2009

2009

தேசம்நெற் – சிந்தனைவட்டம் நூல்விநியோகத் திட்டத்தில் பயன்பெற்ற மாணவர்கள் பரீட்சையில் தோற்றினர்

sri-lankan-students.jpgலண்டனில் தேசம்நெற் இலங்கையில் சிந்தனைவட்டம் இணைந்து மேற்கொண்ட கல்வி முயற்சியில் பயன்பெற்ற 4800க்கும் அதிகமான மாணவர்கள் நேற்று ஓகஸ்ட் 23ல் நடைபெற்ற புலமைப் பரிசுப் பரீட்சையில் தோற்றினர்.

நாடு முழுவதும் 70 000 மாணவர்கள் தோற்றும் பரீட்சையில் வவுனியா மாவட்டத்திலிருந்து சுமார் 7 ஆயிரத்து 831 மாணவர்கள் தோற்றினார்கள் என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வோல்ட் தெரிவித்தார். 42 பரீட்சை நிலையங்கள் நிவாரண கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 5731 மாணவர்கள் பரீட்சை எழுதினார்கள். ஏனைய பாடசாலை மாணவர்கள் 2100 பேர் 27 பரீட்சை நிலையங்களில் தோற்றினார்கள்.

சுமார் 300 பரீட்சை மேற்பார்வையாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் பரீட்சைக்கு பொறுப்பான பிரதேச ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்தார். மாணவர்களுக்குத் தேவையான பாட உபகரணங்களை சில அமைப்பினர் வழங்கினார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சை நேற்று ஓகஸ்ட் 23 ஞாயிறு காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணிக்கு முடிவடைந்தது. பொலிஸார் பரீட்சை மண்டபங்களுக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பரீட்சைக்கு முந்திய தினங்களில் ஏற்பட்ட மழையும் அதனால் பலர் தங்கள் வதிவிடங்களை மாற்ற வேண்டி இருந்ததும் மாணவர்களின் கல்வி முயற்சியைப் பாதித்து இருந்தது. மேலும் தொடர்ச்சியாக முகாம்களில் காணப்படுகின்ற அவலங்களும் அசௌகரியங்களும் எவ்வகையிலும் மாணவர்களின் கல்வி முயற்சிக்கு உதவவில்லை.

முகாம்களில் தடுத்தவைக்கப்பட்டுள்ள இம்மாணவர்களின் கல்வி முயற்சிக்காக தேசம்நெற் உம் சிந்தனை வட்டமும் 15000 பவுண் செலவில் நூல் விநியோகத்திட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இத்திட்டத்திற்கு மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் அமைப்பு லண்டன் அகிலன் பவுண்டேசன் லிற்றில் எய்ட் மற்றும் சில தனிநபர்கள் உதவிகளை வழங்கி இருந்தனர். இவை பற்றிய முழுமையா கணக்கு விபரம் விரைவில் வெளியிடப்படும்.

வன்னியில் கைது செய்யப்பட்ட நான்கு மருத்துவர்கள் பிணையில் விடுதலை

court222.jpgதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட வன்னியில் பணியாற்றிய வைத்திய மருத்துவ தரப்பினர் நால்வர், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரையும் 10 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்திய அதிகாரி சி சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி டி பி சண்முகராஜா, இளஞ்செழியன் பல்லவன், மற்றும் கிருஸ்ணராஜா வரதராஜா ஆகியோரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

வடபகுதி கடலில் மீன்பிடிக்க மாலை 6 மணிக்கு முன் சென்று மறுநாள் காலை 6 மணிக்குப் பின்பே கரை திரும்ப முடியும்

வடபகுதிக் கடலில் மீன்பிடிக்கச் செல்வோர் மாலை 6 மணிக்கு முன் கடலுக்கு சென்று மறுநாள் காலை 6 மணிக்குப் பின்பே கரைக்குத் திரும்ப வேண்டுமென்று தெரிவித்துள்ள வடபிராந்தியக் கடற்படைத் தளபதி இரவு நேரங்களில் எவரும் கடலுக்கு செல்வதற்கோ அல்லது திரும்பி வருவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்களென்றும் தெரிவித்துள்ளார்.

வட கடலில் மீன்பிடிப்பதற்கான நிபந்தனைகளை வடபிராந்திய கடற்படைத் தளபதி யாழ்.அரச அதிபருக்கு அறிவித்திருக்கின்றார். இந்த நிபந்தனைகளை கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்திய யாழ்.அரச அதிபர் அவற்றைத் தொழிலாளர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக யாழ். அரச அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடகடல் பகுதியில் மீன்பிடித்தல் சம்பந்தமாக பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து வடபிராந்தியக் கடற்படைத் தளபதி அறிவித்திருக்கின்றார். இப் பிரதேசத்தில் கீழ்வரும் நடைமுறைகளுக்கு அமைவாகவே பகலிலும் இரவிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும். கடலுக்குச் செல்லும் இடம், திரும்பி வரும் இடம் என்பன ஏற்கனவே கடற்படையினராலும் இராணுவத்தினராலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.அந்தந்த இடங்களிலிருந்து மாத்திரமே கடலுக்குள் செல்லவோ வெளியே வரவோ முடியும்.

மீன்பிடிக்கச் செல்வோர் மாலை 6 மணிக்கு முன்பாகச் சென்று மறுநாள் காலை 6 மணிக்குப் பின்னரே தாங்கள் புறப்பட்டுச் சென்ற அதே இடத்திற்குத் திரும்பி வர வேண்டும். இரவு நேரங்களில் மீன்பிடிக்கச் செல்வதற்கோ கடலிலிருந்து திரும்பி வருவதற்கோ அனுமதி வழங்கப்படமாட்டாது.

பகலில் மாத்திரம் மீன்பிடிக்கச் செல்வோர் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டுச் சென்று இரவு 7 மணிக்கு முன்பாக கரைக்குத் திரும்பிவிட வேண்டும். சகல மீன்பிடிக் கலங்களும் இரவில் வெளிச்சத்துடன் தரித்து நிற்க வேண்டும். வழமையான மரக் கலங்களில் வெளிச்சக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்குரிய ஏற்பாடுகளை மீன்பிடி நீரியல்வளத்துறை அமைச்சு செய்து கொடுக்க வேண்டும்.

வெளியிணைப்பு இயந்திரமாக 15 வரையான குதிரை வலுவுடைய இயந்திரங்கள் மாத்திரமே பாவிக்க முடியும். அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் கடற்றொழில் தவிர்க்கப்பட்டுள்ளது.

தற்போது விமான ஓடுபாதை, விமான இறங்கு பாதை உள்ள அணுகும் பிரதேசங்கள் (Air Corridor) போன்றன உயர் பாதுகாப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பிரதேசங்களில் உள்ள கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்குரிய எல்லைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இரு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட விடயம் உரிய சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும் – மனோகணேசன் எம்.பி.

girl2222.gifமஸ்கெ லியாவைச் சேர்ந்த இரு சிறுமிகள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையை சேர்ந்த எம்.எம்.பஷால், யூ.எல்.பௌசிக் என்பவர்களின் வீட்டு வேலையாட்களாக பணியாற்றிய வேளயில் கடந்த சனிக்கிழமை இந்த வீடுகளை அடுத்த கழிவு நீர் கால்வாயில் இரு சிறுமிகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் வழக்கு விசாரணையை அடுத்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் எம்.பி. கூறியதாவது; சட்டவல்லுனர்கள் மூலம் இது தொடர்பிலான நியாயமான தீர்பை நாம் நீதிமன்றத்தின் மூலம் பெற்றக்கொள்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.

இதன் காரணமாக கொழும்பிற்கு அழைத்து வரப்பட்ட இச்சிறுமிகளின் பெற்றோர்களிடமிருந்து மனித உரிமை இல்லத்தை சார்ந்த வழக்கறிஞர்கள் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர். இத்தகவல்கள் வழக்கின் மேல் விசாரணைகளின் போது சமர்ப்பிக்கப்படும். சிறுமிகளின் மரணம் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்க இயலாது.

ஆனால், மரணங்களுக்கு அப்பால், குறைந்த வயது கொண்ட சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படக்கூடாது என்ற சட்டம் மீறப்பட்டுள்ளது. மரணமடைந்த சுமதி என்ற சிறுமியின் பிறந்த திகதி 22.09.1994 ஆகும். இவ்வருடம் ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்க்கப்பட்டபொழுது அவரது வயது 14 ஆகும். ஜீவராணி என்ற சிறுமியின் பிறந்த திகதி 27.12.1995 ஆகும். இவ்வருடம் வேலைக்கு சேர்க்கப்பட்டப்பொழுது அவரது வயது 13 ஆகும். இங்கே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாத வயதெல்லை தொடர்பிலான சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பில் கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது குற்றம் சாற்றவில்லை.

குழந்தைகளின் வயது தமது விசாரணையின்போது வெளியாகவில்லையென கறுவாத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கபில பிரேமதாஸ என்னிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவ்வார ஆரம்பத்தில் ஊடகங்களில் வெளியான மரணமடைந்த சிறுமிகளின் வயது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்த தகவல்கள் தவறானவை என ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

எனவே எனது பணிப்புரையின் பேரில் தற்சமயம் பெற்றோர்களிடமிருந்து வாக்கு மூலங்களை தேசிய சிறார் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஜகத் வெள்ளவத்த பெற்றுக் கொண்டுள்ளார். எனவே சட்டத்தை மீறியவர்கள் தொடர்பிலே இந்த ஆணையம் சட்ட நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் எலிக்காய்ச்சலை கட்டுப்படுத்துதல் கியூபா நாட்டு பக்ரியா நுண்ணங்கியை பாவிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்வு

ratss.jpgஇலங் கையில் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கும் கியூபா நாட்டு பக்ரியா நுண்ணங்கியொன்றைப் பாவிப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையும் இந்நாட்டில் 2100 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகினர். இவர்களில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் நோய் பரவுவதைத் தடுப்பு பிரிவு அறிவித்திருக்கின்றது.

இந்நாடடில் வருடா வருடம் எலிக்காய்ச்சலுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளாவதும், பலர் உயிரிழப்பதும் அண்மைக் காலம் முதல் இடம்பெறுகின்றது. இந்த அச்சுறுத்தலிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பத ற்காகவே எலிக்காய்ச்சல் நோய்க் காரணியைக் கட்டுப்படுத்தவும் கியூபநாட்டில் பயன்படுத்தப்படும் பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பது தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்நாட்டில் டெங்கு வைரஸ் காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபநாட்டு பி.ரி.ஐ பக்aரியாவைப் பாவிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொடுக்கவென அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் இருவர் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் கியூபாவில் எலிக்காய்ச்சலும் மற்றொருவகை பக்aரியாவைப் பாவித்துக் கட்டுப்படுத்தப்பட்டி ருக்கின்றது. அதனால் தேவைப் படும் பட்சத்தில் அப்பக்aரியா

நுண்ணங்கி தொடர்பாகவும் நிபுணத்துவ ஆலோசனை பெற்றுத்தர முடியும் என்று கூறியுள்ளனர். இதனடிப்படையில் இங்கும் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நாட்டில் மாத்தளை, கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வருடா வருடம் அதிகமானோர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர்.

மழைக் காலம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதால் தங்கள் பாதங்களில் காயங்களுடன் இருப்பவர்கள் காயங்கள் குணமடை யும் வரையும் வயல் வேலையிலும், இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கால்வாய் பணிகளிலும் ஈடுபட வேண்டாமென சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.

அதேநேரம் வயல், இரத்தினக்கல் அகழ்வு இடங்கள், வடிகான்களில் தொழில் புரிபவர்கள் எலிக்காய்ச்சலை தவிர்ப்பதற்கான மாத்திரைகளை பிரதேசத்தில் கடமைபுரியும் மருத்துவ அலுவலகர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சின் அதிகாரியொருவர் கேட்டுக்கொண்டார்.

முல்லை, புதுக்குடியிருப்பு பகுதியில் படகு இயந்திரங்கள் மற்றும் கிளேமோர் குண்டுகள் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து படகு இயந்திரங்கள், அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

9.9 குதிரை வலுக்கொண்ட படகுகளுக்கு பொருத்தப்படும் வெளி இயந்திர எஞ்சின்கள், 2.5 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-4, 81 மி.மீ. மோட்டார் குண்டுகள்-05, 60 மி.மீ ரக மோட்டார் குண்டுகள்-20, ரி-56 ரக துப்பாக்கிகள் 50 மற்றும் பல வகையான குண்டுகள் மீட்டெடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் இராஜதந்திரி வவுனியா விஜயம்

பிரித் தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க்குட்டிங் வியாழக்கிழமை செட்டிகுளத்தில் வன்னி மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களுக்கு விஜயம் செய்து அந்த மக்களின் நிலைமைகளை அவதானித்தார். பின்னர் வவுனியா கச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர், இடம்பெயர்ந்த வன்னி மக்களின் மீள் குடியேற்றம், அகதி முகாம்களின் தற்போதைய வெள்ள நிலைமை மற்றும் அம்மக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து உரையாடினார்.

இந்த மக்களின் மீள்குடியேற்றம், நிவாரண உதவிகள் குறித்தும் பிரதி உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சார்ள்ஸ், வன்னி கட்டளைத் தளபதி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் கார்க் குண்டுத் தாக்குதல்; அன்ஸாருல் இஸ்லாம் முக்கியஸ்தர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த கார்க் குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்தனர். ரிமோட் கருவி மூலம் தூரத்திலிருந்து இக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அரசாங்க வைத்திய சாலைக் கருகாமையில் இக்கார் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது.

பலியான இருவரும் அன்ஸாருல் இஸ்லாம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பெஷாவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். பலியான முபீன் அப்ரிடி இவ்வியக்கத்தின் பேச்சாளராவார். மற்றவர் இவரின் கார் சாரதியாவார். காயமடைந்தோர் பொது மக்களாவர்.

லக்ஷர் இ இஸ்லாம் என்ற அமைப்பு இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குண்டு வெடித்த இடம் சன நெருக்கமுள்ள பகுதியாகும். ரமழான் மாதம் ஆரம்பமானதால் பெருந் தொகையானோர் வீதிகளில் நடமாட வில்லையென்பதால் இழப்புகள் குறைவாக இருந்தன.

பாகிஸ்தான் இராணுவத்தின் பாரிய நடவடிக்கைகள் வஸிரிஸ்தான் பகுதியில் ஆரம்பித்துள்ளதால் இஸ்லாமிய அமைப் புகளிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதை இந்த தாக்குதல் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து!

eng0000.jpgஅவுஸ்தி ரேலியாவிற்கு எதிரான சாம்பல் கிண்ணத்துக்கான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து-ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க ‘ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின.

இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆ‌ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ஓட்டங்களும், ஆஸ்‌ட்ரேலியா 160 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 373 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணிக்கு 546 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முந்தைய நாள் சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த வாட்சன், சைமன் கேடிச் இருவரும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். கேடிச் 43 ஓட்டங்களுடனும் வாட்சன் 40 ஓட்டங்களுடனும் அவுட் ஆனார்கள்.

இதை தொடர்ந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பாண்டிங்கும், மைக் ஹஸ்ஸியும் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். அணியை ஓரளவு தூக்கி நிறுத்திய இந்த அபாயகரமான கூட்டணி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. பிளின்டாப்பால் ரன்-அவுட் செய்யப்பட்ட பாண்டிங் 66 ஓட்டங்களுடன் (103 பந்து, 10 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய துணை தலைவ‌ர் மைக்கேல் கிளார்க்கும் (0) வந்த வேகத்தில் ரன்-அவுட் ஆகவே ஆஸ்‌ட்ரேலிய அணி தோல்வி பாதைக்கு தள்ளப்பட்டது. 5-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த மார்கஸ் நார்த்தும் (10 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இதன் பின்னர் ஒரு முனையில் ஹஸ்ஸி தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்து கொண்டு போராட, மறுபக்கம் வேகமாக விக்கெட்டுகள் சரிந்தன. ஹேடின் (34 ஓட்டங்கள்), ஜான்சன் (0), சிடில் (10), ஸ்டூவர்ட் கிளார்க் (0) ஆகியோர் சிறிய இடைவெளியில் வெளியேறினர்.

கடைசி விக்கெட்டாக மைக்ஹஸ்ஸி (121 ஓட்டங்கள், 263 பந்து, 14 பவுண்டரி) ஆட்டம் இழக்க ஆஸ்‌ட்ரேலிய அணி 2-வது இன்னிங்சில் 348 ஓட்டங்களு‌க்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்தது. இதன் மூலம் 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இங்கிலாந்து அணியில் ஸ்வான் 4 விக்கெட்டுகளும், ஹார்மிசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வெற்றி கொண்டாட்டத்துடன் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப் டெஸ்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் ஆஸ்‌ட்ரேலியாவை நிலை குலைய செய்த இங்கிலாந்து ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ஸ்டிராஸ் (மொத்தம் 474 ஓட்டங்கள் ), ஆஸ்‌ட்ரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் (448 ஓட்டங்கள் ) ஆகியோர் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

இந்த தோல்வியின் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணி முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளது.

வன்னி முகாம்களின் அவலங்கள்: வன்னியில் இருந்து ஒரு மின் அஞ்சல்

IDP_Camp_Aug09நண்பர்களே

இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும்‌ அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை – சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால். ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்.

IDP_Camp_Aug09260 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள்.. (இணைக்கப் பட்டிருக்கும் படங்கள் சாட்சி). தற்காலிகமாக அமைக்கப்பட்ட‌ மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்ப‌தாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள். எங்கும் தாங்க முடியாத‌ துர்நாற்றம். இது பெருத்த சுகதாரச் சீர்கேட்டுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம். இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் மனிதக் கழிவின் மீது நெளியும் புழுக்களைக் காணலாம்.. (அரசாங்கம் நெடுநாளைக்கு மக்களை இந்த முகாம்களில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே ஐ.நா தற்காலிக மலசலக் குழிகளை அமைத்துக் கொடுத்திருந்தது. ஆனால் அரசாங்கத்துக்கு அவர்களை இப்போதைக்கு மீளக் குடியேற்றும் எண்ணம் சற்றேனும் இருப்பதாகத் தோன்றவில்லை. குறைந்த பட்சம் வெளியே உறவினர்களோடு சென்று தங்கி வாழக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களையாவது சோதனைகளை முடித்து விட்டுச் செல்ல அனுமதிப்பதாயில்லை. அப்படிச் செய்வது முகாம்களில் நிலவும் மிகுந்த சனநெரிசலை வெகுவாகக் குறைக்கும்)

IDP_Camp_Aug09இங்கே இலங்கையில் ஜனநாயகம் நாளுக்கு நாள் சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒரேகுரலில் ஒரேதொனியில் ஒரேபொருளையே உரைக்க வேண்டுமென்று நிர்ப்பந்திருக்கிறது. ஒரு சில பேரால் மட்டுமே இயக்கப்படும் அரச யந்திரம். பெருத்த மௌனம் சனங்கள் மீது ஒரு கரும்போர்வையாகப் படர்ந்திருக்கிறது. ஆனால் வெளியுலகிலும் அப்படியா? இலங்கை அரசுக்கெதிரான குரல் விடுதலைப் புலிகள் அழியும் மட்டும் தான் ஒலித்தென்றால், அவ்வளவும் புலிகளுக்கு ஆதரவாக ஒலித்த குரல் மட்டும் தானா? சனங்களைப் பற்றிய கரிசனை..? இனியான எதிர்காலம் என்ன?

நண்பர்களே, இப்பிரச்சனை குறித்து நான் பணிபுரியும் பத்திரிகைக்காக எழுதிய செய்தியில் எனது பெயரைப் போடுவதற்கே திராணியற்ற நிலையில், அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் நபரொருவர் அனுப்பி வைத்த இப்படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இவற்றை உங்களின் வலைத்தளங்களில் பிரசுரிப்பதன் மூலமும், வெகுஜன ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தத்தமது ஊடகங்களில் வெளியிடுவதன் மூலமும் பரந்தவொரு சனத்திரளின் பார்வைக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையில்…