13

13

18ஆம் திகதியுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை !

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல்,21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4:30 வரையில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் 13,417 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு செய்ய முடியும்.தேர்தலில் வெற்றி ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு பத்து முதல் 12 நாட்களில் நாடாளுமன்றை கலைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடாளுமன்றை கலைத்து 35 முதல் 44 நாட்கள் வரையிலான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் தேர்தல் நடாத்துவதற்காக அதிகபட்சமாக 52 முதல் 66 நாட்களை எடுத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப நாடாளுமன்றை கலைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது தற்போதைய நாடாளுமன்றின் பதவிக்கால நிறைவடையும் வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க திரள்வார்களா தமிழர்களும் – முஸ்லீம்களும்..! வெளிப்படும் மக்களின் குமுறல்கள்..!

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க திரள்வார்களா தமிழர்களும் – முஸ்லீம்களும்..!
வெளிப்படும் மக்களின் குமுறல்கள்..!

10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – நாமல் ராஜபக்ச

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாங்கள் உருவாக்கும் அரசாங்கத்தின் மூலம் உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பது போல்,கொழுந்து, விவசாயிகளின் மிளகு மற்றும் பால் ஆகியவற்றிற்கு நியாயமான மற்றும் நிலையான விலையை வழங்க நாங்கள் தெளிவாக பாடுபடுவோம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

சிறு தேயிலை உரிமையாளர்களுக்கும் உர மானியம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒரு திட்டத்துடன் வேலை செய்கிறோம்.

மேலும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன், எனது அன்பான தாய் தந்தையரே, அடுத்த 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் வளர்ந்த நாடாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்றுவோம்.

இக்கட்டான நேரத்தில், சவாலான காலக்கட்டத்தில், ஒரு குழுவுடன் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கை எடுத்தோம்.

எதிர்வரும் 21ஆம் திகதி மொட்டு சின்னத்திற்கு முன்னால் புள்ளிடியிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லுமாறு நான் உங்களை அழைக்கின்றேன்” என்றார்.

மக்களை குழப்ப எங்களுக்கு எதிரான பொய்யான பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன- அனுர குமார திசாநாயக்க விசனம்!

சர்வதேச நாணய நிதியத்தை விவாதத்திற்கு அழைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க  நிராகரித்துள்ளார்.

அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தை ஏற்பாடு செய்ய முடியும் எனவும், இரு கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் விவாதிக்க முடியும் என்றும் அநுரகுமார மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி விக்கிரமசிங்க மேடையில் தொடர்ந்து என்னிடம் கேள்விகளை முன்வைக்கிறார்.எனவே, நான் அவரை பகிரங்க விவாதத்திற்கு சவால் விடுத்தேன். பின்னர், அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் வருவேன் என்றார்.

சர்வதேச நாணய நிதியம் தேர்தலில் போட்டியிடுகிறதா? ரணில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார். தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து எதிர்க்கட்சிகள் குழப்பமடைந்து, மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பல்வேறு பொய்யான செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசியக் கொடியை மாற்றும் என்று இப்போது சொல்கிறார்கள். நாங்கள் தேசியக் கொடியை மாற்ற மாட்டோம், ஆனால் ஊழல் மற்றும் மோசடி அரசியலை மட்டுமே மாற்றுவோம்.

எங்களின் வெற்றிக்கு பிறகு அமைதியின்மை மற்றும் வன்முறை ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன, அமைதியான தேர்தலை நாங்கள் விரும்புகிறோம். இந்தத் தேர்தல் எங்களுக்கு நிச்சயம் வெற்றி.” என்றார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று சிலர் கூறுவதாகவும், ஆனால் ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்தோடு, கடந்த 76 ஆண்டுகளாக தோல்வியடைந்த கொள்கைகளால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேசிய மக்கள் சக்தி நாட்டைக் கைப்பற்றும் என்றார்.