2023

2023

வெள்ளை வேன் கடத்தல் ஊகங்களும் – ஊடகங்கள் கிளப்பி விட்ட புரளிகளும் – YouTube வீடியோ !

அண்மைய நாட்களில் இலங்கையின் பல பகுதிகளிலும் இருக்கக்கூடிய சிறுவர்களையும் – அவர்களின் பெற்றோரையும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தகவலாக மாறியுள்ளது வெள்ளை வான் கடத்தல் தொடர்பான செய்திகளாகும். அப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றதா..? நடைபெறவில்லையா..? உண்மையிலேயே அது கடத்தல் தானா ..? போன்றவற்றின் உண்மைத்தன்மையை தேசம் திரை இந்த காணொளியில் ஆராய்கிறது.

கடத்தல் தொடர்பான செய்திகள் முதன் முதலில் ஆரம்பித்தது மன்னார் மாவட்டத்தில் இருந்தே. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல் அவர்கள் மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் அவை சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதே நேரம் மன்னாரில் சிறுவர்களை கடத்த ஒரு குழு முயற்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடத்த முற்பட்டோர் கைதாகிய நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது.

 

இதனைத் தொடர்ந்தே இது தொடர்பான உண்மைகளும் – வதந்திகளும் சமூக வலைத்தளங்களிலும் – வாட்ஸ் அப் குழுமங்களிலும் அதிகம் பகிரப்பட்டது. இந்த இடத்தில் மக்களை இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் ஆகும். சாதாரணமாக காணாமல் போன செய்திகளை கூட கடத்தல் செய்திகளாக ஊடகங்கள் மாற்றி தங்களுக்கான பார்வையாளர்களை அதிகரித்துக் கொண்டன. அதிலும் சில தனியார் யூடியூப் பக்கங்கள் சம்பவத்தை நேரடியாகவே பார்த்தது போலவும் புரளிகளை கிளப்பி விட ஆரம்பித்திருந்தனர்.

இது தொடர்பில் தேசம் திரையின் முழுமையான காணொளியை காண கீழேயுள்ள link ஐ Click செய்யவும்..!

 

பயனாளிகளின் தரவுகளை கைமாற்றிய விவகாரம் – மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் !

உலகின் பிரபலமான சமூகவலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் எனப்படும் முகநூலின் நிறுவனமாக மெட்டாவுக்கு ஐரோப்பாவில் அது இதுவரை சந்திக்காத அளவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனம் தனது ஐரோப்பிய பயனாளிகளின் தரவுகளை அமெரிக்காவிற்கு அனுப்பியதை மையப்படுத்தி அயர்லாந்தை தளமாக கொண்ட தரவு பாதுகாப்பு ஆணையம் இன்று இந்த அபராததொகையை அறிவித்துள்ளது.

தனது நிறுவனத்துக்கு இவ்வாறு ஒரு பாரிய அபராதத்தொகை விதிக்கபட்டால் முகநூல் நிறுவனம் ஐரோப்பாவை விட்டு வெளியேறும் என அதன் தாய் நிறுவனமான மெட்டா அச்சுறுத்தல் விடுத்திருந்தாலும் இந்த அச்சுறுத்லை அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் இன்று காலை இந்த அபராதத்தை அறிவித்ததுடன் முகநூல் நிறுவனத்தின் விதிமீறலையும் கண்டனம் செய்துள்ளது.

ஐரோப்பாவை பொறுத்தவரை மெட்டாவுக்கு விதிக்கப்பட்ட 1.2 பில்லியன் யூரோ என்ற இந்த அபராததொகை ஒரு சாதனை அளவாகும்.

எனினும் முகநூல் வலைத்தளத்தில் பயனாளிகளாக உள்ள ஐரோப்பியர்களின் அடிப்படை உரிமை மற்றும் அவர்களின் சுதந்திரத்துக்கு ஆபத்துக்களை உருவாக்கும் வகையில் அவர்களின் தரவுளை அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.

அத்துடன் ஐந்து மாதங்களுக்குள் ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை அமெரிக்காவிற்கு மாற்றும் நகர்வுகளை நிறுத்த வேண்டும் எனவும் அதேபோல ஆறு மாதகாலத்துக்குள் அமெரிக்காவில் முகநூல் நிறுவனத்தின் பயன்பாட்டில் உள்ள தரவுசேகரிப்பு களஞ்சியங்களில் இருந்து ஐரோப்பிய பயனர்களின் தரவுகள் அகற்றப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது

இந்த நிலையில் அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையத்தின் இந்த அபராத நகர்வு நியாயமற்ற ஒரு நடவடிக்கையென விமர்சித்துள்ள மெட்டா நிறுவனம்; இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போததாகவும் குறிப்பிட்டுள்ளது

இலங்கையுடன் மீண்டும் புதிய உடன்படிக்கை திட்டம் எதுவுமில்லை – அமெரிக்கா அறிவிப்பு !

இலங்கையுடன் மீண்டும் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்க பணியகத்தின் துணை உதவிச்செயலாளர் அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து தற்போது அமெரிக்கா சிந்திக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாங்கள் தற்போதைக்கு சிந்திக்கவில்லை என அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையில் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 2019 இல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமான விதத்தில் செயற்படுகின்றது என தெரிவித்துள்ள அப்ரீன் அக்தர் குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் மிகவும் நெருக்கமாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கடற்படை கலத்தை வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா விசேட கடல்ரோந்து விமானமொன்றை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அது அடுத்தவருடம் இலங்கைக்கு வந்துசேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தோபசுபிக் பிராந்தியத்தில் இலங்கையை அமெரிக்க வலுவான சகாவாக கருதுகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை !

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது,

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ரஷ்ய வைரங்களை தடை செய்ததது இங்கிலாந்து !

உக்ரைன், ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய வைரங்களை இங்கிலாந்து தடை செய்துள்ளது. ரஷ்யாவிலிருந்து தாமிரம், அலுமினியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் ரஷ்ய வைரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அனைத்து வகையான பொருளாதார தடைகளையும் சமாளிக்க பிரிட்டன் ஜி 7 உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

ஜி7 நாடுகள் உக்ரைனுடன் துணை நிற்பதை ரஷ்யாவிற்கு காட்ட விரும்புவதாக இந்திய வம்சாவளி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எப்போதும் அமைதி மற்றும் உலக பொருளாதார பாதுகாப்பை ஊக்குவிப்பதில் தான் ஜி7 கவனம் செலுத்துவதாகவும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று இந்தோ- பசுபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை புட்டனுக்கு காட்ட வேண்டும் எனவும் ரிஷி சுனக் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார் ஏற்றுமதியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளியது சீனா !

ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக மாறியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் சீனா 1.07 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது 2022 முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 58 சதவீதம் அதிகமாகும் என பிபிசி தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஜப்பானின் வாகன ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்து 954,185 ஆக உள்ளது.

மின்சார கார்களுக்கான தேவை மற்றும் ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதால் சீனாவின் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன.

சீனாவின் சுங்க பொது நிர்வாகத்தின்படி, ஜேர்மனியின் 2.6 மில்லியன் வாகன ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் சீனா 3.2 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் ஊடகங்கள். !

பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் ஊடகங்களின் போக்குத்தொடர்பில் பெண்கள் சந்திப்பு இணைய வழி கலந்துரையாடலில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் – உரத்துப் பேசுவோம் எனும் தலைப்பில் கடந்த 13.05.2023 சனிக்கிழமை இணைய வழிக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அண்மையில் வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ. சுகிர்தனால் ஏமாற்றப்பட்டு அவரின் வீட்டின் முன்பாக தீயில் எரிந்து உயிரிழந்த விஜிதா என்ற பெண்ணின் இறப்பு மற்றும் தேசம் இணையத்தளம் வெளிக்கொணர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பிரதம இணைப்பாளரான குடுமி ஜெயா என அறியப்பட்ட வெற்றிவேலு ஜெயந்திரனின் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் ஆகிய இரு விடயங்கள் இந்த உரையாடலின் பிரதான பேசுபொருளாக இருந்தன.

இது தொடர்பில் தேசம் திரையின் முழுமையான காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Click செய்யுங்கள்.

 

இலங்கை நாட்டை முடமாக்கிக்கொண்டிருப்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல – அரச அதிகாரிகளும் தான் !

இலங்கை அண்மையில் எதிர்கொண்டிருந்த மிகப் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடிக்கும் – இலங்கையில் இன்னமும் மில்லியன் கணக்கிலான  மக்கள் ஏழைகளாகவே இருப்பதற்கும் இலங்கையின் அரசு நிறுவனங்கள் முறையாக இயங்காமையே முக்கியமான காரணமாகும். இதனை அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்ட இரண்டு விடயங்களின் ஊடாக தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

01. மக்களின் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி.

02. பாவிக்க கூடிய நிலையிலும் யாருக்கும் கையளிக்கப்படாத நிலையில் கிளிநொச்சியில் தேங்கி கிடக்கும் உழவு இயந்திரங்கள்.

அரிசி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசாங்கத்தின் உதவியோடு இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டிருந்தது.  எனினும் பல இடங்களில் இவை மக்களுக்கு விநியோகிக்கப்படாது பதுக்கப்பட்ட தன்மையினை காண முடிந்தது. அவ்வாறு பதுக்கப்பட்ட அரிசி புழு மொய்த்தும் வண்டுகள் நிறைந்ததாகவும் காணப்பட்ட நிலையில் பல இடங்களில் பாவனைக்கு உதவாது குப்பையில் கொட்டப்பட்டிருந்தன. இவற்றை முறையாக கண்காணித்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் கொடுக்காதுவிட்டமையே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்திருந்தது. வவுனியாவின் ஆசி குளம் கிராம உத்தியோகத்த பிரிவில் உள்ள அரச கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழ்நாடு அரசினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 1272 கிலோ அரிசி பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இதனைப் போலவே அரசு அதிகாரிகளின் அசமந்த போக்கினால் மக்களுக்கு சென்று சேர வேண்டிய அன்பளிப்புகள் முறையாக மக்களின் கைகளுக்கு போய் சேராத ஒரு நிலை இன்று வரை இலங்கையின் சாபக்கேடாக தொடர்கிறது.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் சமநிலை சேவைகள் நிலையம் ஒன்றில் இயங்க முடியாத நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட உழவு இயந்திரங்கள்  இயங்க முடியாத நிலையில் கமநல சேவைகள் அறையினுள் போட்டு மூடப்பட்டிருப்பதான புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டிருந்தன.

(குறித்த சமூக வலைத்தள பதிவை காண)

https://www.facebook.com/100001431522803/posts/6435197643204556/?mibextid=QyDEvNoB73lyOOK6

குறித்த சமூக வலைதள பதிவுகளை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சியில் உள்ள குறித்த கமநல சேவைகள் நிலையத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மிக விரைவில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தனர். அதுமட்டுமன்றி ஜனாதிபதி செயலகத்திலிருந்து குறித்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது இருந்தமைக்கான மேலதிக விளக்கங்கள் கோரப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

இதனை போலவே வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து சுமார் 12 ஏக்கர் காட்டை அழிக்க துணை போன வவுனியா கட்டையர்குள பகுதி கிராம உத்தியோகத்தர் தொடர்பான விவகாரம், வடக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மண் அகழ்வை கண்டும் காணாது இருக்கும் அரசு உத்தியோகத்தர்கள் , கம்பளையில் பிரதேச அரச வைத்தியசாலையில் ஏற்கனவே எழுதப்பட்ட மருந்துச்சிட்டையினை மீள பயன்படுத்தியதால் 7 வயது குழந்தை பலியான சம்பவம் என அரச அதிகாரிகளின் அசமந்த போக்கை தினசரி இலங்கையர்கள் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக சேவையாற்றும் சில அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் வாங்கும் சம்பளத்துக்காக சரி உண்மையாக வேலை செய்வதில்லை. காலை எட்டு மணிக்கு வேலை ஆரமப்மாகும். மக்கள் காத்திருப்பது கணக்கேயில்லாமல் சரியாக 10-11 மணிக்கிடையில் தேநீர் இடை்வேளை, சரியாக 1 மணிக்கு மதிய உணவு மதியம் 3,  4 மணிக்கு அலுவலகம் மூடப்படும். பின்பு சனி,ஞாயிறு முழுமையான விடுமுறை . இதறகிடையில் சம்பளம் போதாது – சம்பள உயர்வு வேண்டும் என போராட்டங்கள் வேறு.

மக்களுக்காக வழங்கப்படுகின்ற இந்த இலவசமான உதவி திட்டங்களை கூட மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்கின்ற அளவிற்கு இந்த அரச அதிகாரிகள் நிலை இருக்கின்றது. அலுவலகங்களில் கூட இலங்கையின் அரசு அதிகாரிகள் பெரிதாக வேலை செய்வது கிடையாது. இன்னமும் பழமையான ஆவணப்படுத்தல் முறைமைகளை கையில் வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்றுவதனை பெரிய ஒரு தொழிலாக அடையாளப்படுத்தி மக்களின் உழைப்பை இந்த அரசு அதிகாரிகள் சுரண்டி கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுக்காக இவர்கள் எதனையும் ஆக்கபூர்வமாக செய்தது கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆகச் சிலரை தவிர அரசு உத்தியோகத்தினை மக்களுக்கான சேவையாக வழங்குகின்ற திணைக்களங்களின் எண்ணிக்கை கூட இலங்கையில் குறைந்துவிட்டது. சாதாரணமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழாக தகவலை கோருகின்ற மனுக்களுக்கு கூட சரியான பதில் கிடைப்பது இல்லை. சரியான பதிலை வழங்கி விட்டால் தங்களுடைய உண்மையான நிலை தெரிந்து விடுமோ என்ற அச்சம் தான் இதற்கான உண்மையான காரணம்.

அரசாங்கங்களும் – அரசியல்வாதிகளும் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறிக் கொண்டிருக்க போகிறார்கள். அவர்களை நொந்து எந்தப் பயனுமே இல்லை. இந்த இலங்கை நாட்டை முடமாக்கியதில் ஆகப்பெரிய பங்களிப்பு வாழ்நாள் முழுவதும் அரசு அதிகாரிகள் என்ற பெயரில் கதிரைகளை தேய்த்துக் கொண்டிருக்கும் இந்த அரசு அதிகாரிகளுடையது. நாம் அதிக கேள்வி கேட்க வேண்டியது இந்த அரசு அதிகாரிகளை தான்.

அரச அதிகாரிகள் முறையாக செயற்படாத வரையில் இலங்கை மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடந்த 5 நாள் போர் நிறுத்தம் !

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென், கடந்த 2-ந் திகதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காசாமுனை பகுதியில் உள்ள போராளி குழுவின் தலைவர் ஒருவர் கூறும்போது, “5 நாட்கள் கடுமையாக நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்“ என்றார்.

பிரான்சின் சிறந்த பாண் உற்பத்தியாளராக தெரிவான இலங்கை தமிழருக்கு கிடைத்துள்ள பாரிய அதிஷ்டம்!

பிரான்ஸில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையை சேர்ந்த தர்ஷன் செல்வராஜா வென்றிருக்கிறார்.

La meilleure baguette de Paris என்பது இப் போட்டியின் பெயர் ஆகும் . தமிழில் ‘பரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும்.

30 வது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டியில், இம்முறை 126 பேர், பிரான்சின் பாரம்பரியம்மிக்க baguette பாணை தயாரித்து போட்டிக்கு அனுப்பியிருந்தனர்.

இதில் 30 வயதான தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து, முதல் பரிசை வென்றிருக்கிறது. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிட்டியுள்ளது.

இந்நிலையில் போட்டியில் வெற்றபெற்றதோடு மட்டுமல்லாது பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மாளிகைக்கான பாண் தாயாரிக்கும் சந்தர்ப்பத்தையும் பெற்ற ஈழத்தமிழருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.