2009

2009

உள்ளுராட்சி மன்ற சட்டத்தில் திருத்தம்

janakabandarathennakoon.jpgமாநகர சபை,  நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவை தொடர்பான சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சமர்ப்பித்திருந்தார்.

மக்களுக்கு மேலும் நன்மை பயக்கக்கூடிய வகையில் மேலே குறிப்பிடப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரமிக்கதாக மாற்றியமைக்க இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

பெயரளவில் இருக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய சட்டத்திருத்தம் – பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றம்

viswa-999.jpgசெயல்பாட்டு அரசியலில் ஈடுபடாமல் பெயரளவில் இருக்கும் கட்சிகளின் பதிவை ரத்துச் செய்யும் வகையில் பாராளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நேற்று (24) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இந்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையில், அரசியல் கட்சிகளின் கட்டமைப்பை ஜனநாயகப்படுத் துவதற்கு ஏதுவாக இந்தச் சட்டமூலம் வழிவகுக்குமெனத் தெரிவித்தார்.

விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கட்சிகள் பெருகிவிட்டன. சுமார் 60 கட்சிகள் இருந்தும் 15 மட்டும்தான் செயற்படுகின்றன.

அரசியல் கட்சியொன்று நான்கு வருடங்கள் அரசியல் செயற்பாடுகளில் பங்குபற்றியிருப்பதுடன், கட்சியின் யாப்பு, நிர்வாகிகள், கணக்காய்வு அறிக்கை, விளக்கம் என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தொடர்ச்சியாக இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலாவது போட்டியிட்டிருக்க வேண்டும். என்று தெரிவித்த அமைச்சர் வர்ணபால.

“அரசியல் கட்சிகளை பன்முகப்படுத்துவதற்குப் போதுமான ஏற்பாடுகள் தற்போதைய சட்டத்தில் இல்லை. கட்சிகளின் கூட்டமைப்பை ஜனநாயகமயப்படுத்த இந்த 1981ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் போதுமானதாக இல்லை. கட்சிகளின் அமைப்பை மேம்படுத்த, குறைபாடுகளை நீக்க வேண்டும்.

இது தொடர்பாக ஆராயவென 2006ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.  32 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு பொருத்தமான திருத்தங்களைச் சமர்ப்பித்துள்ளது” என்றதுடன், “சில அரசியல் கட்சிகள் இனவாத ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் செயற்படுகின்றன. சில பிராந்திய மட்டத்திலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான கட்சிகளை பன்முகப்படுத்தி ஒற்றுமைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர், விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் கட்சிகள் தாக்கங்களை ஏற்படுத்தி வந்தன. ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் ஒரு கட்சி ஆதிக்கம் இருக்கின்றது.  இந்திய அரசியலமைப்பு முறையில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்துகின்றது. எமது நாட்டில் கட்சிப் போட்டி மிகவும் அதிகமாக உள்ளது. இது புதுவிதமான அரசியல் பரிமாணங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள கட்சிகளில், எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகள் கூட உள்ளன. இவை ஜனநாயக முறைக்கு எந்த வகையிலும் உதவுவதில்லை. அரசியல் முறைமைக்கு ஸ்திரமற்ற நிலையையே இவை ஏற்படுத்துகின்றன.” என்றும் கூறினார்.

பணத்திற்காகவும் அரசியலுக்காகவும் தாய்நாட்டை காட்டிக்கொடுக்க வேண்டாம். கைகள் விலங்குகளை ஏற்க நேர்ந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்கத் தயார் – ஜனாதிபதி

slpr080909.jpgதாய்நாட் டுக்கும் நாட்டு மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதற்காக கைகள் விலங்குகளை ஏற்க நேர்ந்தால் அதனை தாய்நாட்டின் சார்பில் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பணத்துக்காகவும் அரசியல் இலாபங்களுக் காகவும் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண் டாமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஹக்மன நகரில் 554 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வும், மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ளை ஆதரிக்கும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று ஹக்மன நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

30 வருட காலமாக எமது நாட்டைப் பீடித்திருந்த பயங்கரவாதத்தை எம்மால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்துள்ளது. பயங்கரவாதம் எமது முக்கிய தலைவர்களை மட்டுமன்றி நாட்டின் அறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களையும் படுகொலை செய்தமையைக் குறிப்பிட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் எமது படையினர் 20,000 பேர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றுள்ளனர்.

நாட்டில் மூன்றில் ஒரு பகுதி உத்தியோகபூர்வமாக எழுதிக் கொடுக்கப்பட்டதுடன், அவ்வொப்பந்தம் மூலம் எமது முக்கிய அமைச்சர்களும் புலனாய்வுப் பிரிவினரும் படுகொலை செய்யப்பட்டனர். எமது ஆட்சிக் காலத்திலும் முக்கியமான சிரேஷ்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, த. மு. தசநாயக்க போன்றோர் கொல்லப்பட்டனர். நாட்டைத் துண்டாட நினைத்த பயங்கரவாதம் ஒழிக்க ப்பட்டுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டு எம்மிடம் தஞ்ச மடைந்த மூன்று இலட்சம் மக்களுக்கும் இருப்பிடம், உணவு என சகல வசதிகளையும் நாம் பெற்றுக்கொடுத்து வருகிறோம்.

இவர்களுள் பிரபாகரனின் பெற்றோர், தமிழ்ச்செல்வனின் மனைவி, குடும்பத்தினரும் இருந்தனர். அத்துடன் பல புலி உறுப்பினர்களும் இருந்தனர். எனினும் எமது படையினர் அவர்களைக் கொன்றுவிடவில்லை. மாறாக பாதுகாத்தனர். மகன் செய்த தவறுக்காக தகப்பனைப் பழிவாங்க படையினர் முயலவில்லை.

ஊவா மாகாண தேர்தலில் வெற்றிபெற்று நான்கு மாதமே முடிவுற்ற நிலையில் தாய்நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளில் சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. தாய்நாட்டுக்கு எதிராகவும் தாய் நாட்டைப் பாதுகாத்த படையினருக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சர்வதேசத்தின் முன்னிலையில் எம் தாய்நாட்டின் கீர்த்தியை களங்கப்படுத்த இச்சக்திகள் முயல்கின்றன. எமது படையினரை இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்த சாட்சியங்களைத் தேடுவதில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சில பத்திரிகைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அரசியலில் வங்குரோத்தடைந்த தலைவர்கள் இதற்கான அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுக்கு எதிர்க்கட்சியே தவிர நாட்டுக்கு எதிரான கட்சியாக இருந்து தாய் நாட்டுக்குத் துரோகம் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. இத்தகையோரிடம் பணத்திற்கும் அரசியல் இலாபத்திற்கும் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டு மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ள போதிலும் ஜனாதிபதியாகிய எனக்கும், படைத் தளபதிகள், பாதுகாப்புச் செயலாளர் உட்பட உயர் படை அதிகாரிகளுக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை சகலரும் உணர வேண்டும். தாய்நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தியமைக்கான பிரதி பலனாக நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.

யுத்தம் முடிந்து விட்டது. இனி யுத்தத்தைக் காரணம் காட்டி அபிவிருத்திகளை முன்னெடுக்காமல் இருக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்தில் நாம் கடன் பெற்றுள்ளோம். இது புதிதான ஒன்றல்ல. நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என பல்வேறு பாரிய திட்டங்கள் நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகின்றன.

சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் பரிசீலிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பத்திரிகைகள் சமூகத்தை சீர்குலைப்பதிலும் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதிலும் செயற்படுகின்றன.

நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையென எவரும் கூற முடியாது. மற்றெல்லா மாகாணங்களையும் விட தென் மாகாண மக்களுக்கு பெரும் பங்குள்ளது. இந்நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவருவதும், உங்கள் பிள்ளைகளை எதிர்காலத் தலைவர்களாக உருவாக்குவதும் எமது நோக்கம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

தெற்கில் அமைதியான தேர்தல் நடைபெற வேண்டும். அதற்குச் சகலரதும் பங்களிப்பு அவசியம். வெற்றிலைக்கு வாக்களிப்பதுடன், உங்கள் மூன்று விருப்பு வாக்குகளையும் தவறாது நீங்கள் அளிப்பது அவசியம். தாய்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு உங்களது பூரண ஆதரவை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் சோமாகுமாரி நேற்று காலமானார்

250909somakumari.jpgவடமேல் மாகாண சபை உறுப்பினரும் நிக்கவரட்டிய தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சோமா குமாரி தென்னக்கோன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.

தென் மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இவர் நேற்று பிற்பகல் திடீர் மாரடைப்பினால் அம்பாந்தோட்டையில் காலமானார்.

இவர் லக்சல நிறுவனத்தின் தலைவியாகவும் பணியாற்றியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்ததைவிட நல்ல நிலையில் என சர்வதேச நாணய நிதியம் பாராட்டு – அநுர பிரியதர்ஷன யாபா

240909anura_priyadarsana_yapa.jpgஇலங் கையின் பொருளாதார நிலை எதிர்பார்ததைவிட நல்ல நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளதாக  தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில். இலங்கைக்கான வெளிநாட்டு நிதி ஒதுக்கீடு 1.9 பில்லியன் டொலர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு விடயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தாம் விரும்பியவாறு கருத்துத் தெரிவிப்பது அவருக்கு பழக்கமாகியுள்ளது.

எமது மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி நாட்டின் வெளிநாட்டு நிதி ஒதுக்கீடு 4 பில்லியன் டொலராகும். இதனை சரியாக அறிந்துகொள்ளாமல் 1.9 பில்லியன் என அவர் நினைத்தவாறு கூறியிருக்கும் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாட்டின் பொருளாதாரம் அந்த அளவுக்கு வீழ்ச்சி அடையவில்லை. சர்வதேச அமைப்புக்கள் கூட எமது பொருளாதார நிலை குறித்து திருப்தி தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடனுதவி வழங்கும் போது அவர்கள் எதிர்பார்ததைவிட நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் காணப்படுவதாக அந்த நிதியத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். நாட்டின் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. பொரளாதாரம் அபிவிருத்தி கண்டுள்ளது. தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளன. இவ்வாறு பல துறைகளிலும் நாட்டில் முன்னேற்றம் காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

யாழ். ஏரிகள் புணரமைப்புத் திட்டம்

rajitha_senarathna00jpg.jpgயாழ்.  குடா நாட்டின் நன்னீர் அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் யாழ். ஏரிகளைச் சார்ந்த 13 அணைக்கட்டுக்களைப் புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி நிர்மாணப் பணிகளை அரச அபிவிருத்திக்கான பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கவும் இயந்திர சாதன சேவைகளை அரச தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புனரமைப்புப் பணிகளுக்கு 132 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

ஹஜ்ஜை முன்னிட்டு விசேட கடவுச்சீட்டு கருமபீடம் – இன்று திறப்பு

210909ramzan.jpgஇலங்கை யிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் முஸ்லிம்களின் நலன் கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இன்று விசேட கடவுச்சீட்டு கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட கருமபீடமத்தின் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் எவ்வித சிரமங்களுமின்றி கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மீரா மொஹிதீன் தேசம் நெட்டுக்கு தெரிவித்தார்.

இவ்வருடத்திலிருந்து ஹஜ் கடமைக்குச் செல்பவர்களும் முன்பு ஹஜ்ஜுக்கு மட்டுமென கடவுச் சீட்டு பெற்றுக்கொண்டவர்களும் தமது கடவுச் சீட்டுக்களை சகல நாடுகளுக்குமானதாக பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள விசேட கருமபீடத் திறப்பு விழாவில் பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி,  மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் ஹஜ் முகவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

250909un-council.jpgஉலக மட்டத்தில் அணு ஆயுதப் பரவலை தடுக்கவும், ஆயுதக் களைவின் மூலம் அணுசக்தி சார்ந்த தீவிரவாதத்தை குறைக்கும் முகமான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அணு ஆயுதமற்ற ஒரு உலகை உருவாக்க அனைவரிடமும் இருக்கும் ஒரு அர்ப்பணிப்பு இந்தத் தீர்மானத்தின் மூலம் தெரிகிறது என்று இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணத்தில் அனைவருக்கும் ஒரு பங்கிருப்பதை சுட்டிக்காட்டிய ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், தம் நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை மூன்றில் இரண்டு பங்குக்கும் கூடுதலாகக் குறைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இரானின் அணுத்திட்டம் தொடர்பாக அதன் மீது கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது. என்றாலும் இரான் மீது கூடுதலாக எந்த தடையையும் விதிப்பதற்கு சீனா தனது எதிர்ப்பை மீண்டும் தெரிவித்துள்ளது.

யாழ். குருநகர் – கொழும்புத்துறை வீதி போக்குவரத்துக்கு திறப்பு

epdp.jpgயாழ்.  குருநகர் – கொழும்புத்துறை கடற்கரை வீதி மக்களின் போக்குவரத்துக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் திறந்து வைத்தார். இதுதொடர்பான நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறியதாவது :-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்றைய தினம் படைத் தரப்பினரதும், அரச உயர் அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் இந்த வீதியை மக்களின் போக்குவரத்திற்காகத் திறந்து வைப்பதில் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன், மக்களின் சார்பில் ஜனாதிபதிக்கும் படைத் தரப்பினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கடற்றொழிலாளர்களுக்குத் தொழிலில் ஈடுபடுவதற்கு 24 மணி நேர அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் இவ்வாறானதொரு சூழ் நிலையை, ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினரும் எமது மக்களும் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 30 வருடங்களாக எங்களை நாங்களே அழித்துக்கொண்ட நிலையை முழுமையாக மாற்ற வேண்டும் எனில், நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் அத்தகையதொரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், நாம் இழந்த அனைத்தையும் ஒரு சில வருடங்களில் மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆசியுரை வழங்கிய வணக்கத்திற்குரிய ஜெரோ செல்வநாயகம் இன்று வீதியைத் திறந்து வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மக்களின் வாழ்வையும் மலர வைப்பார் என்பதால், அமைச்சருக்குத் தனது நன்றிகளையும் ஆசிகளையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் யாழ். கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், படை அதிகாரிகள், பிரதேச செயலாளர், மாநகர முதல்வர், உதவி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

திறைசேரி பொறுப்பை ஜயசுந்தர மீள ஏற்க முடியுமென நீதிமன்று தீர்ப்பு

999.jpgஉச்சநீதி மன்றத்திற்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியின் நிபந்தனைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் திறைசேரி செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர சமர்ப்பித்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேநேரம், கலாநிதி ஜயசுந்தர திறை சேரி செயலாளர் பொறுப்பை மீண்டும் ஏற்க முடியுமெனவும் உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு வழங்கியது.

இவரது விண்ணப்பம் தொடர்பாக ஆராய்ந்த ஏழு பேர் கொண்ட விசேட நீதியரசர்கள் குழுமத்தில் ஆறு நீதியரசர்கள் விண்ணப்பத்திற்கு சார்பாகவும் ஒருவர் மாறுபட்ட கருத்தையும் வழங்கியிருந்தார்.

ஆறுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உட்பட ஆறு நீதியரசர்கள் விண்ணப்பத்தி ற்கு சார்பாகத் தீர்ப்பு வழங்கினர். நீதியரசர் சிரானி திலகவர்த்தன மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். முழுமையான தீர்ப்பு வழங் குவதை நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தில் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, நீதியர சர்களான சிராணி பண்டாரநாயக்க, சிராணி திலகவர்தன, சலீம் மர்சூஃப், ஜகத் பாலபட்டபெந்தி, கே. சிறிபவன், பி. ஏ. ரத்நாயக்க ஆகியோர் அடங்கியிருந்தனர்.

பீ. பி. ஜயசுந்தரவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜரானார். நீதிமன்றத்தினால் வழங் கப்பட்ட தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு பிரதிவாதியான பீ. பி. ஜயசுந்தர ஒருபோதும் கோரவில்லை. நீதிமன்றத்திற்கு அவரால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியை வாபஸ் பெறுமாறே மனுதாரர் கோருகிறாரென பாயிஸ் முஸ்தபா நீதிமன்றுக்குத் தெளிவுபடுத்தினார்.

மனுதாரரான ஜயசுந்தர சுயவிருப்பத்தின் பேரில் நீதிமன்றுக்கு சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்கவில்லை. மாறாக முன்னாள் பிரதம நீதியரசரின் உத்தரவின் பேரிலேயே அதனை அவர் சமர்ப்பித்தாரென பாயிஸ் முஸ்தபா எடுத்துக் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர் 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி அந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

லங்கா மரைன் சேர்விஸ் லிமிட்டெட் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தியது தொடர்பான தீர்ப்பின் போது இனி மேல் எந்தவித அரச பதவிகளும் வகிப்பதில்லையென சத்தியக் கடதாசியை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு முன்னாள் நீதியரசர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியின் நிபந்தனைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கலாநிதி ஜயசுந்தர உச்ச நீதிமன்றத்திற்கு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.