பிரிட்டிஷ் இராஜதந்திரி வவுனியா விஜயம்

பிரித் தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க்குட்டிங் வியாழக்கிழமை செட்டிகுளத்தில் வன்னி மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களுக்கு விஜயம் செய்து அந்த மக்களின் நிலைமைகளை அவதானித்தார். பின்னர் வவுனியா கச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர், இடம்பெயர்ந்த வன்னி மக்களின் மீள் குடியேற்றம், அகதி முகாம்களின் தற்போதைய வெள்ள நிலைமை மற்றும் அம்மக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து உரையாடினார்.

இந்த மக்களின் மீள்குடியேற்றம், நிவாரண உதவிகள் குறித்தும் பிரதி உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சார்ள்ஸ், வன்னி கட்டளைத் தளபதி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *