January

January

In memory of Former Governor of Northern Province Rginold Cooray

What did former governor of Northern province’s view on Tamil Political Leadership – Exclusive Interview with Reginold Kuree

Former Governor of Northern Province and former Chief Minister of Western Province, Reginald Kure has passed away on Friday 13th of January 2023, at the age of 74. The former governor who suffered a heart attack while discussing the upcoming local council election and candidate selection at a restaurant in Vattuvai yesterday (12th January) passed away while being admitted to the hospital.

Reginald Kure started his political career as a JVP activist and served jail terms and ended up as the chairman of Sri Lanka Freedom Party Kalutura District. The left leaning Sinhala politician who always has a soft corner for Tamils which was the reason for him to be appointed as governor of Northern Province.

While he was the governor, he visited the UK and other European countries and during the visit he gave ThesamNet an interview, in which he openly criticized the inefficiency of the Tamil political leaders. The interview was recorded at his family friend and left leaning political activist Thamilalahan Nadarajah’s home in Harrow, London.

 

 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஸ்பிரே !

அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.

 

இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும். அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம். இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொரோனா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும். அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள் பயணிப்பது தடுக்கப்படும்.

 

இந்த மூலக்கூறுகளை மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ போல் பயன்படுத்தலாம். வாய் வழியாகவும் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 

இதை சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுரையீரலில் 24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில் எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை.

ஒரு லட்சமாக குறைக்கப்படும் இலங்கை இராணுவ பலம் !

தற்போது இலங்கை இராணுவத்தில் உள்ள 200,783 வீரர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு இதை தெரிவித்துள்ளது.

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இராணுவ பலம் 100,000 ஆக இருக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் – இலங்கைக்கு 6 மாத அவகாசத்தை வழங்கிய பங்களாதேஷ்!

இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பங்களாதேஷ் அரசிடமிருந்து இலங்கை கடந்த மே மாதம் 2021 இல்  200 மில்லியன் டொலரை கடனாக பெற்றது.

அந்நியச் செலாவணி ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் வழங்க முடியாத நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக  இரண்டு தடவைகள் காலத்தை நீடிக்க ஏற்கனவே பங்களாதேஷ் இணக்கம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில் குறித்த கடனை செலுத்தும் காலம் நெருங்கி வந்த நிலையில் இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கிணங்க மேலும் ஆறுமாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது பங்காதேஷ்.

கால அவகாசத்தின்படி, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் 9 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு கொலை !

மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் 9 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் வல்சாத் வாபி நகருக்கு அருகில் உள்ள கால்வாயில் சிறுவன் ஒருவனின் சிதைந்த உடல் பயங்கரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சிறுவன் சைலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்றும், டிசம்பர் 29ம் திகதி சிறுவன் காணாமல் போனதை தொடர்ந்து, டிசம்பர் 30 ஆம் திகதி சில்வாஸ்ஸா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செல்வந்தர் ஆவதற்காக கொடூரமான நபர்களால் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் சிறுவன் பலி கொடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தகவல்கள் மூலம் கூறப்படுகிறது.

இந்த கொடூரமான சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவன் வார்லி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி சிறுவன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில் சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு, வீசப்படுவதற்கு முன்பு அவரது எச்சங்கள் சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைதுசெய்திருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை விசாரணையில் குற்றவாளிகளில் ஒருவர் டிசம்பர் 29, 2022 அன்று, சைலி கிராமத்தில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுவனை கடத்தி சென்று தனது நண்பரின் உதவியுடன் நரபலியாகக் கொன்றதை தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் நரபலிக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களுடன் எச்சங்கள் ஆகியவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகில் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் நான்காவது இடத்தில் இலங்கை!

உலகில் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் ஏழாவது இடத்தில் இருந்த இலங்கை 3 இடங்கள் முன்னேறி, நான்காவது பணவீக்க நாடாக மாறியுள்ளது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கேவின் வெளியிட்ட தரவின்படி டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 66 சதவீதமாக உள்ளது.

ஆனால் இலங்கையின் உண்மையான பணவீக்கம் 101 சதவீதமாக இருப்பதாகபேராசிரியரான ஸ்டீவ் ஹான்கேவின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய கபட்டியலின்படி சிம்பாப்வே முதலிடத்திலும் இரண்டாவது இடம் வெனிசுவேலாவும் மூன்றாவது இடத்தில் கியூபாவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் பரபரப்பு – பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் !

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் இன்று நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய ஜனாதிபதி லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தேர்தலில் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தால் பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள அதே நேரம் உலகின் பல தலைவர்களும் இதற்கான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை தலிபான்கள் வழங்கவேண்டும் – ஐ.நா வலியுறுத்தல் !

தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நா. உயர் தூதர் மார்கஸ் போட்செல் இன்று தலிபான் அரசின் உயர் கல்வித்துறை மந்திரி நிதா முகமது நதீமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெண்களின் உயர்கல்வி தடை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என ஐநா தூதர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு மந்திரி நதீம் கூறிய பதில் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பெண்களுக்கான உயர் கல்விக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்ட பின்னர் உயர்கல்வி மந்திரியை சந்திக்கும் முதல் சர்வதேச அதிகாரி மார்கஸ் போட்செல் ஆவார்.

என்ஜிஓ மீதான தடையை வெளியிட்ட பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப், துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனபி, உள்துறை மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோரையும் போட்செல் சமீபத்தில் சந்தித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து விவாதித்தார். ஜனவரி 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்க உள்ள நிலையில், இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையில் ஒரே வருடத்தில் 400 யானைகள் பலி !

மற்றைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் யானைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டாகும் என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் கூறுகிறது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் 5ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 395ஆக உள்ளது.

இது ஒரு வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட யானைகளின் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.

யானையின்-மனித மோதல் காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 2019ஆம் ஆண்டில் 207 யானைகள், 2020இல் 318 யானைகள் மற்றும் 2021இல் 375 யானைகள் இறந்துள்ளன.

இதேவேளை சுற்றாடல் மற்றும் இயற்கை கற்கைகளுக்கான நிலைய அறிக்கையின்படி, இலங்கையில் தினமும் ஒரு யானை இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.