இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பாக ஆராய விசாரணைக் குழு!

jhon_senevirathna.jpgஇலங்கை மின்சார தனியார் நிறுவனம் (லெகோ) தொடர்பாக ஆராய விசேட விசாரணைக் குழுவொன்றை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே.செனவிரத்ன நியமித்துள்ளார். இக்குழு உரிய விசாரணைகளை  மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் இணை நிறுவனமாக கிழக்கிலும் தெற்கிலும் மின்சார விநியோகம்,  அபிவிருத்தி. நுகர்வேர் சேவை  மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட   இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பில் ஊடகங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இக்குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையைக் கண்டறியும் முகமாகவே ஐவர் கொண்ட விசாரணைக் குழுவை அமைச்சர் நியமித்துள்ளார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *