தேசம்நெற் – சிந்தனைவட்டம் நூல்விநியோகத் திட்டத்தில் பயன்பெற்ற மாணவர்கள் பரீட்சையில் தோற்றினர்

sri-lankan-students.jpgலண்டனில் தேசம்நெற் இலங்கையில் சிந்தனைவட்டம் இணைந்து மேற்கொண்ட கல்வி முயற்சியில் பயன்பெற்ற 4800க்கும் அதிகமான மாணவர்கள் நேற்று ஓகஸ்ட் 23ல் நடைபெற்ற புலமைப் பரிசுப் பரீட்சையில் தோற்றினர்.

நாடு முழுவதும் 70 000 மாணவர்கள் தோற்றும் பரீட்சையில் வவுனியா மாவட்டத்திலிருந்து சுமார் 7 ஆயிரத்து 831 மாணவர்கள் தோற்றினார்கள் என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வோல்ட் தெரிவித்தார். 42 பரீட்சை நிலையங்கள் நிவாரண கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 5731 மாணவர்கள் பரீட்சை எழுதினார்கள். ஏனைய பாடசாலை மாணவர்கள் 2100 பேர் 27 பரீட்சை நிலையங்களில் தோற்றினார்கள்.

சுமார் 300 பரீட்சை மேற்பார்வையாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் பரீட்சைக்கு பொறுப்பான பிரதேச ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்தார். மாணவர்களுக்குத் தேவையான பாட உபகரணங்களை சில அமைப்பினர் வழங்கினார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சை நேற்று ஓகஸ்ட் 23 ஞாயிறு காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணிக்கு முடிவடைந்தது. பொலிஸார் பரீட்சை மண்டபங்களுக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பரீட்சைக்கு முந்திய தினங்களில் ஏற்பட்ட மழையும் அதனால் பலர் தங்கள் வதிவிடங்களை மாற்ற வேண்டி இருந்ததும் மாணவர்களின் கல்வி முயற்சியைப் பாதித்து இருந்தது. மேலும் தொடர்ச்சியாக முகாம்களில் காணப்படுகின்ற அவலங்களும் அசௌகரியங்களும் எவ்வகையிலும் மாணவர்களின் கல்வி முயற்சிக்கு உதவவில்லை.

முகாம்களில் தடுத்தவைக்கப்பட்டுள்ள இம்மாணவர்களின் கல்வி முயற்சிக்காக தேசம்நெற் உம் சிந்தனை வட்டமும் 15000 பவுண் செலவில் நூல் விநியோகத்திட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இத்திட்டத்திற்கு மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் அமைப்பு லண்டன் அகிலன் பவுண்டேசன் லிற்றில் எய்ட் மற்றும் சில தனிநபர்கள் உதவிகளை வழங்கி இருந்தனர். இவை பற்றிய முழுமையா கணக்கு விபரம் விரைவில் வெளியிடப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *