
நான்: நீங்கள் எல்லாரும் கறக்கிறதையெல்லாம் கறந்து போட்டு எங்களையும் மக்களை நடுத்தெருவிலைதானே விட்டுனீங்கள். வருவன் இப்பவில்லை… காசெண்டு வந்தால் பொல்லோடை வருவன்…

வேடுவப் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

0000.jpgவீட்டு வேலைக்காக அமர்த்தப்படுகின்ற வேடுவப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக ஆதிவாசிகளின் வேடுவத் தலைவர் ஊருவரியகே வன்னி அத்தோ தெரிவித்தார். இன்றைய நாகரிக உலகில் எமது ஆதிவாசிகளும் தேசிய நீரோட்டத்தில் இணைவது காலத்தின் தேவை. இதனால் வனப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எமது சமூகத்தை வெளியுலகிற்குக் கொண்டுவருவதற்குப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றவேளை எம் இளம் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் பிரயோகிக்கப்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அண்மைக்காலமாக எமது இனத்தைச் சேர்ந்த இளம் வயதினர் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இருப்பினும் அவர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவது மாத்திரமல்லாது வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் இருவரைப் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து சிறுவர் நன்நடத்தைப் பிரிவினர் மீட்டெடுத்ததாகவும் அவர்கள் இருவரும் கொழும்பிலுள்ள நன்நடத்தை முகாமில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஊறுவரியகே வன்னி அத்தோ கடும் விசனத்துடன் தெரிவித்தார்.

பிரபாகர ஜாதி வெறியிஸம்!: துரை நரையன்.

இலங்கையில் இனரீதியிலான ஒடுக்கு முறைக்கெதிராக இனவெறியுணர்வுகள் கூர்மையடைந்த போது எழுந்த இனப் போராட்டத்தின் தலைமையை கைப்பற்றவும் தலைமையை தொடர்ந்து காப்பாற்றுவதற்காகவும் வன்முறைகளைக் கையிலெடுத்துக் கொண்டு உண்மையில் தலைமைப் பண்பு கொண்ட நற்சிந்தனையாளர்கள் எல்லாம் ஒவ்வொருவராக கொலை செய்து அழிக்கப்பட்டமை கண்கூடான வரலாறு.

பிரபாகரனால் தனது தலைமையைக் காப்பாற்றுவதற்காக அழிக்கப்பட்ட மாற்று கட்சியினரில் அனைவரும் மாற்றுச் சாதியினரே என்பது தெள்ளத் தெளிவானது. மேலும் தலைமையைக் காப்பாற்றும் உச்சப் போராட்டத்தில் தன் சாதியினரையும் (பிரபாகரன் அவர்களுள் உயர்ந்தவர் என்பது வேறு விடயம்) இலங்கை அரசிற்கு காட்டிக் கொடுத்தும் கொலை செய்தும் இருக்கின்ற நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

மொத்தத்தில் தன்னிகரற்ற தலைமையை தனக்காக வைத்துக் கொள்வதைத் தவிர அதன் மூலம் தானும் தன்னைக் காக்கும் சகாக்களும் வசதியான உச்ச பட்ச வாழ்க்கையை அனுபவிப்பதைத் தவிர வேறு எந்த நல்லெண்ணமும் கொண்டவராக அவர் காணப்படவில்லை.

ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் ஆரம்ப ஆயுதப் போராட்ட முன்னேற்பாட்டாளர்களான தங்கதுரை, குட்டிமணி போன்றோரால் பிரபாகரன் ஓரங்கட்டப்பட்ட போது பிரபாகரன் சாதியிசத்தைக் கையிலெடுத்து புலிகள் இயக்கத்தைக் கட்டிக் கொண்டார்.

புலிகளின் ஆரம்ப காலம் முதல் நீண்ட காலங்களுக்கு அதன் படையணிகளதும், பிரதேசங்களதும் தலைவர்களாக இருந்தவர்கள் எல்லோரும் பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களான அவரின் சாதியினரே. அது உப தலைவராக இருந்த மாத்தையாவாகட்டும் , கடற்படைப் பொறுப்பாளர் சூசை ஆகட்டும், கிழக்கு மாகாணப் பொறுப்பாளராய் இருந்த குமரப்பா (குமரேந்திரன்) ஆகட்டும் இரண்டாம் தலைமைக்கு இடித்துக் கொண்டிருந்த கிட்டுவாகட்டும் புலிப் பணத்தையே சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளில் பிழைக்கும் பிரபாகரனின் ஊரையும் சாதியையும் சேர்ந்தவர்கள் இன்றும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இவ்வாறாக புலிகள் அமைப்பையே பொருளாதார ரீதியில் ஏமாற்றிய பலர் அவர்கள் வெளியூராயும் வெளிச் சாதியாயும் இருக்கும் பட்சத்தில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபாகர சாதியாய் இருக்கும் பட்சத்தில் அப்பெரிய பணத் தொகையுடன் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் – இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் சாதி வெறியின் உச்சமில்லையா?

மேலும் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் எல்லோருமே எவ்வாறு வல்வெட்டித்துறை சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆனார்கள் என்பது இலங்கைத் தமிழ் சமூகம் எப்படி புலிகளினால் அடக்கி ஒடுக்கி எள்ளி நகையாடப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கவில்லையா? வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பிரபாகரனின் சாதியைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு எவரும், வேறு எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் தலைமை தாங்கும் தகுதியற்றவர்களாகவா இருந்திருக்கிறார்கள்?. மிகச் சிறு பிரிவினராகிய வல்வெட்டித்துறை பிரபாகர சாதியினரே தலைமை தாங்க முடியும் என்ற நிலை தாங்களே தங்கள் எண்ணப்படியே ஆள முடியும் என்றெழுந்த சிங்களத்தின் நிலைக்கு ஏதும் வித்தியாசத்தை காண்பிக்கிறதா? சிங்களத்திற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் தெரிகிறது.? இவர்கள் எப்படி சிங்களத்தை தப்பு கூற முடியும்?

ஆரம்பகால புலிகள் அமைப்பு வளர்ந்த காலப்பகுதியில் பிரபாகரன் வல்வெட்டித்துறை கடந்த ஏனைய கடற்கரைப் பிரதேசங்களில் திரிந்தபோது லாவகமாய் தனது சாதிவாதத்தை உபயோகித்துக் கொண்டமை அன்றைய கால அரசியல் ஈடுபாட்டாளர்களுக்கு அப்பட்டமாய் தெரிந்த விடயம்.

மேலும் பிரபாகரன் தனக்கேற்ற விசுவாசிகளை உருவாக்குவதற்காக தன்சாதி கடந்து மேலும் சாதி குறைந்தவர்களையும் பதவிகளில் இணைத்துக் கொண்டார் என்பது வேறு உண்மை. அது புலிகளின் கையாழுகை தந்திரமும் கூட.

உதாரணமாக பண்டிதர் எனப்படும் ரவீந்திரன் யாழ் அரசியல் பொறுப்பாளராகவும் தமிழ்ச்செல்வன் இயக்க அரசியல் பேச்சாளராகவும் கையாளப்பட்டிருந்தனர். தம்மை தலைவர் மரியாதை செய்து பதவி வழங்கியதற்கு பதிலாக கைகட்டி, வாய் பொத்தி நின்று சேவகம் செய்வார்கள் என்ற புலித் தந்திரத்தின் சமூக ஏமாற்று சிந்தனையின் வழியாகவே பண்டிதரும், தமிழ்ச்செல்வனும் பதவி வழங்கப்பட்டிருந்தனரே அன்றி சாதி பார்க்காத தன்மையினால் அல்ல. மேலும் நாங்கள் அவதானிக்கலாம்- இவர்கள் எல்லாம் பிரபாகரனின் தீவிர விசுவாசிகளாக, வெறிபிடித்த தொண்டர்களாக எள் என்றால் எண்ணையாய் நின்றார்கள்- கிட்டு, மாத்தையா, பொட்டம்மான் சூசை, குமரப்பா (நிர்ப்பந்த கொலை) போன்ற தலைவர்கள் யாரும் தாக்குதற் சமர்களில் உயிரிழந்தவர்கள் அல்ல. ஆனால் பண்டிதர், தமிழ்ச்செல்வன் போன்றோர் தீவிர அடிமைத்தன தலைமை விசுவாசத்தினால் தாக்குதல்களில் தம்மை முட்டாள்தனமாக அழித்துக் கொண்டனர். அந்த விசுவாசத்தனத்தை பெறும் சதி, ஏமாற்று முயற்சியாகவே அவர்களுக்கு பதவிகள் கொடுத்து ஏமாற்றப்பட்டனர். அவர்களும் விசுவாசமாய் தம்மை அழித்துக் கொண்டனர். போராட்ட ஆரம்ப காலங்களில் சிங்கள அரசுகளுடன் பதவிக்கும், புகழுக்கும் பணத்திற்குமாக விசுவாசமாக துரோகிப்பட்டம் வாங்கிய தமிழர்கள் போன்றதே இந்நிகழ்ச்சி.

நிற்க! இந்த சாதி வெறிக் கூட்டமான பிரபாகர அட்டூழியச் சமூகத்தின் திருமணங்கள் பற்றி நாம் அவதானித்தோமானால் சாதி வெறியின் உச்சம் புலப்படும்.

குமரப்பாவை எடுத்துக் கொள்வோம். அவர் உயர்சாதிப் பெண்ணைத்தான் மணமுடித்தார். மேலும் அவர் பற்றிய பெண் திருகுதாளங்கள் மட்டுநகர் மக்களிடம் வெளிப்படை. கிட்டுவை எடுத்தால் அவரும் உயர்சாதிப் பெண்ணையே காதலியாக்கிக் கொண்டார். மேலும் காதலி வீட்டுக்குச் சென்ற போதே வெடிகுண்டுத் தாக்குதலுக்குள்ளாகி தம்மவர்களே எறிந்த வெடிகுண்டுக்காக, ஈபிஆர்எல்எவ் இளைஞர்கள் கந்தன் கருணைப் படுகொலை காதலிக்கு சாகசமாக செய்து காட்டப்பட்டது தனிக் கதை. சூசையை எடுத்துக் கொள்ளுங்கள்- உயர்சாதிப் பெண்ணையே மணந்து கொண்டார். திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்காக கைத்துப்பாக்கி வெடிப்பயமுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டது தனிக்கதை. மாத்தையாவையும் எடுத்துக் கொண்டால் உயர் சாதிப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார் என்பதுதான் உண்மை- இருந்தாலும் அவர் விதவைப் பெண்ணையே திருமணம் செய்தார் என்பதைக் கருத்திற்கெடுக்கலாம். ஏனென்றால் இவர்கள் எல்லோருடனும் ஒப்பிடுகையில் மாத்தையா நெருக்கடியான வாழ்க்கைக்கு ஊடாக வந்தவர் என்பது உண்மையானது. அக்காரணமும் அவர் தனித்து விடப்பட்டு ஒதுக்கப்பட்டு சாகடிக்கப்பட்டதற்கான ஒரு காரணமாகும்.

மேலும் தமிழ்ச்செல்வன் கூட உயர்சாதிப் பெண்ணையே மணமுடித்தவர். இங்கே பிரதானமாக உணர்ந்து கொள்ள வேண்டிய விடயம் இவர்கள் அனைவரும் காதல் திருமணமே செய்திருந்தனர். காதல் என்பது மின்சார அதிர்ச்சி போன்றது. அது எங்கும் பாயக் கூடியது. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் – ஆம் எல்லோருக்கும் உயர்சாதிப் பெண்கள் மீதே இந்த எலெக்றிக் பாய்ச்சல் நடந்திருக்கின்றது. இவர்கள் ஒருவருக்கேனும் இவர்கள் சாதியிலோ அல்லது இவர்களை விடக் குறைந்த சாதியிலோ இந்தக் காதல் வந்து விடவில்லை. ஆம். இந்த மின்சாரப் பாய்ச்சல் கூட உயர் சாதியைப் பார்த்துத்தான் பாய்கிறது. இது அவர்களின் உச்சமான சாதி வெறியின் வெளிப்பாடே.

இந்த சாதிவெறித் தலைவர்களில் மிகவும் உயர்வான சாதி வெறியர் பிரபாகன்.

பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்குமான ஆரம்ப போராட்ட மோதலே காதல் பிரச்சனையாலேயே ஏற்பட்டது. உண்மையில் பிரபாகரன் ஆரம்ப போராட்டத்தில் தூய எண்ணம் கொண்டவராகவே இறங்கியிருந்தார். போராளிகள் காதலிப்பதில்லை- மணமுடிப்பதில்லை என்பதெல்லாம் அவர் எண்ணம். அவ்வாறுமே இருந்தார். ஆரம்பத்தில் தமிழின தேசிய விடுதலைப் போராட்டமானது நீண்ட நாட் போராட்டமாக நிகழ்ந்து விடும் என எதிர்பார்க்கப்படவில்லை. ஓரிரு வருடங்களில் வெற்றி கொள்ளப்படும் என்று எதிர்பார்த்தே இளைஞர்கள் வேகமாக அணிதிரண்டார்கள். அதனால் காதலிப்பதில்லை- மணமுடிப்பதில்லை என்ற சிந்தனை பிரச்சனையற்று இருந்தது. இலங்கை- இந்திய ஒப்பந்தத்துடன் போராட்டம் வெற்றியை எட்டியிருந்தும் – அதனைப் புலிகள் சுக்கு நூறாக்கி தமிழினத்தையே அழிக்குமளவிற்கு கொண்டு சென்றதும் தனிக்கதையாகும்.

நிற்க! போராட்டம் தடம்புரண்டு தொழிலாக மாறிய போதும்- போராட்ட காலம் நீண்டு சென்ற போதும் நிலமைகள் மாறியது. எனவே தலைவர்கள் வசதி வசதியாக மணமுடித்து ஜாலி வாழ்க்கைக்கு தொடங்கினர். இந்த நிலையில் பிரபாகரன் பல்கலைக்கழக உண்ணாவிரதிகளில் ஒருவரான மதிவதனியை அவர் உயர்சாதி என்ற காரணத்தினால் மணமுடித்தார். போராளிகள் மணமுடிப்பதில்லை என்ற கொள்கையை சாதி வெறி காரணமாக மாற்றி திருமணம் செய்து கொண்டார் -திருமணத்திற்கு முன்னமே மதிவதனி கர்ப்பமாய் இருந்தது உலகறிந்தது. ஆனால் அதே பிரபாகரன் இயக்கத்தினுள் காதலித்து கர்ப்பவதியாகிய ஒரே காரணத்திற்காக காதல் ஜோடியொன்றை சுட்டுக் கொன்ற கொடுமையைச் செய்தார். கரும்புலிகள் என்ற போர்வையில் சிறுவர்களை தற்கொலைப் போராளிகளாக அனுப்பி விட்டு பிரபாகரன் மனைவியுடன் சந்தோசமாய் இருந்து பிள்ளைகள் பெற்றிருக்கின்றார் என்பது புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. இதை குரூரத்தின் உச்சமாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இந்த வல்வெட்டித்துறை மற்றும் அவர்களைச் சேர்ந்த சாதியிஸத்தினால் தான் இந்த போராட்டம் சுக்கு நூறாக்கப்பட்டதற்கான மற்றுமோர் வெளிப்படையான உதாரணம் வன்னிச் சமரின் போது வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் புரியமுடியும்.

பிரதானமாக பாரிய அளவில் நடந்த லண்டன் வெஸ்ற் மினிஸ்டர் போராட்டங்களை எடுத்துப் பாருங்கள். அங்கே ஒருவர் இருபது நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்தார். அவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பிரபாகரனின் ஜாதியை சேர்ந்தவர்- அவருடன் உடனிருந்தவர்களும் அவர்களே. மேலும் இவர்கள் லண்டனில் வல்வெட்டித்துறை சமூகத்தினர் நிறைந்து செறிந்து வாழும் ‘லண்டன் வல்வெட்டித்துறை” என சொல்லப்படுகின்ற ரூட்டிங் பகுதியை சேர்ந்தவரே. இந்த போராட்ட காலப்பகுதியில் தொடர்ந்து அதிகம் பங்கு கொண்டவர்கள் வல்வெட்டித்துறை சமூகத்தவரே. இவர்கள் பிரபாகரன் தமது சாதியையும் ஊரையும் சேர்ந்தவர் என்பதை மட்டும் சிந்தித்தார்களே ஒழிய மக்கள் கொல்லப்படுவதற்கான சூழ் நிலையை பிரபாகரன்தான் ஏற்படுத்தினார் என்பதையும், மக்களை நிர்ப்பந்தமாக துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்து மக்கள் அழிவுக்கு பிரபாகரன் தான் காரணமாக இருந்தார் என்பதையும் தமது சாதி வெறியின் காரணமாக சிந்திக்க தவறி விட்டனர்.

மேலும் இந்தப் போராட்ட நாட்களில் சாப்பாடு, குடிநீர் முதலானவை வல்வெட்டித்துறை சமூகத்தினரால் ரூட்டிங் பகுதியில் இருந்தே எடுத்துச் செல்லப்பட்டன. மற்றும் உண்ணாவிரதத்தை பார்வையிடவும், முடித்து வைக்கவும் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை எம்.பி எனச் சொல்லப்படக் கூடிய ரூட்டிங் எம்.பியே. மொத்தத்தில் இந்த வெஸ்ற்மினிஸ்டர் போராட்டமானது VVT சமூகத்தாலேயே நடத்தப்பட்டது.

மேலும் வணங்காமண் சேகரிப்பு பொருட்களும் ரூட்டிங் இல் உள்ள குடோன்களிலேயே முடக்கப்பட்டிருந்ததையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்றும் போராட்டத்தில் அடிக்கடி முகம் காட்டிய அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்த முயன்ற எம்.பி சிவாஜிலிங்கம் (இவர் 15 வருடங்களுக்கு முன்பு பிரபாகரனால் கொலைசெய்யப்பட ஆள் அனுப்பபட்டவர் என்பது தனிக்கதை-) இப்போது பிரபாகரனை சரி என்று சொல்வதால் இவர் எவ்வாறு பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தப் போகிறார்?. மற்றும் வல்வையை சேர்ந்த காரணத்தினால் மரண தண்டனைக்குரிய இவரே தப்பித்து கொண்டார். அந்த சமூகத்தவர்களுக்கு மட்டும் விதி விலக்குகள் (புலிகளுக்குள்) உண்டு.

சாதிவெறியின் உச்சக்கட்டம் பாருங்கள்- இந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கியது பிரபாகரன்தான். தன்சாதியைச் சேர்ந்த சிங்களவன் சிங்களத்தை ஆட்சி செய்வும் தான் தமிழரை அடக்கியாளவும் திட்டமிட்டு மிக உயர்வான உதவிகளை அளவுக்கு மீறி தனக்கு செய்திருந்த யு.என்.பி யையும் உதறியெறிந்து விட்டு சாதி வெறியின் ஓங்காரமாய் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினார்.

ராஜபக்சவும் பாருங்கள் – பிரபாகரன் போலவே ஓநாய் வெறியெடுத்து பிரபாகரனையே கொன்றொழித்தார். அந்த வெறி இன்றும் நின்று விடாது பிரபாகரன் போலவே எக்காளமிடுகிறார்.

சாதி மற்றும் ஊர் என்ற வெறியின் உச்சக்கட்டம் உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து மக்களுக்கு எது நல்லது என்பதை புரிந்து கொள்ள மறுத்து ஒரு தேசிய இனமே கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் அழிவுக்கு வடிகாலிடப்பட்டிருக்கிறது. தமிழ்மக்களின் இன்றைய அனைத்து அழிவுகளுக்கும் புலிகளே முழுக் காரணிகள் – அவர்களையும் அழித்தார்கள். அழிவுப் பாதையிலும் தள்ளி விட்டார்கள்.

இன்று ஒன்றுமே இல்லாத ஓவென்ற வெற்றிடமாய் தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டுள்ள நிலையிலும் மிஞ்சிய அற்ப சொற்ப மக்களையும் ஏமாற்றிப் பிழைப்பதற்காக பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்றும் சிலிர்த்தெழுவார் என்றும் அவர் மந்திரஜாலம் நிகழ்த்துவார் என்றும் மண்டைக்குள் இல்லாத சில பகுதி மக்களை ஏமாற்ற முயற்சிப்பது இன்றும் அவர்கள் திருந்தத் தயாரில்லாத கேவலமான கெட்ட முயற்சியாகும்.

தயவு செய்து தமிழினம் இனியாவது இனிமேலாவது தவறான சிந்தனைகளையும் தவறுகளையும் ஏற்றுக் கொண்டு அவற்றை மறுதலித்து சாதி வெறி மற்றும் ஊர்வெறிச் சிந்தனைகளைத் தகர்த்து தமிழ்த் தேசிய இனம் என்ற ஒரே அடிப்படையில் தமிழினத்தைக் காக்கவல்ல சூழ்நிலையை தீர்வை நோக்கி நகர்த்த முழு அளவில் இணைந்து கைகோர்த்து செயற்பட வேண்டிய உண்மையை உணர்ந்து கொள்வோம். மேலும் 70 ம் 80 ம் ஆண்டு காலப் பகுதியை ஒத்ததான துரோகத்தன அரசியல் ஜனநாயகம் என்ற வார்த்தைகளின் ஊடாக நுழையும் என்பதையும் உணர்ந்து அவற்றிற்கெதிராகவும் திடமாயும் செயற்படுவோமாக.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்!

உலக மக்கள் தொகை நாள் ( World Population Day) – புன்னியாமீன்

world-population-day-11-july.jpgஉலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. “பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல்; பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவு’ என்பது இவ்வாண்டின் தொனிப் பொருளென ஐ.நா. சனத் தொகை நிதியம்(UNFPA) பிரகடனப்படுத்தியுள்ளது.

(UNFPA) நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அஹ்மத் ஒபெய்ம் உலக மக்கட் தொகை தினம் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில்; “இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் மரண வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின் மையாக விளங்குகின்றது. என்றிருந்தார்.

1987ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் திகதியை (World Population Day, recognized by the UN ) உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி 2009 ஜூலை 10 ம் தேதி உலகின் மக்கள் தொகை 6,770,073,396 (00:51 GMT (EST+5) Jul 10, 2009) அதாவது 677 கோடியாகும். சராசரியாக உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 9000 பேர், நாளைக்கு 2,160,000 பேர் என்ற வேகத்தில் அதிகரித்து வருவதாக மதிப்பீட்டின் பிரகாரம் கூறப்படுகின்றது.

உலக சனத்தொகை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சனத்தொகைக் கல்வி நிறுவகத்தின் அறிக்கை பிரகாரம் கி.பி. 01இல் உலக சனத்தொகை சுமார் 20 மில்லியன்களாக காணப்பட்டது. இத்தொகை கி.பி. 1000ஆம் ஆண்டில் 275 மில்லியனாகவும், கி.பி. 1500ஆம் ஆண்டில் 455 மில்லியனாகவும், 1650ஆம் ஆண்டில் 500 மில்லியனாகவும், 1750ஆம் ஆண்டில் 700 மில்லியனாகவும் காணப்பட்டது. இவ்வாறு அதிகரித்த மக்கள் தொகை 1804ஆம் ஆண்டில் 1 பில்லியனாகவும், 1850ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாகவும், 1900 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாகவும், 1927ஆம் ஆண்டில் 2 பில்லியனாகவும், 1950ஆம் ஆண்டில் 2.55 பில்லியனாகவும், 1960ஆம் ஆண்டில் 3 பில்லியனாகவும், 1975ஆம் ஆண்டில் 4 பில்லியனாகவும், 1987ஆம் ஆண்டில் 5 பில்லியனாகவும் உயர்ந்தது. இத்தொகை 1990ஆம் ஆண்டில் 5.3 பில்லியனாகவும், 1995ஆம் ஆண்டில் 5.7 பில்லியனாகவும், 1999ஆம் ஆண்டில் 6பில்லியனாகவும், 2006ஆம் ஆண்டில் 6.5பில்லியனாகவும் உயர்ந்து தற்போது (2009 ஜுலை) 6.76 பில்லியனாக ஆகியுள்ளது. 2012ஆம் ஆண்டில் 7 பில்லியனாகவும், 2020ஆம் ஆண்டில் 7.6 பில்லியனாகவும், 2030ஆம் ஆண்டில் 8.2 பில்லியனாகவும், 2040ஆம் ஆண்டில் 8.8பில்லியனாகவும், 2050ஆம் ஆண்டில் 9.2 பில்லியனாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தைத் தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக பல மடங்குகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடியும்.

இன்று உலகளாவிய ரீதியில் அதிக சனத்தொகைக் கொண்ட 15 நாடுகளை எடுத்துக் கொள்ளுமிடத்து மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி பின்வருமாறு அமைந்துள்ளது.

1. சீனா 1,331,630,000 (19.67%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
2. இந்தியா 1,165,930,000 (17.22%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
3. ஐக்கிய அமெரிக்க 306,829,000 (4.53%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
4. இந்தோனேசியா 230,512,000 (3.4%) ஜுன் 24, 2009 மதிப்பீட்டின்படி
5. பிரேசில் 191,437,000 (2.83%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
6. பாக்கிஸ்தான் 166,826,000 (2.46% ) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
7. பங்களாதேஸ் 162,221,000 (2.4%) ஐ.நா மதிப்பீட்டின்படி
8. நைஜீரியா 154,729,000 (2.29%) ஐ.நா மதிப்பீட்டின்படி
9. ரஸ்யா 141,832,000 (2.1%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
10. ஜப்பான் 127,580,000 (1.89%) மே 1, 2009 மதிப்பீட்டின்படி
11 மெக்சிகோ 109,610,000 (1.62%) ஐ.நா மதிப்பீட்டின்படி
12. பிலிப்பைன்ஸ் 92,226,600 (1.36%) ஜனவரி 1, 2009 மதிப்பீட்டின்படி
13. வியட்னாம் 88,069,000 (1.3%) ஐ.நா. மதிப்பீட்டின்படி
14. ஜெர்மனி 82,062,200 (1.21%) ஜனவரி 1, 2009 ஐ.நா. மதிப்பீட்டின்படி
(15) எத்தியோப்பியா 79,221,000 (1.17%) ஜுலை 5, 2008 மதிப்பீட்டின்படி ஆகியன அமைந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட அட்டவணைப்படி உலக சனத்தொகையில் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் ஆகியன கூடிய சனத்தொகைக் கொண்ட நாடுகளாக இருப்பதை அவதானிக்கலாம். 2009ஆம் ஆண்டு ஜுலை 05ம் திகதியின் மதிப்பீட்டின் பிரகாரம் இப்பட்டியலில் இலங்கை 56ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை சமூகக் குறிகாட்டிகள் பலவற்றில் மாறுபட்ட போக்கைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இங்கு வருடாந்த இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1 ஆகவும், பிறப்புவீதம் 1000 பேருக்கு 17.9 வீதமாகவும், இறப்பு வீதம் 1000 பேருக்கு 6.6 வீதமாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் 2001 ஆம் ஆண்டு குடித்தொகை கடிகாரத்தின் பிரகாரம் 18,797,257 தொகையாகவும், 2007 ஆம் ஆண்டில் 20,010,000 தொகையாகவும் இருந்த குடித்தொகை தற்பொழுது 2009ஆம் ஆண்டு மதிப்பின் படி 21,128,772 தொகையாக உயர்வடைந்துள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் சராசரிக் குடித்தொகை வீதத்தினை நோக்கும் போது, 1995 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.37 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது 2050 ஆண்டில் 0.45 வீதமாக மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் கருவளவீதமானது 1965 ஆம் ஆண்டில் 5.19 வீதமாகவும், 1975 ஆண்டில் 3.6 வீதமாகவும், 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 1.96 வீதமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு குறைவடையும் போக்கானது, பெண்கள் கல்வியில் ஈடுபாடு, திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களின் தொழில் அந்தஸ்து அதிகரிப்பு போன்ற காரணங்களாக அமைந்ததெனலாம்.

உலகளாவியரீதியில் தற்பொழுது வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையானது, குடித்தொகைக் கடிகாரத்தின் 2009 ஆண்டு கணிப்பின் படி, குடித்தொகை வளர்ச்சி வீதமானது 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது.  எனினும் 2050 ஆம் ஆண்டில், குடித்தொகை வளர்ச்சி 0.5 வீதமாக குறைவடைகின்ற பொழுதிலும், உலக சனத்தொகையானது 900 கோடியாக பதிவாகும் என அமெரிக்க குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

குடித்தொகையானது இதே வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்லுமாயின் 2075 ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும் 2200 ஆம் ஆண்டில் 1,200 கோடியாகவும் உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கைகள் பலவற்றில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணங்களாக பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்பன அமைந்துள்ளன. உலக மக்கள் தொகை நிர்ணயப்படி பிறப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் கருவலம் பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கின்றது. இனப்பெருக்க திறன்கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ‘கருவலம்” எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். நாடுகளின் பிறப்பு வீதமானது உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் பிரிக்கும்போது வருகின்றது. பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது, மதம், கல்வி நிலை, பொருளாதார நிலை, இருப்பிடம் போன்றன அமைகின்றன.

குறித்தொரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களில் ஆயிரம் பேருக்கு மரணம் அடைகின்றோரின் எண்ணிக்கை ‘இறப்பு வீதம்” என்பர். நாடுகளின் இறப்பு வீதம் எனும்போது இறந்தோரின் மொத்த எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுக்கும்போது பெறப்படும் எண்ணிக்கையாகும். பொதுவாக இறப்பு வீதத்தைவிட பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதே குடித்தொகைப் பெருக்கத்திற்கான காரணமெனலாம். நவீன காலத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம் பெருமளவுக்கு இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.

பூமியில் உள்ள வளங்கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக இரண்டு லட்சம் பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்களும் நிறைந்திருக்கின்றன.

பூமியின் கொள்ளளவை விஞ்சிய உலக சனத்தொகை அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றி இருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.மனித இனத்தின் பெருக்கம் பூமியின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பையும் அதிகரிக்க வகை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்பு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தியடையாத நாடுகளிலே அதிகமாகக் காணப்படுகின்றன. காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை வெறும் 20 சதவீதம்தான். மாறாக வெறும் 20 சதவீத வளத்தைக் கொண்டிருக்கும் அபிவிருத்தியடையாத நாடுகளான ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதம்.

ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதார வளம் இருந்தாலும் குடும்பத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால் வளம் வறண்டு விடும். வாழ்வு வீழ்ந்து விடும். அளவோடு பெற்றால் தான் வளமோடு வாழ முடியும். வீட்டுக்குப் பொருந்தும் இந்த நியதி நாட்டுக்கும் பொருந்தும்.

ஜூன் 2009இல் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ரஸ்யா, இங்கிலாந்து ஆகிய ஜி.8 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ‘உலக வறுமையும், பற்றாக்குறையும்” என்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெர்சின் கூறியதாவது உலகில் உள்ள ஆறு பேரில் ஒருவர் பசிக்கொடுமைக்கு உள்ளாகிறார். உலகில் 6 விநாடிக்கு ஒரு குழந்தை போதிய சத்துணவின்மையினால் இறக்கிறது. ஆப்பிரிக்க மண்டல நாடுகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் இருந்ததில்லை. இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஆபத்து ஏற்படும். மனிதாபிமான அவலத்தின் விளிம்பில் உலகம் உள்ளது. இதனை எதிர் கொள்ள முழுமையாக நன்கொடைகளையே நம்பியுள்ளோம்.” என்றார். இக்கருத்து இவ்விடத்தில் ஆழமாக ஆராயப்படல் வேண்டும்.
2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியைத் தாண்டி விடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும். 2010 – 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.

ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும். அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் தெரிவித்துள்ளார். 2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியில்லை. சுற்றுச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என்ற உறுதியாகச் சொல்லலாம்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் வனவளம் அருகி, மண் அரிப்பு பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. கான்கிரீட் காடுகளின் வளர்ச்சியால் பயிர் காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகிறது. கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச் சூழல் சீர் கெடுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறைஇ போக்குவரத்து நெரிசல், மருத்துவமனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நகரங்கள் நரகங்களாகின்றன.

மேற்குறிப்பிட்ட அடிப்படையில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை நேரடியாக நோக்குவோம். அவை அடிப்படையில் உணவுப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, வதிவிடப் பிரச்சினை என வகுக்கலாம். கல்வி வசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி முதலிய சமூக நலச் சேவைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளென பல குடித்தொகை பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கின்றன. இவற்றினால் அதிகளவில் பாதிக்கப்படுவன அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளே.

குடிசனப் பெருக்கத்தினால் இன்றைய உலகம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினை உணவுப் பிரச்சினையாகும். அதிகரித்துவிட்ட மக்களுக்கு போதிய உணவுமில்லை. ஊட்டமான உணவுமில்லை. உலகில் மக்கள் தொகை மூன்றிலொரு பங்கினர் உணவுப் பற்றாக்குறையினால் தவிக்கின்றனர். மூன்றிலொரு பங்கினருக்கு மாத்திரமே போதுமானளவு உணவு கிடைக்கின்றது. அத்துடன், வேலையில்லாப் பிரச்சினை குறைவிருத்தி நாடுகளில் அதிகளவில் தலைதூக்கியுள்ளன. அதனால்தான் அண்மைய ஆண்டுகளில் பலவிதமான தொழில்களை நாடி இலங்கை, இந்திய மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் இடம்பெயர்கின்றனர். மூளைசாலிகள் வெளியேறுவதும், மனிதவலு வேளியேறுவதும் ஒரு நாட்டின் ஏற்பட்டிருக்கும் வேலையில்லாமையினாலும் ஊதியக் குறைவினாலுமாகும். பொதுவாக பயிர்ச்செய்கை பொருளாதாரத்திலேயே தொழில் பிரச்சினை அதிகளவு காணப்படுகிறது. அதிகரிக்கும் மக்கட் தொகைக்கு வேலை வழங்கும் திறன் பயிர்ச்செய்கைக்கு இல்லை. அதனால்தான் குறைவிருத்தி நாடுகள் இன்று கைத்தொழில் ஆக்கங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்று முக்கியமாக நகர்ப்புறங்களில் வதிவிடப் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மக்கள் தொழில் நாடி நகரங்களில் குடிபெயருவதால் நகரங்களில் இருப்பிடமின்மை உருவாகின்றது. நியுயோர்க், லண்டன், ஹொங்கொங், பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் மாத்திரமன்றி கொழும்பு போன்ற சிறிய நகரங்களிலும் வதிவிடப் பிரச்சினைகள் உருவாகுகின்றன. அதனால்தான் வானளாவிய மாடிக்கட்டடங்கள் இந்த நகரங்களில் கட்டப்பட்டு வருகின்றன. பண்டைய காலம் முதலே குடித்தொகைப் பிரச்சினை பொருளாதார புவியியல் அறிஞர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. இப்பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து அறிஞர்கள் மக்கள் தொகைக் கோட்பாடுகளை விஞ்ஞானபூர்வமாக உருவாக்கியுள்ளனர்.

மேலும், சனத்தொகை பிரச்சினை உக்கிரமடைய உலகக் குடிப்பரம்பலும் ஒரு காரணமாக அமைகின்றது. கிழக்காசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் வடக்கில் அமெரிக்க நாடுகளிலும் சனத்தொகை பரம்பல் அதிகரிப்புக்கான காரணங்களாக பயிர்ச்செய்கைக்கு உகந்த விளைநிலங்கள் காணப்படுவதும், உகந்த காலநிலை காணப்படுவதும் பிரதான காரணிகளாக அமைகின்றன. அதேநேரம், அதிகக் குளிர்ப் பிரதேசங்கள், அதிக வெப்பப் பிரதேசங்கள்ää அதிக ஈரழிப்பான பிரதேசங்கள், அதிக உயரமான பிரதேசங்களில் சனத்தொகைப் பரம்பல் மிக ஐதாகக் காணப்படுகின்றது.

மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து இரு வேறு கருத்துக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ‘பிறக்கும் குழந்தை வயிரோடு மட்டும் பிறக்கவில்லை. உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது’ இது சமவுடமைவாதிகளின் கருத்தாகும். அதாவதுää பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சமவுடமைவாதம் மூலதனமாகவே கருதுகின்றது. மறு சாரார். ‘கரங்கள் உழைப்பது சில காலம்தானேஇ ஆனால் காலம் முழுக்க வயிற்றுக்கு சோறிட வேண்டுமே’ என்று வேதனை கொள்கிறது இது முதலாளித்துவவாதத்தின் அடிப்படை. ‘ஒரு ஜோடிக் கரங்கள் பல ஜோடி வயிற்றுக்கு காலமெல்லாம் காப்பாற்றுமே’ என்ற நம்பிக்கையை பின்னைய கருத்து ஏற்படுத்துகின்றது. இதை வேறுவிதமாகக் கூறும்போது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமையாகவே கொள்ளப்படுகின்றது.

அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப்புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under population) கருதப்படும் நிலை ஏற்படக்கூடும்.

அதே போல மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளை விட மக்கள் தொகை குறைந்துவிட்டால் அது பேராபத்தில் முடிந்து விடும் என்ற கணிப்பும் இருக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக உழைக்கும் மகளின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இவையனைத்தும் எதிர்காலத்தில் நிலவும் சமூக, பொருளாதார, இயற்கை சூழலைப் பொறுத்தது. இன்றைய சூழலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொகை ஒரு நாட்டிற்குச் சொத்தா? அல்லது சுமையா? என்றால் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் இருக்கும். சில நாடுகளுக்கு வேண்டுமானால் அது இருக்கிறது என்பதே உண்மை. அதன் பொருட்டே சிறுகுடும்ப நெறியை பின்பற்றுவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் அளிக்கிறது.

சீனாவில் 6 தடவை நிலநடுக்கம் 18 ஆயிரம் வீடுகள் தரை மட்டம்

china_yunnan_.gifசீனாவில் உள்ள யுன்னன் பிராந்தியம், தென்மேற்கு சீனா ஆகிய இடங்களில் நேற்று இரவு ஆறு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 ரிச்டர் அளவில் ஏற்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 600க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனரென சீனா அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியதுடன் 75 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததாக ஷிங்குவா செய்திச் சேவை தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் பின்னர் 9 தடவைகள் சிறு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இது மூன்று தொடக்கம் 4.1 ரிச்டர் அளவீடாக இருந்த தென அமெரிக்க பூகற்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கவென 5000 கூடாரங்கள் அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4000 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் சுமார் 1000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட யுன்னன் பிரதேசம் மலைப்பாங்கான தென்பதால் சுமார் 4 இலட்சம் பேரை அங்கிருந்து அகற்றி வேறு இடங்களில் தங்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு சிக்பொன் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் 3 இலட்சத்து 75 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர்.

முந்தைய சேத விபரங்களை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்கிறது ஐ.நா.

110709gordon.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் சேதம் தொடர்பில் தாம் வெளியிட்டிருந்த விபரங்களில் மாற்றம் செய்யப்போவதில்லை என இலங்கையில் உள்ள ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வன்னிக் களமுனையில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயங்கள் குறித்த தமது தகவல்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கோர்டன் வைஸ் வலியுறுத்தியுள்ளார்..

புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் சர்வதேச ஊடகங்களுக்கு மிகைப்படுத்திய தகவல்களை வழங்கியதாக வன்னி மருத்துவர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தனர்.

தவிர, லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வவுனியா நிவாரண முகாம்களில் ஒரு வாரத்துக்கு 1400 பேர்கள் இறக்கிறார்கள் என்ற மதிப்பீட்டுடன் தாங்கள் உடன்படவில்லை என்றும் கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார்.