September

September

நல்லூர் திருவிழா முடியும் வரை தேர்தல் பிரச்சாரம் யாழில் இல்லை – நாமல் ராஜபக்ச விளக்கம்!

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

தேர்த்திருவிழா முடிவடையும் வரை தனது அரசியல் நடவடிக்கைகளிற்காக தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை நான் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்,யாழ்ப்பாணத்தினதும் நல்லூர் ஆலயத்தினதும் கலாச்சார முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டே நான் இவ்வாறு தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

புனிதமான தருணங்களில் பாரம்பரியங்களை பேணுவது அவசியம் என நான் கருதுகின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – சஜித் பிரேமதாசவுடன் இணைந்தது தமிழரசுக்கட்சி!

இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

உயிர்த்தெழுந்தார் பிரபாகரன்! கட்டித்தழுவ 60,000 சுவிஸ் !

உயிர்த்தெழுந்தார் பிரபாகரன்! கட்டித்தழுவ 60,000 சுவிஸ். பிராங் – உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு: லண்டன் வரும் பா உ எஸ் சிறிதரன் பிரபாகரனை கட்டித்தழுவுவாரா?